Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள அண்ணா தம்பி தங்கைகளே கவனமாக இருங்கோ

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பைத் தகர்க்கும் முயற்சியில் சிறிலங்கா ஜபுதன்கிழமைஇ 16 செப்ரெம்பர் 2009இ 05:23 பி.ப ஈழம்ஸ ஜநி.விசுவலிங்கம்ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாகத் தோற்கடித்து விட்டபோதும் அதன் வெளிநாட்டு வலையமைப்பு இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கின்றது எனக் கருதும் சிறிலங்கா அரசுஇ அதனை அழித்தொழிப்பதற்கான இராஜரீக ரீதியான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

நிதி திரட்டல் மற்றும் கொழும்புக்கு எதிரான போராட்டங்கள் வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சிறிலங்கா அரசுக்குப் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றது.

இவற்றுக்குப் பின்னணியில் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களே செயற்படுகின்றன என கொழும்பு நம்புகின்றது. விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும்இ அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதனின் கைதுடன் புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டுவிடும் என சிறிலங்கா அரசு எதிர்பார்த்தது.

ஆனால் வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களின் நடவடிக்கைகள் இன்னும் செயல்திறனுடன் இருக்கின்றன. எனவே புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களைத் தகர்த்துவிடுவதற்கு அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றது எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா இராஜதந்திரிகள் அனைவரும் முழு வீச்சில் செயற்படுமாறு கோராப்பட்டுள்ளனர்.

நன்கு கட்டமைக்கப்பட்ட 12 அமைப்புக்கள் ஊடாக உலகில் உள்ள 44 நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு பலமான நிலையில் இருப்பதாகஇ பயங்கரவாதம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் சானக ஜெயசேகர தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளைக் கவனித்து வரும் ஐயா அண்ணா என்பவரின் செய்மதி தொலைபேசி உரையாடல்கள் பலவற்றை அண்மைக் காலங்களில் சிறிலங்கா உளவுத்துறையினர் ஒட்டுக்கேட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது. மேற்குலக நாடுகளில் நிதி சேகரிப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை ஐயா அண்ணா குழுவே கட்டுப்படுத்தி வருவதாக சிறிலங்கா அதிகாரிகள் கூறுகின்றனர்.

அண்மையில்இ கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உறங்கு நிலையில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு ஐயா அண்ணா பேசினார் என புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூறினர். போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்குத் தயாராகுமாறு அவர்களை ஐயா அண்ணா கேட்டுக்கொண்டார் எனவும் கூறப்படுகின்றது.

தாக்குதல்களுக்கு இப்போது திரும்பிச் செல்வது குறித்து அவர் எச்சரிக்கையாக இருக்கின்றார் என்றும் மீள ஒருங்கிணையும் தொடக்க நிலையில் புலனாய்வுத்துறையினரிடம் பிடிபடுவதை தவிர்க்க அவர் விரும்புகிறார் எனவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் நிதி சேகரிப்பை மீண்டும் தொடங்குமாறு அங்குள்ள புலி உறுப்பினர்களிடம் ஐயா அண்ணா கேட்டுள்ளார் எனவும் அரச புலனாய்வுத்துறையினர் கூறினர்.

இந்நிலையில்இ புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை உடைத்தெறியும் நோக்குடன் சிறிலங்கா அரசு நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் முதற்கட்டத்தை சோதனை செய்து பார்க்கும் வகையில்இ அமெரிக்காவைச் சேர்ந்த சட்டவாளரும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழுவின் இணைப்பாளருமான விசுவநாதன் உருத்திரகுமாரனை நாடு கடத்துமாறு அமெரிக்காவிடம் அதிகாரபூர்வமான கோரிக்கையை விடுப்பதற்கு சிறிலங்கா அரச திட்டமிட்டு வருகின்றது.

அதேசமயம்இ விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகத்தின் முக்கிய மையமாக விளங்குவதாகத் தெரிவிக்கப்படும் எரித்திரியாவில் தனது தூதரகத்தைத் திறப்பதற்கும் கொழும்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அந்த நாட்டுக்கான முதலாவது தூதுவராக தரைப்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விரைவில் நியமிக்கப்பட உள்ளார் எனச் செய்திகள் கூறுகின்றன.

அது தவிர விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகம் உள்ள நாடுகளில் தமது நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் கொழும்பு தீவிரமாக முயன்று வருகின்றது.

யாழ்கள அண்ணா தம்பி தங்கைகளே கவனமாக இருங்கோ யாரும் பெயர் கேக்கினம் என்று குடுக்காதையுங்கோ

புதினம்

Edited by jhansirany

யாழில் பல (ஆதிகால) புள்ளிகளை மலிவு விலையில் சிங்களவன் ஏற்கனவே வாங்கிவிட்டான்.

உலக பயங்கரவாதி ஐ நா பான் கி மூணையே வாங்கிய அனார்கலி கொம்பனிக்கு இது புதிதா?

