Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: சீன ஆதரவு கோரும் இந்தியா

Featured Replies

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: சீன ஆதரவு கோரும் இந்தியா

வெள்ளிக்கிழமை, மே 28, 2010, 10:24[iST]

பெய்ஜிங்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் கிடைக்க சீனாவின் ஆதரவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கோரினார்.

சீனா சென்றுள்ள அவர் அந் நாட்டு அதிபர் ஹூ ஜின்டாவோவிடம் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார்.

இந்தியாவும், சீனாவும் தூதரக உறவுகளை மேற்கொண்டு 60 ஆண்டுகளாகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 6 நாள் பயணமாக சீனா சென்றுள்ள பிரதிபாவுக்கு பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அவரை சீன பிரதமர் வென் ஜியாபோ வரவேற்றார்.

இதையடுத்து சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுடன், பிரதிபா இரு தரப்பு உறவுகள் குறித்தும், அதை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சு நடத்தினர். அப்போது விமான ஊழியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் ஒப்பந்தம், இரு நாடுகள் இடையே நிர்வாகரீதியான பிரச்சனைகளை தீர்ப்பது பற்றிய ஒப்பந்தம், விளையாட்டு துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஒப்பந்தம் ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அந்த சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க சீனாவின் ஆதரவை பாட்டீல் கோரினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகியவை உள்ளன. இந்த கவுனசிலில் இந்தியாவுக்கும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து தர சீனாவும் அமெரிக்காவும் மறைமுகமாக எதிர்த்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் தான் சீனாவின் ஆதரவை இந்தியா நேரடியாகவே கோரியுள்ளது.

பின்னர் பிரதமர் வென் ஜியாபோவை பிரதிபா சந்தித்தபோது, இந்தியாவின் கோரிக்கையை பரிசீலிப்போம் என்று தெரிவித்தார்.

Read: In English

இதைத் தொடர்ந்து சீன மக்கள் காங்கிரஸ் தலைவர் ஹூ பாங்கோவையும், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சந்தித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் சீனா சென்றுள்ள முதல் இந்திய ஜனாதிபதி பிரதிபா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2010/05/28/pratibha-china-backing-permanent-unsc.html

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தைப் பெற்றுக்கொள்வதன்மூலம் வீற்ரோ அதிகாரம் பெறுவார்கள். இது பலகாலமாகவே இவர்களது நோக்கமாக இருந்து வருகிறது. சீனாவுடன் சில காலமாக இவர்கள் அடக்கி வாசிப்பதற்கு இதுதான் காரணம் போல. :D

மனித உரிமைகள் பற்றி சிறிதும் அக்கறையில்லாதவர்கள் நிரந்தர அங்கத்தவர்களாக நுழைவது நல்லதல்ல. ஏற்கனவே இருக்கும் ரஷ்யாவும், சீனாவுமே போதும்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கத்தையானுக்கு இடத்தை கொடுத்தால் மீட்கிறது கஸ்ரம், திராவிடம் கொடுத்து இப்ப மீட்க முடியாமல் இருக்கு, சீனாகாறன் உவங்களை லேசில நம்ப மாட்டான், கொடுத்து விட்டால் பிறகு மீட்க முடியாது. சீனாகாறன் நல்ல யோசிப்பான், ஆபத்து ஆபத்து ஆபத்து அவ்வளவுதான் என்னால சொல்ல ஏலும். :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நேரத்தில்

ஸ்ரீலங்காவைப்போல்

அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஸ்சியாவுக்கும் ஏன் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் சீனாவுக்கும்

நண்பனாக நடிக்க இந்தியாவால் முடிகிறது என்றால் அதற்கு இந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் என்ற கனவே காரணம்

எதிரியானாலும் புத்திசாலித்தனத்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

ஆனால் கிடைக்குமா.....?

அது மற்ற அத்தனைபேருடைய ஏமாறும் தன்மையிலும் அடங்கியுள்ளது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்திய பார்ப்பனியத்தின் பகற்கனவு!

(பிற்குறிப்பு: பகலிலே காணும் கனவு பலிக்காது என்று ஊரிலே பெரியவர்கள் சொல்லக் கேள்வி)

சும்மாயே இந்த ஆட்டங்காட்டும் இந்தியபார்ப்பனியபிசாசுகள் இதுவும் கிடைத்தால் உலகத்தையே முள்ளிவாய்க்கால் ஆக்கிடுவாங்க

