Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர்காலத்தில் புலிகள் பூனையாகக் கூட எழ முடியாது! பொல்லைக்கூட கையில் எடுக்க முடியாது என்கிறார் ரம்புக்வெல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியாளர் மயூரன் 19/07/2009, 12:30

எதிர்காலத்தில் புலிகள் பூனையாகக் கூட எழ முடியாது! பொல்லைக்கூட கையில் எடுக்க முடியாது என்கிறார் ரம்புக்வெல

தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் எறிபொல்லைக்கூட கையில் எக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் கலந்துகொண்டு தெரிவித்த முக்கிய பகுதிகள்:

விடுதலைப் புலிகளை போர் ரீதியாக வெற்றிகொண்டு, போர் முடிவுக்குள் வந்தாலும் விடுதலைப் புலிகளின் முற்றிலும் அழிக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் புலி அல்ல பூனையொன்றைக் கூட மீண்டும் எழுவதற்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது.

புலிகள் துப்பாக்கியையோ அல்ல எறிபொல்லைலையோ கூட கையில் எடுக்க இடமளிக்கப்படமாட்டாது.

நாட்டை ஆயுதத்தினால் பிரிக்க முயற்சித்தவர்கள் இன்று சட்டத்தினால் நாட்டைப் பிரிக்க முற்படுகின்றனர். அது பெரிய பிரச்சினையாக உருவாகலாம்.

கரையோரப் பாதுகாப்பு மிகப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான விடயம் என அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் மீண்டும் விழித்துக்கொள்ள முன்பு நாம் விழித்துக் கொள்ள வேண்டும். ஒருவன் செய்கின்ற ஒவ்வொரு தற்காப்பு நடவடிக்கைகளுக்கும் காரணம் பயமே தற்போது அவன் பயம் கொள்ளுகின்றான் பின்பு திட்டமிடுவான் அதன்பின்பு எமது நடவடிக்கைகள் அனைத்தையும் முறியடிப்பான். கெகலியவின் இந்த அறிக்கையும் மேற்கூறியதைத்தான் தெளிவுபடுத்துகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம் இவ்வளவு தூரத்திற்கு வளர்ச்சியடைந்ததற்கும் பின்பு அது பாரிய இக்கட்டான நிலையினைச் சந்தித்து இப்போது எமக்கு ஒரு தேசியத்தலமை இன்றி இப்போரட்டத்தைத் தொடர்வதுபற்றிய கோள்விக்குறிகளுடன் பின்தங்கி நிற்பதற்கும் புலமபெயர் தமிழர் சமூகமே காரணம். இதனை சுயவிமர்கனம் செய்து பார்க்கும் எவருக்கும் வெள்ளிடைமலையாக உண்மை துலங்கும். இதற்கு ஓர் பிராச்சித்தம் மீண்டும் நாமே ஒரு சரியான பாதையினூடாக விடுதலைப் பயணத்தை கொண்டு செல்லல் வேண்டும் . இதற்கு சித்தாந்த ரீதியிலான, நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியதான அரசியல் முனனெடுப்புக்களும், எமமிடையே மாற்றங்களும் ஏற்படல்வேண்டும்.

சிங்களவன் மீண்டும் விழித்துக்கொள்ள முன்பு நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

4955076.gif

விடுதலைப் புலிகளை போர் ரீதியாக வெற்றிகொண்டு, போர் முடிவுக்குள் வந்தாலும் விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்படவில்லை.

அவனுக்கு புரிந்து உள்ளது கூட நம்மவர்களுக்கு புரியவில்லை!

இருக்கிறாரா இல்லையா என்று சொல்லுங்கள் என்று அலைமோதி கொண்டிருக்கும் மடையர்கள்

தெளிவுபெறும் வண்ணம் பேசியுள்ள ரம்புக்வெல செல்லத்திற்கு நன்றி!

