Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்பத் தமிழ் ஒலி பாலசிங்கம் பிரபாகரன்:முரண்பாடுகளின் முழுவடிவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலசிங்கம் பிரபாகரன்:முரண்பாடுகளின் முழுவடிவம்

கடந்த 14 வருடங்களாக ஒரு தனிமனிதனாக பல சவால்களுக்கு மத்தியில் நேயர்களின் ஒத்துழைப்போடு இன்பத் தமிழ் ஒலியை நடத்திவரும் பாலசிங்கம் பிரபாகரன் தனது வானொலியூடாக பல நல்ல கருத்துக்களை சமூகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்

என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அத்துடன் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தனது வானொலி நிகழ்ச்சிகளின் மூலம் வலுச் சேர்த்துள்ளார் என்பதையும் யாரும் மறுத்துரைக்க முடியாது.

ஆயினும் அவர் செய்யும் நல்ல விடயங்களுக்காக, அவர் சமூகத்தைக் குழப்பும் வேலைகளில் ஈடுபடும்போது அவர் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டாமல் இருந்துவிட முடியாது.

கடந்த செவ்வாய்க் கிழமை இன்பத் தமிழ் ஒலியில், வானொலியின் இயக்குனர் பாலசிங்கம் பிரபாகரன் நடத்திய 'களமும் நாமும்" கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியில் பிரபாகரன் எடுத்துக்கொண்ட தலையங்கமானது எம்மை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

இவர் இப்படியான சர்ச்சைக்குரிய தலைப்புக்கள் பலவற்றை தனது வானொலி நிகழ்ச்சிகளில் விவாதப் பொருளாக்கியிருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

முதல் வாரம் இகழ்ந்து பேசிய விடயங்களை ( அல்லது நபர்களை) அடுத்தவாரம் புகழ்ந்து பேசுவதும் முதல் வாரம் இனித்த விடயம் அடுத்தவாரம் கசப்பதும் இதைக் கேட்டு நேயர்கள் மண்டையை பிய்ப்பதும் ஒரு தொடர் கதை.

இதன் பின்புலம்தான் என்ன என ஆராய முற்பட்டபோது எமக்கு கிடைத்த தகவல்கள்

தேசியத்தைப் பற்றி பேசி பேசியே தனது வானொலியை வளர்த்த பாலசிங்கம் பிரபாகரனுக்கு சில காலங்களின் பின்பு தன்னால்தான் மக்கள் தேசியத்தை நேசிக்கிறார்கள் என்ற எண்ணம் அவர் தலைக்கேறியது. ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியாவில் நடக்கும் போராட்டங்களுக்கு தான் அழைத்துதான் மக்கள் வருகிறார்கள் என வெளிப்படையாகவே பலரிடம் கூறினார்.

அத்துடன் இவருக்கு விருப்பமில்லாத நாட்டுக்கு வலுச்சேர்க்கும் வேலைகளை செயற்பாட்டாளர்கள் செய்யும்போது அவர்களை விமர்சிப்பதும் இவரின் வானொலிக்கு ஒத்து ஊதும் செயற்பாட்டளர்களை புகழ்வதும் பாலசிங்கம் பிரபாகரனுக்கு நிகர் பாலசிங்கம் பிரபாகரனே.

சில சந்தர்ப்பங்களில் இவர் செய்யும் செயற்பாடுகளைப் பார்க்கும்போது முரண்பாட்டின் மொத்த உருவமாக இவர் காட்சியளிக்கிறார். பாலசிங்கம் பிரபாகரன் பல முரண்பட்ட செயற்பாடுகளைச் செய்திருந்தபோதிலும் அவர் அண்மைக் காலத்தில் செய்த சில சம்பவங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

சம்பவம் 1:

கடந்த வருடம் அவுஸ்திரேலியா தமிழர் பேரவையின் தொடக்க காலப்பகுதியில் அந்த பேரவையின் தேவை என்ன அவர்கள் இவ்வளவு காலமும் எங்கே இருந்தார்கள் என்ற கேள்விகளை எழுப்பி அந்த பேரவையின் உருவாக்கத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருந்த பாலசிங்கம் பிரபாகரன் ஒரு சில நாட்களில் 'திடீர் ஞானம் கிடைத்த போதி மரப் புத்தன்' போல் அதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து அவ்வமைப்பாற்தான் தமிழருக்கு விடுதலை பெற்றுத்தர முடியும் ஆகவே மக்கள் அதில் இணைய வேண்டும் என தொடர்ச்சியாக முழக்கமிட்டார். கடந்த சிலமாதங்களாக அப்பேரவைபற்றி வானொலியில் கதைப்பதை நிறுத்திய அவர் கடந்த வாரம் தமிழர் பேரவை தொடர்பான சந்தேகங்களும் கேள்விகளும் இருப்பதாகக் கூறினார்.ஆனால் திடீரென செவ்வாய் கிழமை களமும் நாமும் கருத்துப் பகிர்வில் பேரவையை புகழ்ந்தார்.

