Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கூட்டமைப்பின் அலுவலகம் ஒன்றை டில்லியில் திறப்பதற்கு இணக்க

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamil_National_Alliance_logo.jpgதமிழ் கூட்டமைப்பின் அலுவலகம் ஒன்றை டில்லியில் திறப்பதற்கு இணக்க

தமிழ் தேசிய கூட்டமைப்பு புதுடில்லியில் கட்சி அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் கொழும்பிலும் புதுடில்லியிலும் கட்சியின் அலுவலகத்தை திறப்பதற்கு தாம் தீர் மானித்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதற்கான ஏற்பாடுகளை தமது கட்சி மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். இதேவேளை புதுடில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தை திறப்பதறகு இந்திய அரசியல் கட்சிகளும் சம்பந்தம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் இந்திய அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்குடனேயே இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

நன்றி. ஈழநேசன்

தமிழ் கூட்டமைப்பின் அலுவலகம் ஒன்றை டில்லியில் திறப்பதற்கு இணக்க

... இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் இந்திய அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்குடனேயே இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளது .....

தமிழ் மக்களின் பிரச்சனைகளை அறிந்தவர்கள் கூறினால் - அதில் சிறு அர்த்தமுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சனைகளை அறியாத கூட்டமைப்பு இதைக் கூறுவது - ஆச்சரியம் தான்?

இதில் ஆபத்து புதைந்துள்ளது!?

இது உண்மையானால் - கூட்டமைப்பின் வட இந்திய பயங்கரவாதிகளின் அடிவருடித்தனம் உறுதிப்படுத்தப்படுகிறது.

Edited by Aasaan

நடந்து முடிந்த தவறுகளுக்களுக்காக நடப்பதெல்லாம் பிழை என்று கத்திக்கொண்டிருக்க முடியாது.

எமது போராட்டம் தொடங்கும்போது நாம் செய்திருக்க வேண்டியமுதல்வேலையே டெல்கியில் அலுவலகம் அமைப்பதுதான். இந்தியாவை வால் பிடிப்பதற்காக அல்ல. முழு வெளிநாட்டுத்தூதுவராலயங்களுடன் நாங்கள் தொடர்பு கொள்ள இலகுவாய் இருக்கக் கூடிய இடமாய் இருந்தது அதுதான்.ஏன் இங்கிலாந்து,பிரான்ஸ்,கனடாவில் இருந்தும் செய்திருக்கலாம்தானே என்ற கேள்வி வரலாம்.தென் ஆசியாவிற்கான வெளிநாட்டு அரசியல் தோடர்பாளர்கள் டெல்கியில் தான் இருந்தார்கள்.லண்டனில் இருக்கும் பிரான்ஸ் தூதுவரிடம் போய் எமது பிரச்சனை கதைக்க முடியாது அவருக்கு பெரிதாக தெரியவும் மாட்டாது,டெல்கியி இருக்கும் எந்த வெளிநாட்டுத்தூதுவரிடமும் போய் நாம் எமது பிரச்சனை கதைக்கலாம் அவர்களுக்கு எமது பிரச்சனை அத்துபடி. அதேமாதிரிதான் பத்திரிகை நிருபர்களும்.

டெல்கியில் இலங்கைத் தமிழருக்கு அலுவலகம் அமைவது எமது விடுதலையின் முதல் படி.

உண்மையில் நடந்த பகிடி ஒன்று ,டெல்கியில் இருக்கும் போது சிறீலங்கா தூதரகத்திற்குள் நோட்டீஸ் போட போனதாக விடுதலைபுலி என்றபெயரில் ஒருவரைபிடித்து போலிசீல் கொடுக்க அவரை டெல்கி ஜெயிலில் அடைத்துவிட்டார்கள்.டெல்கி போன எமது எம்.பீ மார் அவரை பார்க்க ஜெயிலுக்கு போனார்கள்.இலங்கை எம்.பீ என்று அவர்களுக்கு நல்ல மரியாதை வேறு.போன இடத்தில் ஒருவர் கண்ணாடியை விட்டுவிட்டுவந்து விட்டார்.ஜயில் அதிகாரி இலங்கை தூதரகதிற்கு போன் பண்ணி உங்கட எம்,பீ ஒருவர் வந்த இடத்தில் கண்ணாடியை விட்டு விட்டு போய் விட்டார்கள் ஏண்று சொல்ல என்ன பெயர் என்று கேட்டிருக்கின்றார்கள்.ஜெயிலரும் பெயரச் சொல்ல அப்படி சிறிலங்காவில் ஒரு எம்,பீ மாரும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.அடுத்த நாள் எமது எம்.பீ மார் கண்ணாடி எடுக்க ஜெயிலுக்கு போக ஜெயிலர் பொய்யாக எம்.பீ என்று சொன்னாதாக இவர்களுக்கு நல்ல டோஸ்.இவர்கள் எவ்வளவு சொல்லியும் ஜெயிலருக்கு விளங்கவில்லை.இஞ்சால பக்கம் வரக்கூடாதென்று துரத்திவிட்டான்

டெல்கியில் இலங்கைத் தமிழருக்கு அலுவலகம் அமைவது எமது விடுதலையின் முதல் படி.

முதல் படி என்று சொல்லமுடியாது ,இதுவும் ஒரு படி என்று வேணுமென்றால் சொல்லலாம்.

சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு வயசு போனகாலத்தில சிங்களவன் அடிச்சால் ,இப்ப தாலேலாமா இருப்பது போல் இவரும் அங்க போய் அரசியல் நடத்தலாமுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழ்மக்களின் விடுதலைக்காக டெல்லியில் எதற்கு அலுவலகம்?

