Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சனல் 4 தொலைக்காட்சியை முடக்க சிறீலங்காவின் புதிய சதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் தொலைக்காட்சி சனல் 4ஐ முடக்க சிறீலங்கா அரசு சதி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் பிரிட்டன் தொலைக்காட்சி சனல் 4 ஒளிபரப்பிய சிறீலங்கா இராணுவத்தின் படுகொலைக் காட்சிகளின் பின்னர், அது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது.

பிரிட்டனில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்துத் தொலைக்காட்சிகளையும் கட்டுப்படுத்தும் அல்லது நெறிப்படுத்தும் நிறுவனமாக விளங்கும் 'ஆப்காம்' (OFCOM)திடம் இலங்கை பல முறையீடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன். எந்தக் காட்சிகளை மக்கள் பார்க்கலாம் அவை பயங்கரவாதத்தை துண்டுகின்றனவா என்பது போன்ற ஒளிபரப்புக்களை நெறிப்படுத்தும், ' ஆப்காம்' நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாகும்.

இந்நிறுவனம் நினைத்தால் ஒரு தொலைக்காட்சியின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச்செய்து அதனை மூட முடியும். இந்நிலையில், சிறீலங்கா அரசின் முறையீட்டின் பேரிலேயே TRT, TNT, TTN போன்ற தொலைக்காட்சிகள் கடந்தகாலங்களில் மூடப்பட்டன. இதே நடவடிக்கையை தற்போது சிறீலங்கா அரசு சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக ஆரம்பித்துள்ளது.

பிரிட்டனிலுள்ள ஊடகச் சுதந்திரத்தை முடக்க அங்குள்ள சட்டம் ஒருபோதும் முயற்சி செய்யமாட்டாது என்பதால் பிரிட்டனின் அவதூறு சட்டங்களைக் கடந்து நேரடியாக ஆப்காமைப் பயன்படுத்தி சனல் 4 இன் ஒளிபரப்பை நிறுத்துவதற்கு சிறலங்கா அரசு முயற்சிப்பதாக கூறபடுகிறது. கடந்த வருடம் சனல் 4 ஒளிபரப்பிய வீடியோவில் 9 இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கட்டப்பட்டு இருந்ததையும், அதில் இருவர் சுடப்பட்டுக் கொல்லப்பட்டதையும், இந்த பாதகச் செயலைச் செய்தவர்கள் சிறீலங்கா இராணுவச் சீருடையில் இருந்ததையும் கண்ட உலகம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

ஆனால், அந்த வீடியோ ஒளிபரப்பபட்ட உடனுமே சிறிலங்காத் தூதரகம் அந்த வீடியோ உண்மை அல்ல என மறுப்பும் தெரிவித்திருந்தது. இலங்கையின் பகுப்பாய்வைச் செல்லாததாக்கி மேற்படி வீடியோவானது உண்மையானது என்று ஐக்கிய நாடுகள் தமது அறிக்கையைச் சமர்ப்பித்ததும் சனல் 4 க்கு எதிரான நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன.

இருந்தும் ஐ.நா வி ன் அறிக்கை வெளியிடப்பட்ட அன்று மாலையே சிறீலங்கா தனது முறைப்பாடுகளை ஆப்காமிடம் கூறியுள்ளதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

மூலம்‍ ‍சங்கதி

உண்மையை ஒருபோதும் மூடி மறைக்கமுடியாது.

உண்மையை ஒருபோதும் மூடி மறைக்கமுடியாது.

பொய்.

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது நாம் நன்பர்களை தேட போராடுவம் :lol:

பிரிட்டன் தொலைக்காட்சி சனல் 4ஐ முடக்க சிறீலங்கா அரசு சதி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மூலம்‍ ‍சங்கதி

:lol:

இப்படிப்பட்ட புளிச்சல் எழுத்துக்களை உந்த சங்கதி நிறுத்த வேண்டும்! இல்லையேல் உந்த ஆப்கொம்மிடம் முறையிட வேண்டி வரும்! :unsure:

Edited by Nellaiyan

:lol: ... சங்கதி, இப்போ யாழ்கள தராக்கியின் கைகளில் வீழ்ந்து விட்டதா?????? :unsure:

இந்த செய்தி வேறு ஒரு இணையத்தில் ஏற்கனவே வந்தது .

Edited by சுனாமி

பச்சோந்தியற்ற களஞ்சியம், இங்கு யாழை குறை கூறினேனா??? வாசியும், முதலில் ... வாசிக்கத் தெரியும்தானே!!!

.... இச்செய்தி வேறி இணையத்தளங்களில் வந்தவுடன் உண்மையாகி விட்டதா???? .... முதலில் பிரித்தானியா ... ஊடகங்கள் ... ஊடகசுதந்திரம் ... கருத்துச் சுதந்திரம் .. பற்றி அறியுங்கோ!!! ... சும்மா ஏதோ ... இங்கு ஆப்கொம் ... இருப்பது தெரிச்சு விட்டது, உந்த ஆப்கொம்முக்கு சிங்கள அரசல்ல, நீரும் முறையிடலாம்!! ஆனால் முறையிட்டு?????

... முதலில் ஈராக் யுத்தம், அல்கைடாக்களுக்கெதிரான யுத்தம், தலபானுகளுக்கு எதிரான யுத்தம் .... என்று பல முறைப்பாடுகள்!!! எல்லாம்?????? .... இது பிரித்தானியா!!!!

சிலவேளை இந்தச் செய்திகளை சிறிலங்காவில் ஒரு பத்திரிகையில் பிரசுரித்திருந்தால், உம்மை மாதிரி நாலு பச்சோந்தியாற்றதுகள் நம்பும்தான்!! அறிவு!!!!!

அப்பு சுண்ணாமி, உதுக்கேன் உணர்ச்சிவசப்பட்டு பச்சோந்தி என்ற எழுத்துக்கள்!!!! முதலில் பச்சோந்தி என்றால் என்ன பொருள் என தமிழைப்படி!!!

இந்த செய்தி வேறு ஒரு இனணயத்தில் ஏற்கனவே வந்தது. உண்மையோ பொய்யோ என்பதிலும் பார்க்க இதை எம்மவர் பலர் சிங்களவனுக்காக போட்டுகொடுப்பதில் வல்லவர்கள். மற்றும் தங்களின் திருவாய் மலர்ந்தவை உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்

அத்துடன் தமிழர்களாகிய நாம் எம்மிடையே சண்டை பிடித்து அழிவோம்

:lol::unsure: :unsure:

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் தொலைக்காட்சி சனல் 4ஐ முடக்க சிறீலங்கா அரசு சதி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

யாரப்பா நகைச்சுவைச் செய்தியை ஊர்ப்புதினம் பகுதியில் இணைத்தது.

நல்லகாலம் அலைவரிசை 4 தொலைக்காட்சியிற்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்காத பிரித்தானியா அரசின் ஆட்சியைக் கலைக்க நடவடிக்கையை சிறிலங்கா எடுக்கவுள்ளது என்று செய்தி போட வில்லை.

Ofcom என்பது தனியாருடையது என்பது தவறு.... அது அரசாங்கத்தால் நியமிக்க பட்டு இருக்கும் எந்தவிதமான குறுக்கீடும் இல்லாத ஒரு கண்காணிப்பு அமைப்பு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.