Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு. அப்துல் ஹமீது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரு. அப்துல் ஹமீது

sivaji.jpg

இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் என்று சொல்லும் போது, திரு. அப்துல் ஹமீது அவர்களின் பெயர் ஞாபகத்திற்கு வராதவர்கள் மிகவும் சொற்பம் என்று கூறலாம். தனது காந்தக் குரலினால் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமின்றிப் பிற பல தமிழர்கள் வாழும் நாடுகளிலும் எண்ணிலா ரசிகர்களைக் கவர்ந்தவர் திரு அப்துல் ஹமீது. வானொலி மட்டுமல்ல, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதுடன், பல்வேறு தமிழ் மேடை நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகப் பல நாடுகளுக்கும் சென்று ஈடில்லாப் புகழ் ஈட்டிக்கொண்டிருப்பவர். கடந்த வருடம் லண்டனில் இவரது ஒலிபரப்புத் துறையின் பொன்விழா நடைபெற்றது.

நிலாச்சாரல் வாசகர்களுக்காகத் திரு. அப்துல் ஹமீது வழங்கிய சிறப்புப் பேட்டி:

இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தில், தமிழ் ஒலிபரப்புத் துறையில் ஒரு அழுத்தமான பாணியை உருவாக்கிய உங்களின் பார்வையில் தற்போதைய தொலைக்காட்சித் தொகுப்பு எப்படி உள்ளது?

தொலைக்காட்சித் தொகுப்பு எனபது நான் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்றல்ல. காலப்போக்கில் இந்தத் துறைக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இலங்கையில் தொலைக்காட்சி வந்த போது முதல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. நீண்ட கால இடைவேளைக்குப் பின், நான் இலங்கை வானொலியில் நடத்திய "பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சி இந்தியாவில் நடத்தப்பட்ட போது, அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாள்ர் ரமேஷ் பிரபா, அதை இலங்கை வானொலியில் தொகுத்து வழங்கிய நானே தொலைக்காட்சியிலும் நடத்தினால் நன்றாயிருக்கும் என்று கருதியதால் இந்தியத் தொலைக்காட்சியில் அதைத் தொகுத்து வழங்கினேன். வானொலியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தும் போது, நான் யாவருக்குமே கூறுவதுண்டு, பல இலட்சக்கணக்கான நேயர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணாமல், ஒரேயொரு நண்பருடன் உறவாடுவது போல, பேசினால் அங்கே ஒரு ஆத்மார்த்தம் இருக்கும். இந்த அனுபவமும், நேயர்களின் முன்னால் பல மேடை நிகழ்ச்சிகளை நடத்திய முன் அனுபவமும் இருந்ததால், எனக்கு இது ஒரு இனிய அனுபவமாகவே இருந்தது.

இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

இப்பொழுது ஒரு நாடோடியாகப் பல நாடுகளுக்கும் சென்று என் மண்ணின் மைந்தர்கள் மற்றும் பொதுவாக அனைத்துத் தமிழர்களின் வெளிநாட்டு வாழ்க்கைச் சூழல்களை அறிந்து கொள்வதோடு, மற்றைய நாடுகளைப் பற்றிய என் பொது அறிவையும் வளர்த்து வருகிறேன்.

பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் பல திரைகானங்களை நினைவில் வைத்திருப்பீர்களே? அதற்காக ஏதாவது சிறப்புப் பயிற்சி செய்வீர்களா?

பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி தான் அப்துல் ஹமீதின் முத்திரை நிகழ்ச்சி என்பதை நான் ஏற்றுக்கொள்ளத் தயங்குவேன். ஏனெனில் இது எனது ஒலிபரப்புத் துறையில் ஒரு சிறு பகுதியே. ஆனால் இது 28, 30 வருடகாலம் தொடர்ந்து நடைபெறுவது. மேலும் எப்போதோ எங்கோ கேட்கும் பாடல்கள், ஒலிகள் எமது மூளையில் ஓரிடத்தில் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன, மற்றொருவர் இதைப் பாடும் போது அது ஞாபகத்திற்கு வந்து விடுகிறது. இதைத் தவிர ஒரு விசேடப் பயிற்சியும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

உங்களுக்குச் சவாலாக அமைந்த வானொலி அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சி எது?

