Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணாவை வழியனுப்பி வைக்கும் ராஐபக்ச அரசு

Featured Replies

கருணாவை வழியனுப்பி வைக்கும் ராஐபக்ச அரசு

கேணல் கருணா என அழைக்கப்பட்ட முரளிதரனின் முறைகேடான வாழ்க்கை முறையால் அவரின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிட்டதாக டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ’The Decline and Fall of Colonel Karuna’ எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள அதன் ஆசிரியர் தலையங்கத்தில் கருணாவின் அரசியல் அதன் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டதாக எழுதப்பட்டுள்ளது.

இவ் ஆசிரியர் தலையங்கத்தின் முழுவிபரம் வருமாறு:

கருணா தனது சொந்த மாவட்டத் தேர்தலிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதுடன் தேசியப் பட்டியலின் ஊடாக தன்னை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யும்படி அரசாங்கத்தைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தேர்தலில் போட்டியிட விரும்பிய தனது சகோதரியைக்கூட போட்டியிடவிடாது தடுத்து, ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அளவிற்கு அவரின் நிலை சென்றுவிட்டது.

ஆளும் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான கருணாவின் இது போன்ற அழுத்தங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் கட்சியில் செவிமடுப்பார் எவருமேயில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிகார ஏணியிலிருந்து அவர் ஏற்கனவே கீழிறக்கப்பட்டுவிட்டார்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை கருணா ஒரு முடிந்துபோன கதை. தேர்தல் தொடர்பாக தற்போது எழுந்துள்ள முரண்பாடுகள், இதுவரை காலமும் ராஜபக்ச அரசில் அவர் அனுபவித்து வந்த அதிகாரம் வீழ்ச்சியடையத் தொடங்கி விட்டதையே காட்டுகிறது.

கருணாவின் இந்த வீழ்ச்சி அவர் தானே ஏற்படுத்திக் கொண்டது. அவர் தனது மக்களை மறந்து, நகர வாழ்வைத் தேடினார். அவர் மேற்கொண்ட பகட்டு வாழ்வே அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு குழி பறித்தது. பிள்ளையானைப் போல தனது மக்களோடு, அந்த மண்ணின் நின்று அபிவிருத்திப் பணிகளில் கவனம் செலுத்தியிருப்பாரேயானால், தேர்தலைக் கண்டு ஓடவேண்டிய தேவை கருணாவிற்கு ஏற்பட்டிருக்காது.

போரினால் பாதிக்கப்பட்ட அவரது மண்ணின் மக்கள் தமது நாளாந்த வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், கருணா ஒரு ஆடம்பரமான பகட்டு வாழ்வில் திழைத்திருந்தார். விடுதலைப் புலிகளோடு இணைந்திருந்த காலத்தில் எந்த மக்களுக்காகப் போராடினாரோ அந்த மக்களுக்கு குரல் கொடுத்கும் தகுதியை அவர் இழந்து விட்டதை அவர் பல வழிகளில் நிருபித்துள்ளார்.

அவர் தனது மக்களுக்குரிய தலைவராக இருக்கவில்லை. இன்று கிழக்கு மாகாண மக்களால் வெறுக்கப்படும் ஒரு மனிதராக அவர் இருக்கின்றார். இந்த உண்மை குறித்து அவரும் உணர்ந்திருப்பார்.

அரசைப் பொறுத்தவரை, போருக்குப் பின்னான காலத்தில் அவரால் எந்தப் பயனும் இல்லை. அவரின் தேவையும் மதிப்பும் அவர்களைப் பொறுத்தவரை பெரியளவில் கீழிறங்கிவிட்டது.

அவரின் இரவு விடுதி வாழ்க்கை அரசாங்கத்திற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. அவரைப் பாதுகாப்பதன் ஊடாக கிழக்கு மாகாண மக்களின் வாக்குகளைப் பெறமுடியாது என அரசாங்கம் நன்றாகவே உணர்ந்துள்ளது.

இந்நிலையில், அவரை தேர்தலில் நின்று பாராளுமன்றத்திற்கு வரும்படி கேட்டிருப்பதுகூட, அரசியலில் இருந்து அவரை கௌரவமாக வழியனுப்பி வைக்கும் ஒரு தந்திரம்தான். ஏனெனில் அவரால் தேர்தலில் நின்று வெல்ல முடியாது என்பது அரசிற்கு நன்றாகவே தெரியும்.

இவ்வாறு 'டெய்லி மிரர்' தனது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியுள்ளது.

ponguthamil.com

Edited by பரதன்

இது யாரோ எரிச்சலில் இப்படி எழுதி இருக்கினம்,கருனா அம்மாண் தேர்தலில் நின்று வெற்றியடைந்து இலங்கையின் பிரதமராக வருவதை யாராலும் தடுக்க ஏலாது :):D:lol::lol::lol:

நாங்கள் முதல் தமிழ் இலங்கையின் ஜனாதிபதி என்று கனவு கண்டு கொண்டிருக்கிறோம். நீங்கள் இப்படித் தரக்குறைவாக மதிப்பிட்டுவிட்டீர்கள். :):D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் முதல் தமிழ் இலங்கையின் ஜனாதிபதி என்று கனவு கண்டு கொண்டிருக்கிறோம். நீங்கள் இப்படித் தரக்குறைவாக மதிப்பிட்டுவிட்டீர்கள். :):D

இந்தக்கலிகாலத்திலை நீங்கள் சொன்னது போலை நடந்தாலும் நடக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

" வினை விதைத்தவன் வினை அறுப்பான் " என்பது முதுமொழி. ஆனால் இவளவு விரைவாக இவர்களது தேனிலவு முடிவுக்குவந்து விவாகரத்துவரைபோகுமென எதிர்பார்க்காத விடயம். ஆனால் துரோகங்களுக்கான மௌகுடங்கள் சூடப்படும் காலமாகவும், தமது தவறுகளதை; திரும்பிப் பார்த்து மனிதத்தை உதைத்து மிதித்ததன் பயனாகப் பரிசாக இது மட்டுமல்ல இன்னும் பல கிடைக்கலாம் என்பதை இவர்போன்றோர் சிந்திக்கும் காலமாகவும் கொள்ளலாம். இனி எங்காவது அரசியல் தஞ்சம் கோர வேண்டியதுதானோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் முதல் தமிழ் இலங்கையின் ஜனாதிபதி என்று கனவு கண்டு கொண்டிருக்கிறோம். நீங்கள் இப்படித் தரக்குறைவாக மதிப்பிட்டுவிட்டீர்கள். :):D

:lol: :lol:

:D:lol::)
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அன்நிய நாட்டு அகதி கருணா எங்கள் எதிரியிடமே அகதி. அண்டிவாழும் வாழ்வு கசந்து அது முடிய கருணா யதார்த்த நிலையை உணர்வானானால் அவன்கூட எங்களைப்போலவே எங்காவது வெளிநாட்டுக்கு ஓடவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாவை வழியனுப்பி வைக்கும் ராஐபக்ச அரசு

லண்டன் விசாவோடயோ :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் விசாவோடயோ :)

அது ஒருக்கால் போய் அங்க இருகிற பெடியளிட்ட அடியும் வாங்கி கொண்டு வந்திட்டார், இனிவந்தால் திரும்பி போக ஏலுமோ தெரிய இல்லை, இது ஊருக்கு வழிஅனுப்புற நிகழ்வு. :D:lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.