Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்?

Featured Replies

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டுவருவதை உறுதிப்படுத்தி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் பாதுகாப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்க தயாரித்திருந்த அறிக்கையொன்றை பாதுகாப்புச் செயலாளர் திடீரென இடைநிறுத்தியதாக புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் மேற்கொண்டுவரும் ஆயுத வியாபாரம் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளில் கிடைக்கும் இலாபத்தை மெக்சிக்கோவிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டு வருவது குறித்த சில சாட்சியங்களையும் முன்வைக்க அந்த அதிகாரி திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பில் உட்தரப்பு மோதல்களை எதிர்கொள்ள முடியாததால் மலேசியப் புலனாய்வுப் பிரிவினருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட முழுமையான இணக்கத்தின் அடிப்படையில் கே.பி. இலங்கையிடம் சரணடைந்ததாகக் கொழும்பில் முக்கிய மட்டங்களில் பேசப்படுகிறது.

கே.பி. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பில் வெளியில் தெரியும் நபராக இருந்த போதிலும் சர்வதேச வலையமைப்பை வேறொருவரே வழிநடத்தி வருவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினரின் நிலைப்பாடாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும் தகவலொன்று கிடைத்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொட்டு அம்மான் சமாதான உடன்படிக்கைக் காலத்தில் எந்தப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்ளவில்லை. அவர் குறித்த குறிப்பிட்டுக்கூறக் கூடிய தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருக்கவில்லை என்பதால் அவரை சிக்கவைக்க முடியாது போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளுக்கிடையில் சில பிளவுகள் ஏற்பட்டிருப்பதன் காரணமாக பொட்டு அம்மான் அந்த அமைப்பின் தலைமைத்துவத்திற்கு போட்டியிடவில்லை எனவும் அவர் அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளன.

எனினும் இந்த தகவல்களை குளோபல் தமிழச் செய்திகளால் ஆதாரபூர்வமாக பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வாறு ஆதாரபூர்வமாக தகவல்கள் கிடைத்தால் அவற்றை விரைவில் செய்தியாக இணையத்தில் பார்க்க முடியும்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=21901&cat=1

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும் தகவலொன்று கிடைத்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

:)

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும் தகவலொன்று கிடைத்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இல்லை எண்டு சொல்லுறதும், இருக்கிறது எண்டு சொல்லுறதும் சிங்களவன் தான்.

உந்த விளையாட்டுக்கு நாங்க வரவில்லையப்பா......

ரகசியமாக தொடங்கி.. ரகசியமாக நடந்து.. ரகசியமாக அழிந்து.. ரகசியமாக முடிந்துபோன ஒரே போராட்டம் எங்களுடைய போராட்டமாகதான் இருக்கமுடியும். :)

:)இருப்பார்.

KP யரின் வேலையால் யார் இருந்தாலும் செயற்பட முடியாது முடக்க பட்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை...

அடுத்ததாக தலைவரும் இருக்கிறார் எண்று சொல்வார்களோ...???

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

.

கேபியாருக்கு கழுத்திலை சயனைட் குப்பி கட்டி இருந்ததா..... இல்லையா...... ஆஆஆஆஆஆஆஆ........

.

தானாக போய் சேருகிறது எண்டு முடிவு எடுத்தால் என்ன கட்டி இருந்து என்ன பலன்...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்?

தலைவர்மாரும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் முல்லைத்தீவு காட்டுக்குள்ள பத்திரமா இருக்கிறினம் எண்டு கட்டுரையெல்லாம் எழுதி பரவசப்பட வச்சிட்டு இப்ப புதுசா கேள்விக்குறியோட தலைப்ப எழுதினா....... :)

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்மாரும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் முல்லைத்தீவு காட்டுக்குள்ள பத்திரமா இருக்கிறினம் எண்டு கட்டுரையெல்லாம் எழுதி பரவசப்பட வச்சிட்டு இப்ப புதுசா கேள்விக்குறியோட தலைப்ப எழுதினா....... :)

முல்லைதீவு காட்டுக்குள்ளே இராணுவம் இருப்பது தெரியாதோ மொக்குசாமிக்கு ? :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைதீவு காட்டுக்குள்ளே இராணுவம் இருப்பது தெரியாதோ மொக்குசாமிக்கு ? :lol::lol:

என்னண்ணை நீங்கள்!!!! கட்டுரை இங்க வாசிசனான் வைக்கோ அண்ணன் உணச்சிவசத்தோட சொன்னதெண்டு படமும் போட்டிருந்தது என்ர ரெண்டு கண்ணால் கண்டனான் அண்ணை. :)

மன்னார், முல்லைத்தீவு காடுகளுக்குள் சிங்களப்படைகள் மீது நடைபெறும் வாள் வீச்சுக்கள் பற்றிய செய்திகளை இன்னும் நீங்கள் அறியவில்லையா? இதெல்லாம் வெளியே வராமல் அப்படியே கொல்லப்படும் படைகளோடு புதையுண்டு அல்லது எரியுண்டு போகின்றன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னார், முல்லைத்தீவு காடுகளுக்குள் சிங்களப்படைகள் மீது நடைபெறும் வாள் வீச்சுக்கள் பற்றிய செய்திகளை இன்னும் நீங்கள் அறியவில்லையா? இதெல்லாம் வெளியே வராமல் அப்படியே கொல்லப்படும் படைகளோடு புதையுண்டு அல்லது எரியுண்டு போகின்றன

அம்பும் வில்லுமெண்டா வெளியில வந்திருக்கும். வாள்வீச்செண்டபடியா கன்பம் பண்ண நேரமெடுக்கும்....அதான் தெரியேல , தகவலுக்கு நன்றி. :rolleyes:

தலைவர்மாரும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் முல்லைத்தீவு காட்டுக்குள்ள பத்திரமா இருக்கிறினம் எண்டு கட்டுரையெல்லாம் எழுதி பரவசப்பட வச்சிட்டு இப்ப புதுசா கேள்விக்குறியோட தலைப்ப எழுதினா....... :rolleyes:

மண்டையை பிளந்து கொலை செய்து போட்டினம் எண்டு உங்கட ஆக்களும் படம் எல்லாம் போட்டு கட்டுரை எழுதினவை நானும் பாத்தனான்... பொட்டரின் உடலை வெட்டி தாட்ட பெடியள் தங்களுக்கு சொன்னவை எண்டும் எழுதினீங்கள் இல்லையா....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்டையை பிளந்து கொலை செய்து போட்டினம் எண்டு உங்கட ஆக்களும் படம் எல்லாம் போட்டு கட்டுரை எழுதினவை நானும் பாத்தனான்... பொட்டரின் உடலை வெட்டி தாட்ட பெடியள் தங்களுக்கு சொன்னவை எண்டும் எழுதினீங்கள் இல்லையா....???

செய்தியில காட்டினதுகள் இங்க வாசிச்துகள்போக உங்களுக்கு தெரிஞ்சதுகள்கூட எனக்குத்தெரியொதெண்டு இப்ப விளங்குது. :rolleyes::D

செய்தியில காட்டினதுகள் இங்க வாசிச்துகள்போக உங்களுக்கு தெரிஞ்சதுகள்கூட எனக்குத்தெரியொதெண்டு இப்ப விளங்குது. :rolleyes::D

இலங்கை இந்திய பயங்கரவாதிகளுக்கு புலிகள் தேவை. அது அ. வ க்கும் தேவை. என்ன செய்வது அவர்கள் இல்லை என்றால் உடல் இயக்கமே நின்றுவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.