Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே தமிழர்களுக்கு தீர்வு அளிக்க முடியும்: ராஜபக்சே

Featured Replies

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக அதிபராகி இருக்கும் அவர், கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர் உரிமைக்கான திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். இலங்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வாக, அந்த திட்டம் இருக்கும். இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழர் தலைவர்களுடன் அது குறித்து ஆலோசனை நடத்துவேன்.

இலங்கைக்கும் அதன் அரசியல் சட்டத்துக்கும் எப்போதுமே உதவிகரமாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, தமிழர் உரிமை திட்டத்துக்கும் ஆதரவு அளிக்கும். இந்தியா முன்வைத்த 13 வது சட்டத் திருத்தம் என்றால் என்ன? அது, அரசியல் சட்ட விதிகளில் இருக்கிறது. தற்போது, அதை விட அதிகமாக பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில், இலங்கையின் பெரும்பான்மை இன மக்கள் (சிங்களர்கள்) ஒப்புதல் அளித்தால் மட்டுமே தமிழர்களுக்கு எந்தவொரு தீர்வும் அளிக்க முடியும். இல்லாவிட்டால், அதை செயல்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்

http://www.thinamurasam.com/ http://www.thinamurasam.com/ http://www.thinamurasam.com/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழர் தலைவர்களுடன் அது குறித்து ஆலோசனை நடத்துவேன்.

இலங்கைக்கும் அதன் அரசியல் சட்டத்துக்கும் எப்போதுமே உதவிகரமாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, தமிழர் உரிமை திட்டத்துக்கும் ஆதரவு அளிக்கும். இந்தியா முன்வைத்த 13 வது சட்டத் திருத்தம் என்றால் என்ன? அது, அரசியல் சட்ட விதிகளில் இருக்கிறது. தற்போது, அதை விட அதிகமாக பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில், இலங்கையின் பெரும்பான்மை இன மக்கள் (சிங்களர்கள்) ஒப்புதல் அளித்தால் மட்டுமே தமிழர்களுக்கு எந்தவொரு தீர்வும் அளிக்க முடியும். இல்லாவிட்டால், அதை செயல்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்

இப்போதாவது தமது சுயநலப்போக்கைக் கைவிட்டு, ஒரு தெளிவான சிந்தனையோடு தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து தொலைநோக்குப் பார்வையோடு ஒரே நேர்கோட்டில் நின்று செயற்படாவிடின் தமிழினம் பெரும் ஆபத்தைச் சந்தித்து அழிவினுள் வீழுவது விதியென்றாகிவிடும். உங்களது கொள்கைள் பற்றியதல்ல இன்றைய கவலை. தமிழரது தேசிய இருப்புப் பற்றியதான கவலையே முதன்மையானது. எனவே இதற்காகக் கட்சிகள் யாவும் , முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையகம் உட்பட அனைவரும் சேர்ந்து ஒற்றைத் தேசியமாகப் பயணிக்காது விடின் இப்போது, வடக்கு கிழக்கு, இனி வன்னி யாழ், பிறகு மன்னார் முல்லை என்று துண்டாடினாலும் ஆச்சரியப்படமுடியாது. எனவே கட்சிகளல்ல இப்போதைய தேவை. சரியான காட்சிமாற்றத்துக்காக உழைக்கும் ஒன்றிணைவும் உறுதிப்பாடுமே. இதையே மகிந்தவின் 19.05.2009 இன் உரையும் " வட்டுக்கோட்டையில் தொடங்கியதை நந்திக் கடலிலே முடித்துவிட்டேன் " என்றதும் இன்றைய தேர்தல் வெற்றியின் பின்னான கூற்றும் சுட்டி நிற்கிறது.

