Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி தேர்தலும் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளுவதும் - POET

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1

இன்று காலை என் கவனத்தை ஈர்த்த சேதி இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் நண்பருமான சிவாஜிலிங்கத்தின் பத்திரிகையாலர் சந்திப்புப் பற்றியதாகும். நியாயமான கோபத்தை வெளிப்படுத்திய நண்பர் சிவாஜிலிங்கம் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சம்மந்தர் போட்டியிடாவிட்டால் தான் களமிறங்கப்போவதாக அறிவ் இத்துள்ளார். இரண்டு சிங்கள தேசியவாதிகளை ஆதரிக்காது ஒரு தமிழன் களமிறங்குவது அவசியம் என்பதே அவரது வாதமாக உள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்த நண்பர் சிவாஜிலிங்கம் "ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயே‌ச்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்" எ‌ன்றும் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்தபோது இலங்கையில் போர் முடிவடைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்குள்ள தமிழ் மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. முள்வேலி முகாம்களில் உள்ள எந்த தமிழர்களையும் அவர்களுடைய வாழ்விடங்களில் இலங்கை அரசு மறு குடியமர்த்தம் செய்யவில்லை என்கிற விடயங்களை அவர் சுட்டிக் காட்டினார். திரு சம்பந்தனை ஜனாதிபதித் தேர்தலில் குதிக்க வைக்கும் நெருக்குதலாகவே அவரது பேட்டி தொனித்தது. சிவாஜி லிங்கத்தின் கோபம் நியாயமானது. ஆனாலும் அவரது மகிந்த பொன்சேக தரப்புகளுக்கு எதிராக தேர்தலில் குதிக்கும் அணுகுமுறையும் மகிந்த ராஜப்க்சவின் தேர்தல் வெற்றிக்கான உத்தியும் ஒன்றாக இருக்கிறதைச் சுட்டிக்காட்டவே நான் விரும்புகிறேன். கடந்த தேர்தலில் வன்னி தேர்தல் பகிஸ்கரிப்பு என்றுபோய் மகிந்தவின் வெற்றியை மட்டுமன்றி தமது அழிவையும் உறுதிப் படுத்திய வரலாற்றுத் தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறதை எனது கடமையாக உணர்கிறேன்.

2

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிறீ லங்கா அதிபர் மகிந்தராஜபக்ச்ச மீதான நண்பர் சிவாஜிலிங்கத்தின் கோபம் நியாயமானது. எனினும் மகிந்த மீதான கோபத்தை நிறைவேற்றும் வழி தேர்தலில் மகிந்த வெற்றிபெற உதவுவதா அல்லது ஆரது வெற்றி வாய்ப்பை சிக்கலாக்குவதா என்ற வரலாற்றுக் கேழ்வி இனக்கொலை ஆபத்துக்கும் இன ரீதியான கூட்டு தண்டணைகளுக்கும் முகம்கொடுத்து நொந்து நூலாகிப் போன இலங்கைத் தமிழர் முன்னே உள்ளது. மகிந்தவின் வெற்றி சர்வதேச சமூகமும் தமிழர்களும் செயல்படுவதற்க்கான கொஞ்ச நஞ்ச வெளியையும் spae இல்லாதொழித்துவிடும். இத்தகைய வெளி முக்கியமாக சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களாலும் சிங்கள பேரின வாதிகள் மகிந்த பொன்சேக என்று பிழவு பட்டு பெலகீனப் படுகிறதாலுமே உருவாகியது. முன்னய ஜனாதீபதி தேர்தலில் சீனா தனது உறுதியான ஆதரவாளனான மகிந்தவை வெற்றி பெறவைக்க திரைமறைவு வேலைகலை செய்தது.

சீனா எப்பவும் இலங்கை, பங்களாதேஸ் நேபாளம் போன்ற நாடுகளைக் கையாளும் தனது வெற்றிகரமான தென்னாசிய கொள்கைகளின் முட்டைகளை இயன்றவரை தனது எதிரியான இந்தியாவின் கூட்டுக்குள் இடுவதையே தனது அடிப்படை இராஜதந்திரமாகக் கொண்டிருக்கிறது. அதனால்தான் சீனா எப்பவும் தனது ஆதரவாளர்கள் தந்திரமாக இந்தியாவை பயன்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கி வாசிக்கிறது. இந்திய அரசு ரணிலை அமரிக்க + மேற்குலக ஆதரவாளர் எனக் அடையாளப் படுத்தியது. தனது இராஜதந்திர நலன்ளைப் பலீயிட்டாயினும் ரஜீவ் காந்தி கொலை சந்தேக அமைப்பினர் தோற்க்கடிக்கப் படுவதை இந்திய அரசு விரும்பியது. பேச்சுவார்த்தை தமது நேரடி இராணுவத்தின் வெற்றிகளை முடக்கும் தந்திரமென பிழையாக எடைபோட்ட போராளிகளும் மகிந்தவின் வெற்றிக்கு வழிவகுத்தனர். புலிகளை வீழ்த்துகிறோம் என்று மகிந்த பதவிக்குவர உதவியதன்மூலம் இந்தியா இலங்கைஐயும் போராளிகள் தங்கள் தலைகலையும் தங்கத்தட்டில் வைத்து சீன ஆதரவாலனான மகிந்த ராஜபக்சவின் கைகளில் கொடுத்தாயிற்று.

