Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்பதியர் சேர்ந்து குளித்தால் விவாகரத்தை தவிர்க்கலாம்*மலேசிய அரசு அறிவுப்பு

Featured Replies

கோலாலம்பூர்:வியர்வை நாற்றத்தின் காரணமாக மலேசியாவில் இளம் தம்பதிகளுக்கிடையேயான விவாகரத்து அதிகரித்துள்ளது.மலேசியாவில் சமீபகாலமாக விவாகரத்து அதிகரித்துள்ளது. பத்து திருமணம் நடந்தால் அவற்றில் மூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. குறிப்பாக, 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர்.

இதனால், வருத்தமடைந்துள்ள மலேசிய அரசு, பெருகி வரும் விவாகரத்தை குறைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.முஸ்லிம் மத சட்டதிட்டங்களை பின்பற்றும் மலேசியாவில் கணவன்-மனைவி உறவு குறித்து அரசே வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டது.

வியர்வை நாற்றம், கவர்ச்சியான உடை அணியாதது ஆகியவை தான் இளம் தம்பதியர்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது, என்பதை கண்டறிந்த மலேசிய தகவல் தொடர்புத்துறை, இளம் தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மகிழ்ச்சியாக வாழும் தம்பதியர்கள், தங்கள் துணைவரை எப்படியெல்லாம் வசீகரிக்க முடியும் என்பது குறித்த குறிப்புகளை இந்த கருத்தரங்கில் விளக்குகின்றனர்.

தம்பதியர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் வாசனை திரவியங்களை தயாரிக்கும் படி, நறுமண பொருள் தயாரிப்பு நிறுவனங்களை மலேசிய அரசு கேட்டு கொண்டுள்ளது.தொள தொளவென காணப்படும் பைஜாமா, டி ஷர்ட்கள் போன்றவற்றை அணியாமல் உடலை சிக்கென பிடிக்கும் உடைகளை அணியும் படியும் மலேசிய தகவல் தொடர்புத்துறை தலைவர் முகமது ரம்லி நூ தெரிவித்துள்ளார்.

முடைநாற்றம் வீசும் துணிகளை அணியாமல் துவைத்த துணிகளை அணிந்து தங்கள் துணைவருடன் பழகும் படியும், தம்பதியர் சேர்ந்து குளிக்கும் படியும் முகமது ரம்லி அறிவுறுத்தியுள்ளார்."கேலந்தன் மாகாணத்தில் உள்ள வயதான ஒற்றுமையுடன் வாழும் தம்பதியர்களிடம் விசாரித்த போது அவர்கள் பேரன் பேத்தி பிறந்த பின்பும் சேர்ந்து குளிப்பதாக கூறுகின்றனர். அவர்களின் ஒற்றுமையின் ரகசியத்தை அப்போது புரிந்து கொண்டேன்' என்கிறார், முகமது ரம்லி. source:dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

-----

-----

வியர்வை நாற்றம், கவர்ச்சியான உடை அணியாதது ஆகியவை தான் இளம் தம்பதியர்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது, என்பதை கண்டறிந்த மலேசிய தகவல் தொடர்புத்துறை, இளம் தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மகிழ்ச்சியாக வாழும் தம்பதியர்கள், தங்கள் துணைவரை எப்படியெல்லாம் வசீகரிக்க முடியும் என்பது குறித்த குறிப்புகளை இந்த கருத்தரங்கில் விளக்குகின்றனர்.

தம்பதியர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் வாசனை திரவியங்களை தயாரிக்கும் படி, நறுமண பொருள் தயாரிப்பு நிறுவனங்களை மலேசிய அரசு கேட்டு கொண்டுள்ளது.தொள தொளவென காணப்படும் பைஜாமா, டி ஷர்ட்கள் போன்றவற்றை அணியாமல் உடலை சிக்கென பிடிக்கும் உடைகளை அணியும் படியும் மலேசிய தகவல் தொடர்புத்துறை தலைவர் முகமது ரம்லி நூ தெரிவித்துள்ளார்.

முடைநாற்றம் வீசும் துணிகளை அணியாமல் துவைத்த துணிகளை அணிந்து தங்கள் துணைவருடன் பழகும் படியும், தம்பதியர் சேர்ந்து குளிக்கும் படியும் முகமது ரம்லி அறிவுறுத்தியுள்ளார்."கேலந்தன் மாகாணத்தில் உள்ள வயதான ஒற்றுமையுடன் வாழும் தம்பதியர்களிடம் விசாரித்த போது அவர்கள் பேரன் பேத்தி பிறந்த பின்பும் சேர்ந்து குளிப்பதாக கூறுகின்றனர். அவர்களின் ஒற்றுமையின் ரகசியத்தை அப்போது புரிந்து கொண்டேன்' என்கிறார், முகமது ரம்லி. source:dinamalar

கணவன் வேலை முடிந்து , மாலையில் வீட்டிற்கு வரும் போது ......

மல்லிகைப்பூவும் , அல்வாத்துண்டு ஒன்றும் வாங்கி வந்தால் தம்பதிகளிடம் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

கேலந்தன் மாகாணத்தில் உள்ள வயதான ஒற்றுமையுடன் வாழும் தம்பதியர்களிடம் விசாரித்த போது அவர்கள் பேரன் பேத்தி பிறந்த பின்பும் சேர்ந்து குளிப்பதாக கூறுகின்றனர்.

கிழடுகள் பலே கில்லாடிகள் போல கிடக்குது.

தமிழ் படத்தில மழையில காதல் டூயட் இதனால் தான் எடுக்கிறவையள் :rolleyes:

கணவன் வேலை முடிந்து , மாலையில் வீட்டிற்கு வரும் போது ......

