Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போராளிகளை அடைத்து வைத்திருக்கும் வெலிகந்த முகாமில் கலவரம்!

Featured Replies

தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகளை சிறை வத்திருக்கும் வெலிகந்த முகாமில் இன்று கைகலப்பும் கலவரங்களும் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறை வைக்கப்பட்ட போராளிகளுக்கு இடைலேயே இரு குழுக்களாக இந்த மோதல் இடம்பெற்றதாக சிறைச்சாலைக்கு பொறுப்பான அபையகோன் என்பவர் தெரிவித்துள்ளார். ஒரு குழுவில் இருந்த உறுப்பினர் மற்ற குழுவில் இருந்தவருக்கு கல்லால் எறிந்ததாகவும் அதனை தொடர்ந்தே இந்த கை கலப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் மேலதிக விபரங்களை தெரிவிக்க சிறைசாலை அலுவலர் மறுத்து விட்டார்.

முழுச்சிங்கள ஊரின் மத்தியில் அமைந்து இருக்கும் இந்த முகாமில் நடந்த கொலைத்தாக்குதல் பற்றிய குறும்படம் ஒண்று யாழில் முன்னர் இருந்தது..

அடித்தால் கேட்க்க நாதி அற்ற ஊர்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகள் சிலர் காயம் ‐ கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன‐

13 November 09 06:58 am (BST)

இன்று வெலிக்டை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்தினால் தமிழ் அரசியல் கைதிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் பல தமிழ் அரசியல் கைதிகள் பலவருடங்களாக விசாரணையேதுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் அவர்கள் தமது விசாரணைக்காகவும் விடுதலைக்காகவும், உண்ணாவிரதம் உட்பட பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில் இன்று தமிழ்க் கைதிகள் சிலர் சிறைச்சாலை அதிகாரிகளினாலும், சிங்கள கைதிகளினாலும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சுயாதீனமான தகவல்கள் ஏதும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எனினும் தமிழ்க்கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் எதற்காக நடந்தது இதன் பின்னணி என்ன என்பன இதுவரையில் தெரியாத நிலையில் தமிழ் மக்களிடையே ஓர் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

1983 ம் ஆண்டு ஜூலை மாதம் இதேபோல் ஒரு சம்பவம் இதே வெலிக்கடை சிறைச்சாலையில் நிகழ்ந்தது, இதனைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தை யாரும் எளிதில் மறந்திருக்கமாட்டார்கள் மறக்கவும் முடியாது.

இப்படியான ஒரு நிலையில் இன்று நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பல கருத்துக்களை தெரிவித்தனர்.

இன்று கொழும்பில் மியான்மார் ஆட்சித் தலைவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் இனப்பிரச்சினை மிகவும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவமானது பாரிய இனக்கலவரத்திற்கு தூண்டுதலாக அமையலாம் எனவும் ஆகையால் அரசாங்கம் தலையிட்டு இந்தப் பிரச்சினையை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

எனினும் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் போன்றதொரு நிகழ்வு மீண்டும் இடம்பெறாது என கொழும்பில் இன்று இடம்;பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ செயலாளர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்

யாரோ ஒருவர் கல்லெறிந்தனால் அவருக்கு எதிராக சிலர் செயற்பட்டதனாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் இதனால் எவருக்கும் பாரிய சேதம் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன், 1983 ஆம் ஆண்டு வெலிக்கடையில் இடம்பெற்ற சம்பவம் போல ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

83 ஆம் ஆண்டு சிறைச்சாலையில் இடம்பெற்ற அந்த சம்பவத்துடன் அன்றைய அரசாங்கத்தின் சிலருக்கு தொடர்பு இருந்ததாக பல விதமான செய்திகள் வெளியாகியதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதபடி பார்த்துக்கொள்ளும் எனவும் கூறினார்.

