Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் காலவரையின்றித் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2882009redcross360unive.jpg

கனடா ரொரன்டோ நகரின் மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியு வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 128 நாட்களைக் கடந்தும் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்.

பின்வரும் வாசகங்களை ஒலித்தவண்ணம்

2882009redcross360unive.jpg

நாளாந்தம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இக்கவனயீர்ப்பு மாலை 9 மணிக்கு சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனை செய்து நிறைவுபெறுகின்றது.

ஓகஸ்ட் 28 வெள்ளிக்கிழமைஇ இக்கவனயீர்ப்பு நிகழ்வானது 500இற்கு மேற்பட்ட மக்களுடன் மாலை 8 மணிக்கு ரொரன்டோ மாநகரின் மையப்பகுதியில் ஊர்வலமாக நகர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக யூனிவேர்சிற்றி அவெனியுவில் ஆரம்பித்த ஊர்வல நகர்வு கொலிச் வீதியூடாக யங் வீதியில் பயணித்து, குயின் வீதியில் வலது புறமாகத்திரும்பி யூனிவேர்சிற்றி அவெனியு வீதியை வந்தடைந்து சிறீலங்கா சிங்கள இனவாத அரசால் கொல்லப்பட்ட மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்து நிறைவு பெற்றது. நாளாந்தம் தொடரும் இக்கவனயீர்ப்பில் பிற இனத்தவர்களும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. காலவரையின்றி இப்போராட்டம் தொடர்கிறது. சமீப காலமாக இப்போராட்டம் கூர்ப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2882009redcross360unive.jpg

2882009redcross360unive.jpg

2882009redcross360unived.jpg

2882009redcross360unive.jpg

2882009redcross360unive.jpg

2882009redcross360univep.jpg

2882009redcross360unive.jpg

2882009redcross360univev.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாறா அக்கா..தொடர்ச்சியாக உலகின் மனச்சாட்சிக் கதவைத் தட்டும் உங்களின் விக்கிரமாதித்த முயற்சிக்கு தலைவணங்குகிறேன்.

எழுதுவது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கும் பொதுநிலையில் இருந்து நீங்கள் சொல்லுடன் செயலும் ஒன்றாக இருக்கிறீர்கள்.

இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் எங்களின் தேசிய ஆன்மாவில் உங்களின் அதிர்வுகளும் நிச்சயம் இருக்கும்.

எங்களின் கடைசித் தமிழனும் தடுப்பு முகாமிலிருந்து வெளி எடுக்க அல்லது வெளி அனுப்பபடும் வரைக்குமாவது தொடரவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்கா..தொடர்ச்சியாக உலகின் மனச்சாட்சிக் கதவைத் தட்டும் உங்களின் விக்கிரமாதித்த முயற்சிக்கு தலைவணங்குகிறேன்.

எழுதுவது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கும் பொதுநிலையில் இருந்து நீங்கள் சொல்லுடன் செயலும் ஒன்றாக இருக்கிறீர்கள்.

இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் எங்களின் தேசிய ஆன்மாவில் உங்களின் அதிர்வுகளும் நிச்சயம் இருக்கும்.

எங்களின் கடைசித் தமிழனும் தடுப்பு முகாமிலிருந்து வெளி எடுக்க அல்லது வெளி அனுப்பபடும் வரைக்குமாவது தொடரவேண்டும்.

மன்னிக்கவும் வல்வைக்கடல்,

இந்தத் தொடர்கவனயீர்ப்புப் போராட்டம் தன்னார்வம் கொண்ட தொண்டர்களாலும் மக்களாலும் நடாத்தப்படுகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் தருணங்களில் நானும் அங்கு சென்று வருவேன். இங்கு இடம்பெறும் இக்கவனயீர்ப்பில் கலந்து கொள்ளும் நேரங்களில் தொடர்ச்சியாக அவர்களுடன் பயணிக்க முடியாத என்னுடைய சுயம் என்னை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. தொடர்ந்து நாளாந்தம் இங்கு வந்து தங்களை வருத்தும் அந்த மக்களின் உறுதி என்பது பிரமிக்கத்தக்கது. அந்த வகையில் அவர்களின் தளராத இப்போராட்டத்தை என்னைப் போன்றவர்கள் செய்கிறோம் என்று கொச்சைப்படுத்திவிடாதீர்கள். அவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் தகுதிகூட என்போன்றவர்களுக்கு இல்லை வல்வைக்கடல்.

