Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் இணைந்து செயற்பட விரும்புகின்றோம், ஆனால் தலைமையில் மாற்றம் தேவை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சயிக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் 2010 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பொதுக்கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) திருக்கோணமலையில் நடைபெற்றது.

திருக்கோணமலை முதன்மை வேட்பாளர் ச.கௌரிமுகுந்தன் தலைமையில் மாலை 6.00 மணிக்கு திருக்கோணமலை சிவன்கோயில் முன்றலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருடன், யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளர் கலாநிதி எட்வேர்ட் கெனடி ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் திருக்கோணமலை வேட்பாளர்களான த.காந்தரூபன், ஜோன்சன், கரிஸ்டன், திரவியராசா, கண்மணியம்மா இரத்தினவடிவேல் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் இதுவரை காலமும் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருக்கோணமலை நகரசபை தலைவரும், முதன்மை வேட்பாளருமான ச.கௌரிமுகுந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், உப்புவெளி பிரதேசசபை தலைவர் த.காந்தரூபன், கலாநிதி எட்வேர்ட்ட கெனடி, ஜொன்சன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், கண்மணியம்மா, கரிஸ்டன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் உரையாற்றினர்.

இந்தியாவின் பணிப்பிற்கு இணங்க தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கைவிட்ட காரணத்தினால், அந்தக் கூட்டமைப்பில் இருந்து விலக நேர்ந்ததை தனது உரையில் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தலைமைப் பொறுப்பிலுள்ள இரா.சம்பந்தன். மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அகற்றப்பட்டால், எதிர்காலத்தில் கூட்டமைப்பிலுள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க வேண்டும் என்பது தமது நோக்கம் அல்ல எனவும், அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தேர்தல் பிரவேசம் எனவும் சுட்டிக்காட்டினார்.

(உரை இணைக்கப்பட்டுள்ளது)

இதேவேளை, இன்று (வெள்ளிக்கிழமை) காலை மூதூர் பிரதேசத்து மக்களைச் சந்தித்து, நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் காங்கிரசின் சின்னத்தில் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” போட்டியிடுவற்கான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து மாலை 3.00 மணிக்கு நியூ சில்வெர் ஸ்டார் விடுதியில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

globaltamilnews

இதை தானே நிறைய பேர் நீண்டகாலமாக சொல்கிறார்கள்...

இதை தானே நிறைய பேர் நீண்டகாலமாக சொல்கிறார்கள்...

இனி சம்பந்தர் புராணம் பாடியவர்களிடம் இப்போது பந்து

இனி இவர்களின் சுயரூபம் வெளிப்படும் இதுவரை இவர்களால் செய்யப்பட்டது தமிழ்தேசிய உணர்வா ? சம்பந்தர் விசுவாசமா ? பார்ப்போம்

Edited by tamilsvoice

தமிழினம் பிரிந்து நிற்பதற்கு இதுவொரு காரணம் சொல்லும் நிகழ்ச்சி. கஜேந்திரன் அணியினரால்தான் இன்று தமிழினம் பிரிந்து நிற்கிறது.

மேற் கூறப்பட்ட மூவர் அகற்றப்பட்டால் தாங்கள் சேர்ந்து இயங்குவதற்குத் தயார் என்கிறார்களே, அப்படியென்றால் அங்கிருக்கும் மீதமானோர் எதன் அடிப்படையில் கூட்டமைப்பில் இணைந்திருக்கிறார்கள்.

கஜேந்திரனின் தேவை, கூட்டமைப்பின் தலைமையை எதிர்ப்பது. கூட்மைப்பை எதிர்ப்பதல்ல. அதை உள்ளிருந்தே செய்திருக்கலாமே. இப்படித் தெருவுக்கு வரத் தேவையில்லையே. இதுவரை திருமலையில் தமிழர்கள் தமக்குள்ளே இவ்வாறு முரண்பட்டதேயில்லை. அதைச் செய்த பெருமை கஜேந்திரன் அணியினையே சாரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இறுதியாக கூட்டமைப்பில் இருந்த 22 பா. உ. க்களில்

இன்று இருப்பவர்கள் எத்தனை பேர்?

