Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புள்ளியை களவெடுப்பது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில நானும்தான் எத்தனையோ நம்மவர் படைப்புக்கள் பற்றியெல்லாம் திரிகளை இணைக்கிறன். யாரைய்யா ஒருத்தன் மினக்கட்டு பதில் கருத்து எழுதுறான்? யாராச்சும் ஒருத்தர் இருவர்.. ஏதோ அனுதாபப்பட்டு ஏதாச்சும் எழுதுவீனம். நமது கலைஞர்கள் கொட்டாவிவிட்டுக்கொண்டு இருக்கிறீனம்.

மச்சான் வணக்கம், இது புள்ளி குத்துவது சம்மந்தப்பட்ட கருத்தில்லை. யாழ் களத்தில் அதிக சுயமான படைப்புக்களையும் நம்மவர் படைப்புக்களையும் இணைப்பவர் நீங்கள். யாழ் கள கருத்தாளர்களில் சிறந்த கருத்தாளர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் ஆதங்கம் எனக்கு சரியாகப்பட்டது. ஆனால் இன்று.....

அண்மையில் காலமான திரு. வேலுப்பிள்ளை அவர்களின் அஞ்சலிக்கான பதிவில் இவர்களில் எத்தனை பேர் பதிவிட்டார்கள். பிரபாகரன் அவர்களின் வழி வேறு வேலுப்பிள்ளை அவர்களின் வழி வேறு. திரு வேலுப்பிள்ளை அவர்கள் பிரபாகரனை போராளியாக உருவாக்கவில்லை. ஆனாலும் ஒரு உன்னத போராளியின் தந்தை என்ற சிறப்பு அவருக்கு உண்டு. குறிப்பாக வசீகரன், கே. எஸ் பாலச்சந்திரன் இவர்களின் ஆக்கங்களை நீங்கள் இணைப்பீர்கள். மச்சான் மற்றவர்களுடன் இணைந்து செயற்படாத/பதிவிடாத இவர்களின் படைப்புக்களுக்கு கருத்துக்களை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

மச்சான் தவறுகள் எதுவும் இருந்தால் மன்னிக்கவும்.

  • Replies 76
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கருப்பு புள்ளி, சிகப்பு புள்ளி பிரச்சினைக்கு என்னால் முடிந்த சிறு தீர்வு.

செய்திகளுக்கும் (மச்சான் சொன்னது போல 90% செய்திகள் வெட்டி ஒட்டப்படுவனவாகவே இருக்கின்றன), கருத்து பின்னூட்டல்களுக்கும் இந்த முறையயை நீக்கி விடலாம்.

உறவுகள் தங்களுடைய சொந்த பதிவுகளை வைக்க கருத்துக்களத்தில் தனியாக ஒரு தலைப்பை உருவாக்கி அங்கு பதிவிட செய்யலாம்.

அந்த தலைப்பில் இடப்படும் செய்திகளுக்கு மட்டும் புள்ளிகள் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தலாம்.

இதனால் சொந்த பதிவுகளை வைக்கும் உறவுகளை வகைப்படுத்த இயலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- பார்வைகளின் எண்ணிக்கை ஒரு ஐபி இலக்கத்துக்கு ஒரு தடவை தான் எண்ணப்படும். அதாவது, ஒரு ஐபி இலக்கத்திலிருந்து நீங்கள் ஒரு ஆக்கத்தை எத்தனை தடவை பார்த்தாலும் அது ஒரு தடவை தான் எண்ணும். ஒராள் தான் போடுற செய்தியை 10 தரம் திறந்து திறந்து பாத்தாலும் அது ஒரு தடவை பார்க்கப்பட்டதாகவே காண்பிக்கும் :unsure:

- புத்தன், இலக்கியத் தரம் வாய்ந்த ஆக்கங்களுக்கு மட்டும் தான் புள்ளி வழங்கவேணும் எண்டில்லத்தானே. உதாரணமாக நீங்கள் எழுதுகிற கருத்துக எனக்கு பிடித்திருந்தால் நான் உங்களுக்கு புள்ளி வழங்கலாம் தானே. சிலவேளைகளில் சிலர் நகைச்சுவையாக கருத்தெழுதுவார்கள் - அது எங்கள ஏதோ ஒரு வகையில் கவர்ந்திருக்கும். அப்படியானவற்றுக்கு கூட புள்ளி வழங்கலாம். கருத்துக்களத்தில் பலவகைப்பட்ட உறுப்பினர்கள் இருக்கினம். அதால எல்லாரும் எல்லாத்துக்கும் புள்ளி வழங்க மாட்டினம். தங்களுக்கு எது விளங்கிச்சோ, தங்களுக்கு எது பிடிச்சதோ அதுகளுக்குத்தானே புள்ளி வழங்குவினம். என்ன ஒண்டு, negative புள்ளிகளை தவறான முறையில பயன்படுத்தாட்டி சரி.

