Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் படுகொலை காணொலி குறித்து அனைத்துலக விசாரணை தேவை: ஐ.நா. விசாரணையாளர்

Featured Replies

அனைத்துலக சட்டங்களை மீறும் வகையில் தமிழ்ப் போராளிகளை சிறிலங்காப் படையினர் விசாரணைகள் ஏதும் இன்றிப் படுகொலை செய்தார்களா என்பது குறித்து முழு அளவிலான அனைத்துலக விசாரணை ஒன்று தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர் தெரிவித்தார்.

"இந்த மாதிரியான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் எந்த ஒரு அரசும் தெளிவான, முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டிய கடப்பாடு இருக்கிறது" என்றார் பிலிப் அல்ஸ்டன். இவர், நீதிக்குப் புறம்பான மற்றும் விசாரணைகளற்ற படுகொலைகள் என்பவற்றுடன் தொடர்புபட்ட ஐ.நா. அதிகாரி.

'ரொய்ட்டர்' செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

'சனல் -4' நிறுவனம் அண்மையில் வெளிப்படுத்திய காணொலி குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் அனைத்துலக விசாரணை அவசியம் என வலியுறுத்தினார். அந்தக் காணொலியில், கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் ஆடைகள் களையப்பட்ட ஆயுதங்கள் ஏதுமற்ற தமிழர்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டது.

அந்தக் காணொலி புனையப்பட்ட ஒன்று எனக் கூறி அதனை சிறிலங்கா அரசு நிராகரித்துவிட்டது. அதன் நம்பகத்தன்மைக்கு எந்த உறுதிப்பாடும் கிடையாது என்பதையும் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டார்.

இருப்பினும் அந்தக் காணொலி சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்ளும் குழுவினரால் தரப்பட்டதாக 'சனல் -4' நிறுவனம் தெரிவித்துள்ளது.

"அது நம்பகத்தன்மை அற்றது என்பதற்கு காணொலியில் எந்தத் குறிப்புக்களும் இல்லை. ஒருவேளை அப்படி இருந்தால், அது ஆழ்ந்த கவனத்திற்குரிய ஒன்று" என்றர் அல்ஸ்டன். எனினும் அது தொடர்பில் "சிறிலங்கா அரசு விசாரணைகளை தொடங்க கடமைப்பட்டுள்ளது" எனவும் தெரிவித்தார்.

இதுபோன்ற விடயங்களை விசாரணை செய்வது தொடர்பில் சிறிலங்கா அரசு மோசமான பதிவுகளையே கடந்த காலங்களில் கொண்டிருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

"கடந்த காலங்களில் இதுபோன்ற விசாரணைகள் குறித்து மகிழ்ச்சியற்ற பதிவுகளையே அது (சிறிலங்கா) தந்திருக்கிறது. எனது பார்வையில் இது நிச்சயமாக அனைத்துலக விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட வேண்டும். அதுதான் விசாரணையின் சுயாதீனத்தையும் பக்கச் சார்பின்மையையும் உறுதிப்படுத்தும்" என்றார் அல்ஸ்டன். அதிலும் ஐ.நா. சார்ந்த அமைப்பு ஒன்றே அந்த விசாரணைகளை நடத்துவதே சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் மிக முக்கியமானவை என அவர் குறிப்பிட்டார். "அவை குறித்து கவனம் செலுத்தப்படவில்லை எனில், அரசு தனது இலட்சியம் எனக் கூறிவரும் தமிழ் மக்களுடன் அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் கடினமாகிவிடும்" என்றார் அல்ஸ்டன்

இந்தக் காணொலி குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் எதனையும் தெரிவிக்கவில்லை. எனினும் இது தொடர்பில் அவர் அதிக கரிசனை காட்டி வருகின்றார் என அவரது பேச்சாளர் கடந்த திங்கட்கிழமை தெரிவித்தார்.

