Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்வதி அம்மாள் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

ltte.piraba-parvathi-ammal200-150x150.jpg

பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி.

சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இத் தகவலை முதல்வர் கருணாநிதி இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார்.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும்போது அரசியல் கட்சியினரோ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கம்:

முன்னதாக பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தபோது விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, பாரிவதி அம்மாள் கோரிக்கை விடுத்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்கப்படும், அதன் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந் நிலையில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை பெற, மலேசியாவில் இருந்து திருச்சி வருவதற்கு, இந்தியத் தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு பார்வதி அம்மாள் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

இதை மத்திய அரசுக்கு அனுப்பிய கருணாநிதி, பார்வதி அம்மாள் தமிழகத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற சில நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியைத் தரலாம் என்றும் பரி்ந்துரைத்தார்.

இதையடுத்து மத்திய அரசு பார்வதி அம்மாள் மீதான தடையை நீக்கி, அவர் இந்தியா வந்து சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளது.

இதற்காக அவருக்கு 6 மாத கால விசா வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

-‍ தற்ஸ் தமிழ் -

.

Edited by தமிழ் சிறி

பார்வதி அம்மாவின் மருத்துவ விடயமென்பது ஒரு மனிதாபிமான பிரட்சனை ... இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை!

ஆனால் ..... தாயகத்தில் ஆயிரக்கணக்கான பார்வதி அம்மாள்களும், ஆயிரக்கணக்கான பிள்ளைகளும், ஆயிரக்கணக்கான பேரன்களும் அவயவங்களை இழந்தும், போதிய மருத்துவ வசதிகள் அற்று அல்லலுறுகிறார்கள். ... இவற்றிற்கு ஏன் பார்வதி அம்மாவிற்கு கொடுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை? ....

.... சர்வதேச பிரட்சனை ஆகிவிட்ட பார்வதி அம்மாவின் சிகிச்சையை போன்று, தாயகத்தில் மருத்துவ வசதி இன்றி தவிக்கும் மக்களின் பிரட்சனையை ஏன் போதியளவு எம்மவர்கள் வெளிக்கொணரவில்லை, இதை ஏன் தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை???

.... அம்மக்கள் கைவிடப்பட்ட மக்களா????????????????????????

பார்வதி அம்மாவின் மருத்துவ விடயமென்பது ஒரு மனிதாபிமான பிரட்சனை ... இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை!

ஆனால் ..... தாயகத்தில் ஆயிரக்கணக்கான பார்வதி அம்மாள்களும், ஆயிரக்கணக்கான பிள்ளைகளும், ஆயிரக்கணக்கான பேரன்களும் அவயவங்களை இழந்தும், போதிய மருத்துவ வசதிகள் அற்று அல்லலுறுகிறார்கள். ... இவற்றிற்கு ஏன் பார்வதி அம்மாவிற்கு கொடுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை? ....

.... சர்வதேச பிரட்சனை ஆகிவிட்ட பார்வதி அம்மாவின் சிகிச்சையை போன்று, தாயகத்தில் மருத்துவ வசதி இன்றி தவிக்கும் மக்களின் பிரட்சனையை ஏன் போதியளவு எம்மவர்கள் வெளிக்கொணரவில்லை, இதை ஏன் தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை???

.... அம்மக்கள் கைவிடப்பட்ட மக்களா????????????????????????

உண்மை எனக்கு சுடுகிறது. எனினும் நேரடியாக தைரியமாக இந்த கருத்தை பதிந்த உம்மை பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

இன்னும் பல உண்மைகளும் எனக்கு சுடுகிறது . அதற்கு விடை அளித்தால் நலம் . சிகப்பு அழுத்தினாலும் நலம்.

1. மதியாதார் தலை வாசல் மிதிய வேண்டாம் . இது பெரியோர் வாக்கு . அம்மா விஷயத்தில் இது கடை பிடிக்க படுமா ???

2. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு . இதுவும் ஒரு பெரியோர் வாக்கே . திரைகடல் கடந்து இருக்கும் ஈழ உறவுகள் ஒருவராலும் கூட பார்வதி அம்மாவுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்க முடியவில்லையா ??? இல்லை எந்த நாட்டிலும் மருத்துவ வசதியில்லையா ??? அல்லது தன்னினம் தன் மானம் என்பதெல்லாம் வேற்று கோஷங்கள் தானா ??? ( ஒரு தேசிய தலைவரின் அம்மாவுக்கு இந்த கதி. அப்புறம் மக்களின் கதி ??? )

3. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் . இதுவும் பெரியோர் வாக்கே . இந்தியா முதல் ஆளாக அனுமதி அளித்துள்ளது . இதற்கு நன்றி நவிலல் உண்டா இல்லை அரசியல் சூழ்ச்சி என்று கூறி இந்த மனிதாபிமான உதவியை கூட நக்கல் அடிப்பதோடு நிற்குமா ???

4. விழுந்து விழுந்து புரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஓட்டும். இது கூட........ பிற நாடுகளின் மேல் நம்பிக்கை வைத்து இந்தியாவை ஏளனப்படுத்தி அவமானப்படுத்தி எடுக்க கூடாத முடிவுகளை கூட எடுக்க தூண்டிய பிரசாரங்கள் இன்னும் தொடருமா ???

  • கருத்துக்கள உறவுகள்

பார்வதி அம்மாவின் கனடாவில் உள்ள மகள் முயற்சி செய்து கனடாவுக்கு கொண்டுவர முயற்சித்தார்.ஆனால் கனடாவால் விசா மறுக்கப்பட்டது.சிங்கப்பூர், மலேசியாவில் இல்லாத மருத்துவமா என்ற கேள்வி எழாமல் இல்லை. அவரது பழைய டாக்டர் தமிழ் நாட்டில் இருப்பதாகவும் அவரால் குணப்படுத்தலாம் எனவும் சொல்லப்படுகிறது.அவரது பிள்ளைகளின் முடிவுக்கு அப்பால் யாரும் நெருக்க முடியாது என நினைக்கிறேன்.

விழுந்து விழுந்து புரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஓட்டும். இது கூட........ பிற நாடுகளின் மேல் நம்பிக்கை வைத்து இந்தியாவை ஏளனப்படுத்தி அவமானப்படுத்தி எடுக்க கூடாத முடிவுகளை கூட எடுக்க தூண்டிய பிரசாரங்கள் இன்னும் தொடருமா ???

தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை இந்தியா இலகுவாக தந்திருக்கலாம். ஆனால் இந்தியா செய்ததோ போர் விதிகளை மீறி இரசாயன வாயு அடித்து மக்களையும் போராளிகளையும் கொன்றதை யாரும் மன்னிக்க மாட்டார்கள். இன்று இந்தியா அதன் பலா பலன்களை அனுபவிக்க தொடங்கியுள்ளது. சாப்பாட்டுக்கு பின் உலகில் உண்ணவிரதம் இருந்த விண்ணாதி விண்ணரையும் எமக்கு தெரியும்.இவை நடை பெற்ற சம்பவங்கள்.இவை போல இனியும் அரசியல் சித்து விளையாட்டுக்கள் நடைபெறும் என நம்பலாம்.உதாரணமாக உங்கள் ஊரில் எங்கு களவு போனாலும் பிரபல கள்வனை காவல் துறை பிடிப்பதில்லையா அவன் களவு செய்யாத போதும். அப்படி ஒரு சந்தேக நிலைதான் எமக்கும்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் . இதுவும் பெரியோர் வாக்கே . இந்தியா முதல் ஆளாக அனுமதி அளித்துள்ளது . இதற்கு நன்றி நவிலல் உண்டா இல்லை அரசியல் சூழ்ச்சி என்று கூறி இந்த மனிதாபிமான உதவியை கூட நக்கல் அடிப்பதோடு நிற்குமா ???