இந்த தேர்தல் வெற்றி தமிழரை முழுமையாக அடக்கவும் இந்தியாவை வெளியேற்றி சீனாவை உறுதியாக இஅலங்கையில் காலூன்ற வைக்கவும் மகிந்த ராஜபக்சவுக்குத் தேவைப் படுகிறது. மீண்டும் அத்தகைய ஒரு தவறை இந்தியா செய்தாலும் நாம் செய்யக்கூடாது.

3

திரு அன்ரன் பாலசிங்கம் சரியாகவே கையாண்ட பேச்சுவார்த்தைகளை ஒத்துழையாமை மூலம் வன்னியில் சிலரும் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள ஆதரவாளர்கள் சிலரும் முடக்கினார்கள். இவர்கள் தேச பக்தர்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் தங்கள் தவறுகளை சுய விமர்சனம் மூலம் திருத்துவதற்க்குப் பதிலாக அதையே தத்துவமாக இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்கிறார்கள். குறிப்பாக போராளிகளின் தவறான வெளிவிவகாரக் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்திய ஆங்கில ஊடகங்களைச் சார்ந்த சிலர் இன்னும் சுய விமர்சனம் செய்யாமல் பழைய போக்கையே தொடருவது கவலை தருகிறது.

மேற்க்கு நாடுகளில் போராளிகளின் வெளிவிவகார பணிகளிலும் செய்தி பரிவர்த்தனைப் பணிகளிலும் வேலை செய்த தமிழ்நெற் உட்பட சகலருமே தோல்விக்கு பொறுப்பெடுக்க வேண்டும். எங்கே பிழைவிட்டார்கள் என்பதையும் யாரிடம் ஏமாந்தார்கள் என்பதையும் அவர்கள் சொல்ல வேண்டிய இறுதித் தருணமிது. அதுவரைக்கும் இளைய தலைமுறையை மூழைச் சலவை செய்வதை அவர்கள் கைவிடவேண்டும். சுய விமர்சனங்கள் மூலம் எஞ்சியுள்ள எமது இளய தலைமுறையாவது சரியான பாதை காண அவர்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.

4

தமிழர் பகிஸ்கரிப்பு போட்டியிடுதல் என்று ஆரம்பித்தால் மகிந்தவின் வெற்றி தேர்தலின் முன்னமே உறுதிப் பட்டுவிடும். அத்தகைய பின்னணி பேரினவாதிகள் தேர்தலில் மகிந்த பொன்சேக என்று பிழவு படுவதற்க்குப் பதிலாக மகிந்தவைன் பின்னே பலமாக ஒன்று சேரவே வழிவகுக்கு. இந்த நிலமை பேரின வாதிகளுக்கும் தேர்தலின்பின் இலங்கைஇல் நேரடியாகக் காலூன்ற முனையும் பேரினவாதிகளின் சீன நண்பர்களுக்குமே வாய்ப்பானது. இந்த சதிக்கு நாம் ஒருபோதும் துணைபோய்விடக்கூடாது.

poet

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்று புரியல்ல. தமிழர்கள் ஏன் இந்த சிங்கள தேசம் தெரிவு செய்ய இருக்கும் தமக்கான சிங்கள ஜனாதிபதிக்கான தேர்தலுக்கு இத்தனை குத்திமுறிவு செய்யினம். தமிழர்கள் வாக்குப்போட்டால் என்ன.. விட்டால் என்ன வரப்போவது ஒரு சிங்களவன் தான். அதுவும் சிறீலங்கா சிங்கள பெளத்த தேசம் என்று உரக்கக் கத்தும் சிங்களவர்கள் தான் வரப்போகிறார்கள்.

இதற்குள் தமிழர்கள்.. என்னத்தை சாதிக்கப் போயினம். பிரிந்து செல்ல விரும்பிற தமிழர்கள் எதிர்க்காக சிங்கள ஜனாதிபதிக்கான தேர்தலை எதிர்பார்க்கினம்..???! சிங்கள அரசியலமைப்புக்குக் கீழ் வாழ முடியாது என்று சொல்லும் தமிழர்கள் அந்த அரசியல் அமைப்பு நடத்தும் சிங்கள ஜனாதிபதிக்கான தேர்தலில் எப்படி வாக்களிக்க முடியும்..???!