எல்லாமே சவாலாக அமைந்தவை தான். நான் முதலாவதாகப் பங்குபெற்ற சிறுவர் மலர் நிகழ்ச்சியில் இருந்து இன்று வரை எல்லாமே சவாலாகத் தான் அமைந்தன. நண்பன் ஒருவனுடன் கூடச் சென்றிருந்த சமயம், வானொலி நாடகத்தில் பங்கேற்கும் சிறுவன் ஒருவன் வராத காரணத்தினால் யதேச்சையாக நான் வானொலி முன்னால் நிறுத்தப்பட்டேன் சிறுவர் மலர் நிகழ்ச்சிக்காக., அன்றிலிருந்து இன்று வரை அனைத்தையும் சவாலாகவே எடுத்துச் செய்கின்றேன். இதைத் தவிர நான் ஒரு ஒலிபரப்புப் பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவனல்ல.

ஒலி, ஒளி பரப்புத் துறையில் ஈடுபட விரும்பும் ஒருவர் எத்தகைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்?

தாங்கள் பல்கலைக்கழகத்தில் கற்கும் ஒரு மாணவர் என்னும் எண்ணம் இருந்தாலே போதுமானது. சம்பவங்களை, புள்ளி விவரங்களைச் சேகரித்து வைத்துக் கொள்ளும், எதையும் கிரகித்துக் கொள்ளும் மனப்பான்மை இருந்தால் போதுமானது.

இது பல முறை உங்களிடம் கேட்கப்பட்ட கேள்வி , இருந்தாலும் திரும்பவும் கேட்கிறேன். "தெனாலி" திரைப்படத்தில் கமல்ஹாசன் அவர்களுக்கு யதார்த்தமான யாழ்ப்பாணத் தமிழ் அன்றி நாடகத் தமிழைக் கற்றுக் கொடுத்து விட்டீர்கள் எனும் ஒரு சாராரின் குற்றச்சாட்டு பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?

ஆமாம் இது பல முறை கேட்கப்பட்டது தான். யாழ்ப்பாணத் தமிழ் என்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்து நாடகங்களிலேயே சிறிது மிகைப்படுத்தப்பட்டுத் தான் இருந்தது. யதார்த்தம் என்று பார்க்கும் போது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ், பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபட்டிருக்கிறது. தெனாலி படத்தின் கதாபாத்திரம் யாழ்ப்பாணத்துத் தமிழ் பேசியிருக்கவேயில்லை. ஆனால் நண்பர் திரு. கமல்ஹாசன் யாழ்ப்பாணத் தமிழின் இனிமையை ரசித்து அதை நிச்சயம் தான் உபயோகிக்க வேண்டும் என ஆசைப்பட்டு என்னிடம் உதவி கோரினார். அவரிடம் நான் சில யாழ்ப்பாணத்து நாடகங்களின் கேசட் கொடுத்தேன், நானே திகைக்கும் அளவிற்கு ஒரு மாலைக்குள் அதை நன்கு சரளமாக பேசப் பழகிக்கொண்டு விட்டார். அதில் சில காட்சிகளைப் படமாக்கிய போது, அதன் தயாரிப்பாளர் கே.எஸ். ரவிக்குமார், என்னிடம் வந்து, இந்திய ரசிகர்களுக்கும் கொஞ்சம் புரியக்கூடிய வகையில் பேச்சு அமைந்திருந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் படம் வெற்றி பெற முடியும் என வேண்டினார். அதன் பின்பு அந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்திற்கேற்ப,பல வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்த,ஒரு யுத்தச்சூழலின் மூலம் இடம் பெயர்ந்த யாழ்ப்பாண இளைஞனின் வகையில் பேச்சை மாற்றியமைத்தோம். அது ஒரு நகைச்சுவைப் படம். படத்தில் ஒரு யாழ்ப்பாண மண்ணின் மைந்தனின் வாழ்வில் நடந்த ஒரு சோகம் தொட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. இதுதான் யதார்த்தம்.

