Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நானே சனாதிபதி: சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டில் தானே ஜனாதிபதியென மீண்டும் அறிவித்திருக்கின்றார் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்கா.

மோசடியான ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக மக்களை அணித்திரள்வோம் என்ற தொனிபொருளில் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து கூறிய வேளையில் அவர் இப்படிக் கூறினார்.

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு ஆதரவு தெரிவித்த கட்சித்தலைவர்களினால் இந்த செய்தியாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்துரைத்த எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்கா கருத்துரைக்கையில் இந்த நாட்டில் தானே ஜனாதிபதி எனவும் மக்கள் தன்னையே ஜனாதிபதியாக தெரிவு செய்ததாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் இங்கு குடும்பாட்சி நடத்தும் மஹிந்த ராஜபக்ஷ இந்த வெற்றியை கொள்ளையடித்துள்ளதாகவும், தனது வெற்றியை பறித்துக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

ஜனாதிபதி வெற்றியைப் பறித்துக்கொண்டது மாத்திரமில்லாமல் தான் பலவந்தமாக சூழ்ச்சியாக பெற்றுக் கொண்ட வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தமக்கு ஆதரவு வழங்கிய இராணுவ அதிகாரிகளையும், சுற்றத்தாரையும் பழிவாங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்காக இராணுவத்தில் 2ம்,3ம்,4ம்,5ம்,6ம் தர அதிகாரிகள் கட்டாய ஓய்வு அழிக்கப்பட்டு அல்லது அவர்கள் தூக்கப்பட்டு 7 ம் இடத்திலுள்ள அதிகாரி 2ம் இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேபோல் பல தகுதியற்ற அதிகாரிகள் உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுவதுடன், தன்னால் விழக்கப்பட்ட தகுதியற்ற 25 அதிகாரிகள் தற்போது உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

தனது அரசியல் இலாபத்திற்காக இந்த அராசாங்கம் இந்த நாட்டிற்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இராணுவத்தினை தவறான வழியில் பயன்படுத்துகின்றது. இதற்காக பதில் சொல்லும் காலம் மிகவிரைவில் வரும் என்றும் அவர் கூறினார்.

இந்த நாட்டில் எந்த வொரு சந்தர்ப்பத்திலும் இடம்பெறாத வண்ணம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேர்தல் முடிவுகளை புறக்கணித்துள்ளதாக குறிப்பிடும் அவர், இந்த மக்கள் தங்களால் தேர்வு செய்த தலைவரின் ஆட்சியின் கீழ் வாழ முடியாத நிலைமையினையிட்டு கவலைக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி இந்த அரசாங்கம் தன்னை ஓர் பிரிவினைவாதியாக காட்ட முயற்சிப்பதாகவும், இதற்காகவே அரசு கொள்ளையடித்து திரிபுபடுத்தி வெளியிட்ட முடிவுகளின் படி தமிழ் ஈழத்தை விரும்பும் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளதாகவும், சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்கள் தனக்கே வாக்களித்ததாகவும் காட்ட முற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

இதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் ஓர் சிங்கள பேரினவாதத்தை உருவாக்கி தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் ஓர் இனத்துவேசத்தை உண்டுபண்ண இந்த அரசு முயல்வதாகவும் அவர் கூறினார்.

இந்த நாட்டை துண்டாடிய பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும் இந்த நாட்டில் தெற்கை துண்டாடும் மஹிந்த ராஜபக்ஷ ஓரு பிரிவினைவாதியாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமின்றி இந்த செய்தியாளர் மாநாட்டிற்கு வருகைத்தரும் போது தன்னை மோட்;டார் சைக்கிள் ஒன்று பின்தொடர்ந்ததாக குறிப்பிட்ட அவர் அந்த வண்டியின் இலக்கத்தையும் குறிப்பிட்டார்.

இதற்கெல்லாம் தாம் அஞ்சப்போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர் இந்த அரசாங்கம் நேர்மையாக இவ்வளவு பாரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால் இத்தகைய சூழ்ச்சிகளில் ஈடுபட வேண்டிய தேவை என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

globaltamilnews

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நாட்டில் தானே ஜனாதிபதியென மீண்டும் அறிவித்திருக்கின்றார்

பொன்னன் வெகு விரைவில் அங்கோடைக்கு?! :rolleyes:

அஞ்சாமல் முழு உண்மையையும் கக்கிவிடு, சிறிலங்கா மாதா(அன்னை) உன்னை பெற்றெடுத்தவளென்றால்.இதன்மூலமாவது உன் சந்ததிக்கு புண்ணியம் சேரட்டும்.

தமிழனை விட்டுப்போட்டு இவனுகளுக்கை அடிபாடு வந்தால் இன்னும் நல்லா இருக்கும்... தமிழன் நிம்மதியா கொஞ்சக்காலம் இருக்கலாம்..

தமிழனை விட்டுப்போட்டு இவனுகளுக்கை அடிபாடு வந்தால் இன்னும் நல்லா இருக்கும்...

அப்பிடியே நாலு டூயட்டு, தோப்புக்குள்ள ஒரு ரேப்பு, கார் சேஸூ....... :rolleyes:

அஞ்சாமல் முழு உண்மையையும் கக்கிவிடு,

கக்கினால்.. எமக்கு விடுப்பு மட்டும்தான்.. ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கப்போவத்தில்லை.

பொன்னன் வெகு விரைவில் அங்கோடைக்கு?! :rolleyes:

தலைப்பைப் பார்த்தவுடன் எனது எண்ணத்திற்கு வந்ததும் இதுதான். அப்படியே எழுதிவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தும்பங்காய் பேத்தை வாருங்கள் ஆயிரங்கால் மண்டபம் காட்டுகிறேனென்று மீன்களையெல்லாம் கூட்டிக்கொண்டு வலைக்குள் கொண்டு போய்விட்டுவிடுமாம். கடைசியில் மீனவர்கள் பேத்தையைத் தூக்கியெறிந்துவிட்டு மீன்களைப் பிடித்துக் கொள்வார்கள். பேத்தை தப்பிவிடும்.

கையில் அமெரிக்கப் பாஸ்போட்டோடு உந்த ஆளும் உப்பிடித்தான் எல்லாரையும் மாட்ட வைத்துக்கொண்டு இருக்கிறார். கடைசியில் அவர் ஓடித்தப்பி விடுவார். நம்பியவர்கள் மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

இதற்குள் நமது சம்பந்தர் ஐயாவும் சகாக்களும் அடக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுமாத்திரமின்றி இந்த செய்தியாளர் மாநாட்டிற்கு வருகைத்தரும் போது தன்னை மோட்;டார் சைக்கிள் ஒன்று பின்தொடர்ந்ததாக குறிப்பிட்ட அவர் அந்த வண்டியின் இலக்கத்தையும் குறிப்பிட்டார்.

பின் தொடர்ந்த மோட்டார்சைக்கிள் காரன் ஏதாவது செய்வதற்குமுன்,

இறுதிப்போரின் போது தனக்கு தெரிந்த ரகசியங்களை தாமதிக்காமல் வெளியிடுவதே......

ஜனாதிபதி தேர்தலில் சரத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.