Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மழை நனைந்த இரவு.

Featured Replies

20575_1317008158586_1032183894_30988081_2855476_n.jpg

இலைகளைக் கழுவிச் சொட்டுகிற

பெரு மழையில் கடைசியாய்

நனைகிறது அமைதியின் ஓசை,

மேகத்தில் மறைந்த கவலையின்

வடுக்களை தன் கோடொன்றில் கீறி

விரைகிறது மின்னலொன்றின் வெளிச்சம்,

தொலைந்த வானத்தைத் தேடி அலையும்

நிலவின் சிதறலை ஆட்டி அசைக்கிறது

தரைநீர்த் தேங்கலொன்றில் விழுந்த தூறல்,

கனத்துப் பெருத்த மழையின் சுவட்டில்

கூடிழந்து உரத்துக் கூவுகிற பறவையின்

இரைச்சலில் பாதித் தூக்கம் கலைந்துவிட,

மீதி இரவில் மழையை நனைக்கிறது

ஈழ வீட்டின் ஈர நினைவுகள்............

20575_1317007918580_1032183894_30988080_419180_n.jpg

"மீதி இரவில் மழையை நனைக்கிறது

ஈழ வீட்டின் ஈர நினைவுகள்............" ....... கனத்த வரிகள்

  • கருத்துக்கள உறவுகள்

தொலைந்த வானத்தைத் தேடி அலையும்

நிலவின் சிதறலை ஆட்டி அசைக்கிறது

தரைநீர்த் தேங்கலொன்றில் விழுந்த தூறல்,

கனத்துப் பெருத்த மழையின் சுவட்டில்

கூடிழந்து உரத்துக் கூவுகிற பறவையின்

இரைச்சலில் பாதித் தூக்கம் கலைந்துவிட,

மீதி இரவில் மழையை நனைக்கிறது

ஈழ வீட்டின் ஈர நினைவுகள்............

20575_1317007918580_1032183894_30988080_419180_n.jpg

"மீதி இரவில் மழையை நனைக்கிறது

ஈழ வீட்டின் ஈர நினைவுகள்............" ....... கனத்த வரிகள்

பாராட்டுகள். அழகான வரிகள்.

வலிகளைச் சுமந்து

ஊடுருவிச் செல்லும் வரிகள்.

வாழ்வோடு கலந்தவை.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

வலி சொல்லும் வார்த்தைகள் அழகு.நல்ல கவிதை

இது தான் வாழ்வின் நிஜம். உங்கள் கவிதையா ?

பாராடுக்கள் நெல்லை யன்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்..முற்றுலிலும் உண்மையான கவி வரிகள்.மிகவும் நன்றி உங்கள் கவிதைக்கு நெல்லையன் அண்ணா.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nellaiyan

அழகான வரிகளில் அமைந்த அருமையான கவிதை...! பாராட்டுக்கள்...

மேலும் எழுத வாழ்த்துக்கள்...

  • தொடங்கியவர்

வலி சொல்லும் வார்த்தைகள் அழகு.நல்ல கவிதை

இது தான் வாழ்வின் நிஜம். உங்கள் கவிதையா ?

பாராடுக்கள் நெல்லை யன்

உந்த கவி/எழுத்தெல்லாம் .... அடிச்சாலும் ஏறாது நமக்கு! பாராட்டுகள் கவி எழுதியவருக்கே(பெயரையும் இணைத்துள்ளேன், மேல்). இது எனது நண்பர் ஒருவரின் பேஸ்புக்கில் இருந்து களவாடியது, சில வரிகள் நெஞ்சைத்தொட்டது, ... அப்படியே வெட்டி இங்கு ஒட்டி விட்டேன்!!

  • கருத்துக்கள உறவுகள்

அழகான வரிகள்!

கவிஞனுக்கு பாராட்டுக்கள்,

இணைத்த நண்பனுக்கு நன்றிகள்!

இலைகளைக் கழுவிச் சொட்டுகிற

பெரு மழையில் கடைசியாய்

நனைகிறது அமைதியின் ஓசை,

எனக்கு இந்த வரி புரியல்லையெங்க...அமைதி இருந்தால் தானே ஓசை எழ?

மேகத்தில் மறைந்த கவலையின்

வடுக்களை தன் கோடொன்றில் கீறி

விரைகிறது மின்னலொன்றின் வெளிச்சம்,

கவலை மறந்தால் தானே மறைவதிற்கு?

தொலைந்த வானத்தைத் தேடி அலையும்

நிலவின் சிதறலை ஆட்டி அசைக்கிறது

தரைநீர்த் தேங்கலொன்றில் விழுந்த தூறல்,

கனத்துப் பெருத்த மழையின் சுவட்டில்

கூடிழந்து உரத்துக் கூவுகிற பறவையின்

இரைச்சலில் பாதித் தூக்கம் கலைந்துவிட,

மீதி இரவில் மழையை நனைக்கிறது

ஈழ வீட்டின் ஈர நினைவுகள்............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.