பொறுப்பாளர் இளைஞனுக்கு.,

நம்மில் ஒரு சிலர் கருத்தெழுதுவதையே தவறாக உபயோக்கிக்கும் நிலை உள்ளது.

இதில் நீங்கள் எந்த நம்பிக்கையில் negative புள்ளிகள் தவறான முறையில் பயன்படுத்த மாட்டாது என்று சொல்கிறிர்கள்.

எனக்கு ஒருவரின் கருத்து பிடித்து இருந்தால் நான் அவருக்கு தனிப்பட்ட முறையில் அது பற்றி அவரின் profileலில் சொல்லலாம்.

மேலும் ஒருவர் ஒரு முறை ஒரு பதிவை பார்வையிட்டு கருத்தெழுதி விட்டார் என்றால் அந்த பதிவுக்கு அவர் மீண்டும் வந்து பதிவை பர்வையிடுவறாரா என்பது சந்தேகமே?

அதனால் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் இந்த புள்ளி வழங்கும் முறை சரியென நான் கருதவில்லை.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிர்வாகத்திற்கு கருத்துக்களத்தில் புள்ளி வழங்கும் முறையை தயவு செய்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்...புள்ளி வழங்கும் முறையை ஆரம்பிக்கும் போது இளைஞன் சொல்லி இருந்தார் சுயமாக எழுதுபவர்களை ஊக்குவிக்கவும் நல்ல ஆக்கங்களை இணைப்பவர்களுக்கு பிளஸ் புள்ளிகள் வழங்குமாறு எழுதியிருந்தார் ஆனால் இங்கு கருத்தெழுதும் அநேகர் தங்களுக்கு பிடிக்காதவர்கள் யார் எழுதினாலும் மைனஸ் புள்ளி வழங்குவதையே தொழிலாக கொண்டுள்ளார்கள்...அவர்கள் என்ன கருத்து எழுதினார்கள் என்பதைக் கூட வடிவாய் வாசிப்பதில்லை..ஒருவரது கருத்து பிடிக்கா விட்டால் எதற்காக பிடிக்கவில்லை என எழுதாமல் மைனஸ் புள்ளியினை வழங்கி விட்டு செல்கிறார்கள் இதனால் கருத்து எழுதுபவருக்கு எதனால் தங்கள் கருத்து அவர்களுக்கு பிடிக்கவில்லை எனத் தெரியவில்லை... பிளஸ் புள்ளி வழங்குவதைப் பார்க்கிலும் மைனஸ் புள்ளி வழங்குவதையே அதிகமாக செய்கிறார்கள்.

தங்களுக்கு பிடித்தமானவர்களிற்கே அதிக பிளஸ் புள்ளி வழங்குகிறார்கள் என நினைக்கிறேன்.

அடுத்தது யாழில் ஒரு பிரபல்யமானவர் ஏதாவது ஆக்கம் எழுதினால் அவர் எழுதும் கருத்துகளுக்கு எல்லாம் பிளஸ் புள்ளியும் அவருக்கு எதிராக எழுதுபவர்களுக்கு எல்லாம் மைனஸ் புள்ளியும் வழங்கப்படுகிறது.