ஈழத்தமிழ்மக்களின் உரிமைகள் கிடைப்பதில் முழுதாக தடையாக நிற்கும் நாடு இந்தியா.

இந்தியாவின் சமஸ்தானத்து மக்களுக்கு இருக்கும் உரிமையைவிட கொஞ்சம்கூட அதிகமாக ஈழத்தமிழர்களுக்கு

கிடைக்கக்கூடாது என்பதில் பாரதம் ராசதந்திரரீதியிலும் ராணுவரீதியிலும் எப்போதும் முயன்றது.இனியும் முயலும்.

தன்னுடைய இந்தியவம்சாவழிமக்களின் உரிமைகளையே சிங்களத்துடன் பேசிப்பெறமுடியாத இந்தியா ஈழத்தமிழர்களின்

உரிமையை எப்படிப்பெற்றுத்தரும்....?

வடக்கு-கிழக்கில் வெயில்சுட்டெரிக்கும் காலத்தில் சம்பந்தரும் மாவையும் போய் டெல்லியில் ஓய்வெடுக்கலாம்.

டெல்லிக்கு போறது இருக்கட்டும் மட்டக்களப்பில் கூட்டமைப்புக்கு அலுவலகம் இருக்குதா...?

முதல் தமிழ்நாட்டில அலுவலகம் திறக்கட்டும். தமிழக மக்களிடம் அரசியல் வேலைகளை செய்யலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனிலதான் முதல் திறக்கவேணும்......இங்கையிருந்துதானே ஆட்டுறினம் பொம்மைய :)

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை, இந்தியாவின் விருப்பிற்கு (நலனுக்கு) மாறாக ஈழத்தமிழர்களால் பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாடுடைய தமிழ் அரசியல் தலைமைகள், தமது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிற்காது புலத்திலும், களத்திலும் வாழும் தமிழர்களிடம் தமது தலமையை ஏற்கும் படி திணிக்கின்றார்கள். புலத்துத் தலைமையைக் கைப்பற்ற முயற்சிக்கும் குழுவினர், தமிழத்;தேசியக்கூட்டமைப்பு, இந்தியாவென இவர்கள் இணைந்தே செயற்படுகின்றனர்.

இந்தக் கூட்டமைப்பு முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய கூட்டமைப்பு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ்மக்களின் விடுதலைக்காக டெல்லியில் எதற்கு அலுவலகம்?

ஈழத்தமிழ்மக்களின் உரிமைகள் கிடைப்பதில் முழுதாக தடையாக நிற்கும் நாடு இந்தியா.

இந்தியாவின் சமஸ்தானத்து மக்களுக்கு இருக்கும் உரிமையைவிட கொஞ்சம்கூட அதிகமாக ஈழத்தமிழர்களுக்கு

கிடைக்கக்கூடாது என்பதில் பாரதம் ராசதந்திரரீதியிலும் ராணுவரீதியிலும் எப்போதும் முயன்றது.இனியும் முயலும்.

தன்னுடைய இந்தியவம்சாவழிமக்களின் உரிமைகளையே சிங்களத்துடன் பேசிப்பெறமுடியாத இந்தியா ஈழத்தமிழர்களின்

உரிமையை எப்படிப்பெற்றுத்தரும்....?

வடக்கு-கிழக்கில் வெயில்சுட்டெரிக்கும் காலத்தில் சம்பந்தரும் மாவையும் போய் டெல்லியில் ஓய்வெடுக்கலாம்.

டெல்லிக்கு போறது இருக்கட்டும் மட்டக்களப்பில் கூட்டமைப்புக்கு அலுவலகம் இருக்குதா...?

சூப்பர் பிறாவோ. சரியாய் சொன்னீங்கள். thumbsup-thumbs-up-approve-ok-smiley-emoticon-000283-large.gif

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அலுவலகத்தின்ரை செயற்பாடு என்ன எண்டு தெரியாமல் நாங்கள் என்னத்தைப் பேசுறது. உது அலுவலகமா அல்லது ஏதாவது சத்திரம் சாவடியா எண்டிறதை முதலில அறிய வேணும். தமிழருக்கெண்டு ஒரு லாட்ஜ் டெல்லியில இருக்கிறது நல்லது. செலவுகளைக் குறைக்கும். மற்றும்படி அங்கபோய் வேற என்னத்தைப் பண்ண ஏலும்.

அடுத்தபடி குடும்பத்தோடு போய் குடியேறுவது போல

  • கருத்துக்கள உறவுகள்

இதன் உண்மைத்தன்மைதெரிவில்லை

ஆனால்

எனக்கு புரியவில்லை

கொழும்பிலிருந்து எதை பேசமுடியும் என்று தாங்கள் நினைக்கின்றீர்கள்

டெல்லியில் இருந்தால்

மாவட்டசபை கிடைத்தாலும் அது இன்று பெரிய கொடைதான் எமக்கு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி மலையாள பெண் என்று கேள்வி. சேர்க்கும் சொத்துக்களை இந்தியாவில் முதலீடு செய்து, நிர்வாகிக்க டெல்லி தான் சரியான இடம்.

இதன் உண்மைத்தன்மைதெரிவில்லை

இங்கே எல்லாரும் கதைகினம்...

http://www.google.co.in/search?hl=ta&q=தமிழ்+தேசிய+கூட்டமைப்பு+புதுடில்லியில்+கட்சி+அலுவலகம்

-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.