Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் போன்று செயற்பட சிலர் இப்போதும் முயற்சி 30 வருடங்கள் அனுபவித்த வேதனைகள் தமிழர்களுக்கு இனியும் தேவை தானா?ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் போன்று செயற்பட சிலர் இப்போதும் முயற்சி 30 வருடங்கள் அனுபவித்த வேதனைகள் தமிழர்களுக்கு இனியும் தேவை தானா? யாழ்.தேர்தல் கூட்டத்தில் ஜ

2010-04-02 07:11:39

விடுதலைப் புலிகளைப்போன்று செயற்படுவதற்குச் சிலர் இப்போது முயன்று வருகின்றனர். எனவே, தமிழ்மக்களாகிய நீங்கள் புத்திசாதுரியத்துடன் நடந்துகொள்ளவேண்டும். 30 வருட காலமாக நீங்கள் அனுபவித்து வந்த வேதனைகள் இனியும் தேவை யா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

யாழ்ப்பாணம், ஏப்ரல் 02

விடுதலைப் புலிகளைப்போன்று செயற்படுவதற்குச் சிலர் இப்போது முயன்று வருகின்றனர். எனவே, தமிழ்மக்களாகிய நீங்கள் புத்திசாதுரியத்துடன் நடந்துகொள்ளவேண்டும். 30 வருட காலமாக நீங்கள் அனுபவித்து வந்த வேதனைகள் இனியும் தேவை யா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பொதுமக்கள் முன் னிலையில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முற்பகல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

இந்தக் கூட்டத்தில் இறுதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். முதலில் சில வரிகளை சிங்களத்தில் பேசிய அவர் பின்னர் தமது உரையைத் தமிழில் தொடர்ந்தார்.

அவர் தமதுரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:

30 ஆண்டுகளாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உங்களுக்கு உரிமையைப் பெற்றுத் தருவதே எனது குறிக்கோள். இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நீரைக் கொண்டு வருவதற்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்மூலம் இங்குள்ள மக்களின் விவசாய, குடிதண்ணீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படும். யாழ்ப்பாண மக்கள் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது. வடக்கு, கிழக்கு, தெற்கு எல்லாம் எனக்கு ஒன்றுதான். நான் எல்லா மக்களையும் ஒன்றாகவே நோக்குகின்றேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் எனக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி.

குறுகிய அரசியல் பேதம் வேண்டாம்

30 வருட பயங்கரவாதம் இப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது எவரும் பயப்படத் தேவையில்லை. கடற்றொழில், விவசாயம் போன்றவற்றில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்போது அனைத்து மக்களும் எங்கும் போகலாம். வரலாம். நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம் என்ற இன வேறுபாடு இப்போது இல்லை. குறுகிய அரசியல் பேதங்கள் இனிமேல் வேண்டாம்.

மக்களாகிய உங்களின் தேவைகளை மக்கள் சபை மூலம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பல வருடங்களாக இல்லாத அபிவிருத்தி இப்போது இடம்பெறுகின்றது. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வசதிகள் அதிகரித்து வருகின்றன.இன்று(நேற்று) வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களில் 164 பேர் விடுதலை செய்யப்படுகின்றார்கள். அவர்கள் தமது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். வெகு விரைவில் ஏனையவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். அத்துடன் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து 148 பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள். புனர்வாழ்வு முகாம்களில் உள்ள இளைஞர்களின் கணனிப்பயிற்சிக்காக வவுனியா, பம்பைமடுவில் ஒரு பயிற்சி நிலையம் அமைக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழகம் விரைவில் முழுமைபெறவுள்ளது. அங்கு விரைவில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. சர்வதேச ரீதியில் தமிழ் பிள்ளைகள் நல்ல பெயர் பெற வேண்டும். யாழ்தேவி மீண்டும் வரும். ஏ 9 வீதியால் எவரும் போகலாம், வரலாம். ஆசியாவிலேயே சிறந்த நூலகம் யாழ். பொதுநூலகம். அதனை ஐக்கிய தேசியக் கட்சி எரித்தது. அது எதிர்காலச் சந்ததிக்குச் செய்த பெரிய பாவம். அநியாயம். எனவே மக்களாகிய நீங்கள் எம்மோடு இணையுங்கள். இனவாத அரசியல் வேண்டாம். குறுகிய எண்ணங்கள் வேண்டாம். ஆசியாவின் கேந்திர நிலையமாக எமது நாட்டை மாற்றுவோம் என்றார்.