Edited by Subiththiran

மாண்பு கெடுப்பது இந்திய நாடு,

மனிதத்தை அழிப்பது இந்திய நாடு,

நீதியை நிலை குலைப்பது இந்திய நாடு,

மனிதாபிமானத்தை அழிப்பது இந்திய நாடு,

பழமை, கலாச்சாரம் சிதைப்பது இந்திய நாடு,

ஈவிரக்கமற்றவர்கள் உள்ள நாடு இந்திய நாடு,

அநீதிக்கு கைகொடுப்பதில் முன்னிற்பது இந்திய நாடு,

தர்மத்தில் அணிசேரா தனித்தன்மை கொண்ட நாடு இந்திய நாடு,

கீழ்த்தரமானவர்கள் அரசியால் செய்வது இந்திய நாட்டில்,

ஊழல் பேர்வழிகள் மலிந்துள்ளது இந்திய நாட்டில்,

பயங்கரவாதிகள் அரசாள்வது இந்திய நாட்டில்,

போலி ஜனநாயகவாதிகள் உள்ளது இந்திய நாட்டில்,

பொன்னுக்கும், பெண்ணுக்கும் விலைபோகும் ராஜதந்திரிகள் இந்திய நாட்டில்,

பெண்களை விரட்டி விரட்டி பாலியல் இம்சை செய்யும் இராணுவம் உள்ளது இந்திய நாட்டில்,

இத்தகைய நாட்டுக்கு ஐ. நா. உறுப்புரிமைக்கே தகுதியில்லை.

இந்திய பிணம் தின்னி நாய்களுக்கு பாதுகாப்பு சபை நிரந்தர உரிமை எந்த அடிப்படையிலும் கொடுக்கமுடியாது.

சென்ற வருட ஜூலை 14 ஆம் திகதி நடைபெற்ற பிரான்சின் சுதந்திரதின விழாவில் மன்மோகன் சிங் கலந்து கொண்டதுடன் இந்திய இராணுவ அணிவகுப்பும் நடைபெற்றது. பிரெஞ்சு வரலாற்றில் வேறொரு நாட்டு இராணுவம் இவ்வாறு கௌரவிக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.

இதற்கான காரணம் பின்வருமாறு கூறப்பட்டது.

பிரான்சிடமிருந்தும் வேறு ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் இந்தியா விமானம் மற்றும் இராணுவ தளபாடங்களைக் கொள்வனவு செய்யும்.

இதற்குப் பிரதியீடாக பிரான்ஸ் இந்தியாவை

ஐ. நா. வின் பாதுகாப்பு அமைப்பில் நிரந்தர உறுப்பினராக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.

சீனாவை இந்தியா நேரடியாக இராணுவ ரீதியாக எதிர்கொள்ள முடியாது. எப்படியாவது ஐ. நா வுக்குள் இந்தியா நுளைந்து கொள்வது தனக்குப் பாதுகாப்பு என்று நினைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசு எதை இழக்கமுடியாததாகக் கருதுகிறதோ அதை அவர்களுக்கு கிடைக்காமல் செய்வதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடம் கோரும் இந்தியாவின் கோரிக்கையை எதிர்த்து பிரச்சாரங்களை முடுக்கி விடுதல் அவசியம். சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றவற்றில் ஈழத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் முக்கியமான வேலைத்திட்டமாக இருக்கின்றன. அவர்களிடம் இந்தப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக கீழ்வரும் விடயங்கள்.

1) ஈழத்தில் உயிர்கள் அழியும்போது அருகில் இருந்த இந்தியாவால் தடுக்கமுடியாத கையாலாகாத நிலை. இந்த நிலையில் இவர்களுக்கு பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடம் அவசியமா? (ஈழக்கொலைகளுக்குக் காரணமே இந்தியாதானே என்று நீங்கள் சொல்வது விளங்குகிறது. ஆனால் மேற்குலகுக்கு சில விடயங்களை எடுத்துச்செல்லும்போது அவர்களது நிலைப்பாட்டை ஒட்டி விடயங்களைத் தெளிவுபடுத்தினால்தான் பலன் கிடைக்கும்.)

2) கொலைகளுக்குப் பின் ஐ நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கையின் பாராட்டுப் பத்திரம் நிறைவேற உதவியது. இலங்கைக்கெதிரான தீர்மானம் தோல்வி அடைய வேலை பார்த்தது.

3) அரசியல் போராளிகள் இந்திய அனுசரணையுடன் சரணடைந்தபோதும், பிற்பாடு சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு. அதில் அவர்களது கையாலாகாத்தனம்.

இவைகளைச் சுட்டிக்காட்டி, ஆங்கில ஊடகங்களில் கருத்துக்களை வைப்பதும், சர்வதேச அமைப்புகள், அரசு பிரதிநிதிகள் போன்றவர்களுக்கு கடிதம் எழுதுவதுமாக முயற்சிக்க வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியாவை கையறு நிலைக்குக் கொண்டு செல்ல சிறிதளவேனும் உதவி செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.