யாழில் கருத்துக் கணீப்பு ஒன்றை நடத்தி புள்ளி வழங்கும் முறையை தொடர்ந்து நடத்துவதா விடுவதா எனத் தீர்மானிக்கவும்...அப்படி தொடர்ந்து நடத்தத் தான் வேண்டுமாயின் எதற்காக ஒருவரது கருத்தை எதிர்க்கிறார்கள் என்பதை பதில் அளித்து விட்டு மைனஸ் வழங்கச் சொல்லுங்கள்...அல்லது ஒருவர் புள்ளி வழங்கும் போது மற்றவர்களுக்கு அவர் யாருக்கு என்ன புள்ளி வழங்கினார் எனத் தெரியுமாறு செய்யுங்கள்[இது கொஞ்சம் கஸ்டம் என நினைக்கிறேன்]

இது எனது கருத்து தப்பாயிருந்தால் நிர்வாகமும் சக உறவுகளும் என்னை மன்னிக்கவும்...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளி வழங்கும் முறை நல்லதுதான். ஆனால் சிலர் அதனை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டதனால் தான் மற்றவர்கள் அவர்களுக்கு அப்படிச் செய்கின்றனர் என்று நினைக்கிறேன்.

கருத்தை எழுத முடியாதவர்களுக்கும் புள்ளி வழங்கும் முறை தமது அபிப்பிராயத்தை புள்ளி மூலம் சொல்ல இடமளிக்கிறது. எனவே புள்ளி வழங்கும் முறையை நிறுத்துவதை விட்டு அதை துஸ்பிரயோகம் செய்யாமல் கண்ணியமாக எல்லோரும் பாவித்தால் புள்ளி வழங்குதலால் பிரச்சனைகள் எழாது.

அதைவிடுத்து.. மற்றவர்களுக்கு செய்யப் போய் தனக்கு செய்யப்படும் நிலையில் அதற்காக வருந்திக் கொள்வது நல்லதல்ல. இப்படித்தான் மற்றவர்களும் வருந்தி இருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் ஒவ்வொருவரும்.

எங்களுக்கு சாதகமாக இல்லை என்பதற்காக புள்ளி வழங்குதலையே நிறுத்தக் கோருவது கருத்தியலிலும் கருத்துத் திணிப்பிற்கு வகை செய்யும்.

புள்ளி அளிப்பைக் கைவிடக் கோருவது கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது போன்றது. அல்லது புள்ளி வழங்கும் கருத்தை ஜீரணிக்க முடியவில்லை என்று அர்த்தமாகும். :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் 5 புள்ளிகளுக்கு மேல் குத்த முடியவில்லையே ஏன். :(:(:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னால் 5 புள்ளிகளுக்கு மேல் குத்த முடியவில்லையே ஏன். :(:):lol:

சித்தன் உங்களுக்கு, 5 புள்ளிகள் குத்தக்கூடியதாயிருக்கு என்று சந்தோசப்படுங்கோ...... :D

என்னால் மூன்று புள்ளிக்கு மேல் குத்த முடியவில்லை. :(

நிர்வாகம் சித்தனுக்கு 5 புள்ளி கொடுத்தது போல்..... எனக்கும் 5 புள்ளி குத்துவதற்கு வசதி ஏற்படுத்தி தரவும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன் உங்களுக்கு, 5 புள்ளிகள் குத்தக்கூடியதாயிருக்கு என்று சந்தோசப்படுங்கோ...... :D

என்னால் மூன்று புள்ளிக்கு மேல் குத்த முடியவில்லை. :(

நிர்வாகம் சித்தனுக்கு 5 புள்ளி கொடுத்தது போல்..... எனக்கும் 5 புள்ளி குத்துவதற்கு வசதி ஏற்படுத்தி தரவும். :)

அப்ப நாங்கள் பழைய ஆக்களாக்கும் வருசத்துக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கபடும், வயதுக்கு ஏற்ப விமுறை கூடுவது போல :(:):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட.... இப்ப கொஞ்சம் முந்தி, நான் நெடுக்ஸ்ஸுக்கு குத்தின பச்சைப் புள்ளியை காணாவில்லை. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட.... இப்ப கொஞ்சம் முந்தி, நான் நெடுக்ஸ்ஸுக்கு குத்தின பச்சைப் புள்ளியை காணாவில்லை. :(