இந்த நிகழ்வின்போது, மீளக் குடியமர்ந்த மக்களுக்கு இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகளின் திறப்புகளையும் ஜனாதிபதி வீட்டு உரிமையாளர்களிடம் வழங்கினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமதுரையில் தெரிவித்தவை வருமாறு:

இணக்க அரசியலின் அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு இணைந்து செயற்பட ஏனைய தமிழ்த் தலைவர்கள் தயாராக இருந்தால், அவர்களுடன் இணைந்து செயற்பட நானும் தயாராக உள்ளேன். எனினும் ஏனைய தமிழ்த் தலைமைகள் தமது சுய இலாபங்களுக்காக அவ்வாறு செயற்பட முன்வரமாட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் விரைவில் மூன்று ஆடைத் தொழிற்சாலைகளை அமைத்து சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி இங்கு வந்துள்ள முதலீட்டுச் சபையின் தலைவருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதற்குத் தயார் என்றும் தெரிவித்துள்ளார் என்றார்.

முன்னதாக நேற்றுக்காலை 10.45 மணியளவில் பலாலி படைத்தளத்தில் இருந்து ஹெலி மூலம் யாழ். கல்வி வளாகத்துக்கு அருகில் உள்ள மைதானத்தில் வந்திறங்கிய ஜனாதிபதி அங்கிருந்து நல்லூர் ஆலயத்துக்குச் சென்று விசேட பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதன் பின்னர் யாழ்.நாகவிகாரைக்குச் சென்று அவர் வழிபட்டார். பின்பு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் வவுனியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.(அ50)

நன்றி - உதயன் இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மக்களுக்கு என்ன சொல்ல வாறார் என்று புரியமுடியவில்லை

புலிகள் சரியில்லை என்கிறார்

உடனேயே அவர்களை உங்களுக்கு விடுதலை செய்து தருகிறேன் என்கிறார்

30வருடம் அனுபவித்தது போதுமா இல்லை தொடர்ந்து அனுபவிக்கப்போறீர்களா என்றும் மிரட்டுகிறார்

புரிந்தாக்கள் கனபேர் இருக்கினம் இங்க ஒருக்கா வந்து கொஞ்சம் விழக்கமாக சொன்னால்தான் இந்த மரமண்டைக்கு புரியும்

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும்.....

விடுதலைப் புலிகள் போன்று செயற்பட சிலர் இப்போதும் முயற்சி 30 வருடங்கள் அனுபவித்த வேனைகள் தமிழர்களுக்கு இனியும் தேவை தானா?

மஹிந்த செய்ய தேவையில்லை இப்போது வன்னியில் வசிக்கும் மக்களே இப்படியானவர்களுக்கு ஒட்ட நறுக்கி அனுப்புவார்கள். :(:(:D:D

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த செய்ய தேவையில்லை இப்போது வன்னியில் வசிக்கும் மக்களே இப்படியானவர்களுக்கு ஒட்ட நறுக்கி அனுப்புவார்கள். :(:(:D:D

மகிந்த நல்ல ஆள் என்கிறீங்க. என்னே தேச பக்தி.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த நல்ல ஆள் என்கிறீங்க. என்னே தேச பக்தி.

அவரின் தேச பக்தியைத்தான் 'மாவீரர் வணக்கம்' என்று போட்டுக் காட்டுகின்றாரே... அவரின் இலங்கை உல்லாச பயணத்துறைக்கான விளம்பர இணைப்பு எங்க போயிட்டுதோ தெரியவில்லை.. ஒரு வேளை யாழ் நிருவாகம் தூக்கிட்டுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த செய்ய தேவையில்லை இப்போது வன்னியில் வசிக்கும் மக்களே இப்படியானவர்களுக்கு ஒட்ட நறுக்கி அனுப்புவார்கள். :(:(:D:D

வன்னி என்று சொல்வது முல்லைதீவு கிளிநொச்சி மன்னார் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு நிலபரப்பு. அதைதான் இங்கே வன்னி என்று கதைக்கிறார்கள்.

சிறிதர் திரையரங்கு என்பது ஒரு சிறிய கிணறு. புலிபயம் இப்ப கொஞ்சம் என்றாலும் குறைந்திருக்கலாம் இனி என்றாலும் தவளைகள் கிணற்றுக்குள் இருந்து எட்டிபார்க்கலாமே? ஆனால் தவளைகளுக்கு உள்ளதை வைத்துதானே வெளியில் தெரிவதையும் கிரகிக்க முடியும்?

நீங்கள் சொல்வதும் சரிதான்.......

வன்னியில் இப்போது அந்த நிலமையில்லை. ஆனால் உங்களுடைய பயண கட்டுரை பாதியிலேயே நிற்குது?

வெள்ளவத்தை பொலிஸ்காரர்கள் தமிழர்களுடன் பகிடிவிட்டு அன்போடு பழகுவதொடு நிற்கின்றது......... வவுனியா ஆமிகாரர் கிளுக்குண்டுவதையும் வாரிச்சு தொடர்ந்தால் நல்லாய் இருக்கும்?

