Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கித்தாளம் சின்னையா கவிதைகள்

Featured Replies

கித்தாளம் சின்னையா என்பது என் மாமன்.... 60 வயது இருக்கும் அவருக்கு....ஒரு மனைவி மூன்று பிள்ளைகள் என்பது official அறிக்கை. படலை பாய்ந்து, வேலி பாய்ந்து வாரிசை உருவாக்கியதில் அவர் தான் ஊரில் மன்னன் என்பது ஊர் பேச்சு

இப்போ எல்லா மனுசியும் விட்டுப் போய், ஒரு கருத்த 35 வயது பெண்ணை வைத்திருக்கின்றார் என்பதும் ஊர் பேச்சுதான்...ஆனால் இடைக்கிடை இன்னும் வேலி பாய்கிறார் என அவரின் 35 வயது கடைசி மனுசி பக்கத்து வீட்டுக்காரனுக்கு சொன்ன செய்தி (சொல்லும் போது இரவு 11:30)

அவருக்கு நான் "எழுதுவது" பற்றி பெரிய சந்தோசம்...திடீர் திடீரென தன்னுடைய சில கவிதைகளை அனுப்புவார்....எங்கே அனுப்பினாலும் உடனே திரும்பி வரும் அவரின் கவிதைகளை தரவேற்ற வேறு இடம் கிடைக்கவில்லை.....ஆகவே யாழை தேர்ந்தெடுத்துள்ளேன்....எனது கவிதைகளையே அரங்கேற்றும் யாழ் கித்தாளம் சின்னையாவின் கவிதைகளையும் அரங்கேற்றும் என நம்புகின்றேன்

காற்று வழியில் அவளைக்

கண்டேன்

கை பிடித்தேன்

தான் குறத்தி என்றாள்

ஆனந்த மோகம்

ஆலிங்கணங்கள்

அவள் என்னுள்

புதைந்தாள்

அவளுக்குள்

நான் புகுந்தேன்

என் மனுசி

எனக்காக சுமங்கலி

பூசை செய்தாள்

விரதம் இருந்தாள்

நான் வேட்டை ஆடினேன்

என் பேரனை

ஆமி பிடித்தது

என் மகனை

இயக்கம் பிடித்து

கொன்றது

இந்தியன் வந்திருக்கும் போது

பக்கத்து வீட்டு

புலியை

காட்டிக் கொடுத்தேன்

பழிக்கு பழி

என் பரம்பரை

இரத்த உணர்வு

அவன்

என் மகனை

மாற்று இயக்கமென

சுட்டு இருந்தான்

ஒரு

நாள் அந்தி சாய்கையில்

என்னை சிலர்

வெட்டினர்

இந்தியன் ஆமியின் சகவாசம்

குற்றம் என்றனர்

என்னுடன் படுத்திருந்தவள்

ஓடினாள்

சிதைவுற்ற என் சதைகள்

கேள்வி கேட்டன

நானா அவளா

இல்லை

வேறு இயக்கம்

சேர்ந்த அவனா

துரோகி என

எல்லோரும் என்றேன்

***********************

கித்தாளம் சின்னையா (கி.பி. 1988 ஆணி 10)

  • கருத்துக்கள உறவுகள்

விளங்கிட்டுது..அடுத்தது நிழலிதான்.. :(:wub: :wub: :o

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா,

கித்தாளம் சின்னையா....இதை மறந்துட்டாரா....?ஒருவனுக்கு ஒருத்தி என்பதை. யாழில் ஆணி :( அடிக்காதிர்கள்.ஆனி என்பதே சரி எண்டு நினைக்கிறன்.நன்றி அவரின் கவிக்கு.

யாயினி.

  • தொடங்கியவர்

நிழலி அண்ணா,

கித்தாளம் சின்னையா....இதை மறந்துட்டாரா....?ஒருவனுக்கு ஒருத்தி என்பதை. யாழில் ஆணி :( அடிக்காதிர்கள்.ஆனி என்பதே சரி எண்டு நினைக்கிறன்.நன்றி அவரின் கவிக்கு.

யாயினி.