நான் சிவப்பில குத்தினால் எப்படி உங்கள் பச்சை இருக்கும்? :(

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நான் உங்கள் கவிதைக்கு மைனஸ் புள்ளி வழங்கும் போது எனது பதிவில் எழுதி விட்டு தான் வழங்கினேன்...நிர்வாகத்திற்கு தெரியும் தானே யார் யார் எப்படி புள்ளி குத்தினார்கள் என ...உங்களது இந்த கவிதைக்கு 2 மைனஸ் வழங்கியதை தவிர வேற ஒருவருக்கும் எனக்கு தெரிந்து மைனஸ் புள்ளி வழங்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நாங்கள் பழைய ஆக்களாக்கும் வருசத்துக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கபடும், வயதுக்கு ஏற்ப விமுறை கூடுவது போல :(:(:)

ஆ...... கடவுளே....., 5 புள்ளி குத்த நான் இன்னும் 2 வருசம் காத்திருக்க வேணுமா? :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சிவப்பில குத்தினால் எப்படி உங்கள் பச்சை இருக்கும்? :(

நான் உங்களுக்கு குத்தின பச்சைப் புள்ளியையும் காணவில்லை.

ஆரோ.... பச்சைப் புள்ளியை அளிக்கிறதுக்கு எண்டு பின்னாலை திரியினம் போலை. :(

இதுக்குள்ளை பச்சை குத்தியே.... என்றை புள்ளி எல்லாம் முடிஞ்சு போச்சுது. :lol:

இப்போ ஒரு ஆயுதமும் இல்லாமல், நிராயுதபாணியாய் நிற்கிறேன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உங்களுக்கு குத்தின பச்சைப் புள்ளியையும் காணவில்லை.

ஆரோ.... பச்சைப் புள்ளியை அளிக்கிறதுக்கு எண்டு பின்னாலை திரியினம் போலை. :(

இதுக்குள்ளை பச்சை குத்தியே.... என்றை புள்ளி எல்லாம் முடிஞ்சு போச்சுது. :)

இப்போ ஒரு ஆயுதமும் இல்லாமல், நிராயுதபாணியாய் நிற்கிறேன். :(

இன்று போய் நாளைக்கு வாங்கோ, நாளைக்கு புதுசா வரும், இல்லாட்டி ஏதாவது ஆவி இருந்தால் அதன் மூலம் நுளையுங்கோ :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த புள்ளிபோடுற விசயத்திலை என்னை உங்கை ஒருத்தராலையும் அடிக்கேலாது.

சொன்ன இடத்திலை ஆளை வைச்சாவது புள்ளி குத்துவன் :(

இதுக்குள்ளை இருக்கிற என்ரை மூண்டு எதிரியளுக்கு எப்பிடியெண்டாலும் சிவப்பிலை குத்துறதுதான் என்ரை முதல்வேலை

அவை என்ன நல்லவிசயம் எழுதினாலும் சரி :)

ஐசே விடமாட்டன் :(

  • கருத்துக்கள உறவுகள்

உந்த புள்ளிபோடுற விசயத்திலை என்னை உங்கை ஒருத்தராலையும் அடிக்கேலாது.

சொன்ன இடத்திலை ஆளை வைச்சாவது புள்ளி குத்துவன் :)

இதுக்குள்ளை இருக்கிற என்ரை மூண்டு எதிரியளுக்கு எப்பிடியெண்டாலும் சிவப்பிலை குத்துறதுதான் என்ரை முதல்வேலை

அவை என்ன நல்லவிசயம் எழுதினாலும் சரி :(

ஐசே விடமாட்டன் :wub:

தாத்தான்ட மனசு ரொம்ப பெரிசங்கோ .. :):):D

  • கருத்துக்கள உறவுகள்

உந்த புள்ளிபோடுற விசயத்திலை என்னை உங்கை ஒருத்தராலையும் அடிக்கேலாது.

சொன்ன இடத்திலை ஆளை வைச்சாவது புள்ளி குத்துவன் :)

இதுக்குள்ளை இருக்கிற என்ரை மூண்டு எதிரியளுக்கு எப்பிடியெண்டாலும் சிவப்பிலை குத்துறதுதான் என்ரை முதல்வேலை

அவை என்ன நல்லவிசயம் எழுதினாலும் சரி :)

ஐசே விடமாட்டன் :wub:

அதில நானும் ஒர் ஆளோ அண்ணே ...ஏன் அண்ணோய் நான் என்ன செய்த நான் உங்களுக்கு?