போர்க் குற்றங்களுடன் தொடர்புபட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து பல இடங்களிலும் இருந்தும் வரும் அறிக்கைகளை நாங்கள் கவனமாகப் பரிசீலித்து வருகின்றோம் என்றார் பொதுச் செயலாளரின் பேச்சாளர் மாரி ஒகாபே.

'சனல் -4' ஒளிபரப்பிய காணொலி உட்பட எல்லாவற்றையும் பார்வையிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

புதினம்

இந்த காணொளி ... வெளியிட்ட கோரத்தை எதிர்த்து, நாம் இன்னும் வீதியில் இறங்கவில்லை??????????????? ......... இதுதான் எமது அரசியல்!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொளி ... வெளியிட்ட கோரத்தை எதிர்த்து, நாம் இன்னும் வீதியில் இறங்கவில்லை??????????????? ......... இதுதான் எமது அரசியல்!!!!!!!!!!!!

சிட்னித் தமிழர்கள் இன்று மாலை 4 மணிக்கு வீதியில் இறங்குகிறார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=63377

இந்த காணொளி ... வெளியிட்ட கோரத்தை எதிர்த்து, நாம் இன்னும் வீதியில் இறங்கவில்லை??????????????? ......... இதுதான் எமது அரசியல்!!!!!!!!!!!!

சிட்னித் தமிழர்கள் இன்று மாலை 4 மணிக்கு வீதியில் இறங்குகிறார்கள்.

கனடா தமிழரும் போன வெள்ளியும் இந்த வெள்ளியும் வீதியில் இறங்கி போராடுகிறார்கள்...நீங்கள் உங்கட பிரபாகரன் எதிர்ப்பு கனவுலகத்தில இருந்து வெளியில வந்தா இதுகள் புலப்படும்..வீட்டுக்க இருந்து பிரபாகரன் வசை பாடிக்கொண்டிருந்தா எப்படி தெரியும்?????

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தமிழரும் போன வெள்ளியும் இந்த வெள்ளியும் வீதியில் இறங்கி போராடுகிறார்கள்...நீங்கள் உங்கட பிரபாகரன் எதிர்ப்பு கனவுலகத்தில இருந்து வெளியில வந்தா இதுகள் புலப்படும்..வீட்டுக்க இருந்து பிரபாகரன் வசை பாடிக்கொண்டிருந்தா எப்படி தெரியும்?????

:(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொலி குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் எதனையும் தெரிவிக்கவில்லை. எனினும் இது தொடர்பில் அவர் அதிக கரிசனை காட்டி வருகின்றார் என அவரது பேச்சாளர் கடந்த திங்கட்கிழமை தெரிவித்தார்.

ஐ. நா. செய்மதிப் படங்கள் மூலம் எடுத்த தமிழரின் அழிவையே பார்த்துவிட்டு ........

வாய்க்குள்ளை கொழுக்கட்டை வைத்திருந்த பான் கி மூன் இதுக்குநல்லாத்தான் கரிசனை காட்டுவார் .

நான் முன்பு எந்த நாட்டவரையும் வெறுப்பதில்லை . இந்தப் பூனைக்கண்ணன்கள் செய்த வேலைகளுக்கு பிறகு ........

சீனாக்காரன் , ஜப்பான்காரன் , வியட்நாம்காரன் என்று , எந்த பூனைக்கண்ணனை கண்டாலும் பத்திக்கொண்டு வருகுது . ( தாய்லாந்துக்காரனை தவிர )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ. நா. செய்மதிப் படங்கள் மூலம் எடுத்த தமிழரின் அழிவையே பார்த்துவிட்டு ........

வாய்க்குள்ளை கொழுக்கட்டை வைத்திருந்த பான் கி மூன் இதுக்குநல்லாத்தான் கரிசனை காட்டுவார் .

நான் முன்பு எந்த நாட்டவரையும் வெறுப்பதில்லை . இந்தப் பூனைக்கண்ணன்கள் செய்த வேலைகளுக்கு பிறகு ........

