Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மாணவர்களின் நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் உள்ள தமிழ் மாணவர்கள் மரங்களின் கீழிருந்து படிக்கும் காட்சி

wanni460041204984.jpg

wann360031204969.jpg

wanni160021204954.jpg

wanni5600111204941.jpg

புலம்பெயர் தமிழர்களாகிய நாம், எம் மக்கள் மூச்சு விடக்கூடிய ஒரு சூழலைக் கூட தோற்றுவிக்காது,அவர்களின் அடிப்படைக் கட்டுமானங்களை கட்டியெழுப்ப விருப்பின்றி வசதியாக இருந்து கொண்டு இன்னும் வெற்று வீரம் பேசிக்கொண்டே இருக்கப் போகின்றோமா?

நன்றி: டெய்லி மிரர்

Edited by பிழம்பு

புலம்பெயர் தமிழர்களாகிய நாம், எம் மக்கள் மூச்சு விடக்கூடிய ஒரு சூழலைக் கூட தோற்றுவிக்காது,அவர்களின் அடிப்படைக் கட்டுமானங்களை கட்டியெழுப்ப விருப்பின்றி வசதியாக இருந்து கொண்டு இன்னும் வெற்று வீரம் பேசிக்கொண்டே இருக்கப் போகின்றோமா?

புலம்பெயர் சங்களின் உதவிகள் இல்லது போனால் ஊரில சாமான் விக்கிற விலைக்கு அவர்கள் எப்படி வாங்குவார்கள்?

சிங்கள ஆட்சி (அதிலும் இராணுவ ஆட்சி) நடக்கும் இடத்தில் புலத்தில் உள்ளவர்கள் எப்படி சமுதாயப்பணி செய்யலாம்? தனிப்பட்டவர்களுக்கு காசனுப்பி செய்யச்சொன்னால் அவங்கள் காசை சுருட்டிட்டாங்கள் என்று எல்லாரும் சொல்லமாட்டமா? குறைந்தது ஒரு துரோகிப்பட்டமேன்றாலும் குடுக்க மாட்டமா?

புலத்தில இருந்து வணங்க்காமன் போய் பட்டது தெரியும் நினைவிருக்குத்தானே! தாயகத்தில் ஒரு ஒழுங்கான கட்டுமானம் இல்லாமல் போலத்தில் இருந்து என்னத்தை செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

வேணுமென்றால் கோத்தபாயாவுக்கு காசனுப்பி செய்யச்சொல்லலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்திலிருந்து உதவிகள் செய்யலாம்!

செய்யும் போது சில விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டிய தேவை ஏற்ப்படும். அப்படிச் செய்யும் போது மேலுள்ள நண்பர் சொன்னது போல துரோக பட்டமும், செல்வாக்கின் அடிப்படையில் எமது மாமான் மச்சானுக்கு உதவி செய்கின்றோம் என்று விமர்சனம் வரும். இதை எல்லாம் தாண்டி செயற்ப்பட்டால் நாம் பெரியவர்கள் என்கின்றோம் என்ற கதை வவரும்!

காய்த்த மரம் கல்லெறி படும் ஆனால் புலம்பெயர் சமூகத்துக்குள் தங்கள் மரங்களை முன்னிலைப்படுத்த முளையையே கிள்ள பலர் இருக்கின்றனர்!

புலம்பெயர் சங்களின் உதவிகள் இல்லது போனால் ஊரில சாமான் விக்கிற விலைக்கு அவர்கள் எப்படி வாங்குவார்கள்?

சிங்கள ஆட்சி (அதிலும் இராணுவ ஆட்சி) நடக்கும் இடத்தில் புலத்தில் உள்ளவர்கள் எப்படி சமுதாயப்பணி செய்யலாம்? தனிப்பட்டவர்களுக்கு காசனுப்பி செய்யச்சொன்னால் அவங்கள் காசை சுருட்டிட்டாங்கள் என்று எல்லாரும் சொல்லமாட்டமா? குறைந்தது ஒரு துரோகிப்பட்டமேன்றாலும் குடுக்க மாட்டமா?

புலத்தில இருந்து வணங்க்காமன் போய் பட்டது தெரியும் நினைவிருக்குத்தானே! தாயகத்தில் ஒரு ஒழுங்கான கட்டுமானம் இல்லாமல் போலத்தில் இருந்து என்னத்தை செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

வேணுமென்றால் கோத்தபாயாவுக்கு காசனுப்பி செய்யச்சொல்லலாம்.

உண்மையை சொன்னால் இந்த காலங்களில் இதனால் அதிகம் பாதிக்க பட்டு இருப்பது புலம்பெயர்ந்த வன்னி மக்களின் சொந்தங்களும் தான்... ஐரோப்பாவில் இப்போது இருக்கும் பொருளாதார சிக்கல் பலபேரை கடனாளி ஆக்கி இருக்கிறது என்பதும் தான் உண்மை...