Edited by vettri-vel

எழ முடியாதா??........ பொறுங்கள்!!!!!!!!! இப்பதான் திருநாவுக்கரசர் மண்டபம் கரை சேர்ந்திருக்கிறார்!!!! ...... அருசும், அவுஸ்ரேலிய சபேசனும், ...... களைத்துப் போய் ஓய்வெடுக்கிறார்கள்!!! ...... இதயச்சந்திரன் அணிசேரா நாடுகளில் நிற்கிறார் ... எல்லோரும் வரவும் ....... சங்கதி, பதிவு , ஈரமுரசுரசும், ஓசிப்பேப்பர்களும் வானவேடிக்கைகளுடன் ........ எழுவோம் என்ன ...... பீறிட்டுப் பாயும்!!!! ......... சற்றே பொறுத்திருங்கள்! :(

உண்மை நல்லையன்.. எழ சான்ஸே இல்லை..... தலைவர் உயிருடன் இருந்து எதாவது பிளான் வச்சிருந்தாலே ஒழிய..

  • கருத்துக்கள உறவுகள்

நல்லையன் மற்றும் பனங்காய் ஆகியோரது ஆதங்கம் எனக்குப் புரிகின்றது. அதற்காக சும்மா இருந்துவிட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

பூனைகள் புலியபக எழும் வாய்புகள் உள்ளதா ஐயா?

ஒடுக்குமுறை என்பது சுதந்திரத்துக்கான எழுச்சியை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தும். இது எங்கும் இயல்பான ஒன்று. மீளவும் தமிழர்கள் புலியைப்போல் அல்லது அதற்கும் மேலாக எழுவார்கள். நிச்சயம் எழுவார்கள் போராடுவார்கள் மறுபடியும் தோற்பார்கள் என்பதே உண்மை. உலகெங்கிலும் வாழும் சிறுபான்மை இனங்களின் ஒடுக்குமுறையும் அதற்கெதிரான போராட்டங்களும் குறித்த இயல்புத்தன்மையை எமது இனத்திற்கு பிரயோகிக்க ஒப்பிட முடியாது. எந்தச் சித்தாந்தங்களையும் எமது இனத்துடன் இணைத்து இயக்க முடியாது. இது பிரத்தியோக இனம். சிங்களவன் அடித்தால் அவனை எதிர்கொண்டு சுதந்திரம் அடைவது எமது பெரும்பான்மை இயங்கு நிலை இல்லை மாறாக எங்கேனும் ஒரு நாட்டுக்கு நகர்ந்து விடுதல் என்பதே எமது பெரும்பான்மை இயக்கம் எனவே மீள எழுச்சி பெறினும் அது சிங்களவனுக்கு சாதகமாகவே முடியும். ஒருவேளை சிங்களவனுக்கு சார்பான தமிழர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி மீளப்புலிகளை உருவாகக்க சிங்களம் முனையலாம். இதற்கு அதிக சந்தர்ப்பங்கள் உள்ளது. இலங்கைத் தீவு சிங்களவனுக்கே சொந்தம் என்பதை உருவாக்க போர் என்னும் நீள வேண்டிய அவசியமும் அத்தால் தமிழர்கள் வெளியேறுதலும் கொல்லப்படுதலும் நடைபெறவேண்டியுள்ளது. எனவே ஆயுதப்போராட்டம் என்பது பெரும்பான்மைச் சிங்களவரின் விருப்பங்களை நிறைவேற்ற தொடரவேண்டிய தேவை இருக்கின்றது.

பிரேமதாச காலத்தில் தமிழர்தரப்புக்கு ஆயுதம்வாழங்கியது. ஒட்டுக்குழுக்களுக்கு ஆயுதம் வழங்கியது. இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆயுதம் வழங்கியது கருணா பிள்ளையான் குழுக்களுக்கு ஆயுதம் வழங்கியது என சிங்களம் இனத்தை அழிப்பது குறித்து பல்வேறு முயற்ச்சிகள் செய்யக் கூடியவாறு எமது இனம் உள்ளது. எம்மை நாமே கருவறுக்க ஏதுவான மனநிலை எம்மிடம் தராளமாக நீண்ட வரலாற்றுப் பின்புலங்களுடன் வேற்றுமை உணர்வுகளுடன் என்றும் எந்தச் சக்தியாலும் திருத்தமுடியாதபடி பரந்து விரிந்து கிடக்கின்றது. இனி ஒரு எழுச்சி கொள்ள முதல் எம்மை சுய விமர்சனம் செய்தலே பிரதானமானது இல்லையேல் சுவடு தெரியாமல் தமிழினம் அழிந்து போகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.