Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மோதலை காதல் ஆக்குவது எப்படி

Featured Replies

திருமணத்துக்கு பின்னர் ஜோடிகளுக்குள் இணக்குகளும் பிணக்குகளும் ஏற்படுவது சகஜம் தான். என்றாலும், அது முற்றிவிடாமல் இருக்க வேண்டும். அப்படி இருவருக்குள்ளும் ஏற்படும் மோதலை காதலாக்குவது எப்படி ?

* இருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படையாக அடிக்கடி வெளிக்காட்டவேண்டும்.

* இருவருக்குள் யார் பெரியவர் என்கின்ற நினைப்போ அதற்குரிய வார்த்தையோ பரிமாறிக்கொள்ளவே கூடாது.

* இருவரும் எவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தை... காதலை பகிர்ந்துகொண்டால் நல்லது.

* வேலையிலோ அல்லது வெளியிலோ எவ்வளவு பரபரப்பாக தான் இருந்தாலும் இருவரும் தனிமையில் சந்தித்துக்கொள்ளும்,

பேசிக்கொள்ளும் நேரத்தை ஒதுக்குங்கள்.

* இருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும் சாதாரண விட்டுக்கொடாமை... இறுதியில் பிரிவில் வந்து நிற்கும் என்பதனை மறந்துவிடாதீர்கள்

இதனால் குடும்ப உறவும் பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

* கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் முழுமையாக நம்பவேண்டும்.. இல்லாவிட்டால் சந்தேகப்பேய் உங்களை

பிரித்து விடும்.

* தெரியாமல் செய்யும் சின்ன சின்ன குற்றாங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது, அவற்றை பெரிதாக நினைத்து பேச

ஆரம்பித்தால் அதுவே வீண்வம்பாகிவிடும்.

* தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்தால்... அதை அன்போடு திருத்தப்பாருங்கள். அதற்காக எந்த கடும் சொற்களையும் பயன்

படுத்திவிடாதீர்கள்.

* எந்த பிரச்சினை வந்தாலும் எடுத்தெறிஞ்சு பேசிவிடவேண்டாம். ஒருவர் மற்றவரின் குடும்பத்தை பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது.

* நீங்கள் ஏதேனும் தவறு செய்தால் கெளரவம் பாராது உங்கள் துணையிடம் மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் கேட்கும் மன்னிப்பே

உங்களை அவர்களுடைய மனதுக்குள் பூஜிக்கவைக்கும்.

*எப்போதும் எங்கேயும் எதற்காகவும் எதையும் மறைத்து பேசவேண்டாம். மற்றாவர்களிடம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை உங்கள்

துணையுடன் திறந்த மனதுடன் பேசுங்கள்.

* வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி மற்றும் வேறு எதற்காவது உங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டடல் நான் சொல்வது தான் சரி என்று வாதிட வேண்டாம்.

* தாம்பத்தியத்தின் போது உங்களிடம் இருக்கும் பாலியல் குறைபாடுகளை மனம் திறந்து சொல்லுங்கள்.இதனால் பரஸ்பரம் இருவருக்குள்ளும் ஆறுதல் கிடைக்கும். உங்களுக்காக அவர்கள் விட்டு கொடுப்பார்கள்.

*உங்கள் குடும்பங்களைப் பற்றி தரக்குறைவாகவோ...அல்லது மூன்றாம் மனிதர்கள் முன்பபகவோ எப்போதும் பேச வேண்டாம்.

* மற்றாவர்களின் முன்னிலையில் உங்களுடைய துணையைப் பற்றி எந்த குறையும் வெளிப்படுத்த வேண்டாம்.

* வீட்டில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டடல் அடுத்தவர் மீது அதற்கு பழி போடடமல் தீர்வுக்கான வழியை இருவரும் சேர்ந்தே தேடுங்கள்.

இம்முறை சிறந்த காதலர் 2010 நீங்களே........