ஒலிபரப்புத் துறையில் பயிற்சியளிக்குமுகமாக நீங்கள் உங்கள் இணையத் தளம் மூலமாக முயற்சி செய்வதாகக் கேள்விப்படுகிறோம். அது பற்றிக் கொஞ்சம் கூறுவீர்களா?

அது மட்டுமல்ல. வானொலி மூலமாக உலகத் தமிழ் மக்களை ஒன்றிணைக்க விரும்பினேன். அது வெறுங்கையால் முழம் போட்ட கதையாகத் தான் இருக்கிறது. எனது இணையத்தளம் மூலமாகப் பல வானொலிகளை ஒன்றிணைக்க விரும்பினேன். எனக்குத் தெரிந்த வானொலி மரபுகளை வளரும் தலைமுறைக்குத் தொட்டுக் காட்டவே விரும்பினேன். ஆனால் தற்போதைய வானொலிகளுக்கு அவ்வளவு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

தற்போது வானொலித் துறையில் ஏதாவது நிகழ்ச்சி ஒலிபரப்புச் செய்கிறீர்களா?

தாய்வீட்டை மறக்கக்கூடாது என்பதற்காக வானொலியில் தென்னிந்திய நிகழ்ச்சியாக ‘வெற்றிப்பாதை’ எனும் நிகழ்ச்சியையும், இலங்கையில் தனியார் வானொலியில் ‘கலைக்கதம்பம்’ எனும் ஓர் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறேன்.

வானொலிச் சேவையில் நன்கு அனுபவம் பெற்ற நீங்கள் ஏன் தனியாக ஒரு வானொலிச் சேவையைத் தொடங்கவில்லை?

அப்படியான நோக்கம் எனக்கு இதுவரை இல்லை. ஏனெனில் வானொலி தொடங்கும் நோக்கம் கொச்சைப்படுத்தப் பட்டிருப்பதால், ஒரு வகைப்படுத்தப்படாத சாம்பார் வகையான நிகழ்ச்சிகளாக இருப்பதால் என்று கூடச் சொல்லலாம்.

இலங்கைத் தமிழ் ஒலிபரப்பின் தந்தை என்று கூறப்படும் ஐயா சிவபாதசுந்தரம் பற்றிய உங்கள் அனுபவம் என்ன?

அவரை நான் நேரடியாகச் சந்தித்ததில்லை. நான் தமிழ் ஒலிபரப்புச் சேவையில் முழுமையாக ஈடுபட்ட போது முதல் முதலாக எடுத்து வாசித்த புத்தகம் திரு. சிவபாதசுந்தரம் அவர்களின் "ஒலிபரப்புக்கலை" எனும் புத்தகமே. அவர் மீது எனக்கு மிகுந்த அபிமானமும், மரியாதையும் உண்டு.

உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்ன?

பல உண்டு. முக்கியமாக நான் வானொலி நாடகமொன்றில் எனது தாயார் இறந்து அழுவது போன்ற காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது எனது உண்மைத் தாயார் இறந்தது தெரியாமல் நடித்தது. மற்றொன்று ‘83 இனக் கலவரத்தின் போது எமது வீடு எரியூட்டப்பட்ட போது நான் இறந்து விட்டதாக வந்த செய்தியின் மூன்றாம் நாள், எனது குரல் வானொலியில் ஒலித்த போது என்னைத் தேடி வந்த நேயர்களின் அன்புக் கடிதங்கள். இது மத வேறுபாடின்றி, நாடு வேறுபாடின்றி இருந்தது என் நெஞ்சைத் தொட்டது.

இறுதியாக, புலம்பெயர்ந்த உங்களது நேயர்கள், வானொலிகள், அபிமானிகள் அனைவருக்கும் உங்கள் செய்தி என்ன?

வானொலிகளுக்குக் கூறுவது “உங்களது பார்வை வருங்காலத் தலைமுறையை நாடி இருக்கட்டும். இளைய தலைமுறையை உங்களோடு இணைத்து கொள்ள வேண்டும்”. அனைத்து மக்களுக்கும் கூறிக்கொள்வது “உங்களது அடையாளம் மொழி ஒன்றே”, தயவு செய்து அதை இழந்து விடாதீர்கள்.

http://www.youtube.com/watch?v=OXOcE0kkr3Q

  • கருத்துக்கள உறவுகள்

தனது குரல் வளத்தால் எல்லோரையும் கவார்ந்த ஒரு சிறந்த கலைஞன் ..........பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

.

