Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்தத் தமிழ் தலைவருடன் ஜனாதிபதி பேசுவார்

Featured Replies

இது அடுத்த பக்கத்தின் புலம்பல் (அறிக்கை).

தமிழ்பேசும் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய நீதியானதும் நியாயமானதுமான நிரந்தர அரசியல் தீர்வு வந்தே ஆகும். நாம் எவருக்கும் அடிமையாக, அடிபணிந்து வாழ வேண்டியது அவசியமில்லை. ஜனாதிபதி எந்தத் தமிழ்த் தலைவருடன் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வடக்கு, கிழக்கு தமிழ்மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் உறுதியாகத் தெரிவிப்பார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிறு மாலை பொது அமைப்புக்களின் சந்திப்பு ஒன்றின் போது சம்பந்தன் பேசினார். அவர் மேலும் கூறியதாவது; தந்தை செல்வா 1949 இல் வகுத்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலே நாம் போட்டியிடுகின்றோம். வேறு நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் நாம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை. வரலாற்று பாரம்பரிய தாயகத்தில் உள்ளக சுயநிர்ணய உரித்துடனான சுயாட்சி அரசமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தந்தை செல்வா 1949 இல் கோரிக்கை விடுத்தார். ஒற்றையாட்சி அரசமைப்பின் கீழ் வாழ முடியாது என்றும் செல்வா கூறினார்.தமிழ்த்தேசிய இனத்துக்கு சுயநிர்ணய உரிமை கோரும் உரித்துண்டு என்றார் செல்வா. பாரம்பரிய தாயகத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சிக்கொள்கையிலிருந்து நாம் விலகமாட்டோம்; விலை போகவும் மாட்டோம். தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஓரணியிலே நிற்கின்றார்கள். ஒற்றுமையைக்குலைக்க முயல்பவர்கள் இதனை உணர வேண்டும்; உணர்ந்து வந்தால் ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.தமிழ் மக்களை சம உரிமை உள்ள மக்களாக மதிக்க வேண்டும். இதற்கான சுயாட்சி அதிகாரங்களையே நாம் கேட்கின்றோம்.மக்களுடைய தீர்ப்பின் படி ஜனநாயக தீர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். நியாயமான அரசியல் தீர்வு யோசனையை அரசு நிராகரித்தால் நாம் சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம்.இன்று யுத்தமில்லை தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பை அரசு மதிக்க வேண்டிய கட்டாயக் கடமையாகும். இன்று இலங்கை அரசு மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச் சாட்டுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சர்வதேச நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. தமிழ் பேசும் மக்களின் பிரசினைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் வரை இந்த நெருக்கடி நீடிக்கும் என்று சம்பந்தன் கூறினார்.

தொடர்ந்து சம்பந்தன் கூறியதாவது;

புலம் பெயர் சமூகத்தில் பெரும்பான்மையானோர் கடும் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை, அவர்கள் நியாயமாகச் சிந்தித்துச் செயற்படுகிறார்கள். புலம் பெயர் சமூகத்தில் சிலரே கடும் போக்கைக் கடைப்பிடிக்கின்றார்கள். பெரிய கோஷங்களை எழுப்பி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதில் பிரயோசனமில்லை.புலம் பெயர்கடும் போக்காளர்கள் கூறுகிறபடி இங்கு அரசியலை நடத்தமுடியாது.இங்கு தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸூக்கும் இடையேயான வேறுபாடு உருவாகியது.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலைச் சந்திப்பது பற்றி கலந்துரையாடல் இடம்பெற்ற போது, தீர்வுத் திட்டம் பற்றி ஆராயப்பட்டது. அப்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு யோசனையை முன்வைத்தார். இரண்டு தேசங்களும் ஒரு நாடு என்ற கூட்டாட்சி அமைய வேண்டும் என்று வற்புறுத்தினார். 2002 டிசம்பர் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே உருவான ஒஸ்லோ பிரகடனத்தின் நிலைப்பாட்டுக்கு மேலாக கஜேந்திரகுமாரின் யோசனை அமைந்தது.பாரம்பரிய தாயக பூமியில் உள்ள சுய நிர்ணய உரிமையுடன் ஒருமித்த நாட்டில் சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சித் திட்டம் சர்வதேச சமூகத்தினாலும் இந்தியாவினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இதுவே எமது நிலைப்பாடாகும். அதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு இருக்கிறது எமது நிலைப்பாடு நீதியும் நியாயமானதுமானதாக இருக்க வேண்டும். அதனை இலங்கை மறுக்க முடியாது. அவ்வாறு மறுப்பதானால் பேச்சுவார்த்தை ஸ்தம்பித்து விடும்.சுதந்திரத்தின் பின்னர் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகாணும் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.1957 இல் அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்காவுடன் இலங்கைத் தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வா கைச்சாத்திட்ட பண்டா செல்வா உடன்படிக்கையை ஐக்கிய தேசிக் கட்சியும் எதிர்த்தது ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸூம் எதிர்த்தது. பின் அந்த உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது.