மக்களின் அண்றாட பிரச்சினைகளை தீர்க்க படாமல் மலை போல குவிந்து கிடக்கிறது... அவர்களுக்கு உதவி செய்ய கூட அரசங்கத்திடம் போய் ஒருவர் நிண்டு போடக்கூடாது... அவ்வளவு சுய கௌரவமானவர்கள் எங்கட தமிழர் தலைமை... ( புலிகள் கடைசிவரைக்கும் சிங்கள அரசை பேச்சு வார்த்தையில் கேட்டது கூட அதுதான்...)

அவர்களை நாங்கள் கண்ணை மூடி கொண்டு ஆதரித்து கொண்டு இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்கள் ... இதை தவிர வளி இல்லையாம்...

அவர்களை நாங்கள் கண்ணை மூடி கொண்டு ஆதரித்து கொண்டு இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்கள் ... இதை தவிர வளி இல்லையாம்...

ஊரில இந்த மாணவர்கள் மாத்திரம் இல்லை இப்படி கனக்க வேலைகள் செய்யக்கிடக்கு. யாரை வைத்து செய்வது?

ஏதாவது ஒரு கட்டுமானம் அல்லது அட்டமைப்பு உள்ளதா? தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போல் ஏதாவதொன்று இருந்தால் இங்கிருப்பவர்கள் செய்யமாட்டார்களா?

இப்ப உள்ள நிலைமையில் அவனவன் தனது குடும்பம் உறவிரர்களுக்கு உதவி செய்தாலே ஓரளவுக்கு பராவா இல்லை. இதைவிட வேற என்ன செய்தாலும் அது கொத்தா விட்டாத்தான் போய்ச்சேரும். அதுக்கு பேசாமல் கொத்தாவிட்டவே குடுக்கலாம் தானே.

இதைவிட மோசம் 1000 கணக்கில் சிறையில் வாடும் போராளிகள்... என்னும் தெரியாதது எவ்வளவோ இருக்கு...

Edited by Sooravali

மீள்குடியேற்றப்பட்ட பகுதி பாடசாலைகளுக்கென தளபாடங்கள் சீருடைகள் அனுப்பி வைப்பு

வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கென 34 லட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாட சாலைகளில் கல்வி கற்கும் சுமார் 50,000 மாணவர்களுக்குத் தேவையான 14 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடைத் துணிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1000 வாங்குகளும் 1000 கதிரைகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 1000 வாங்குகளும் 1000 கதிரைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி அனுப்பி வைக் கப்படவுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மீளக்குடியமர்த் தப்பட்டுவரும் இவ்வேளையில் பாடசாலைகளும் உடனடியாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது.

பாடசாலை உடனடியாக இயங்க வைக்க தளபாடப் பற்றாக்குறை பெரும் குறையாக இருப்பதை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி கல்வி அமைச்சிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேற்படி பாடசாலைகளுக்குரிய தளபாடங்களை உடனடியாக அனு ப்பி வைக்க நடவடிக்கை எடுக்கு மாறும் அவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவை கேட்டிருந் தார். இதற்கமைய தளபாடங்கள் சீருடைத் துணிகள் போன்றவற்றை கல்வி அமைச்சு அனுப்பிவைத் துள்ளது.

நன்றி தினகரன்

அப்போ இந்த செய்திகள்.----

உண்மையை சொன்னால் இந்த காலங்களில் இதனால் அதிகம் பாதிக்க பட்டு இருப்பது புலம்பெயர்ந்த வன்னி மக்களின் சொந்தங்களும் தான்... ஐரோப்பாவில் இப்போது இருக்கும் பொருளாதார சிக்கல் பலபேரை கடனாளி ஆக்கி இருக்கிறது என்பதும் தான் உண்மை...

மக்களின் அண்றாட பிரச்சினைகளை தீர்க்க படாமல் மலை போல குவிந்து கிடக்கிறது... அவர்களுக்கு உதவி செய்ய கூட அரசங்கத்திடம் போய் ஒருவர் நிண்டு போடக்கூடாது... அவ்வளவு சுய கௌரவமானவர்கள் எங்கட தமிழர் தலைமை... ( புலிகள் கடைசிவரைக்கும் சிங்கள அரசை பேச்சு வார்த்தையில் கேட்டது கூட அதுதான்...)

அவர்களை நாங்கள் கண்ணை மூடி கொண்டு ஆதரித்து கொண்டு இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்கள் ... இதை தவிர வளி இல்லையாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.