அவ்வளவுக்கு நன்றி கெட்டவர்களாக நாம் இருக்கவில்லை.இருக்க போவதும் இல்லை.ஒரு அமைதியை நிலை நாட்டும் படையாக எம் மண்ணில் காலடி வைத்து எமது மக்களையே நர வேட்டையாடியதை மறக்க எமக்கு சிறிய ஞாபக சக்தியை ஆண்டவன் தரவில்லை. இதை பற்றியும் பெரியார் கட்டாயம் ஏதாவது சொல்லியிருப்பார். தேடி பார்க்கிறேன்.

மதியாதார் தலை வாசல் மிதிய வேண்டாம் . இது பெரியோர் வாக்கு . அம்மா விஷயத்தில் இது கடை பிடிக்க படுமா ???

மனிதாபிமானம் என்பது என்ன என்பதை முதலில் பாடம் எடுத்து இருந்தால் விளங்கி இருக்கும்.காலம் கழித்து என்றாலும் அம்மாதினை உள்ளே வர அனுமதி அளித்தது பெரிய விடயம் தான்.நன்றி. ஆனால் ஏதோ ஒரு அரசியல் சித்து உண்டென்று மட்டும் என அடி மனது சொல்கிறது. பொறுத்து இருந்து பார்போம்.ஏற்கனவே பாலசிங்கம் அவர்களுக்கு அனுமதி மறுத்ததையும் இவ்விடத்தில் நினைவு கூரலாம்.

எமது நாட்டுக்குள் நாம் இந்திய இராணுவத்தை வெத்திலை வைத்து கூப்பிடவில்லை.இலங்கை அரசின் சதியால் தான் எம் மண்ணில் காலடி வைத்தீர்கள்.அப்போ யார் "மதியாதோர் முற்றம் மிதித்தார்கள்"??

தமிழோ அல்லது தமிழ் நாட்டு சகோதரர்களோ யாரையும் மனம் நோகும் நோக்கில் இது எழுதப்படவில்லை.நடந்தவை அனைத்தும் உண்மையானவையே.

பார்வதி அம்மாள் இலங்கை திரும்பினார்- சிவாஜிலிங்கம் _

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=23136

ஏன்???????????????? இந்தக்கூத்துக்கள்??????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்ததா பார்வதியம்மாவ வச்சு எப்பிடி அரசில் செய்யலாம் எண்டு சிந்திச்சுகொண்ட இருக்கிறினம்..... தயா மாஸ்ரர் இந்தியாவுக்கு வைத்தியத்துக்கு போகேல்ல எண்டது இப்பதான் யோசிச்சு புடிச்சிருக்கினம். நாளைக்கு அறிக்கை மாறலாம் அதால..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததா பார்வதியம்மாவ வச்சு எப்பிடி அரசில் செய்யலாம் எண்டு சிந்திச்சுகொண்ட இருக்கிறினம்..... தயா மாஸ்ரர் இந்தியாவுக்கு வைத்தியத்துக்கு போகேல்ல எண்டது இப்பதான் யோசிச்சு புடிச்சிருக்கினம். நாளைக்கு அறிக்கை மாறலாம் அதால..... :lol:

கருணநிதி ஐயாவின் திட்டத்தில் மண் விழுந்துவிட்டது. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பார்வதி அம்மாள் இலங்கை திரும்பினார்- சிவாஜிலிங்கம் _

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=23136

ஏன்???????????????? இந்தக்கூத்துக்கள்??????????????

பார்வதி அம்மாள் மலேசியாவில் இம்மாதம் 15ம் திகதிக்குப்பின்பு இருக்க முடியாது. அவரின் விசா முடிவடைகிறது. ஆகவே அவர் சிறிலங்காவுக்கு மட்டுமே செல்ல முடியும் என்பதினால் சிறிலங்காவுக்கு சென்றிருக்கிறார்.

பார்வதி அம்மாள் மலேசியாவில் இம்மாதம் 15ம் திகதிக்குப்பின்பு இருக்க முடியாது. அவரின் விசா முடிவடைகிறது. ஆகவே அவர் சிறிலங்காவுக்கு மட்டுமே செல்ல முடியும் என்பதினால் சிறிலங்காவுக்கு சென்றிருக்கிறார்.

எது எப்படியோ ஒரு முதியவரின் நோயோடு சேர்ந்து அரசியலும் விளையாடுகிறது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.