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கம்...இதை நீங்களா எழுதியது விடிவெள்ளி?

  • கருத்துக்கள உறவுகள்

அடடா ஏமாந்து போய்ட்டனே! நான் நினைச்சன் சும்மா ரோட்டில நடந்து போகேக்க இல்லாட்டி சைக்கிள்ல போகேக்க ஒரு பொம்பிளைப்பிள்ளையோட தெரிஞ்சோ தெரியாமலோ மேதிவிட்டு, பிறகு அந்த மோதலை வச்சு எப்படு லவ்வை டிவலப்பண்ணலாம் எண்டு அய்டியா கிடைக்கும் எண்டு பாத்தா ஏமாற்றம் தான். ஆனா கலியாணம்கட்டினாப் பிறகு வாற மோதல்களை காதல் ஆக்கிறதுக்கு நல்ல நல்ல அய்டியாக்கள் எல்லாம் இருக்குது. :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சன் சும்மா ரோட்டில நடந்து போகேக்க இல்லாட்டி சைக்கிள்ல போகேக்க ஒரு பொம்பிளைப்பிள்ளையோட தெரிஞ்சோ தெரியாமலோ மேதிவிட்டுஇ பிறகு அந்த மோதலை வச்சு எப்படு லவ்வை டிவலப்பண்ணலாம் எண்டு அய்டியா கிடைக்கும் எண்டு

நானும் அப்படி நினைத்துத்தான் வந்து பார்த்தேன்

ஆனால்விடிவெள்ளி

இப்படி இருந்தால் அன்பு குறைவடையும்

ஊடல் இருந்தால்தான் அன்பு அதிகரிக்கும் கூடலும் சேரும்

  • கருத்துக்கள உறவுகள்

அட அட எல்லாரும் என்னை மாதிரியே இருக்கிறாங்களப்பா

  • கருத்துக்கள உறவுகள்

1-இருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படையாக அடிக்கடி வெளிக்காட்டவேண்டும்.

வைத்துக்கொண்டா வஞ்சகம் பண்ணுகின்றோம்

2-இருவருக்குள் யார் பெரியவர் என்கின்ற நினைப்போ அதற்குரிய வார்த்தையோ பரிமாறிக்கொள்ளவே கூடாது.

அதெப்படி படிப்பு அழகு வளர்த்தி நிறம் பணம் சீதனம் சாதி ஊர் .... இப்படி எத்தனையுண்டுபரிமாறிக்கொள்ள....

3-இருவரும் எதுவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தை... காதலை பகிர்ந்துகொண்டால் நல்லது.

இருந்தால்தானே வருவதற்கு.

4-வேலையிலோ அல்லது வெளியிலோ எவ்வளவு பரபரப்பாக தான் இருந்தாலும் இருவரும் தனிமையில் சந்தித்துக்கொள்ளும்இ பேசிக்கொள்ளும் நேரத்தை ஒதுக்குங்கள்.

அடிக்கடி ஒரே முகத்துடன் பேசினால்...

5-இருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும் சாதாரண விட்டுக்கொடாமை... இறுதியில் பிரிவில் வந்து நிற்கும் என்பதனை மறந்துவிடாதீர்கள்

இப்படி எத்தனை தரம் வெருட்டியாச்சு

6-இதனால் குடும்ப உறவும் பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கட அம்மா அப்பாவெல்லாம் மனுசரே அனுசரித்துப்போக...

7-கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் முழுமையாக நம்பவேண்டும்.. இல்லாவிட்டால் சந்தேகப்பேய் உங்களை பிரித்து விடும்.

என்ன நேரம் என்றாலும் வீட்டுக்கு வரலாம் வராமலும் விடலாம்

8-தெரியாமல் செய்யும் சின்ன சின்ன குற்றாங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது. அவற்றை பெரிதாக நினைத்து பேச ஆரம்பித்தால் அதுவே வீண்வம்பாகிவிடும்.