இந்த சம்பவம் பாரதூரமான சம்பவம் அல்ல என தெரிவித்த அவர், தமது பொறுப்பில் இருக்கும் சிறைக்கைதிகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பு மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள் கைதிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்:‐

கொழும்பு மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள் கைதிகளில் 22 பேர் இன்று காலை தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிய வருகிறது. அதில் கடும் காயங்களுக்குள்ளான ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடைபெற்றதை உறுதிப் படுத்திய பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் உண்மை நிலையை அறிவதற்கு சிறைக்குச் சென்று பார்வையிட சிறை அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் 92 பேர், இருந்த அறைக்கு வந்த புதிய அதிகாரி ஒருவர் தமிழ்க் கைதிகளைத் தகாத வார்த்தைகளால், பேசியுள்ளார். இதற்கு தமிழ்க் கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால் மோதல் உருவானதாகக் கூறப்படுகின்றது. இச்சம்பவத்தின் போது நூற்றுக்கணக்கான சிங்கள சிறைக்கைதிகளும் சேர்ந்து கொண்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இதேவேளை. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு சிங்கள கைதியும் கைதுசெய்யப்படாத நிலையில், ஐந்து தமிழ் கைதிகள், ஒழுக்காற்று விசாரணைக்காக சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பாக கொழும்பு மகஸின் சிறைச்சாலையின் உதவி சிறைச்சாலை ஆணையாளர் கெனத் பெர்னாண்டோ தெரிவிக்கையில்,

இன்று காலை 8.30 மணியளவில் கைதிகளைக் கணக்கெடுப்பதற்காக அதிகாரி ஒருவர் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிவுக்குச் சென்றிருந்த சமயம், அங்கிருந்த கைதி ஒருவர் இவர் மீது கல்லெறிந்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த சிங்கள கைதிகளுக்கும் தமிழ்க் கைதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட கைதிகளைச் சிறைச்சாலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதன் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார்.

இது குறித்து தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் உதவி சிறைச்சாலை ஆணையாளர் கெனத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=17211&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகளை சிறை வத்திருக்கும் வெலிகந்த முகாமில் இன்று கைகலப்பும் கலவரங்களும் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறை வைக்கப்பட்ட போராளிகளுக்கு இடைலேயே இரு குழுக்களாக இந்த மோதல் இடம்பெற்றதாக சிறைச்சாலைக்கு பொறுப்பான அபையகோன் என்பவர் தெரிவித்துள்ளார். ஒரு குழுவில் இருந்த உறுப்பினர் மற்ற குழுவில் இருந்தவருக்கு கல்லால் எறிந்ததாகவும் அதனை தொடர்ந்தே இந்த கை கலப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் மேலதிக விபரங்களை தெரிவிக்க சிறைசாலை அலுவலர் மறுத்து விட்டார்.

மீண்டும் குட்டிமணி , தங்கதுரை போன்றவர்களை வெலிக்கட சிறைச்சாலையில் கொன்றது போல் ,

வெலிகந்த சிறைச்சாலையிலும் நிறைவேற்ற சிங்களம் நாடகம் ஆடுகின்றது. :)

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளை அடைத்து வைத்திருக்கும் வெலிகந்த முகாமில் கலவரம்! - ஈழ நாதம்

வெலி கந்தயா அல்லது வெலிக்கடையா உமை அதை சொல்லுங்கள்???? :):lol:

  • தொடங்கியவர்

வெலி கந்தயா அல்லது வெலிக்கடையா உமை அதை சொல்லுங்கள்???? :):lol:

இரண்டு சிறை முகாம்களிலும் நேற்று தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

உமை சொன்னால் சரியாத்தனிருக்கும் , முனிவர்ஜீ......

ஏனெண்டால் ....... பக்கத்திலை பாய் விரிச்சு , படுத்திருந்து பாத்து சொன்ன மனுசன்.

  • கருத்துக்கள உறவுகள்

உமை சொன்னால் சரியாத்தனிருக்கும் , முனிவர்ஜீ......

ஏனெண்டால் ....... பக்கத்திலை பாய் விரிச்சு , படுத்திருந்து பாத்து சொன்ன மனுசன்.

:lol::)smiley-devil12.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சார்பான செய்திக்குப் பஞ்சம்...... பொன்சேகா செய்திக்கும் ஆதரவ காணேல்ல, இப்பிடி ஏதாவது செய்தாவது செய்தியாக்கிப்போடுவமெண்டா ....... விடுகிறார்களில்ல. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.