இதையே தான் மீண்டும்,மீண்டும் எல்லோருக்கும் வலியுறுத்த விரும்புகின்றேன்.இன்று வித்தியாதரனின் நேர்காணல் கேட்டேன்.தமிழர் பிரச்சனை பற்றி வாயே திறக்கவில்லையாம்.நாம் இங்கிருந்து கொண்டு எமக்குள் பிளவு பட்டு அடிபாட்டுக்கொண்டே இருக்கின்றோம்.அங்கிருக்கும் தமிழர்தேசியக்கூட்டமைப்பை பலப் படுத்தி அவர்கள் பின் நிற்பதுதான் இன்று எமக்கிருக்கும் ஒரே தீர்வு.

இதற்கும் ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் சரியாகிவிடும் (ஏ கே உதவியுடன்).

  • கருத்துக்கள உறவுகள்

இதையே தான் மீண்டும்,மீண்டும் எல்லோருக்கும் வலியுறுத்த விரும்புகின்றேன்.இன்று வித்தியாதரனின் நேர்காணல் கேட்டேன்.தமிழர் பிரச்சனை பற்றி வாயே திறக்கவில்லையாம்.நாம் இங்கிருந்து கொண்டு எமக்குள் பிளவு பட்டு அடிபாட்டுக்கொண்டே இருக்கின்றோம்.அங்கிருக்கும் தமிழர்தேசியக்கூட்டமைப்பை பலப் படுத்தி அவர்கள் பின் நிற்பதுதான் இன்று எமக்கிருக்கும் ஒரே தீர்வு.

100வீதம் உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக அதிபராகி இருக்கும் அவர், கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர் உரிமைக்கான திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். இலங்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வாக, அந்த திட்டம் இருக்கும். இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழர் தலைவர்களுடன் அது குறித்து ஆலோசனை நடத்துவேன்.

இலங்கைக்கும் அதன் அரசியல் சட்டத்துக்கும் எப்போதுமே உதவிகரமாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, தமிழர் உரிமை திட்டத்துக்கும் ஆதரவு அளிக்கும். இந்தியா முன்வைத்த 13 வது சட்டத் திருத்தம் என்றால் என்ன? அது, அரசியல் சட்ட விதிகளில் இருக்கிறது. தற்போது, அதை விட அதிகமாக பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில், இலங்கையின் பெரும்பான்மை இன மக்கள் (சிங்களர்கள்) ஒப்புதல் அளித்தால் மட்டுமே தமிழர்களுக்கு எந்தவொரு தீர்வும் அளிக்க முடியும். இல்லாவிட்டால், அதை செயல்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்

http://www.thinamurasam.com/ http://www.thinamurasam.com/ http://www.thinamurasam.com/

நான் " மக்கள் அதை விட அதிகமாக விரும்புகின்றனர் " என்ற பதத்தையே ஊன்றிக்கவனிக்கின்றேன்.இந்த தேர்தல் தெளிவான செய்தி சொல்லியிருக்கு, எங்களின் விருப்பமும் உங்களின் (சிங்களவரின்) விருப்பமும் வேறுவேறு என.ஆனால் நீங்கள் சொல்லுவதையும் ஏற்றுக்கொள்கிறேன்.மக்களின் பெரும்பான்மையின் ஒப்புதல் இன்றி ஒரு தீர்வும் அமுல்படுத்த முடியாதென..ஆனால் அதனை செய்யவேண்டியது அரசியல் தலைமைகளே..அது சிங்களமாகவோ, தமிழாகவே இருக்கலாம் இருக்க வேண்டும்.