சீனாக்காரன் , ஜப்பான்காரன் , வியட்நாம்காரன் என்று , எந்த பூனைக்கண்ணனை கண்டாலும் பத்திக்கொண்டு வருகுது . ( தாய்லாந்துக்காரனை தவிர )

அது ஏன் தாய்லாந்துக்காரனை விட்டீர்கள்? கேபீ தாய்லாந்தினூடாகவே ஸ்ரீலங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். தாய்லாந்திற்குத் தெரியாமல் இவை நடந்திருக்க முடியாதே!!

ஓ ஓ மறந்துவிட்டேன் தலைவர் இறந்துவிட்டார் என்று கேபீ அறிக்கை விட்டாரல்லவா. அவர்தான் தலைவரை காப்பாற்றுவதாகச்சொல்லி காட்டிக்கொடுத்தாரல்லவா? அவரை பிடித்துக்கொடுப்பதற்கு உதவிய தாய்லாந்து துரோகப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. நான் சொல்லுவது சரிதானே தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் தாய்லாந்துக்காரனை விட்டீர்கள்? கேபீ தாய்லாந்தினூடாகவே ஸ்ரீலங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். தாய்லாந்திற்குத் தெரியாமல் இவை நடந்திருக்க முடியாதே!!

ஓ ஓ மறந்துவிட்டேன் தலைவர் இறந்துவிட்டார் என்று கேபீ அறிக்கை விட்டாரல்லவா. அவர்தான் தலைவரை காப்பாற்றுவதாகச்சொல்லி காட்டிக்கொடுத்தாரல்லவா? அவரை பிடித்துக்கொடுப்பதற்கு உதவிய தாய்லாந்து துரோகப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. நான் சொல்லுவது சரிதானே தமிழ் சிறி

தாய்லாந்துகாரி எண்டு வந்திருக்க வேணும் .

தட்டச்சிலை தட்டும் போது .... கொஞ்சம் , தடுக்கிப்போட்டுது. மதிவதனங் .

நீங்கள் எப்பவும் கேபியையும் , தலைவரையும் தான் நினைப்பியள் போலை .

ஏன் .... உங்களுக்கு வேறை நினைப்பே வராதா ..... மதிவதனங்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்லாந்துகாரி எண்டு வந்திருக்க வேணும் .

தட்டச்சிலை தட்டும் போது .... கொஞ்சம் , தடுக்கிப்போட்டுது. மதிவதனங் .

நீங்கள் எப்பவும் கேபியையும் , தலைவரையும் தான் நினைப்பியள் போலை .

ஏன் .... உங்களுக்கு வேறை நினைப்பே வராதா ..... மதிவதனங்.

ஓ நினைப்பூட்டியதற்கு நன்றி. பாலாமாமா 2005 ம் ஆண்டு பொழிப்புரையில் பேச்சுவார்த்தைக்குப்போனவர்

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் தாய்லாந்துக்காரனை விட்டீர்கள்? கேபீ தாய்லாந்தினூடாகவே ஸ்ரீலங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். தாய்லாந்திற்குத் தெரியாமல் இவை நடந்திருக்க முடியாதே!!

ஓ ஓ மறந்துவிட்டேன் தலைவர் இறந்துவிட்டார் என்று கேபீ அறிக்கை விட்டாரல்லவா. அவர்தான் தலைவரை காப்பாற்றுவதாகச்சொல்லி காட்டிக்கொடுத்தாரல்லவா? அவரை பிடித்துக்கொடுப்பதற்கு உதவிய தாய்லாந்து துரோகப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. நான் சொல்லுவது சரிதானே தமிழ் சிறி

பிறகென்ன மதிவதனங் மகதாவுக்கும் டக்ளசுக்கு உள்ள ஐந்தறிவு தான் உள்ளது. :unsure::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.