மல்லிகைப்பூவும் , அல்வாத்துண்டு ஒன்றும் வாங்கி வந்தால் தம்பதிகளிடம் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

இந்த வெளிநாட்டில மல்லிகைபூவுக்கும் ,அல்வாவுக்கும் எங்க போரது.

ரோசாபூவும் ,பேகரும் வாங்கி கொடுத்தால் விவாகரத்து நடக்காது.அத்துடன் இடக்கிட அசைவ முத்தம் கொடுத்தால் எல்லாம் சரியா போயிடும் :rolleyes:

இந்த வெளிநாட்டில மல்லிகைபூவுக்கும் ,அல்வாவுக்கும் எங்க போரது.

ரோசாபூவும் ,பேகரும் வாங்கி கொடுத்தால் விவாகரத்து நடக்காது.அத்துடன் இடக்கிட அசைவ முத்தம் கொடுத்தால் எல்லாம் சரியா போயிடும் :)

அதென்ன அசைவ முத்தம்?

கணவன் வேலை முடிந்து , மாலையில் வீட்டிற்கு வரும் போது ......

மல்லிகைப்பூவும் , அல்வாத்துண்டு ஒன்றும் வாங்கி வந்தால் தம்பதிகளிடம் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

வேலை முடிந்து வாற நாள் எல்லாம் அல்வாவும் மல்லிகையும்

வாங்கி வந்தா உழைப்பு என்னாகிறது?

உடம்புதான் தாங்குமா?

தம்பி சிறி எப்பிடியோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எப்பவும் சேர்ந்துதான் குளிக்கிறனாங்கள் :)

என்ரை முதுகு ஊத்தையை அவ உருட்ட :)

அவவின்ரை முதுகு ஊத்தையை நான் உருட்ட :):wub::wub::wub: :wub:

இப்பிடியே பாக்கப்போனால்

ஆறு செல்வங்கள் வீட்டிலை குதிச்சு விளையாடுதுகள் எல்லே

baby.gifbaby.gifbaby.gifbaby.gifbaby.gifbaby.gif

மலேசிய கவுண்மேந்து! விருப்பமெண்டால் சொல்லுங்கோ இதை விட பக்கா ஐடியா எல்லாம் சொல்லித்தல்லாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி இல்லாத நாடுகளிலேயே சமாளிக்கிறாங்கள். மலேசியன் தான் ஏதோ குளிக்காத கதை விடுறாங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெளிநாட்டில மல்லிகைபூவுக்கும் ,அல்வாவுக்கும் எங்க போரது.

ரோசாபூவும் ,பேகரும் வாங்கி கொடுத்தால் விவாகரத்து நடக்காது.அத்துடன் இடக்கிட அசைவ முத்தம் கொடுத்தால் எல்லாம் சரியா போயிடும் :)

என்ன ஜில் , இப்பிடி சொல்லிப்போட்டியள்.

விரதம் , பிடிக்கிற நாளிலை ..... பேகரும் , அசைவ முத்தமும் கொடுத்தால் விவாகரத்து விரைவில் ஏற்பட்டுவிடுமே.... :)

வேலை முடிந்து வாற நாள் எல்லாம் அல்வாவும் மல்லிகையும்

வாங்கி வந்தா உழைப்பு என்னாகிறது?

உடம்புதான் தாங்குமா?

தம்பி சிறி எப்பிடியோ?

சிவா , உழைப்பு மிஞ்சாது எண்டு .... மல்லிகைப்பூவும் , அல்வாவும் வாங்க யோசித்தால்.......

கடைசிலை தனிய இருந்து பாணும் , ஜாமும் தான் சாப்பிட வேண்டிவரும். :)

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடையளுக்கு மாதம் மாதம் நகை வாங்கிக்குடுத்தால் கானும். :)

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி இல்லாத நாடுகளிலேயே சமாளிக்கிறாங்கள். மலேசியன் தான் ஏதோ குளிக்காத கதை விடுறாங்கள். :)

கற்பனைக்கும் நிஜத்திற்கும் இடையிலான முரண்பாடுதான் அது. அதை எளிதாக சுட்டிகாட்ட இலகுவானதொன்று அதே தவிர குளிக்காமைதான் காரணம் அல்ல. இளைஞர்கள் பெண்களைபற்றி கற்பனை கவிதைகளையும் திரைபடங்களையும் பார்க்கின்றார்கள். கூந்தல் மல்லிகைபூ........ இதள்கள் இலியாபூ....... இடுப்பு நெருஞ்சிப்பூ..... என்று கற்பளையில் திகள்ந்து ஒரு பெண்ணை திருமணம் ஊடகா அடைகின்றார்கள். நிஜவாழ்க்கையில் இதளில் பூவும் இல்லை தேனும் இல்லை.............. எச்சிலும்..... விடிகாலை வேளையில் வீணி நாற்றமும்தான். ஆகவே தடுமாறிபோகின்றார்கள் பின்பு எடுத்ததற்கெல்லாம் சுடு சுடு என் விழுவார்கள் பெண்கள் பெண்விடுதலை நவீன உலகம் பற்றி கருத்துரைப்பார்கள் முடிவு விவாகரத்து!

தமிழில் ஒரு கவிஞ்ஞன் எழுதினான்.................. "அழகினை அறியாத பாவம் அருகினில் இருந்தென்ன இலாபம்" என்று

இருப்பதை வைத்து நிறைவடைய கற்றுகொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த உலகமயமாதல் இப்போது இந்திய இளைஞர்களை ஐஸ்வர்ஜா ராய் கூட வேண்டாம் கட்டினால் பமேலா அண்டர்சன் மாதிரி பாருங்கோ என்று சொல்ல வைத்துள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.