Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

NDTV ஒளிபரப்பிய இலங்கை குறித்த விவரணம்: பெரும் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

NDTV ஒளிபரப்பிய இலங்கை குறித்த விவரணம்: பெரும் சர்ச்சை

இலங்கையைப் பற்றிய "தண்ணீரில் இரத்தம்" (“Blood on Water”) என்ற விவரணத்தை சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் என்.டி.ரி.வி (NDTV) அண்மையில் ஒளிபரப்பியிருந்தது. ஆனால் இந்த விவரணத்தில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் இருப்பதாகக் கூறியுள்ள இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவாசம், அந்த விவரணத்தைத் திரும்பப் பெற்றுவிடுமாறு குறித்த தொலைக்காட்சி சேவைக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவரணத்தில் பல பொய்யான தகவல்கள் இருப்பதாகக் கூறும் காரியவாசம், தற்போது இடம்பெயர் முகாம்களிலும், முட்கம்பிக்குப் பின்னாலும் 3 முதல் 6 லட்சம் வரையான மக்கள் இருப்பதாக பேராசிரியர் செனோய் குறிப்பிட்டுள்ளார், ஆனால் தற்போது 30,000 பேர் மட்டுமே இடம்பெயர் முகாம்களில் உள்ளனர். இவர்களுக்கும் வெளியே சென்றுவர சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மிகுதி மக்கள் மீளக்குடியேற்றப்பட்டு விட்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த விவரணத்தில் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள போதும், அதற்கு ஆதரவு தெரிவித்துவரும் திரைப்பட இயக்குநர் சீமானுக்கு கருத்துக்கூறும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் காரியவாசம் குறிப்பிட்டுள்ளார். சீமான் இலங்கை அரசாங்கத்தை இழிவு படுத்தும்விதமாகப் பேசுவதோடு அவரது கருத்துக்கள் பகைமையாகவும், குறிப்பிட்ட ஒரு கொள்கைக்கு மட்டும் துணைபோவதாகவும் இருப்பதாக இலங்கை உயர் ஸ்தானிகர் குறையாகக் கூறியுள்ளார்.

அதோடு, என்.டி.ரி.வி இன் குறித்த விவரணச் சித்திரத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட பல காட்சிகள் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்டவை எனக் குறிப்பிட்டுள்ள காரியவாசம், அதில் கருத்து வெளியிட்டுள்ள சில தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், கொல்வதாகவும் கூறுவது அப்பட்டமான பொய்களெனவும் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 8 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி செல்லவுள்ளமை தெரிந்ததே. எனவே என்.டி.ரிவியின் சென்னைப் பிரிவு இந்த விவரணத்தை இப்போது ஒளிபரப்பியுள்ளமை ஆச்சரியத்துக்குரியது என்றும் நட்புறவுக்கு எதிரான போக்குடையது என்றும் காரியவாசம் கூறியுள்ளார். ஆகவே இவ்வாறான சூழ்நிலைகளில் உண்மைக்குப் புறம்பான அந்த விவரணச் சித்திரத்தை உடனடியாக மீளப்பெறும்படி அவர் என்.டி.ரி.டி நிர்வாகத்தைக் கேட்டுள்ளார்.

நன்றி - மை கதிரவன் இணையம்

இவன் கருநாநீதி யின் தொல்லை காட்ட்சி போல் இல்லை இந்த ரிவி சனல்

பல விசயங்களை நடுத்தர் வர்க்கத்தினர் பர்ர்க்கிறவர்கள்.

நாங்களும் சில நல்ல விசயங்களை இந்த சனலுக்கு புலம் பெயர் ஊடகங்களின் பொறுப்பாளர்ர்கள் அனுப்ப வேண்டும்.

அங்கு ஒளி பரப்ப கூடிய சாதகமான தன்மை இப்போ உண்டு.

ஜி,ரி,வி யின் ஆக்கங்கள் பலன் உள்ளதாக இருக்கும்.

இந்த தொடரை தயாரித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆனால், திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த டாகுமெண்டரியை வைத்து இது தமிழர் மீதான பாசமாக கருதமுடியாது.

படுகொலை செய்யப்பட்ட இலட்சக் கணக்கான ஈழத்தமிழரின் உயிர்களுக்கு ஈடாகாது.

சிங்களவனின் தொடர்ச்சியான ஏமாற்றத்தால், சீனாவின் பிரசன்னத்தால் மீண்டும் தமிழன் அவலத்தை வைத்து பிழைப்பு நடத்த முயலுவதாக தெரிகிறது. இது ஆங்கிலத்தில் மட்டும் செய்யப்பட்டது சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது.

இதை மாதிரி பல நூறு டாகுமெண்டரியை சகல மொழிகளிலும் செய்து ஒளிபரப்பட்டும் பார்க்கலாம்.

ஈழத்தமிழர் தமது முழு உரிமைகளும், சுய நிர்ணய உரிமையும் கிடைக்கும் வரை, சில்லறை விசயங்களை நம்பி ஏமாறமாட்டார்கள்.

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

இந்த தொடரை தயாரித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆனால், திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த டாகுமெண்டரியை வைத்து இது தமிழர் மீதான பாசமாக கருதமுடியாது.

படுகொலை செய்யப்பட்ட இலட்சக் கணக்கான ஈழத்தமிழரின் உயிர்களுக்கு ஈடாகாது.

சிங்களவனின் தொடர்ச்சியான ஏமாற்றத்தால், சீனாவின் பிரசன்னத்தால் மீண்டும் தமிழன் அவலத்தை வைத்து பிழைப்பு நடத்த முயலுவதாக தெரிகிறது. இது ஆங்கிலத்தில் மட்டும் செய்யப்பட்டது சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது.

இதை மாதிரி பல நூறு டாகுமெண்டரியை சகல மொழிகளிலும் செய்து ஒளிபரப்பட்டும் பார்க்கலாம்.

ஈழத்தமிழர் தமது முழு உரிமைகளும், சுய நிர்ணய உரிமையும் கிடைக்கும் வரை, சில்லறை விசயங்களை நம்பி ஏமாறமாட்டார்கள்.

இறுதிக்கட்ட போரின் போது முன்னுக்கு நின்று நேரடி வர்ணனை செய்தவர்களும் இவர்கள் தான், போராட்டத்தை கேவலப்படுதி விவாதம் செய்தவையும் இவை தான், இப்ப நல்ல பிள்ளை வேடம்!!!!!!

எல்லாம் சீன வெடி கேட்டல் பிறகு தான் எம் மீது பாசம் பொங்குகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதிக்கட்ட போரின் போது முன்னுக்கு நின்று நேரடி வர்ணனை செய்தவர்களும் இவர்கள் தான், போராட்டத்தை கேவலப்படுதி விவாதம் செய்தவையும் இவை தான், இப்ப நல்ல பிள்ளை வேடம்!!!!!!

எல்லாம் சீன வெடி கேட்டல் பிறகு தான் எம் மீது பாசம் பொங்குகிறது

இனி இந்தியாகாறனை நம்புற அளவுக்கு சனம் இல்லை தொடர்ந்து சீன வெடிசத்தம் கேட்டு கொண்டுதான் இருக்க போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டியவனுக்கு சீன வெடி கொளுத்தி போடுவதில் தப்பில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.