இதன் மர்மம்தான் என்ன?

எல்லாமே பணம். அவருக்கு திடீர் ஞானத்தை போதித்தது 50 பச்சைத்தாள்கள்தானாம். அதையும் ஆறுமாசங்களுக்கு பேரம் பேசித்தான் பெற்றுக்கொண்டாராம். அந்த ஆறுமாத காலப்பகுதி முடிந்தவுடன் தமிழர் பேரவை பற்றி வாயே திறக்கவில்லை. அடுத்த கட்ட பணத்தைப் பெறுவதற்கு அவர்களை விமர்சித்து காரியத்தைச் சாதித்துக் கொண்டார். மீண்டும் பணம் கிடைத்ததும் பேரவையைப் புகழ்கிறார் என அவருடன் கூட இருந்தவர்களே முணுமுணுக்கிறார்கள்.

சம்பவம் 2

நாடுகடந்த தமிழீழ அரசின் உருவாக்கம் பற்றி அதன் இணைப்பாளர் உருத்திரகுமார் அவர்கள் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செவ்வி கொடுத்துவிட்டார் என்பதற்காக அவரையும் அந்த அமைப்பையும் திட்டித் தீர்த்தார். ஆனால் அடுத்த வாரமே பேரம்பேசி 20 பச்சைத் தாள்களைப் பெற்றுக்கொண்டதும் புகழ்ந்து பேச ஆரம்பித்தார். இறுதியில் தானும் ஒரு பிரதிநிதியாக நாடுகடந்த அரசில் இணைந்து கொண்டார்.

மேற் குறிப்பிட்ட இரு சம்பவங்களிலும் இவரோடு இணைந்து செயற்படுபவர்களையே விமர்சிப்பதன் மூலம் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி பணம் பெறுவதை ஒரு யுக்தியாகக் கையாண்டு வருகிறார் என எண்ணத் தோன்றுகிறது. இவருடைய தமிழ்ப்பற்றும் தாயகப்பற்றும் பணப்பற்றுத்தானா? என்றும் எண்ணத் தோன்றுகிறது.

பாலசிங்கம் பிரபாகரன் கூறுவதுபோல் பச்சைத் தண்ணியில் பலகாரம் சுட முடியாதுதான். வானொலி நடத்துவதற்கு நிச்சயமாக பணம் தேவைதான் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால் தன்னை ஒரு தேசபக்தனாகக் காட்டி தனது வானொலியை வளர்த்துக்கொண்ட பாலசிங்கம் பிரபாகரன் தேச நலனுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பேரம் பேசி பணம் பெறுவதையும் பணம் கொடுக்காவிட்டால் அந்த செயற்பாடு தவறானது என மக்களைக் குழப்புவதையும் எந்த ஒரு மனச்சாட்சியுள்ள மனிதனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

சம்பவம் 3

இப்பொழுது பாலசிங்கம் பிரபாகரன் இன்பத்தமிழ் வானொலியின் இயக்குனர் மட்டுமல்ல நினைத்தபடி யாரை வேண்டும் என்றாலும் விமர்சிப்பதற்கு. அவர் இப்பொழுது நாடுகடந்த அரசின் மக்கள் பிரதிநிதியென்ற வகையிலேயே பக்குவப்பட்ட சமூகப் பொறுப்புள்ள மனிதனாக செயலாற்றவேண்டிய கடப்பாட்டை அவருக்கு மக்கள் கொடுத்துள்ளார்கள்.

கடந்த செவ்வாய்கிழமை களமும் நாமும் கருத்துப்பகிர்வு நிகழ்விலே எடுத்துக்கொண்ட கருப்பொருள் சர்ச்சைக்குரியது. இவர் பேச எடுத்துக்கொண்ட கருப்பொருள் பற்றிய பூரண விளக்கமற்று இவர் இருந்ததோடு அக்கருப்பொருள் பற்றி விவாதிக்க வந்தவர்களும் குழப்பமான கருத்துக்களைத் தெரிவித்தபோது அதற்கு 'ஜால்ரா' போட்டு அவருக்கு மக்கள் அளித்த பதவியின் கௌரவத்தைக் குறைத்துக் கொண்டார்.

இனிவரும் காலங்களிலாது திரு பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள் மக்கள் வழங்கிய அங்கீகாரத்தை துஸ்பிரயோகம் செய்யாமல் நடந்துகொள்ள வேண்டும். நடந்துகொள்வார் என எதிர்பார்க்கிறோம்.

குறிப்பு:சமூகத்தை திருத்துவதற்கு நல்ல கருத்துக்களை எடுத்து விவாதிக்கும் பாலசிங்கம் பிரபாகரன் முதலில் தன்னை திருத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த ஆக்கம்.

