Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரதராஜ பெருமாள் கொழும்பிற்கு வந்து சேர்ந்தார், நாளை யாழிற்கு

Featured Replies

வரதராஜ பெருமாள் கொழும்பிற்கு வந்து சேர்ந்தார், நாளை யாழிற்கு

யாழ் நிருபர்

திங்கட்கிழமை, மார்ச் 29, 2010

varathar

வடக்கு கிழக்கு மகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சின் தலைவருமான அ.வரதராஜப்பெருமாள் நேற்றுப் பிற்பகல் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். இந்தியாவில் பல வருடங்களாகத் தங்கியிருந்த அவர், தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக நாடுதிரும்பியுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்துக்கு ஓரிரு தினங்களில் வரவுள்ள அவர், தேர்தல் பிரசாரக் கூட்டங் களிலும், கருத்தரங்குகளிலும் உரையாற் றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மகாண சபையின் முதலாவது முதலமைச்சர் பதவியை ஏற்றிருந்த அவர், தனிநாடு பிரகடனம் செய்ததை அடுத்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் ஆரம்பத்தில் ஒரிசாவில் தங்கியிருந்தார். பின்னர் இந்திய அரசின் அனுசரணையுடன் புதுடில்லியில் நீண்ட காலம் தங்கியிருந்தார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை திரும்பிய ஈபிஆர்எல்எப் தலைவர் வரதராஜ பெருமாள்!

கொழும்பு: இந்தியாவி்ல் தஞ்சமடைந்து மத்திய உளவுப் பிரிவுகளி்ன் பாதுகாப்போடு வாழ்ந்து வந்த இலங்கை [^]யின் வட-கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் இலங்கை திரும்பியுள்ளார்.

1990ம் ஆண்டு மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியின் உதவியோடும், இந்திய அமைதி காக்கும் படையின் பாதுகாப்போடும் வட-கிழக்கு மாகாண முதல்வராக நியமிக்கப்பட்டவர் வரதராஜ பெருமாள்.

இலங்கையில் தனி ஈழம் வேண்டி ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய பல குழுக்களின் தலைவர் [^]களில் ஒருவரான இவர், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை நடத்தி வந்தார்.

ஆனால், விடுதலைப் புலிகளின் கை ஓங்கியதால் வரதராஜ பெருமாளும் அவரது ஆதரவாளர்களும் புலிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.

1989ம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை என்ற இலங்கை சென்று புலிகளை ஒடுக்க முயன்றபோது அவர்களுடன் கைகோர்த்தார் வரதராஜ பெருமாள்.

இதையடுத்து அவரை வட-கிழக்கு மாகாண முதல்வராக்கினார் ராஜிவ் காந்தி. 1988ம் ஆண்டு டிசம்பர் முதல் 1990ம் ஆண்டு மார்ச் வரை இவர் 'பொம்மை' முதல்வராக இருந்தார்.

ஆனால், 1990ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் படை நாடு திரும்பியபோது வரதராஜ பெருமாள் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

ரா-ஐ.பி பாதுகாப்புடன் இந்தியாவில் ரகசிய இடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டார். சில காலம் டெல்லியிலும் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓரிடத்திலும் பலத்த பாதுகாப்புடன் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

2000ம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்ற இவர் சந்திரிகா குமாரதுங்காவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆனால், அந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றதால் மீண்டும் தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் மீண்டும் இந்தியாவுக்கே வந்துவிட்டார்.

இப்போத விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் தனது மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் இலங்கை திரும்பியுள்ளார்.

நேற்று இந்த ரகசிய பயணத்தை அவர் மேற்கொண்டார். இலங்கையில் தமிழர் பகுதிகளில் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட வரதராஜ பெருமாள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பெருமாளின் கட்சி வரும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

thatstamil.com

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்; அண்ணை வாங்கோ

தட்டிக்கேட்க ஆளில்லை

சேவைபுரிவதில் தங்களுக்கு தடையில்லை

தங்களது சேவை எமக்கு தேவைப்படுகிறது

ஆனால் அண்ணை எதையாவது அறிவித்துப்போட்டு ஓடும் நோக்கமில்லைத்தானே...

  • கருத்துக்கள உறவுகள்

.

ஏற்கெனவே........ டக்ளஸ் கும்பலால் கொலை, கொள்ளை என்று தமிழ் மக்கள் முழி பிதுங்கி நிக்கிற நேரம் புதுக்கூட்டாளி வாறார்.

எல்லா தமிழ் மக்களும் கவனமா இருங்கோ.......

.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்விரோத தேசமாம் இந்தியாவின் கைக்கூலியும், முனனைநாள் தமிழர் இனஅழிப்புக் குழுவான, மண்டையன் குழுவினது கட்டளைத்தளபதியுமாகிய, வரதராஜா என தலைப்பை மாத்தி எழுதுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை ஆண்ட முதலமைச்சர் புதிதாக என்ன தொழில் பார்க்கப் போகின்றார்?

தமிழீழத்தை ஆண்ட முதலமைச்சர் புதிதாக என்ன தொழில் பார்க்கப் போகின்றார்?

தமிழரையும் சிங்களவரையும் சமத்துவமாக வாழ வைக்கும் தொழில் செய்யப்போகிறார்.. :wub:

உங்கட குஞ்சியப்பருக்கு கோவணம் கட்டகூட சிங்களவன் அனுமதி தன் பின் தன் கட்ட வேண்டும்.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

ஏற்கெனவே........ டக்ளஸ் கும்பலால் கொலை, கொள்ளை என்று தமிழ் மக்கள் முழி பிதுங்கி நிக்கிற நேரம் புதுக்கூட்டாளி வாறார்.

எல்லா தமிழ் மக்களும் கவனமா இருங்கோ.......

.

இவரும் .கருணா ....பிள்ளையான் ...டக்கிலஸ் போன்று ஒட்டுகுழு லிஸ்ட்டில் இருப்பாரா அல்லது மகிந்தவுடன் ஐக்கிய முன்னணியுடன் ஐக்கியமாகி விடுவாரா ?

இனிக் கோழித் திருட்டுக்குப் பஞ்சமில்லை. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் .கருணா ....பிள்ளையான் ...டக்கிலஸ் போன்று ஒட்டுகுழு லிஸ்ட்டில் இருப்பாரா அல்லது மகிந்தவுடன் ஐக்கிய முன்னணியுடன் ஐக்கியமாகி விடுவாரா ?

இவர், றோ ஸ்கூலில் பல காலம் படித்து விட்டு வந்த படியால், உள்ளூர் கட்டாக்காலிகளுடன் இணைந்து செயற்படுவாரோ தெரியவில்லை.

நிச்சயம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுவார். இந்தியாவின் விருப்பப்படி தமிழ் கூட்டமைப்பை சம்பந்தர் ஐயா பிரித்து விட்ட படியால்...... சம்பந்தர் ஐயா இனி இந்தியாவுக்கு தேவை இல்லை. பெருமாளே இனி மிச்ச எல்லா காரியத்தையும் செய்து முடிப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.