நிர்வாகமும் மோகன் அண்ணாவும் இந்த புள்ளி விடயம் தொடர்பாய் உடனடியாய் நடவடிக்கை எடுக்காட்டி நான் இனி மேல் எல்லாருக்கும் சிவப்பு புள்ளி தான் குத்துவேன்....பச்சைப் புள்ளியை பாவிக்கவே மாட்டேன் :)

ரதி, நீங்கள் எழுதுறதுகளை வாசிக்க மூகியிண்ட நினைவு வருகிது. நீங்கள் மூகியோ? http://www.yarl.com/forum3/index.php?showuser=3028 அவவும் இடம் யூகேதான். மூகி கனகாலமாய் யாழுக்கு வாறது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா.. ரதி அக்கா அப்ப மறு பிறவியோ :)

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, நீங்கள் எழுதுறதுகளை வாசிக்க மூகியிண்ட நினைவு வருகிது. நீங்கள் மூகியோ? http://www.yarl.com/forum3/index.php?showuser=3028 அவவும் இடம் யூகேதான். மூகி கனகாலமாய் யாழுக்கு வாறது இல்லை.

ஜயோ அது யார் என்று எனக்கு தெரியாது...நான் ரதி தான்... இதற்கு முதல் நான் யாழிக்கு வேறு பெயரில் வந்தது இல்லை...இனி மேலும் வேறு பெயரில் வர மாட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிவப்பு தான் பிடிக்கும் எனக்கு ஆறு சிவப்பு புள்ளி தராட்டில் அடம் பிடிப்பன் சொல்லிப்போட்டன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா.. ரதி அக்கா அப்ப மறு பிறவியோ :(

கிறுக்குப் பையா......

அவ, ரதி அக்காவோ, ரதி அண்ணாவோ, ரதி அன்ரியோ.......

ஐயோ...... என்ன என்று அழைப் பேன்ன்ன்.......

எனக்கு சிவப்பு தான் பிடிக்கும் எனக்கு ஆறு சிவப்பு புள்ளி தராட்டில் அடம் பிடிப்பன் சொல்லிப்போட்டன்

நீங்கள் ஆசைப்பட்டபடி உங்களுக்கு சிகப்பு குத்தி இருக்கிறன். :(

  • கருத்துக்கள உறவுகள்

அடடே மச்சான் வாங்கோ,அது சரி உங்களுக்கு ஆர் அஞ்சு சிவப்பு புள்ளி போடா அனுமதி தந்தது ,ஒரு நாளைக்கு மூண்டு தானே ஓ நீங்கள் உங்கடை ரண்டு ஐடியையும் பவிச்சநீங்களோ! கெட்டிக்காரன் வாழ்க உங்கள் சேவை

ஒரு கருத்துக்கு ஒரு ஐடியில ஒருதரம்தான் சிகப்பு அல்லது பச்சை குத்தலாம். நீங்கள் சிகப்பு குத்தச் சொல்லி கேட்டு இருந்தீங்கள். நான் இன்னமும் என்னுடைய மற்றைய ஐடியில லொகின் பண்ண இல்லை. வேற யாரோ ஆக்கள் உங்கட ஆசையை நிறைவேற்றி இருக்கிறீனம். எனக்கு புள்ளி குத்த அனுமதி தந்தது யார்? நல்ல கேள்விதான். மோகனை அல்லது இளைஞனைதான் கேட்கணும்.

+++

ரதி சொன்ன விசயத்துக்கு வாறன். இந்த புள்ளிவிளையாட்டு தேவையா தேவையில்லாயா என்று எனக்கு சொல்லத்தெரிய இல்லை. முன்பு புள்ளியிடல் மூலம் ஆக்களிண்ட புரபைலில சிகப்பு அல்லது பச்சை காட்டப்படுறதை நீக்கச்சொல்லி இளைஞனிடம் சொல்லி இருந்தன். நான் சிகப்பு பாவிக்கிறது இல்லை. யாராச்சும் சுயமாய் எழுதி இருந்தால் அவையிண்ட ஆக்கத்துக்கு பச்சை குத்தி ஊக்கம் கொடுப்பது உண்டு. உண்மையில யாழ் உறவுகள் மாத்திரம் அன்றி, வெளியில் இருந்து வாசகர்களும் சிவப்பு, பச்சை புள்ளிகள் குத்தக்கூடிய வசதி இருந்தால் நல்லது.

Edited by மச்சான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.