அப்துல் ஹமீத் இன்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்திருந்தால்..... முன்பு உள்ள புகழுடன், இன்றும் இருந்திருப்பாரா என்பது கேள்விக்குறியே.....

அவர் தமிழ்நாட்டுக்கு சென்றதன் மூலம், தொலைக்காட்சிகளிலும் தோன்றி தனது குரலை மேலும் உலகறியச் செய்துள்ளார்.

.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரு. அப்துல் ஹமீது

ஒலி, ஒளி பரப்புத் துறையில் ஈடுபட விரும்பும் ஒருவர் எத்தகைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்?

தாங்கள் பல்கலைக்கழகத்தில் கற்கும் ஒரு மாணவர் என்னும் எண்ணம் இருந்தாலே போதுமானது. சம்பவங்களை, புள்ளி விவரங்களைச் சேகரித்து வைத்துக் கொள்ளும், எதையும் கிரகித்துக் கொள்ளும் மனப்பான்மை இருந்தால் போதுமானது.

உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்ன?

பல உண்டு. முக்கியமாக நான் வானொலி நாடகமொன்றில் எனது தாயார் இறந்து அழுவது போன்ற காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது எனது உண்மைத் தாயார் இறந்தது தெரியாமல் நடித்தது. மற்றொன்று ‘83 இனக் கலவரத்தின் போது எமது வீடு எரியூட்டப்பட்ட போது நான் இறந்து விட்டதாக வந்த செய்தியின் மூன்றாம் நாள், எனது குரல் வானொலியில் ஒலித்த போது என்னைத் தேடி வந்த நேயர்களின் அன்புக் கடிதங்கள். இது மத வேறுபாடின்றி, நாடு வேறுபாடின்றி இருந்தது என் நெஞ்சைத் தொட்டது.

இறுதியாக, புலம்பெயர்ந்த உங்களது நேயர்கள், வானொலிகள், அபிமானிகள் அனைவருக்கும் உங்கள் செய்தி என்ன?

வானொலிகளுக்குக் கூறுவது “உங்களது பார்வை வருங்காலத் தலைமுறையை நாடி இருக்கட்டும். இளைய தலைமுறையை உங்களோடு இணைத்து கொள்ள வேண்டும்”. அனைத்து மக்களுக்கும் கூறிக்கொள்வது “உங்களது அடையாளம் மொழி ஒன்றே”, தயவு செய்து அதை இழந்து விடாதீர்கள்.

அவரது பெட்டியில் எனக்கு மிகவும் பிடித்தவை.

  • கருத்துக்கள உறவுகள்

அவரது பெட்டியில் எனக்கு மிகவும் பிடித்தவை.

என்ன பெட்டி? சூட்கேசா? :lol: :lol:

டங்க்ஸ், அவ பதிவு மேற்கோளை - Quote - பெட்டி என்று சொல்லி இருக்கிறா என்று நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரது பெட்டியில் எனக்கு மிகவும் பிடித்தவை.

என்ன பெட்டி? சூட்கேசா? :lol: :lol:

டங்க்ஸ், அவ பதிவு மேற்கோளை - Quote - பெட்டி என்று சொல்லி இருக்கிறா என்று நினைக்கிறன்.

அந்தப் பிள்ளை பேட்டியை தான் பெட்டி என்று வாய்தடுமாறிச் சொல்லிப் போட்டா போலை கிடக்குது.

ஓம் அவ பேட்டியைத்தான் பெட்டி என்று சொல்லி இருப்பா தமிழ்சிறீ. எனக்கும் ஆரம்பத்தில் அவ சொன்ன கருத்து விளங்க இல்லை, அதான் டங்குசின் கருத்துக்கு பின்னர் பதில் எழுதி இருந்தன்.

இப்போது தான் எழுதிப் பழகிறார் போல. எண்கள் கருத்துக்களையே திரும்ப வாசிக்கும் பொது பல பிழைகளைக் காணலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான பதிவு! எனக்கு மிகவும் பிடித்திருக்கு! :D:wub:

நன்றி நுணா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.