Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீதனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூத்திருந்த பாவையரும்

காத்திருந்த காளையரும்

கடிமணம் கொண்ட காலம் என்னவோ

கம்பன் காலம் தான்_இன்று

இருமனங்கள் இணைவதல்ல

இருபணங்கள் இணைவதே திருமணம்

அம்மிமிதித்து

அருந்ததி பார்க்கும் திருமணத்தின்

அரங்கேற்றம் என்னவோ

அஞ்சாறு மில்லியனில் தான்

மண்டபம் எடுத்து மணவறை கட்டி

மாப்பிள்ளைக்கு பட்டுவேட்டி கொடுத்து

மாற்று மோதிரம் கொடுத்து

முப்பதுபவுண் தாலி கூறையுடன்

மூக்குமின்னிவரை பெண்பெற்றவர் கொடுத்து

முடிந்தால் மோட்டார் வண்டியும் கொடுத்து

மாலையிட வேண்டும் மங்கைக்கு

இத்தனையும் செய்திட பெற்றவர்கள்

சிந்துவது வியர்வையல்ல ரத்தமே

எத்தனை ஆண்களுக்கு தெரியும்

திருமணச் சந்தையில் விலைபோகும்

கடாக்கள் தான் நாம் என்று...

அதிகம் படித்தால் அதிகம் சீதனம்

அளவாய் படித்தால் கொஞ்சம் சீதனம்

அடிமாட்டு விலைக்கு போகும் ஆண்கள்

ஆணிடம் கேட்டால் அம்மா,அப்பா விருப்பமாம்

அறிவுகூட மூலதனம் தான் திருமணத்தில்...

எத்தனை பெண்கள் சீதனம் எனும்பெயரில்

முப்பது வயதைத் தாண்டியும்

முதிர்கன்னிகளாய்...

இவர்களின் வாழ்விலும் வசந்தம்வீசுமா

இளையவர்களேனும் சிந்தியுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா யதார்த்தை கவிதையில் சொல்லிய விதம் நன்று.இரு மனங்கள் மாலையிடுவது அந்தக்காலம்.....பணத்திற்காக மாலையிடுவது இந்தக்காலம்.முப்பது பவுணில் கொடி கட்டினால் என்ன......?ஐம்பது பவுனில் கொடி கட்டினால் என்ன....?கடைசியில் கொடி இருக்கும் இடம் பெண்ளவளின் வாழைத்தண்டு கழுத்தில் அல்ல.........வங்கியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சேவ்ப்ரிலொக்கரில்.இதைப்பற்ற

நல்ல கவிதைக்கு நன்றி ஜீவா. என்னைப் பொறுத்தவரை சீதனம் கொடுப்பதும் தப்பு அதை வாங்குவதும் தப்பு...... இன்றய இளைய சமுதாயம் இதை நன்றாக உணர்ந்து சீதனம் என்ற சொல்லை திருமண முறைகளில் இருந்து எடுத்தெறிய வேண்டும். நிட்சயம் எம் இளைய சமுதாயமாவது சீதனம் வேண்டாது திருமணம் செய்வார்கள் என்பது என் எண்ணம். மனம் ஒன்றித்து பணம் வாங்காது மாலை இடுவதே சிறந்தது.

நன்றி

ஈழமகள்

Edited by Eelamagal

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவரைப் பொறுத்தவரை இப்போது சீதனம் என்பது மிக அருகிக் கொண்டு வருகிறது என்றே சொல்லாம் வாழ்க்கைக்சூழலின் மாற்றம் பலரின் கண்களைத் திறந்துள்ளது என்றே சொல்லாம். மற்றப்படி இந்தத் தாலிக் கொடியை மொத்தமாகச் செய்து கட்டுவது இன்னும் அதிகரித்துள்ளது. திருமண நாளன்று சங்குக் கழுத்தில் வளைந்து தொங்கும்.... சிறிது நாட்களில் பெண்களே கழற்றிச் சுத்தி லொக்கர்களில் பத்திரபடுத்தி விடுவார்கள்.