1965இல் யு.என்.பி.அரசின் பிரதமர் டட்லி சேனநாயகாவுடன் செய்து கொள்ளப்பட்ட டட்லிசெல்வா ஒப்பந்தத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்த்தது, அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸூம் எதிர்த்தது.பின்னர் அந்த ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட்டது.வீணான அரசியலில் ஈடுபடக் கூடாது; ஆக்கபூர்வமான அரசியலில் ஈடுபடவேண்டும். மக்களின் தேவைகளை உணர்ந்து கொள்ளவேண்டும். அந்தக் கட்டாய நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி செயற்படுகிறது என்றார்.

மேலும் சம்பந்தன் கூறியதாவது:

வன்னிபோர் முடிவில் ஆனையிறவு நுழைவாயில் பெரிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்படுவதாக அங்கிருந்த அன்பர் ஒருவர் கடிதம் மூலம் எனக்கு அறிவித்தார்.கிளிநொச்சியில் விகாரை கட்டுகிறார்கள். இது பற்றி அரசின் மேலிடத்துடன் தொடர்பு கொண்டேன். இப்போது ஆனையிறவு வாசலில் விகாரைக்கு பதில் இராணுவச்சின்னம் ஒன்று கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் பாரம்பரிய தமிழர் தாயகத்தை துண்டாடும் வேலை தான் நடக்கிறது. சிங்கள மாவட்டங்களிலிருந்து வடக்கு கிழக்குக்கு வந்து போகக்கூடியதாக அம்பாந்தோட்டைபுல்மோட்டை வீதி, மூதூர்பொலன்னறுவை வீதி, பன்குளம்ஹொரவபொத்தான வீதி என்று அபிவிருத்தி செய்யப்படுகின்றது.கிழக்கில் விவசாய அபிவிருத்தி என்ற சிங்களக் குடியேற்றத்திட்டங்களை உருவாக்கியவர்கள் தற்போது தொழிற்சாலைகளை சிங்கள முதலாளிமார்களைக் கொண்டு நிறுவி, வேலைவாய்ப்புக்களையும் பறிக்கத் தொடங்கியுள்ளார்கள். வீதி அபிவிருத்தி என்ற பெயரிலும் இக் கொள்கை விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது என்றார் சம்பந்தன்.

மூலம்: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=5552

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய கோஷங்களை எழுப்பி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதில் பிரயோசனமில்லை.புலம் பெயர்கடும் போக்காளர்கள் கூறுகிறபடி இங்கு அரசியலை நடத்தமுடியாது.இங்கு தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸூக்கும் இடையேயான வேறுபாடு உருவாகியது.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலைச் சந்திப்பது பற்றி கலந்துரையாடல் இடம்பெற்ற போதுஇ தீர்வுத் திட்டம் பற்றி ஆராயப்பட்டது. அப்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு யோசனையை முன்வைத்தார். இரண்டு தேசங்களும் ஒரு நாடு என்ற கூட்டாட்சி அமைய வேண்டும் என்று வற்புறுத்தினார். 2002 டிசம்பர் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே உருவான ஒஸ்லோ பிரகடனத்தின் நிலைப்பாட்டுக்கு மேலாக கஜேந்திரகுமாரின் யோசனை அமைந்தது.பாரம்பரிய தாயக பூமியில் உள்ள சுய நிர்ணய உரிமையுடன் ஒருமித்த நாட்டில் சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சித் திட்டம் சர்வதேச சமூகத்தினாலும் இந்தியாவினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இதுவே எமது நிலைப்பாடாகும். அதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு இருக்கிறது

இதுவே இன்றைய நிலையில் முடியும்

அதையே முதலில் வெல்லவேண்டும்

சூறாவளி தாங்கள் இதை புலம்பல் என்று சொல்வதன் தார்ப்பரியம் புரியவில்லை

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் சம்பந்தன் கூறியதாவது:

வன்னிபோர் முடிவில் ஆனையிறவு நுழைவாயில் பெரிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்படுவதாக அங்கிருந்த அன்பர் ஒருவர் கடிதம் மூலம் எனக்கு அறிவித்தார்.கிளிநொச்சியில் விகாரை கட்டுகிறார்கள். இது பற்றி அரசின் மேலிடத்துடன் தொடர்பு கொண்டேன். இப்போது ஆனையிறவு வாசலில் விகாரைக்கு பதில் இராணுவச்சின்னம் ஒன்று கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுதான் சம்பந்தனின் சாதனை என்றால். எதுவே செய்யாமல் இருந்திருக்கலாம். நிழலுக்கு ஒதுங்க ஒரு கட்டிடமேனும் இருந்திருக்கும். இப்போ அந்த வீதியால் சென்று வருபவர்களுக்கு சினத்தைக் கொடுக்க ஒரு இராணுவச் சின்னம் .. இதுகள்தான் தமிழருக்கு தலைமை தாங்கப் போறன் என்று விடாப்பிடியாய் நிக்குதுகள் ...

