Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிந்துவரும் சர்வதேச ஆதரவு -‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’செயற்குழுவின் கைகளை பலப்படுத் ஒன்றிணைவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் முரசம்

ஈழ விடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரும் திருப்பமான காலத்தில் இன்று புலம்பெயர் தமிழர்களுடன் ஈழத்தமிழர்கள் கைகோர்த்துள்ளனர்.

இற்றைவரை ஆயுதப்போராட்டம் எமது மக்களின் குரலை சர்வதேசம் எங்கும் ஒலிக்கச்செய்தாலும் சர்வதேச சமூகத்தின் ஆதரவென்பது வெகு மந்தமாகவே இருந்துவந்தது என்பது உண்மையே.

ஈழத்தமிழர்களின் கைகளில் இருந்த ‘தமிழீழ விடுதலைப்போராட்டம்’இன்று புலம்பெயர் மக்களின் கைகளுக்கு சென்றுள்ளநிலையில் அதனைக்கண்டு இலங்கை அரசு அச்சம் கொள்ள ஆரம்பித்துள்ளதானது இந்த போராட்டத்தின் வெற்றியின் முதல் படியாகும்.

கடந்த காலங்களில்போல் அல்லாமல்; ஈழத்தமிழர்கள் தொடர்பில் உறுதியான தீர்வுத்திட்டதுடன் சட்டத்தரணியும் தமிழ் உணர்வாளருமான உருத்திரகுமார் தலைமையில் வெளிக்கிளம்பியுள்ள 59 உறுப்பினர்களைக்கொண்ட ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’செயற்குழுவினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கையே இன்று இலங்கை அரசை நிலைகுலைய வைத்துள்ளது.

இதுவரை இலங்கையில் நிலவுவது ‘பயங்கரவாத பிரச்சினையென’கூறிவந்த நாடுகள் கூட இன்று தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆதரவு வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கு முக்கிய காரணமாக இலங்கையில் தமிழ் மக்கள் முள்வேலிக்குள் தடுத்துவைக்கப்பட்டு கொடுமைக்குள்ளாக்கப்படுவதும்,கடந்த காலத்தில் சிங்கள படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் சாட்சியங்கள் மூலம் சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுசெல்லப்பட்டதுமாகும்.

இந்த நிலையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு உறுதியான தீர்வுத்திட்டம் வழங்கப்படவேண்டும் என பல்வேறு நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தபோதெல்லாம் இராணுவ வெற்றியினை மட்டும் மனதில் கொண்டு இறுமாப்புடன் ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’இருந்துவந்தது.

இந்த நிலையில் இலங்கை அரசு தொடர்பில் கையாலாகா தனத்தில் இருந்துவந்த சர்வதேச நாடுகள் இலங்கை தமிழர்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் வழங்கப்படவேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்துவந்துள்ளதுடன் இலங்கையின் நட்பு நாடான இந்தியா மூலமாகவும் கோரிக்கை விடுத்து வந்தது.

எனினும் இலங்கை தமிழர்கள் தொடர்பில் எந்தவித பிரதிபலிப்புகளும் ஏற்படாத நிலையில் ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’செயற்குழுவின் செய்றபாடுகள் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் சர்வதேச சமூகத்தை அவர்கள் பால் ஈர்க்கவைத்துள்ளது.

கனடா,பிரித்தானியா,அமெரிக்கா,நோர்வே,தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளிடம் ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’செயற் குழுவின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசு விடுத்தவேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளமையானது ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’செயற் குழுவின் செயற்பாடுகளை இந்த நாடுகள் வெளிப்படையாக ஏற்றுள்ளன என்பது புலனாகிறது..

இது புலம்பெயர் தமிழர்களின் கைகளில் ‘தமிழீழ விடுதலைப்போராட்டம்’உறுதியான நிலையில் சென்றுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியடையசெய்துள்ளது.