Edited by சுனாமி

யாழில் பல (ஆதிகால) புள்ளிகளை மலிவு விலையில் சிங்களவன் ஏற்கனவே வாங்கிவிட்டான்.
:rolleyes:

இங்கேயும் சிலபேர் விலை போய்விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் ஊடகபோர் இரண்டு வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது

1.எவ்வாறு தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக காட்டி தமிழ் மக்களிடமிருந்து வேறுபடுத்த பார்ப்பணிய ஊடகங்களை அன்னாட்டு உளவு நிறுவனம் பயன்படுத்தியதோ அதே போல் உலகத்தமிழர்களை குறி வைத்து சிங்களத்தின் தமிழ் முகவர்களின் ,மூலம் இதுவரை சிங்களம் கொன்ற இலட்சக்கண்க்கான அப்பாவி தமிழர்களின் இழப்புக்கு புலிகளின் போராட்டமே காரணம் என்று நிறுவ முற்படுதல்,

*அதன் மூலம் தமிழீழம்= புலிகள் என்கின்ற நிலமை காணப்படுகிறது புலிகள் இல்லாவிட்டால் தமிழீழம் இல்லாமல் போய் விடும் என்ற எண்ணக்கருவுடன் விடுதலைப்புலிகளுக்கெதிராக பொய்களை புனையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது,அதனை நிறைவேற்ற தமிழ் ஊடகங்களையே ப்யன்படுத்துவது வேதனைக்குரியது.

*சிங்களத்தின் தமிழ் முகவர்கள் "கோயல்பல்ஸ்" மாதிரி பொய்களை திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் உண்மையாக்க முற்படுகின்றனர்.வன்னியில் உள்ள மக்கள் நாளொன்றுக்கு7பேர் என்ற வீதத்தில் இறக்கின்றார்கள் என்பது புள்ளிவிவரம் ஆனால் சிங்களத்தால் நாளொன்றுக்கு கொல்லப்படுகின்ற மக்களின் படுகொலை இந்த புள்ளிவிவரத்தில் இல்லை,

*வன்னி மக்களை இலகுவாக கொல்வதற்கு எவ்வாறு தமிழ் நாட்டு தலைமைகளை காங்கிரஸ் மூலம் விலைக்கு வாங்கி தமிழர்களின் அவலம் வெளிவருவதை தடுத்தார்களோ அதே போல் வெளி நாடுகளிலுள்ள தமிழர்களின் போராட்டங்களை அடக்குவதற்கு இந்த "கொயபல்ஸ்"களின் மூலம் சிங்களம் அவர்களுக்கு வசதிகள் செய்கின்றது போன்ற செய்திகளையும்,உலகத்தமிழினம் அமைதியாக இருக்க வேண்டும் சிங்களம் பார்த்துக்கொள்ளும் என்றவாறு தத்துவ முத்துக்கள் உதிர்க்கபடுகின்றது,

*இதன் மூலம் இற்தியாக வன்னி மக்கள் நம்பியிருக்கும் உலகத்தமிழினமும் அம்மக்களையும் கைவிடும் நிலையை உருவாக்கி இனப்படுகொலையினை தீவிரப்படுத்தவுள்ளது.

2.இவ்வாறான செய்திகளின் மூலம் தமிழர்கள் மீண்டும் ஒன்றினைவதை தடுத்தல் இச்செய்தி உண்மையானால் அதனை சிங்களம் சொல்லிவிட்டா செய்யும்?இவ்வாறான நிலை நீடித்தால் அடுத்ததாக வெளி நாடுகளிலுள்ள கோயில்களிலுள்ள செயற்குளு உறுப்பினர்களை கைது செய்து நாடு கடத்துவதற்கு சிங்கள அரசு வெளி நாடுகளுக்கு விண்ணப்பிக்கும்.

எமது மக்களின் அவலங்களை போக்க உலகத்தமிழர் முதலில் செய்ய வேண்டியது தம்மிடையே ஊடுருவியுள்ள புல்லுருவிகளை இனங்காணுதல் அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்துவதல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்தின் ஊடகபோர் இரண்டு வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது

1.எவ்வாறு தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக காட்டி தமிழ் மக்களிடமிருந்து வேறுபடுத்த பார்ப்பணிய ஊடகங்களை அன்னாட்டு உளவு நிறுவனம் பயன்படுத்தியதோ அதே போல் உலகத்தமிழர்களை குறி வைத்து சிங்களத்தின் தமிழ் முகவர்களின் இமூலம் இதுவரை சிங்களம் கொன்ற இலட்சக்கண்க்கான அப்பாவி தமிழர்களின் இழப்புக்கு புலிகளின் போராட்டமே காரணம் என்று நிறுவ முற்படுதல்இ

ழூஅதன் மூலம் தமிழீழம்ஸ்ரீ புலிகள் என்கின்ற நிலமை காணப்படுகிறது புலிகள் இல்லாவிட்டால் தமிழீழம் இல்லாமல் போய் விடும் என்ற எண்ணக்கருவுடன் விடுதலைப்புலிகளுக்கெதிராக பொய்களை புனையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுஇஅதனை நிறைவேற்ற தமிழ் ஊடகங்களையே ப்யன்படுத்துவது வேதனைக்குரியது.