தமிழர்களின் இந்த முரண்பட்ட நிலைப்பாடுகளால் தான் உலகம் தமிழர்களின் உரிமைக் குரலை மதிக்க ஏற்கத் தயங்குகிறது. தமிழர்களை சரிக்கட்டி சமாளித்துவிடலாம் என்று கணக்குப்போடுகிறது என்று நினைக்கிறேன்.

ஒட்டுமொத்த தமிழர்களும் சிறீலங்காவின் அரசியலமைப்புக்குள் எம்மால் வாழ முடியாது.. அதன் கீழ் வரும் எந்த ஒரு சனநாயக நடைமுறையிலும் எமக்கு நம்பிக்கை இல்லை இந்தத் தேர்தல்களை எதிர்காலத்திலோ இப்போதோ எப்போதும் தமிழர்கள் சந்திக்கத் தயார் இல்லை.. எப்போதும் புறக்கணிப்பே தமிழர்களின் நிலைப்பாடு என்றால்.. என்னாயிடும். இந்த உலகம் அப்போதாவது தமிழர்களை திருப்திப்படுத்த ஏதாவது செய்ய முயலலாம்.

ஆனால் இது என்னவோ.. சிங்களவன் நல்லவன் எண்டிட்டாண்டா என்று வடிவேல் கணக்கா அவன் அடிச்சு மூக்கால இரத்தம் வழிய வழிய தமிழன் வெள்ளை வேட்டியோட சிங்கள ஜனாதிபதிக்கு வாக்குப் போட இத்தனை வகையாக விளம்பரம் செய்யுறதுதான் எனக்குப் புரியல்ல.

சிங்களத் தலைமையில் யார் வந்தாலும்.. தமிழர்களுக்கு விடிவும் இல்லை உரிமையும் இல்ல என்று தெளிவாக தெரிந்திருந்தும் தமிழர்கள்.. இந்தத் தேர்தல்களை அங்கீகரித்து வாக்களித்து உலகிற்கு நாம் சிறீலங்காவின் அரசியலமைப்பை அங்கீகரித்து எனியும் வாழத்தயார் என்றா காட்டப் போகின்றனர்..???! முட்டாள் தமிழர்களே சிந்தியுங்கள். சிங்களவன் அல்ல முட்டாள் மாதனமுத்தாவின் ஜீன் எப்படி தமிழர்களுக்குள் நுழைந்ததோ தெரியவில்லை..??! :D :D :D

Edited by nedukkalapoovan

எங்களுக்கு சிறீலங்காவின் அரசியல் அமைப்பும் வேண்டாம் அவர்களின் கீழ் வேலையும் வேண்டாம்,அவர்களின் சம்பளமும் வேண்டாம்,அவர்களின் சாப்பாடும் வேண்டாம் எங்களுக்கு அவர்களிடமிருந்து ஒன்றும் வேண்டாம் என்று உலகத்திற்கு காட்டுவோம்.அப்ப தான் தமிழனைப் பற்றி இந்த உலகத்திற்கு விளங்கும்.

இண்டைக்கு எங்கட லன்ச் காரைக்குடி செட்டிநாட்டு உணவகத்தில் சும்மா அந்த மாதிரி இருக்கும்.

//மேற்க்கு நாடுகளில் போராளிகளின் வெளிவிவகார பணிகளிலும் செய்தி பரிவர்த்தனைப் பணிகளிலும் வேலை செய்த தமிழ்நெற் உட்பட சகலருமே தோல்விக்கு பொறுப்பெடுக்க வேண்டும். எங்கே பிழைவிட்டார்கள் என்பதையும் யாரிடம் ஏமாந்தார்கள் என்பதையும் அவர்கள் சொல்ல வேண்டிய இறுதித் தருணமிது. அதுவரைக்கும் இளைய தலைமுறையை மூழைச் சலவை செய்வதை அவர்கள் கைவிடவேண்டும்//

சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழர்கள் தமது அடிப்படை அரசியற் கோரிக்கையான தமீழத்தை விட்டு விட வேண்டும் என்று கோரிய நீங்கள் என்று உங்களைச் சுய விமரிசனம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? அமெரிக்க ஏகாத்திபதியத்தின் கைப் பொம்மையான நோர்வே சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் பலமுற்று இருந்த சிறிலங்கா இராணுவத்தைப் பலப் படுத்தியதும் அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன படுத்திய இந்திய சீன அரசுகளும் பயன் படுத்தி புலிகளை அழித்ததன் மூலம் மேற்குலகை வெளி யேற்றி விட்டன.இங்கே தவறிழைதத்து யார்?இந்தியாவின் நரித் தனத்தைப் புரிந்து கொள்ளாது அதன் ஆலோசனைகளின் அடிப்படையில் செயற்பட்ட மேற்குலகமா அல்லது புலிகளா?