  • கருத்துக்கள உறவுகள்

யார் தமிழருக்கு தலைவராய் வந்தாலும் சிங்கள தலைமை தாம் நினைத்ததை தான் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களை யாராலும் நிறுத்த முடியாது. இன்றைய நிலை இது தான்.

மகிந்தவுடன் தான் பேசி தமிழர்களுக்கு தீர்வு எண்டால் இதை போன வருடம் மே மாதமே செய்து இருந்து இருக்கலாம்.... முகாமில் இருந்த சனம் கொஞ்சமாவது பலன் அடைந்து இருக்கும்...

அல்லது ஜனாதிபதி தேர்தலின் போது அடக்கி வாசிச்சாவது இருக்கலாம்...

நல்ல அரசியல் அறிவும் தூர நோக்கும்...

Edited by தயா

  • தொடங்கியவர்

சூறாவளி தாங்கள் இதை புலம்பல் என்று சொல்வதன் தார்ப்பரியம் புரியவில்லை

தார்ப்பரியம் என்று கூறுமளவுக்கு இது ஒன்றும் ஆழமான விடயமில்லை..

இரண்டு தமிழ்த் தரப்பும் அறிக்கைகளை விடுவது என்று சொல்லி என்னத்தை விட்டாலும் எனக்கு அதெல்லாம் புலம்பல் மாதிரித்தான் இருக்கு. இரண்டு தரப்பிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.

அவ்வளவுதான். இதற்கு ஏன் தாற்பரியம் என்று பெரிய பெரிய வார்த்தை பிரயோகம்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தில் இப்போ வாழும் அனைத்து அரசியல் வாதிகளும் அரசியல் கத்துகுட்டிகள் அல்லது சுயநலவாதிகள் தான்.அகதி முகாமில் வாழும் சிறுவனுக்கு உள்ள அறிவு கூட இவர்களுக்கு இல்லை.வரும் தேர்த்தலுடன் எல்லா தமிழ் கட்சிகளையும் ஓட ஓட மகிந்த விரட்டுவான்.

கடைசி எமது (தமிழ் கட்சிகளின்) ஒற்றுமையால் தான் ஏதாவது சாதிக்க முடியும் என்ற விட்டு கொடுப்பே இல்லாதவர்கள் எப்படி தமிழ் மக்களுக்கு சேவை செய்வார்கள். மேற்குலகில் கதிரையால் கூட எறிபட்டு சண்டை பிடிப்பார்கள். ஆனால் தமது நாடு, இனம் எனம் என வரும் போது மிக ஒற்றுமையாகவே செயல்படுவார்கள்.அத்தோடு இளையவருக்கு முன்னுருமை கொடுப்பார்கள். எப்படி சம்பந்தருக்கு வாழ்நாள் தலைவர் பதவி கிடைத்தது என்பதும் விளங்கவில்லை.

இன்று புலம் பெயர் வானொலிகளில் ஏன் கதறுகிறார்கள் என்று விளங்கவில்லை .கதிரையை பிடிப்பதை தவிர வேறொரு காரணமும் இவர்களுக்கு இல்லை.

புலிகளை குறை கூறுபவர்களுக்கு (சம்பந்தர் உட்பட) விளங்கும் அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப இன்னுமொரு பிரபாகரனால் தான் முடியும் என்று. 1977 ல் நடைபெற்ற தேர்த்தலில் தமிழர் விடுதலை கூட்டணி அமோக வெற்றி ஈட்டி எதிர்கட்சியாக கூட வந்தது இலங்கை சரித்திரத்தில் நடக்காத ஒன்று.ஆனால் அது நடந்தும் எந்த ஒன்றையும் சிங்களவன் தமிழருக்கு வழங்கவில்லை. இனியும் வழங்குவார்கள் என்பது அவர்களின் இன்றைய நடவடிக்கைகளில் இருந்தே தெரியும்.

இனி சம்பந்தரின் கட்சியோ அல்லது கஜேந்திரன் பொன்னம்பலத்தின் கட்சியோ ஒரு சில தொகுதிகளில் வெற்றியீட்டியவுடன் தமது நிஜ வாழ்க்கைக்கு போய்விடுவார்கள். அது தான் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக விட்ட அறிக்கை போல விட்டுக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

இந்தியாவுக்கு தனது அயல் நாடுகள் சண்டை பிடித்து அவர்களை நிர்கதியாக விட வேண்டும். அவர்கள் தன்னிடம் வரவேண்டும் என்பது தான் அவர்களின் அரசியல்.இந்திரா காந்தி அம்மையாரும் இதனை தான் செய்தார்.சோனியாவும் இதனை தான் செய்கிறார். பாகிஸ்தானில் அடிக்கடி நடக்கும் குண்டு வெடிப்புகள் இதற்கு மிக நல்ல உதாரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.