ஒருத்தனுக்கு ஒருத்தி

இந்த மானுட வரலாற்றின் மிகப் பெரும் பொய்

கிடைத்தவன் அதிஷ்டசாலி....கிடைக்காதவன் கலாச்சார காவலாளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலிக்கு

உங்கட கித்தாளம் சின்னையா பெரிய கில்லாடி போங்க.... வரிகளிலேயே இவ்வளவு இளமை ஊஞ்சலாடும் போது உடம்பில் எவ்வளவு இருக்கும்.... அந்த ஆள் செய்ததிலே தப்பே இல்லை... நானும் இருக்கிறன் இவ்வளவு கஸ்ரப்பட்டு எழுதியும் ஒண்ணும் பண்ணமுடியல்ல.... கடைசியில ஒரு புத்தகம் வந்தது தான் மிச்சம்...

வரிகள் அழகு... வாழ்த்துக்கள்....... அவருக்கு...!

  • தொடங்கியவர்

பெரு நெருப்பாய்

நூலகம் எரிக்கையில்

மனிக்கே என் மடியில் தவழ்ந்தாள்

சபாரத்தி செத்து இழுக்கபடுகையில்

யாழினி என்னில் புரண்டாள்

எனக்கு இரண்டும்

ஒன்றுதான்

போரிற்கு போன

வீரரின் பிணத்தில்

ஈயாடுகையில்

அவர்கள் அழுததை

நான் கண்டேன்

இந்தியன் என் ஆடுகளின்

பாலை தரும் படி

கேட்டான்

இயக்கம் ஆட்டு குட்டிகளை

தரும் படி

உத்தரவு இட்டது

நான் இரு வேளையிலும்

பட்டினி கிடந்தேன்

எனக்கு விடுதலை

பற்றி சொல்ல வேண்டாம்

என் பிள்ளைக்கு

உணவில்லாமல்

நான் தவித்திருக்கையில்

இரு உணவு பார்சல்

கொடுத்தேன்

கேட்டவன் இன்று

சுவிஸில்

கொடுத்த நான்

இரு வருடம்

சிறையில்

கி.சின்னையா

(கி.பி. 1988 கார்திகை....மாவீரர் தினம் அனுஸ்டிக்க முயல முடியாமல் மாற்று இயக்கத்தார் மரித்த காலம்)

கித்தாளம் சின்னையா நல்லாய் கவிதை எழுதி இருக்கிறார்.

கீழ் உள்ள தகவல் விளங்க இல்லை. 1988இல மாற்று இயக்கம் மாவீரர் தினம் கொண்டாடினதோ?

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

தலைப்பில்லா கவிதை (முஸ்லிப் போல்)

என் இரவு என்றும் முடிவதில்லை

அலறல்கள்

கதறல்கள்

கெஞ்சுதல்கள்

நித்திரை வருவதில்லை

குரல்களில் கண்டு பிடிக்க முடியாது

யார் அழுவதென

அவலம் தந்தவர்களையும்

கண்டு கொள்ள முடியாது

எல்லோரும் தந்தனர்

சின்னாயி வீட்டில்

மறியாடு ஆட்டுக்கு

கத்துது

நாம்பன் மாடு தேடி

பசுவும் அலறுது

நானும் அரட்டினேன்

என் பிள்ளையின்

துவசத்தில்

என் மனுசி மீண்டும்

ருதுவானாள்

அவனை பத்தாம் வகுப்பு

முடிய முன்

பிளேன் ஏற்றி விட்டேன்

ஐந்து வருடம் கழித்து

ரொரண்டோ வீதியில்

குத்துப் பட்டு இறந்தான்

என் நிழல் போல்

அவலம் வருகுது

நான் போக முன்

சனியன் முந்திப் போய்

குந்துது

என் கொட்டை

அறுபட முதல்

நித்திரை அறுபடா

இரவை யாசிக்கின்றேன்

வெளியில் ஜீப்பின்

ஓசை கேட்கின்றது

:::::

காலம் தப்பிய ஒரு இரவில்

  • கருத்துக்கள உறவுகள்

சரிதான்..! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.