ழூசிங்களத்தின் தமிழ் முகவர்கள் "கோயல்பல்ஸ்" மாதிரி பொய்களை திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் உண்மையாக்க முற்படுகின்றனர்.வன்னியில் உள்ள மக்கள் நாளொன்றுக்கு7பேர் என்ற வீதத்தில் இறக்கின்றார்கள் என்பது புள்ளிவிவரம் ஆனால் சிங்களத்தால் நாளொன்றுக்கு கொல்லப்படுகின்ற மக்களின் படுகொலை இந்த புள்ளிவிவரத்தில் இல்லைஇ

ழூவன்னி மக்களை இலகுவாக கொல்வதற்கு எவ்வாறு தமிழ் நாட்டு தலைமைகளை காங்கிரஸ் மூலம் விலைக்கு வாங்கி தமிழர்களின் அவலம் வெளிவருவதை தடுத்தார்களோ அதே போல் வெளி நாடுகளிலுள்ள தமிழர்களின் போராட்டங்களை அடக்குவதற்கு இந்த "கொயபல்ஸ்"களின் மூலம் சிங்களம் அவர்களுக்கு வசதிகள் செய்கின்றது போன்ற செய்திகளையும்இஉலகத்தமிழினம��

அமைதியாக இருக்க வேண்டும் சிங்களம் பார்த்துக்கொள்ளும் என்றவாறு தத்துவ முத்துக்கள் உதிர்க்கபடுகின்றதுஇ

ழூஇதன் மூலம் இற்தியாக வன்னி மக்கள் நம்பியிருக்கும் உலகத்தமிழினமும் அம்மக்களையும் கைவிடும் நிலையை உருவாக்கி இனப்படுகொலையினை தீவிரப்படுத்தவுள்ளது.

2.இவ்வாறான செய்திகளின் மூலம் தமிழர்கள் மீண்டும் ஒன்றினைவதை தடுத்தல் இச்செய்தி உண்மையானால் அதனை சிங்களம் சொல்லிவிட்டா செய்யும்?இவ்வாறான நிலை நீடித்தால் அடுத்ததாக வெளி நாடுகளிலுள்ள கோயில்களிலுள்ள செயற்குளு உறுப்பினர்களை கைது செய்து நாடு கடத்துவதற்கு சிங்கள அரசு வெளி நாடுகளுக்கு விண்ணப்பிக்கும்.

எமது மக்களின் அவலங்களை போக்க உலகத்தமிழர் முதலில் செய்ய வேண்டியது தம்மிடையே ஊடுருவியுள்ள புல்லுருவிகளை இனங்காணுதல் அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்துவதல்.

நனறி வசி

Edited by jhansirany

இதுவரைக்கும் என்னிடத்தில் எவரும் விலை பேசவில்லையே?

என்னை சிங்கள அர சு செல்லாக்காசாக நினைத்து உதாசினப்படுத்தும் இந்தச் செயலை

நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அது கிடக்கட்டும்

இதை இங்கு கொணந்து போட்டது ஆரை வெருட்ட?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்வார்கள்.

ஏற்கனவெ பல தமிழ் நல விரும்பிகள் , எமது ஒற்றுமையக் குலைக்க படாது படுகிறார்கள்.

இப்பவாவது நாம் ஒன்று படாவிட்டால் ....................................

இதுவரைக்கும் என்னிடத்தில் எவரும் விலை பேசவில்லையே?

என்னை சிங்கள அர சு செல்லாக்காசாக நினைத்து உதாசினப்படுத்தும் இந்தச் செயலை

நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அது கிடக்கட்டும்

இதை இங்கு கொணந்து போட்டது ஆரை வெருட்ட?

உங்களை உதாசீனம் செய்யவில்லை. அவனுக்கு தெரியும் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sooravali @ Sep 17 2009, 03:59 AM)

இதுவரைக்கும் என்னிடத்தில் எவரும் விலை பேசவில்லையே?

என்னை சிங்கள அர சு செல்லாக்காசாக நினைத்து உதாசினப்படுத்தும் இந்தச் செயலை

நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அது கிடக்கட்டும்

இதை இங்கு கொணந்து போட்டது ஆரை வெருட்ட?

சுறாவளி இங்கு இதை போட்டது யாரையும் வெருட்ட அல்ல

யாழ் களம் என்பது நாம் பார்பதற்கு மட்டுமல்ல இதை எத்தனையோ மக்கள் பார்கிறார்கள் அவர்களின் கவனத்திற்காகவும் தான்.

சில ஆக்கள் போன் எடுத்தா மணிக்கணக்க கதைப்பார்கள் .எதற்கும் ஜாக்கிருதையாக இருப்பது நல்லம் தானே

என்ட தம்பியை நான் வெருட்டுவேனா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.