அதிக பட்சம் 11 பேர்.

என்ன காரணம்?

பல காரணங்கள் கூறலாம்.

விலை போனவர்கள்.

விற்கப்பட்டவர்கள்.

விலத்தப்பட்டவர்கள்.

விலகியவர்கள்.

வெளி நாடு சென்றவர்கள்

வெளி நாடு செல்ல வைக்கப்பட்டவர்கள்.

மேய்ப்பவன் சரியாக இருந்தால் மற்றவர்கள் வழி மாறமாட்டார்கள்.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.... யாழ்ப்பாணத்தில கொஞ்சப்பேர் இணைந்து செயல்படுகினம் , கிழக்கில இருக்கிறவயோட இணையிறது பெரிய குற்றமில்ல. :rolleyes:

நாங்கள் இணைந்து செயற்பட விரும்புகின்றோம், ஆனால் தலைமையில் மாற்றம் தேவை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஏற்கனவே இறுதியாக கூட்டமைப்பில் இருந்த 22 பா. உ. க்களில்

இன்று இருப்பவர்கள் எத்தனை பேர்?

அதிக பட்சம் 11 பேர்.

என்ன காரணம்?

பல காரணங்கள் கூறலாம்.

விலை போனவர்கள்.

விற்கப்பட்டவர்கள்.

விலத்தப்பட்டவர்கள்.

விலகியவர்கள்.

வெளி நாடு சென்றவர்கள்

வெளி நாடு செல்ல வைக்கப்பட்டவர்கள்.

மேய்ப்பவன் சரியாக இருந்தால் மற்றவர்கள் வழி மாறமாட்டார்கள்.

வாத்தியார்

...............

மேய்ப்பவன்தான் இல்லையே. அதனால் மந்தைக் கூட்டங்கள் சிதறிப்போகின்றன. கைத்தடியுடன் அந்த மேய்ப்பன் இருந்திருந்தால், இருந்திருக்குமோ இந்த மாற்றம்.?

பிரிஞ்சு போய் தேர்தல் கட்டுப்பணமும் செலுத்தியபின் இதை சொல்லி பயன் இல்லை.

பிரச்சனை வரும்போதே இதுகளை உள்ளுக்குள்ளேயே இருந்து செய்திருக்கலாம்.

அதிகமான உறுப்பினர்களை சேர்த்தால் சம்பந்தரை வெளியேற்றி இருக்கலாம்.

இப்ப இதை சொல்வது எனக்கு இன்னுமொன்று நினைவுக்கு வருது.

கருணா பிரிந்து போய் இரு இடத்தில சொன்னவன் புட்டரை விளக்கினால் திரும்பவும் வந்து இணையத் தயாரெண்டு.

சம்பந்தரும் உங்களை வாங்கோ என்றுதான் சொல்லுகிறார் நீங்களும் வருவம் என்றுதான் சொல்லுகிறீகள்.

வரும் ஆனால் வராதா?

பிரிஞ்சு போய் தேர்தல் கட்டுப்பணமும் செலுத்தியபின் இதை சொல்லி பயன் இல்லை.

பிரச்சனை வரும்போதே இதுகளை உள்ளுக்குள்ளேயே இருந்து செய்திருக்கலாம்.

அதிகமான உறுப்பினர்களை சேர்த்தால் சம்பந்தரை வெளியேற்றி இருக்கலாம்.

இப்ப இதை சொல்வது எனக்கு இன்னுமொன்று நினைவுக்கு வருது.

கருணா பிரிந்து போய் இரு இடத்தில சொன்னவன் புட்டரை விளக்கினால் திரும்பவும் வந்து இணையத் தயாரெண்டு.

சம்பந்தரும் உங்களை வாங்கோ என்றுதான் சொல்லுகிறார் நீங்களும் வருவம் என்றுதான் சொல்லுகிறீகள்.

வரும் ஆனால் வராதா?

