Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு எம்.பிக்கள் ஐவர் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு

Featured Replies

கூட்டமைப்பு எம்.பிக்கள் ஐவர் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் மற்றும் சிவநாதன் கிஷோர், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், தங்கேஸ்வரி ஆகியோர் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப் பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் நேற்றுக்காலை வன்னிப்பிர தேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார். மல்லாவி யோகபுரம் பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 50 மூன்று சக்கர உழவு இயந்திரங்களையும் 50 தையல் இயந்திரங்களையும் வழங்கி வைத்தார்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இந்த உப கரணங்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தஷராஜபக்­விற்கே ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மக்களை கேட் டுக்கொண்டார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட அரசாங்க அதிகாரிகளும் இராணுவஅதிகாரிகளும் இவ்வை பவத்தில்கலந்து கொண்டனர்.

இனி தொடர்ந்து மகிந்த ராஜபக்ஷஅரசாங்கத்திற்கு தான் ஆதரவு வழங்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் கொழும்பிலிருந்து சென்ற ஊடகவிய லாளர்களிடம் தெரிவித்துள்ளார். தனது அணியில் சிவநாதன் கிஷோர், சிறிகாந்தா, சிவா ஜிலிங்கம், தங்கேஸ்வரி கதிர் காமன் ஆகியோரும் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 21 ஆம் திகதி விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 7 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கும் பேசுவதற்கும் மறுத்துவந்த அவர் தற்போது மகிந்த ராஜபக்­விற்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=1994

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியளா!!!

மானங்கெட்டவங்க...

  • கருத்துக்கள உறவுகள்

.

தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்திற்கு என்ன அழுத்தமோ யாரறிவர்.

.

கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அடுத்த மூன்று மாதத்தக்கு, மாத இறுதி வெள்ளிக்கிழமைகளில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்கள் மற்றும் வெளித் தொடர்புகளைப் பேணக்கூடாது என அரச தரப்பினரால் அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஐனாபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அரச தரப்பினரால் பணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம், சிவசக்தி ஆனந்தனிடம் தொலைபேசியில் எடுத்து அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் அழுத்தங்கள் குறித்து என்ன செய்வது என உரையாடியுள்ளார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68067

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா நடக்குது இங்கே?

  • தொடங்கியவர்

இவர்கள் தொடர்பான மேலும் சில செய்திகளை இங்கு தருவது பொருத்தம் என கருதுகின்றேன்...

அழுத்தம், நெருக்குவாரம் காரணமாக மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரைகளில் கனகரத்தினம்?

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட வேண்டிய அழுத்தத்திலும் நெருக்கடியிலும் இருப்பதாக கனரகரத்தினம் அவர்கள் கூறியுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்டு, வடமாகாண ஆளுநரின் விடுதியில் தங்கியிருக்குக்கும் கனகரத்தினம் முதல் முதலாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசத்தி ஆனந்தனிம் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

உரையாடலின் போது, தனக்கு பலத்த ஆழுத்தங்களும், நெருக்கடிகளுகம் இருப்பதால் தான் வெளியிடும் கருத்துகளைத் தமித் தேசியக் கூட்டமைப்பினர் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை கூட்டமைப்பினரிடம் தெரிவிக்குமாறு அறிவித்துள்ளார்.

இதேநேரம் வன்னியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கனரத்தினம் அவர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு உழவு இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் வழங்கியதுடன் இடம்பெயர்ந்த மக்களிடம் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் படை அதிகாரிகள், அரச அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடுன் கனரத்தினம் அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், கனகரத்தினம் எந்தவித சித்திரவதைகளுக்கும் உள்ளாகவில்லை என அரசாங்கத்திற்குச் சார்பாக கருத்துவெளியிட்டுள்ளார்.

கனகரத்தினத்தைப் பார்வையிட படைத்தரப்பினரால் கிசோர் மட்டுமே அனுமதி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தின் வடமாகாண ஆளுனர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கடந்த வருடம் மே மாதம் வன்னியில் இருந்து வெளியேறிய போது சிறிலங்கா அரச படைகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கனகரத்தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும் அவர் வவுனியாவில் உள்ள வட மாகாண ஆளுனர் இலத்தில் கடுமையான பொலிஸ் பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவருடைய குடும்பத்தினரும் அவருடன் ஆளுனரின் இல்லத்தில் தங்குவதற்க அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் மட்டுமே இவரை சென்று பார்வையிடுவதற்கு படைத் தரப்பால் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை பார்வையிட்ட பின்னர் கருத்து வெளியிட்ட கிசோர் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் மீது படைத்தரப்பு எந்த விதமான சித்திரவதைகளையும் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் இவருடைய விடுதலை மற்றும் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் ஆகியவை தொடர்பில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