இந்தத் தன்னார்வத் தொண்டர்கள், மக்களின் தொடர்ச்சியான நிகழ்வுக்கு இந்தக் கனடிய மண்ணில் ஐந்து 24 மணிநேர தமிழ் வானொலிகள், இரண்டு தமிழ் தொலைக்காட்சிகள், எண்ணிக்கையற்ற பத்திரிகைகள் இருந்தும் ஒரு சில ஊடகங்கங்களே இவர்களின் இக்கவனயீர்'ப்புப் போராட்டத்திற்கான ஆதரவை வழங்கி வருகின்றனர். பல தமிழ் ஊடகங்கள் இக்கவனயீர்ப்பு தொடர்ச்சியாக இடம்பெறுகிறது என்பதையே அறியாதவையாக இருக்கின்றன என்பதே வருத்தமான செய்தியாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாறா அக்கா ...உங்கள் விளக்கத்துக்கு நன்றி!! விளங்கிக் கொண்டேன். திருத்தியும் கொண்டேன். மற்றது ஊடகங்கள் என்றாலே

சூடான விடயங்களுக்குத்தான் முன்னிலை கொடுப்பார்கள். அதை ஊடக தந்திரம் என்றுவேறு விளக்கமும் கொடுப்பார்கள்.

அவர்களின் அங்கீகாரம் தாமதமாக ஆனால் நிச்சயம் வரும். அதுவரை தொடரட்டும் போராட்டம்

சகாரா.... நீங்கள் என்ன தான் அவையடக்கமாக சொன்னாலும் நேரம் கிடைக்கும் போதாவது சென்று வருகின்றீர்கள் என்பதே பெரிய விடயம். குடும்பம், பிள்ளைகளுக்கு தாய் என்ற குடும்ப வாழ்க்கையில் இவற்றிற்கு நேரம் கிடைப்பது என்பதே கடினமான நிலையிலும் எழுதும் எழுத்தைப் போலவே செயலிலும் ஈடுபடுவது என்பது ஒரு சில நேர்மையானவர்களுக்கு மட்டுமே முடிகின்ற விடயம். அனேகமான மக்கள் (நான் உடபட) மே 19 களில் இடம்பெற்ற சம்பவங்களால் பிரமை பிடித்து விரக்தயுற்று தன் தனிப்பட்ட வாழ்க்கையில் முழு நேரத்தையும் முடக்கி இருக்கும் இன்றைய சூழ்நிலையிலும் அபலை மக்களுக்காக வீதியில் இறங்கி போராடும் உங்களைப் போன்ற ஒரு சிலரால் தான் விடுதலை தீ கொஞ்சமாவது இன்னும் எரிந்து கொண்டிருக்கின்றது.

:நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா.... நீங்கள் என்ன தான் அவையடக்கமாக சொன்னாலும் நேரம் கிடைக்கும் போதாவது சென்று வருகின்றீர்கள் என்பதே பெரிய விடயம். குடும்பம், பிள்ளைகளுக்கு தாய் என்ற குடும்ப வாழ்க்கையில் இவற்றிற்கு நேரம் கிடைப்பது என்பதே கடினமான நிலையிலும் எழுதும் எழுத்தைப் போலவே செயலிலும் ஈடுபடுவது என்பது ஒரு சில நேர்மையானவர்களுக்கு மட்டுமே முடிகின்ற விடயம். அனேகமான மக்கள் (நான் உடபட) மே 19 களில் இடம்பெற்ற சம்பவங்களால் பிரமை பிடித்து விரக்தயுற்று தன் தனிப்பட்ட வாழ்க்கையில் முழு நேரத்தையும் முடக்கி இருக்கும் இன்றைய சூழ்நிலையிலும் அபலை மக்களுக்காக வீதியில் இறங்கி போராடும் உங்களைப் போன்ற ஒரு சிலரால் தான் விடுதலை தீ கொஞ்சமாவது இன்னும் எரிந்து கொண்டிருக்கின்றது.

:நிழலி

உண்மைதான் நிழலி. உண்மையைச்சொன்னால் இப்பிடி ஒரு தொடர் கவனவீர்ப்பு போராட்டம் நடக்கிறதெண்டே தெரியாமல் தான் இருந்தேன். :icon_mrgreen:

மே மாதம் கனடா டொரண்டோவில குயின்ஸ்பார்க்கில ஆயிரக்கணக்கான ஆக்களோட சேர்ந்து மெழுகுவர்த்திய கையிலதூக்கி பொய்ச்சத்தியம் செய்ததோட எங்கண்டை கடமைகள் எல்லாம் முடிஞ்சிது எண்டு நினைச்சு தலைமுளுகிப்போட்டு நிக்கிறம். :icon_mrgreen:

களநிலமை அப்பிடி இருக்கேக்க..

சகாரா அக்கா உதுகளை இடைக்கிடை இதுக்ககொண்டுவந்து எங்கடை பழைய பொய்ச்சத்தியங்களை நினைவுபடுத்தி எங்களுக்கு கடுப்பேத்திக்கொண்டு இருக்கிறீங்கள். :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.