தேர்தலென்று இருப்பதையும் இழந்து நிற்கும்போது புத்தி தெளியும்.

தமிழினம் பிரிந்து நிற்பதற்கு இதுவொரு காரணம் சொல்லும் நிகழ்ச்சி. கஜேந்திரன் அணியினரால்தான் இன்று தமிழினம் பிரிந்து நிற்கிறது.

மேற் கூறப்பட்ட மூவர் அகற்றப்பட்டால் தாங்கள் சேர்ந்து இயங்குவதற்குத் தயார் என்கிறார்களே, அப்படியென்றால் அங்கிருக்கும் மீதமானோர் எதன் அடிப்படையில் கூட்டமைப்பில் இணைந்திருக்கிறார்கள்.

கஜேந்திரனின் தேவை, கூட்டமைப்பின் தலைமையை எதிர்ப்பது. கூட்மைப்பை எதிர்ப்பதல்ல. அதை உள்ளிருந்தே செய்திருக்கலாமே. இப்படித் தெருவுக்கு வரத் தேவையில்லையே. இதுவரை திருமலையில் தமிழர்கள் தமக்குள்ளே இவ்வாறு முரண்பட்டதேயில்லை. அதைச் செய்த பெருமை கஜேந்திரன் அணியினையே சாரும்.

மிகச் சரி....கருணா பிரிந்த போது சிங்களவன் வெடி கொழுத்தினான்..அப்போது ஏற்பட்ட மனவலி இவர்கள் பிரிந்த போதும்....என்னத்த சொல்ல...தமிழர்களின் டீ.எம்.ஏ

கருணாவையும் கயேந்திரனையும் இணைத்து உங்கள் சம்பந்தவிசுவாசத்திற்கு தீணி போடுகின்றீர்கள் இது தான் உங்கள் மூவரையும் காட்டிக் கொடுக்கின்றது

கருணாவை அரவணைத்துச் செல்லவே தேசியத் தலைவரும் முற்பட்டார் ஆனால் சம்பந்தர் என்றவர் யாரையும் அரவணைத்துச் செல்ல முற்படவில்லை அவர் புலம் பெயர்ந்தவர்களையும் நா.க. அரசையும் கூட இறுமாப்புடன் எதிர்க்கின்றார்

புலிகளை பொடிப்பயலுகள் என்று கிண்டல் அடித்த கூட்டம் தான் இப்போ சம்பந்தர் கூட்டத்தில்

அமிர்தலிங்கம் ,ஆனந்த சங்கரி , அந்த வருசையில் சம்பந்தர் பயணிக்கின்றார்

கருணாவையும் கயேந்திரனையும் இணைத்து உங்கள் சம்பந்தவிசுவாசத்திற்கு தீணி போடுகின்றீர்கள் இது தான் உங்கள் மூவரையும் காட்டிக் கொடுக்கின்றது

கருணாவை அரவணைத்துச் செல்லவே தேசியத் தலைவரும் முற்பட்டார் ஆனால் சம்பந்தர் என்றவர் யாரையும் அரவணைத்துச் செல்ல முற்படவில்லை அவர் புலம் பெயர்ந்தவர்களையும் நா.க. அரசையும் கூட இறுமாப்புடன் எதிர்க்கின்றார்

புலிகளை பொடிப்பயலுகள் என்று கிண்டல் அடித்த கூட்டம் தான் இப்போ சம்பந்தர் கூட்டத்தில்

அமிர்தலிங்கம் ,ஆனந்த சங்கரி , அந்த வருசையில் சம்பந்தர் பயணிக்கின்றார்

அப்போ... அந்த மூன்று பேருக்கும் ஒரு துரோகிப்பட்டம் கொடுக்க வேண்டியதுதானே?

கஜேந்திரகுமார் === கருணா

கருணா

1. தலைமை சரி இல்லை என பிரிர்த்தார்,

2. பிரிந்து வந்து தான் முதல் இருந்த இடத்தை பற்றி தப்பாக கதைத்தார்,

3. காட்டி கொடுத்தார்

4. எதிரியுடன் சேர்ந்து பகையாளி ஆனார்.