இப்போதெல்லாம் முதிர் கன்னிகளாக இருப்பவர்களின் பின்னணியைப் பார்த்தால் இங்கு சீதனம் என்பது பெரிதான தடையாகத் தெரியவில்லை. அந்தஸ்து, சாதி என்பனவற்றோடு சின்னச் சின்னக் குறைகளைப் பெரிதுபடுத்திப் பார்ப்பது போன்ற மனோபாவமே முதிர்கன்னிகளாகப் பெண்கள் இருப்பதற்கு அதிக காரணங்களாகத் தெரிகின்றன.

இயல்பாக ஒரு இளைஞன் வாழ்வு தரத் தயாராக இருந்தாலும் நெட்டை, குட்டை, வெள்ளை , கறுப்பு, படிப்பு, பெண் சகோதரிகள் அதிகம், தாய்தகப்பன் என்று பெண்ணைப் பெற்றவர்கள் மணமகனைத் தெரிவு செய்யும் இடங்களில்த்தான் முதிர்கன்னிகள் அதிகம் இருக்கிறார்கள்.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்று நல்ல தலைப்பு

சீதனத்தால் பெண் சகோரனாக பிறந்த ஆண் படும்வேதனைகள் சொல்லி ஆறதல் அடையமுடியாதவை.

அதுவும் வெளிநாட்டில் அவர்கள் உழைக்கும் நிலை....... சொல்லிமாளாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவுக்கு

நம் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் ஒருவிடயத்தை எளிதில் சரிசெய்துவிட முடியாது தான் ஆனால் தற்போது முன்னய காலங்களிலும் விட பல முன்னேற்றங்கள், அதே போல் சகாரா அக்கா சொன்ன பல விடயங்களும் மிகச் சரியானவையும் உண்மையும் கூட.....

மேலும் உங்கள் ஆதங்கங்களைச் சொன்ன வரிகள் மிகவும் அழகு ஜீவா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிந்தைக்கு மருந்தென இருந்த இந்த கவிதையில்

அர்த்தம் ஆயிரம். அதன்வழி நடப்பரா நம் தமிழர்;

சீதனம் வேண்டி ஆதனங்கள் பெருக்கி

உதாசினம் செய்யும் நம் கன்னிகையரை

நம்தமிழர் நாம் நமக்கு கு செய்யம் துரோகமே!

நன்றி

பெம்மன்

எத்தனை ஆண்களுக்கு தெரியும்

திருமணச் சந்தையில் விலைபோகும்

கடாக்கள் தான் நாம் என்று...

கவிதை நன்றாகதான் இருக்கு ஆனால் ஆண்களை ...கடா என்பது ...மே...மே...மே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஜீவா யதார்த்தை கவிதையில் சொல்லிய விதம் நன்று.இரு மனங்கள் மாலையிடுவது அந்தக்காலம்.....பணத்திற்காக மாலையிடுவது இந்தக்காலம்.முப்பது பவுணில் கொடி கட்டினால் என்ன......?ஐம்பது பவுனில் கொடி கட்டினால் என்ன....?கடைசியில் கொடி இருக்கும் இடம் பெண்ளவளின் வாழைத்தண்டு கழுத்தில் அல்ல.........வங்கியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சேவ்ப்ரிலொக்கரில்.இதைப்பற்ற
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவுக்கு

நம் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் ஒருவிடயத்தை எளிதில் சரிசெய்துவிட முடியாது தான் ஆனால் தற்போது முன்னய காலங்களிலும் விட பல முன்னேற்றங்கள், அதே போல் சகாரா அக்கா சொன்ன பல விடயங்களும் மிகச் சரியானவையும் உண்மையும் கூட.....

மேலும் உங்கள் ஆதங்கங்களைச் சொன்ன வரிகள் மிகவும் அழகு ஜீவா....

நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு.