சரத் பொன்சேகாவின் தோல்வி..பல காரணங்களைக் கொண்டது எனவே எல்லா சிங்களவரும் சரத்பொன்சேகா சிறுபான்மையினருடன் இணைந்ததனால்தான் அவருக்கு போடவில்லை என கருத்ததேவையில்லை. நாங்கள் வெல்லக்கூடிய சிங்களவரின் மனங்களை வேலைவேண்டும்..பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன் தான் தீர்வு தரமுடியும் அல்லது அவர்களின் ஒத்துழைப்பு அதற்கு அவசியமானது என்பதில் எனக்கு ஒருதவறும் தெரியவில்லை. நாங்கள் இலங்கையின் அல்லது வடக்கு கிழக்கின் இன்றைய நிலையை, சர்வதேசத்தின் இன்றைய போக்குகளை விளங்காமல்..அதை வெளிப்படையாக சொல்லுவதானால்..இன்று கிழக்கில் சிங்களவர்கள், கணிசமாக வாழ்கிறார்கள்..முஸ்லீம்கள் வாழ்கிறார்கள், இந்தநிலையில் வடக்கு கிழக்கு இணைப்பு, அதற்க்கு விசேட அதிகாரம் என்று யாருக்கு கொடுப்பது..அங்குள்ள சிங்களவருக்க, முஸ்லீம்களுக்கா..தமிழருக்கா, அங்குள்ள வளங்களை பயன்பதுத்தும் / வித்து தின்னும் உரிமை யாருக்கு கொடுப்பது. நாங்கள் எங்களுடைய மக்கள் மாவீரர் இழப்புகளைபற்றி பேசுகிறோம் அவர்களின் கனவு நினைவாகவேண்டும் என்று செயல்படுகிறோம். ஆனால் அதேபோலத்தான் சிங்களவரும் உயிர்களை இழந்ததுதான் இந்த நிலையை அடைந்தார்கள் என நினைக்கவேண்டும். இவ்வளவு உயிர்களையும் இழந்தபின் தனது சமூகத்தை சேர்ந்தவர்கள் இன்னொரு இனத்திடம் அடிமைப்பட விரும்புவார்களா?

தீர்வு என்னவே இரு இனக்களுகூடகவும் வரவேண்டும் ( முஸ்லீம்கள் எங்களுடன் இணைந்து வருவார்கள் எனில்) அதற்கு அந்த மக்களின் ஒப்புதல் தேவைஎன்பது நிதர்சனமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்காகத்தான் மகிந்தன் வரவேண்டும் என பலர் இங்கு குத்தி முறிந்தார்கள், எமக்கு இருக்கும் இரே ஒரு நம்பிக்கையான கூட்டமைப்பையும் சிதைக்க வேண்டும் என பாடு படார்கள், இனி அனுபவிக்க வேண்டியவர்கள் அங்கு வாழும் தமிழரே அல்லாது இங்கிருந்து ஊளையிடுபவர்கள் அல்ல :wub::lol::lol:

அது சரி சரத்துக்கு நக்க நிண்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் புலிகள் விட்ட தவறாலைதான் மகிந்த ஆட்ச்சிக்கு வந்தான் எண்று சொன்னார்... ஆனால் இந்த தேர்தல் இன்னும் விளக்கமாக அவருக்கு சொல்லி இருக்கும் வரலாறு எந்த அளவுக்கு எவ்வளவு பாடம் சொல்லி தந்தும் தான் அதிலை இருந்து ஒண்டையும் படிக்கவில்லை எண்டு...

எனக்கு தெரிய கொஞ்சமும் தூர நோக்கும் அற்ற. மக்களின் மீது ஆழுமை செலுத்தும் தன்மையும் அற்ற தலைமைதான் உந்த கூட்டமைப்பு... அதுக்கும் மேலை சொன்னால் 2001 ஆண்டுவரைக்கும் சிங்களவனோடு நிண்டும் இந்தியனோடு நிண்டும் தமிழர் படுகொலையை செய்தவர்களும் நியாயப்படுத்திய கூட்டம்( இதில் ஜோசப் ஐயா, பொன்னம்பலம் ஐயா போண்ற விதிவிலக்குகள் இருந்தாலும்) ... மக்கள் மனங்களில் இருந்து அந்தக்காலங்கள் பற்றிய கசப்புக்களை நீக்க வேண்டும் எண்றால் கூட்டமைப்பு இப்போது செய்யும் எவையும் போதுமானவை அல்ல...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.