சிறிலங்கா அரசின் போரிற்குப் பின்னால் நின்று ஆதரவு தந்தவர்கள் யார்? சமரச அரசியல் செய்வதற்க்கு பல கட்சிகள் தமிழரிடம் உண்டு, அதற்க்கு புலிகள் அவசியம் அல்ல.தமிழரின் தேசிய அபிலாசைகளை என்றும் சமரசதிற்க்கு உள்ளாக்காதா ஒரே இயக்கம் புலிகள் இயக்கமே.அதனால் தான் அது என்றும் மடிந்து விடாது.தமீழ மக்கள் தமது இழப்புக்களை சீர் செய்து தம்மை ஒழுங்கமைத்ததும் மீண்டும் மீன்டு எழும்.ஏனெனில் சிறிலங்காத் தீவில் சிங்களப் பேரினவாதாம் இருக்கும் வரை தமிழர்களின் போராட்டாம் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவையும் பொன்சேகாவையும் போர்க் குற்றவாளிகளாக அறிவித்த தமிழர்கள் அவர்களில் ஒருவரை ஜனநாயக முறையில் தங்கள் தலைவராக தெரிவு செய்வதன் மூலம் அவர்கள் எந்தத் தவறும் செய்யாதவர்கள் என்று தமிழரே சொல்லி விட்டார்கள் என்று இந்தியாவும் தமிழின அழிப்புக்கு துணை போன நாடுகளும் தங்கள் மேல் உள்ள பழியை இலகுவாக கழுவிக் கொள்ளத்தான் உதவும்.ஜனாதிபதி ஆவதற்கு முன்பு பெரிய அளவில் தமிழின அழிப்பில் ஈடுபட்டதாக அறியப்படாத மகிந்தவே அதிகாரம் கையில் கிடைத்தததும் எவ்வளவு அழிவுகளைச் செய்தாரென்றால் இராணுவத் தளபதியாக இருந்த பொழுது (செம்மணிப் படுகொலைகள் உட்பட) பெரும் தமிழின அழிப்பில் ஈடுபட்ட பொன்சேகா முழு அதிகாரம் கிடைத்தால் எப்படி நடந்து கொள்வார் என்பதைக் கற்பனை பண்ணி பார்க்க முடிகிறதா?இரண்டு பேருமே குற்ற வாளிகள். இருவரையும் இன அழிப்புக்கு துணை போன ஏனையோரையும் குற்றவாளிக் கூண்டில் தமிழரின் முதல் வேலையாக இருக்க வேண்டும்.அத்துடன் இது தமிழருக்கான தேர்தல் அல்ல என்பதை சர்வதேசத்திற்கு மீண்டும் எடுத்துரைக்க தமிழருக்கு சந்தரப்;பம் கிடைத்துள்ளது.முன்பு புறக்கணித்த பொழுது புலிகள் ஆயுத முனையில் வாக்களிக்காது தடுத்தார்கள். என்ற சிறிலங்காவினதும் சர்வ தேசத்தினது வாயை அடைக்கச் செய்ய வேண்டும். புறக்கணிப்பு கள்ள வாக்குகள் போட ஏதுவாகிவிடும் என்ற அச்சமிருப்பின் தெளிவான தன்னாட்சி உரிமைக்கான விஞ்ஞாபனத்துடன் தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப் படலாம். இரண்டாவது வாக்கை வேண்டுமானால் வெடி குண்டு போல பொன் சேகாவுக்கு போட்டு ராஜபக்ச சகோதரர்களை சிலவேளை பழிவாங்கலாம்.(விக்கிரமபாகு நல்லவராயினும் அவருக்கு போட்டு ஒரு பிரயோசனமும் இல்லை.) ஆனால் சம்பந்தர் இந்தியாவின் ஆலோசனைப்படி தற்போது சுவிசில் ஒட்டுக் குழுக்களைச் சந்தித்ததும் மகிந்தவைச் சந்தித்ததும் ரணில் சரத்தைச் சந்திக்கப் போவதாகச் சொல்வதும்.தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீது வைத்த நம்பிக்கையைக் கேள்விக் குறியுள்ளாக்கி உள்ளது. கட்டுரையாளர் மகிந்தவை தெரிவு செய்வதின் மூலம் பெரும் அழிவைத் தமிழினம் தேடிக் கொண்டதாகவும் தமிழ் மக்கள் மீண்டும் புறக்கணிப்பதன் மூலம் மீண்டும் மகிந்த வந்து விடுவார் என்றும் பயமுறுத்துகிறார். இனி தமிழினத்திற்கு இழப்பதற்கு எதுவும் இல்லை ஆகவே யார் சிறிலங்கா அரச அதிபராக வந்தாலும் பெரிய மாற்றம் வந்து விடப் போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.