கஜேந்திரகுமார்

1. தலைமை சரி இல்லை என பிரிர்த்தார்,

2. பிரிந்து வந்து தான் முதல் இருந்த இடத்தை பற்றி தப்பாக கதைத்தார்,

3. காட்டி கொடுத்தார்

4. எதிரியுடன் சேர்ந்து பகையாளி ஆனார்.

Edited by நாய்க்குட்டிடி

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு எதற்காக உருவாகியது?

யாரால் உருவாக்கப்பட்டது?

கூட்டமைப்பு எப்படி உடைந்தது?யாரால் உடைந்தது?

எல்லாம் தெரிந்த விடயங்கள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி எப்படி உருவாகியது?

ஏன் உருவாகியது?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் கஜேந்திரகுமார் ஒரு அங்கமே.

யாரையும் யாருடனும் ஒப்பீடு செய்பவர்கள் யாருக்கோ துதிபாடுபவர்களே.

வாத்தியார்

.............

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் === கருணா

கருணா

1. தலைமை சரி இல்லை என பிரிர்த்தார்,

2. பிரிந்து வந்து தான் முதல் இருந்த இடத்தை பற்றி தப்பாக கதைத்தார்,

3. காட்டி கொடுத்தார்

4. எதிரியுடன் சேர்ந்து பகையாளி ஆனார்.

கஜேந்திரகுமார்

1. தலைமை சரி இல்லை என பிரிர்த்தார்,

2. பிரிந்து வந்து தான் முதல் இருந்த இடத்தை பற்றி தப்பாக கதைத்தார்,

3. காட்டி கொடுத்தார்

4. எதிரியுடன் சேர்ந்து பகையாளி ஆனார்.

கருணா நீல நிற சேட்டு போட்டார்............

கஜந்திரனும் நீல நிற சேட்டை போட்டார்..............

என்பதை நீங்கள் வேண்டுமென்றே மறைக்கின்றீர்கள்போல் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா நீல நிற சேட்டு போட்டார்............

கஜந்திரனும் நீல நிற சேட்டை போட்டார்..............

என்பதை நீங்கள் வேண்டுமென்றே மறைக்கின்றீர்கள்போல் உள்ளது.

கருணா நீல நிற ஜட்டி போட்டதை ஏன் நீங்கள் மறைத்தீர்கள் எனது கடுமையான கண்டனங்கள் :rolleyes::unsure::D

கஜேந்திரகுமார் === கருணா

கருணா

1. தலைமை சரி இல்லை என பிரிர்த்தார்,

2. பிரிந்து வந்து தான் முதல் இருந்த இடத்தை பற்றி தப்பாக கதைத்தார்,

3. காட்டி கொடுத்தார்

4. எதிரியுடன் சேர்ந்து பகையாளி ஆனார்.

கஜேந்திரகுமார்

1. தலைமை சரி இல்லை என பிரிர்த்தார்,

2. பிரிந்து வந்து தான் முதல் இருந்த இடத்தை பற்றி தப்பாக கதைத்தார்,

3. காட்டி கொடுத்தார்

4. எதிரியுடன் சேர்ந்து பகையாளி ஆனார்.

கஜேந்திரகுமார் யாரை எங்கே யாருக்கு காட்டி கொடுத்தார், எதை காட்டி கொடுத்தார்,

யார் எதிரி யாருக்கு் எதிரி யாருடன் சேர்ந்தார்.

இங்கே கருத்து கூற அனைவருக்கும் உரிமையுண்டு ஆனால் பொய் சொல்ல கூடாது. ^_^

அப்போ... அந்த மூன்று பேருக்கும் ஒரு துரோகிப்பட்டம் கொடுக்க வேண்டியதுதானே?

இப்போது இந்தப்பட்டம் யாருக்கும் கொடுக்கவேண்டியதில்லை அவர்களே அணிந்து கொள்ளும் போது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.