அதுமட்டுமன்;றி இந்த ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’அமைப்பது தொடர்பில் ஈடுபட்டுவரும் அறிஞர்களை கைதுசெய்வது தொடர்பில் அந்தந்த நாட்டு இலங்கை தூதரகங்கள் மூலமாக இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் தோல்வியில் முடிவடைந்துள்ளதுடன் ‘அவ்வாறு செய்யமுடியாது’சர்வதே நாடுகள் கூறியுள்ளமையானது புலம்பெயர் மக்கள் இதில் ஈடுபட இருந்த தடைகள் அறுத்தெறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புலம்பெயர் மக்களின் கைகளில் பலமான கையிறு வழங்கப்பட்டுள்ளது.அதற்கு பக்கத்துணையாக ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’அமைப்பது தொடர்பில் ஈடுபட்டுவரும் செயற்குழவினர் உள்ளனர்.

அவர்களின் தீர்வுத்திட்டங்கள் எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லையென்பது இன்று நிதர்சனமாகிவருகின்றது.

இதற்கு புலம்பெயர் மக்கள் தம்மத்தியில் உள்ள கசப்புணர்வுகளையும் மாற்றுக்கருத்துகளையும் தூக்கியெறிந்துவிட்டு அவர்களின் கைகளை பலப்படுத்த முன்வரவேண்டும்.

உங்களின் இந்த செயற்பாடே எதிர்காலத்தில் முள்வேலிக்குள் அகப்பட்டு சொல்லொணா துன்பங்களை அனுபவித்துவரும் உங்கள் உறவுகளை விடுவிக்கவழிகோலாக அமையும் என்பது திண்ணம்.

நன்றி முரசம்

http://www.swissmurasam.net

இந்த செய்திக்கு ஒரு பார்வையாளரோ.... ஒருகருத்துப்பகிர்வுமே இல்லை... காரணம் என்ன... :) :) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதைக்கிறதுக்குமுதல் செய்து முடிக்கிற ஆக்களின்ர வேலை இது, கதைக்கிற ஆக்கள் இதுகிள வரமாட்டினம், செய்யிர ஆக்கள் இதுக்கிள கதைச்சு கொண்டு இருக்க மாட்டினம். :):):)

  • கருத்துக்கள உறவுகள்

நந்த வனத்தில் ஒர் ஆண்டி நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி.அதை கூத்தாடி கூத்தாடி.....போட்டுடைத்தாண்டி அம்பலவாணி :) :)

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

நந்த வனத்தில் ஒர் ஆண்டி நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி.அதை கூத்தாடி கூத்தாடி.....போட்டுடைத்தாண்டி அம்பலவாணி :) :)

உந்தமொழியை மொழிபெயர்த்துப் புரிய ஒரு அகராதி அவசரம் தேவை சாத்திரி. :)

கடந்தவருடம் யேர்மன் தொலைக்காட்சியொன்றில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி தமிழீழ தேசத்தை அங்கீகரித்ததாக யேர்மனியின் பூசாரி திருவாளர் வாகீசன் அவர்களது வழிகாட்டலில் ஒரு விவரிப்பு வந்தது. அதையொருக்கா ஞாபகப்படுத்திப் பார்த்தால் சிலவேளை இன்றைய இந்தச் செய்தியின் மேற்கோள் விடயம் புரியலாம்.

Edited by shanthy

ஒரு வேளை இங்கிலாந்தில் இருந்து போய் சோனியா காந்தியை( வியாபார விசயமாய்) கண்டு வந்தவை சொன்ன தகவல் இதோ...???

  • கருத்துக்கள உறவுகள்

கனிந்துவரும் சர்வதேச ஆதரவைக் கையில் தாங்கிப்பிடிக்க ஓம்சாயிராம் பக்தர் அம்பலவாணரை சர்வதேசம் அழைத்திருக்கிறது.

நாடு கடந்த அரசாங்கத்திற்கு எந்தவொரு நாடும் அங்கீகாரம் இன்னமும் வழங்கவில்லை,அதே நேரம் அமெரிக்காவில் சில சிவில் அதிகாரிகள், ஒஸ்றியாவின் சில அதிகாரிகள் ஆரம்பத்தில் சில சமிஞைகளை காட்டினார்களாம் இப்போ அவர்களும் பின் வாங்கி விட்டனராம். அண்மையில் ஒஸ்லோவில் நடந்த நாடு கடந்த அரசாங்க கருத்தமர்வும் முதலாவதாக அமெரிக்கவிலும், பின்னர் ஒஸ்ரியாவிலும் கேட்கப்பட்டு அவர்கள் மறுத்து விட்டார்கள் பின்னர் தான் நோர்வேயில் வைக்கப்பட்டது. அதுவும் அரச ஆதரவுடன் அல்ல தமிழர்களின் ஆதரவுடன் தான்.