மாதந்தையின் இறுதி வணக்க நிகழ்வில் தங்கேஸ்வரி மற்றும் கனகசபை வேண்டுமென்றே கலந்கொள்ளவில்லை!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி மற்றும் கனகசபை ஆகியோர் மாதந்தையின் இறுதி வணக்க நிகழ்வில் வேண்டும் என்றே கலந்துகொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்களும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த பொழுதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் இறுதி வணக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டுள்ளனர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரும் சனிக்கிழமை இரவு மாதந்தைக்கு வணக்கம் செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் ஒரு பிரிவரை மகிந்தவுக்கு ஆதரவளிக்கச் செய்யும் சதி முயற்சியில் அரசாங்கம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவரை மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கச் செய்யும் சதி முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்களை குழப்பும் வகையில் தேர்தல் பரப்புரைகள் நிறைவிற்கு வரும் தினத்திற்கு முன்னதாக கூட்டமைப்பின் ஒரு பிரிவினரை மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக மாற்றுவதற்கு அரசாங்கத் தரப்பு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தங்கேஸ்பரி மற்றும் கனகசபை ஆகியோருடன் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோரும் ஏனைய ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரத் பொன்சேகாவிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து விட்டு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தையும் இந்த நடவடிக்கையில் இணைத்துக் கொள்ள அரசாங்க தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கூட்டமைப்பிற்கும் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றிய விடயங்களை இவர்கள் பகிரங்கப்படுத்தவுள்ளதாகவும் அதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவினை சரத் பொன்சேகா இழக்கும் நிலை ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கூட்டமைப்பினர் பணத்திற்காகவும் பதவிக்காகவுமே சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டையும் இவர்கள் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ள அந்த பிரசுரத்தில் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி அவர்களை அழிக்க முனைந்தவர்கள் என்றும் அவர்களில் எவருக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரசுரங்களின் பின்னணியிலும் அரசாங்கத்தின் கரங்கள் இருப்பதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான துண்டு பிரசுரங்கள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி தமிழர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

தற்போதைய நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளே சரத் பொன்சோகவின் வெற்றிக்கான துரும்பாக மாறியுள்ள நிலையில் அதனை இல்லாமல் செய்வதற்கு மகிந்த ராஜபக்ச தரப்பு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளதாக எதிர் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இச் செய்திகள் அனைத்தும் பதிவு இணைய தளத்தில் இருந்து பெறப்பட்டவை.

Edited by vimalk

  • கருத்துக்கள உறவுகள்

.

01_04_4---Cat-on-a-wall_web.jpg

சிவநாதன் கிஷோர், சிறிகாந்தா, தங்கேஸ்வரி ஆகியோர்....

மதில் மேல் பூனைகள் என்று ஏற்கெனவே தெரிந்த விடயம் தானே.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு எம்.பிக்கள் ஐவர் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் மற்றும் சிவநாதன் கிஷோர், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், தங்கேஸ்வரி ஆகியோர் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப் பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் நேற்றுக்காலை வன்னிப்பிர தேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார். மல்லாவி யோகபுரம் பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 50 மூன்று சக்கர உழவு இயந்திரங்களையும் 50 தையல் இயந்திரங்களையும் வழங்கி வைத்தார்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இந்த உப கரணங்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தஷராஜபக்­விற்கே ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மக்களை கேட் டுக்கொண்டார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட அரசாங்க அதிகாரிகளும் இராணுவஅதிகாரிகளும் இவ்வை பவத்தில்கலந்து கொண்டனர்.

இனி தொடர்ந்து மகிந்த ராஜபக்ஷஅரசாங்கத்திற்கு தான் ஆதரவு வழங்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் கொழும்பிலிருந்து சென்ற ஊடகவிய லாளர்களிடம் தெரிவித்துள்ளார். தனது அணியில் சிவநாதன் கிஷோர், சிறிகாந்தா, சிவா ஜிலிங்கம், தங்கேஸ்வரி கதிர் காமன் ஆகியோரும் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 21 ஆம் திகதி விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 7 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கும் பேசுவதற்கும் மறுத்துவந்த அவர் தற்போது மகிந்த ராஜபக்­விற்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=1994

சிவாஜிலிங்கம்??

சிவாஜிலிங்கம்??

தமிழ் மக்களில் ஆதரவை சரத்துக்கு தடுக்க தானே மகிந்த சிவாஜிலிங்கத்தை போட்டி போட வைத்தவர்...

வெண்டால் காரணம் தேவை இல்லை... தோத்து போனால் இந்தா ஆறு பேரும் தான் காரணம்....(சரத்தை ஆதரிக்கும் முடிவை ஆறு எம்பிக்கள் எதிர்க்கிறார்கள் எண்டு சொன்னார்களே... )

Edited by தயா

அது சரி இந்த செய்தியை கனகரத்தினம் அவர்கள் வலம்புரிக்கு மட்டுமா தெரிவித்தார்....?? வேறை எங்கையும் காணம்...???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.