நீங்கள் பேய் அறைந்த மாதிரி அங்கே ஆமி , பொலிசுக்கு முன் போய் நிற்பதாலேயோ என்னவோ அவர்கள் உங்களை கண்டு பயப்படுவதால் தான் கலைத்து கலைத்து பிடிக்கின்றனர் என்று நினைகின்றேன். எமது தமிழர்கள் பலர் சிங்கள மக்கள் மத்தியில் மொழி தெரியாததால் பேயறந்த மாதிரி முளிக்கின்றதை பார்க்ககூடியதாக இருந்தது. தாங்கள் என்ன யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு ஊடாக வெளிநாடு வரும் வரை எலிமாதிரி பதுங்கி பதுங்கி வரவேண்டியது பின் வெளிநாடு வந்ததும் புலிகளாம் :D:D:D:D:D விட்டால் உங்களுக்கு வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் அடுக்கு மாடிகளுக்குள்ளேயே புரட்சி வெடிக்கின்றது என்று கதை அளப்பீர்கள். :(:(:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் பேய் அறைந்த மாதிரி அங்கே ஆமி , பொலிசுக்கு முன் போய் நிற்பதாலேயோ என்னவோ அவர்கள் உங்களை கண்டு பயப்படுவதால் தான் கலைத்து கலைத்து பிடிக்கின்றனர் என்று நினைகின்றேன். எமது தமிழர்கள் பலர் சிங்கள மக்கள் மத்தியில் மொழி தெரியாததால் பேயறந்த மாதிரி முளிக்கின்றதை பார்க்ககூடியதாக இருந்தது. தாங்கள் என்ன யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு ஊடாக வெளிநாடு வரும் வரை எலிமாதிரி பதுங்கி பதுங்கி வரவேண்டியது பின் வெளிநாடு வந்ததும் புலிகளாம் :D:D:D:D:D விட்டால் உங்களுக்கு வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் அடுக்கு மாடிகளுக்குள்ளேயே புரட்சி வெடிக்கின்றது என்று கதை அளப்பீர்கள். :(:(:D

ஐயா தாங்களும் சிற்றிசன் எடுக்கிறததுக்கு புலிப்பெயர் தான் தேவைப்பட்டுதோ என்னவோ?

அங்கை எல்லாம் முடிஞ்சுதேல்லே அதுதான் உங்கடை பாசையிலை அவங்கள் இப்ப இல்லை

பாயை சுருட்டிக்கொண்டு போக வேண்டியது தானே?

உங்கடை அவன் மாலையோடை நெஞ்சை நிமித்திக்கொண்டு நிக்கிறான் :D

ஐயா தாங்களும் சிற்றிசன் எடுக்கிறததுக்கு புலிப்பெயர் தான் தேவைப்பட்டுதோ என்னவோ?

அங்கை எல்லாம் முடிஞ்சுதேல்லே அதுதான் உங்கடை பாசையிலை அவங்கள் இப்ப இல்லை

பாயை சுருட்டிக்கொண்டு போக வேண்டியது தானே?

உங்கடை அவன் மாலையோடை நெஞ்சை நிமித்திக்கொண்டு நிக்கிறான் :)

அது சரி தான் கு சா அண்ணை அங்கு யார் Arbeitslos காசும், harts iv (Sozialhilfe) உதவியையும் தருவது. எங்களுக்கு முதுகு வழைத்து உழைத்து பழக்கமில்லை. எதையும் சாட்டி வேலைக்கு போகாமல் கள்ளம் படுத்திகொண்டு அரசாங்க உதவிப்பணத்தில் வாழ்ந்து தான் பழக்கம். அங்கே போனால் என்ன செய்வது?

Edited by விடிவெள்ளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி தான் கு சா அண்ணை அங்கு யார் Arbeitslos காசும், harts iv (Sozialhilfe) உதவியையும் தருவது. எங்களுக்கு முதுகு வழைத்து உழைத்து பழக்கமில்லை. எதையும் சாட்டி வேலைக்கு போகாமல் கள்ளம் படுத்திகொண்டு அரசாங்க உதவிப்பணத்தில் வாழ்ந்து தான் பழக்கம். அங்கே போனால் என்ன செய்வது?

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் எண்டுறியள்? :)

உவர் மகிந்தர் என்ன கதைக்கிறார்... இஞ்சை பிறன்சில இருந்து பிறிகேடியர் ஈழச்சந்திரன் தலைமையிலும், நோர்வயில இருந்து நெற்சந்திரர் தலைமையிலும் டென்மார்கில இருந்து கொமாண்டர் புஞ்சு தலைமையிலும் படையணி போகப்போகுது.... மகிந்தருக்கு இருக்கு விளையாட்டு.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.