அப்போ வெளியில் எவருடனாவது வம்பு வளர்க்கமுடியுமா?

8-தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்தால்... அதை அன்போடு திருத்தப்பாருங்கள். அதற்காக எந்த கடும் சொற்களையும் பயன் படுத்திவிடாதீர்கள்.

மன்னிப்பா நானா இந்த கழுதையிடமா?

9-எந்த பிரச்சினை வந்தாலும் எடுத்தெறிஞ்சு பேசிவிடவேண்டாம். ஒருவர் மற்றவரின் குடும்பத்தை பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது.

இன்னும் கல்யாணவீட்டில் படம் எடுத்த சிக்கலே இரு குடும்பத்துக்கும் முடியல...

10-நீங்கள் ஏதேனும் தவறு செய்தால் கெளரவம் பாராது உங்கள் துணையிடம் மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் கேட்கும் மன்னிப்பே உங்களை அவர்களுடைய மனதுக்குள் பூஜிக்கவைக்கு.

பெட்டையன் என்று பெயர் வராதே..

11-எப்போதும் எங்கேயும் எதற்காகவும் எதையும் மறைத்து பேசவேண்டாம். மற்றாவர்களிடம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை உங்கள் துணையுடன் திறந்த மனதுடன் பேசுங்கள்.

ஆயிரம் பொய் சொல்லித்தானே திருமணமே நடந்தது. எங்கு ஆரம்பிப்பது..?

12-வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி மற்றும் வேறு எதற்காவது உங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டடல் நான் சொல்வது தான் சரி என்று வாதிட வேண்டாம்.

பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்..?

13-தாம்பத்தியத்தின் போது உங்களிடம் இருக்கும் பாலியல் குறைபாடுகளை மனம் திறந்து சொல்லுங்கள். இதனால் பரஸ்பரம் இருவருக்குள்ளும் ஆறுதல் கிடைக்கும். உங்களுக்காக அவர்கள் விட்டு கொடுப்பார்கள்.

போட்டுக்கொடுக்க மாட்டார்களே...

14-உங்கள் குடும்பங்களைப் பற்றி தரக்குறைவாகவோ...அல்லது மூன்றாம் மனிதர்கள் முன்பபகவோ எப்போதும் பேச வேண்டhம்

எப்படி விலாசம் காட்டுவது..?

15-மற்றவர்களின் முன்னிலையில் உங்களுடைய துணையைப் பற்றி எந்த குறையும் வெளிப்படுத்த வேண்டாம்.

வேறு எங்கு மட்டம் தட்டமுடியும்..?

16-வீட்டில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டடல் அடுத்தவர் மீது அதற்கு பழி போடடமல் தீர்வுக்கான வழியை இருவரும் சேர்ந்தே தேடுங்கள்.

அகிம்சை வழியிலா..?

Edited by விசுகு

விசுகு அண்ணை ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கறீங்களோ. :)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணை ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கறீங்களோ. :)

இல்லை என்று சொன்னால் நம்பவா போகின்றீர்கள்?

வீட்டுக்கு வீடு வாசற்படிதானே..

அதிலும் ஒரு சுகம் உண்டு என்பது என் கருத்து.

ஆனால் இது ஒரு நாரதர் வேலை மட்டும்தான்

  • கருத்துக்கள உறவுகள்

.

எல்லாரும் நெடுக்கருக்கு இந்த வருசம் கலியாணம் கட்டி வைக்கிற முடிவோடை தான் இருக்கிறியள்.

.

  • கருத்துக்கள உறவுகள்

.

என்னவோ....... தெரியாது,

சில ஆட்கள் கலியாணம் எண்டாலே...... ரென்சன் ஆகீனம்.

என்ன செய்யிறது, எப்படி செய்யிறது...... என்பதற்கு அட்வைஸ் அண்ணாவை நாடுங்கள்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.