எமது சமூகம் கல்வியறிவில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது தவிரவும் இன்றைய இளைஞர்கள் சொந்தமாக முடிவெடுக்க கூடியவர்களாகவும் மாறி வருகிறார்கள் இதனால் நிச்சயமாக

அவர்களால் சரி,பிழையை தெரிந்து சொந்தமாக முடிவெடுக்கும் போது இவை அருகிவிடுமே.

சிந்தைக்கு மருந்தென இருந்த இந்த கவிதையில்

அர்த்தம் ஆயிரம். அதன்வழி நடப்பரா நம் தமிழர்;

சீதனம் வேண்டி ஆதனங்கள் பெருக்கி

உதாசினம் செய்யும் நம் கன்னிகையரை

நம்தமிழர் நாம் நமக்கு கு செய்யம் துரோகமே!

நன்றி

பெம்மன்

நன்றி உங்களின் கருத்துக்கு.

இங்கையும் துரோகமா... :D யப்பா.... :D:icon_idea:

கவிதை நன்றாகதான் இருக்கு ஆனால் ஆண்களை ...கடா என்பது ...மே...மே...மே

நன்றி அண்ணா.

ஏன் இப்படி எழுதினேன் என்றால் இந்த நிலையை சொல்ல ஏலம் விடுகிறமாதிரி அப்படியான ஒரு சூழ்நிலை இருக்க வேணும் என்பதற்காக தான் எடுகோளாக எடுத்தேன் தவிர

பேச்சுவழக்கில் "மாப்பிளை நாம்பன் " என்று சொல்வார்கள் அதுதான்.

ம்பா...ம்பா...ம்பா....என்பதற்கு பதில் மே...மே...மே..என்றிட்டனோ :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஜீவா,

உங்கள் கவிதை நன்றாயிருக்கிறது...

சீதனம் என்ற சொற்பதம் கேட்டு நிறைய காலம் ஆகிவிட்டது. தாயகத்தில் இன்னமும் நடைமுறையில் இருப்பினும் இங்கு அவை செயற்ப்பாட்டளவில் இல்லை. சீதனத்தால் எந்த காதலும் பிரிந்ததாய் இல்லை, சீதனத்தால் எந்த திருமணங்களும் நின்றதாய் இல்லை.

ஆனால் மாப்பிளை என்ன வேலை.... என்ன படிச்சிருக்கிறார்.... எவ்வளவு சம்பளம்.... செலவு செய்ய வருமானம் காணுமா.... எவ்வளவு கடன் இருக்கு... இப்பிடி தேடித் தேடித் தான் பெண்களுக்கு மாப்பிளை தேடுகிறார்கள்... அப்படி பார்க்கையில் ஆண்களது வேலையும்... படிப்பும் பெண்களுக்கு தேவையான சீதனமாகாதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஜீவா,

உங்கள் கவிதை நன்றாயிருக்கிறது...

சீதனம் என்ற சொற்பதம் கேட்டு நிறைய காலம் ஆகிவிட்டது. தாயகத்தில் இன்னமும் நடைமுறையில் இருப்பினும் இங்கு அவை செயற்ப்பாட்டளவில் இல்லை. சீதனத்தால் எந்த காதலும் பிரிந்ததாய் இல்லை, சீதனத்தால் எந்த திருமணங்களும் நின்றதாய் இல்லை.

ஆனால் மாப்பிளை என்ன வேலை.... என்ன படிச்சிருக்கிறார்.... எவ்வளவு சம்பளம்.... செலவு செய்ய வருமானம் காணுமா.... எவ்வளவு கடன் இருக்கு... இப்பிடி தேடித் தேடித் தான் பெண்களுக்கு மாப்பிளை தேடுகிறார்கள்... அப்படி பார்க்கையில் ஆண்களது வேலையும்... படிப்பும் பெண்களுக்கு தேவையான சீதனமாகாதா?

நன்றி அண்ணா. நீங்க சொல்வதும் சரிதான்.

ஆனால் எல்லா இடமும் சீதனம் வாங்குகிறார்கள் ஆனால் இங்கு குறைவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.