அத்துடன் திரு உருத்திர குமாரன் அவர்களுக்கு இம்முறை நோர்வேக்கு இந்த கூட்டத்திற்கு வரக்கூட விசா வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே சர்வதேசம் எமக்கு ஏதோ உதவுவதாக மீண்டும் மீண்டும் கூறி தயவு செய்து ஏமாற்றவேண்டாம். உண்மைகளை த்ளிவாக கூறுங்கள் மக்கள் முடிவெடுப்பார்கள். மேற்கூறப்பட்டவை அனைத்தும் பொஇகள் அல்ல இது திரு உருத்திர குமாரன் அவர்களினாலேயே நேரடியாக தெரிவிக்கப்பட்டது. நன்றி

கனிந்துவரும் சர்வதேச ஆதரவைக் கையில் தாங்கிப்பிடிக்க ஓம்சாயிராம் பக்தர் அம்பலவாணரை சர்வதேசம் அழைத்திருக்கிறது.

அம்பாவாணரைப்பற்றிச் சொல்ல முன்னர் நீங்கள் என்ன செய்த நீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாவாணரைப்பற்றிச் சொல்ல முன்னர் நீங்கள் என்ன செய்த நீங்கள்?

நாங்கள் ஏதாவது செய்திட்டமெண்டு சொல்லவில்லையே ?

செய்திகளை சரிவர புரியாமல் சர்வதேசம் எங்கள் கையில் கனிதந்திருக்கிறது என்ற கனவுகளை இனியும் இந்த அம்பலவாணங்கள் வாணம் விட வேண்டாமென்பதையே சுட்டுகிறோம்.

நாடு கடந்த அரசாங்கத்திற்கு எந்தவொரு நாடும் அங்கீகாரம் இன்னமும் வழங்கவில்லை,அதே நேரம் அமெரிக்காவில் சில சிவில் அதிகாரிகள், ஒஸ்றியாவின் சில அதிகாரிகள் ஆரம்பத்தில் சில சமிஞைகளை காட்டினார்களாம் இப்போ அவர்களும் பின் வாங்கி விட்டனராம். அண்மையில் ஒஸ்லோவில் நடந்த நாடு கடந்த அரசாங்க கருத்தமர்வும் முதலாவதாக அமெரிக்கவிலும், பின்னர் ஒஸ்ரியாவிலும் கேட்கப்பட்டு அவர்கள் மறுத்து விட்டார்கள் பின்னர் தான் நோர்வேயில் வைக்கப்பட்டது. அதுவும் அரச ஆதரவுடன் அல்ல தமிழர்களின் ஆதரவுடன் தான்.

அத்துடன் திரு உருத்திர குமாரன் அவர்களுக்கு இம்முறை நோர்வேக்கு இந்த கூட்டத்திற்கு வரக்கூட விசா வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே சர்வதேசம் எமக்கு ஏதோ உதவுவதாக மீண்டும் மீண்டும் கூறி தயவு செய்து ஏமாற்றவேண்டாம். உண்மைகளை த்ளிவாக கூறுங்கள் மக்கள் முடிவெடுப்பார்கள். மேற்கூறப்பட்டவை அனைத்தும் பொஇகள் அல்ல இது திரு உருத்திர குமாரன் அவர்களினாலேயே நேரடியாக தெரிவிக்கப்பட்டது. நன்றி

உமையின் இந்தச் செய்தியை சிவகுமாரன் கருத்தில் கொள்ளுங்கள்.

சர்வதேசம் எமக்கு ஏதோ உதவுவதாக மீண்டும் மீண்டும் கூறி தயவு செய்து ஏமாற்றவேண்டாம். உண்மைகளை த்ளிவாக கூறுங்கள் மக்கள் முடிவெடுப்பார்கள்.

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.