ஆக்கம்: குபேரன்

நன்றி: www.pooraayam.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஏதோ தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்துக்கும் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் இடையேயான முரண்பாடுகளைப் பற்றி வழுதிக்கு பின் யாரோ இன்பத்தமிழ் வானொலியில் இருந்து ஆராய்ஞ்சிருக்கிறாங்கள் எண்டு நினைச்சன். தலையங்கம் போடும் போது கொஞ்சம் தெளிவா போடுங்கப்பா!

3 வருடத்தால் வெளியால போகச்சொல்லி மக்கள் கூறினால் ,அதற்கு பிறகு அந்த மனுசன் என்ன செய்யிறது. ...14 வருசமா கட்டிகாத்த வனொலி வித்தகத்தை இடையில நாட்டுக்காக விடஏலாது தானே. :):lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரை எமது கனடாவில் இளையபாரதியை முன்னர் உலகத் தமிழர் இயக்கம் தூக்கி வைத்து பிறகு அவர் தமது வழிக்கு வரவில்லை என்றவுடன் இளையபாரதிக்கு எதிராக உலகத் தமிழர் இயக்கத்தினர் எதிர் வேலைகள் செய்தனர். (உலகத் தமிழர் இயக்கம் வேறு யாருமில்லை, அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகளின் கனடாக் கிளை)

இளையபாரதியைப் போன்று இவ்வளவு காலமும் அவுஸ்திரேலியாவில் இன்பத் தமிழ் ஒலி பிரபாகரனை தூக்கிப் பிடித்தனர். இப்போது அவர் தமக்கு எதிரான செயற்பாடுகளில் இறங்குகின்றார் என்று தெரிந்தவுடன் அந்த நாட்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (அதுதாங்க அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகளின் அவுஸ்திரேலியக் கிளை) இவருக்கு எதிரான வேலைகளில் இறங்கியிருக்கின்றனர்.

அதாவது, புலிகளின் மரபு வழியை அனைத்துலக தொடர்பகத்தினர் தொடர்ந்தும் பின்பற்றி வருகின்றனர். முன்னர் கே.பி.யை உச்சத்தில் வைத்து பின்னர் அம்போ என்று கைவிட்டது போன்று இவரையும் கைவிடப் போகின்றனர். (நான் அறிந்த வரை இளையபாரதியைப் போன்று தெனாவெட்டாக புலிகள் அமைப்பை எதிர்க்கக்கூடிய திராணியற்றவர் பிரபாகரன்)

இன்பத் தமிழ் ஒலி பிரபாகரன் கடைந்தெடுத்த ஒரு சந்தர்ப்பவாதி. நாளை கோத்தபாய இவருக்கு பண உதவி செய்தால் தமிழ்த் தேசியத்துக்காக கூப்பாடு போடுவதனை நிறுத்திவிட்டு அதற்கு எதிராக வேலை செய்யக்கூடியவர். இவரை எல்லாம் அந்த நாட்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நாடு கடந்த தமிழீழ அரசில் நிறுத்தியதுதான் பாரிய தவறு. அதாவது, பொல்லையும் கொடுத்து அடியையும் வாங்குவது என்பது இதுதான்.

யாரை எங்கே வைப்பது என்று அண்டைங்காக்கைக்கும் தெரியவில்லை; அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் தெரியவில்லை.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

இவரை எல்லாம் அந்த நாட்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நாடு கடந்த தமிழீழ அரசில் நிறுத்தியதுதான் பாரிய தவறு. அதாவது, பொல்லையும் கொடுத்து அடியையும் வாங்குவது என்பது இதுதான்.

தேர்தலில் யார் வேண்டுமானாலும் நிற்கலாம் தானே..! தெரிவு செய்வது மக்கள் அல்லவா? இதில் என்ன பிரச்சினை? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன், உங்கள் கருத்தினை நான் முழுமையாக வரவேற்பதோடு ஆதரிக்கவும் செய்கின்றேன். ஆனால், இவர் விடயத்தில் நடைபெற்றது வேறு. அதாவது, அங்குள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுதான் இவரையும் தேர்தலில் நிற்கவைத்து வெற்றிபெறவும் செய்தது. இதனை அவுஸ்திரேலியாவில் உள்ளவர்களிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

நான் அறிந்தவற்றைத்தான் எழுதுகின்றேன். ஆனால், எனது தகவலில் பிழை இல்லை என்பதனை மட்டும் தெளிவாக இந்த இடத்தில் கூறிவைக்கின்றேன்.

Edited by nirmalan

நன் அறிந்தவரை எமது கனடாவில் இளையபாரதியை முன்னர் உலகத் தமிழர் இயக்கம் தூக்கி வைத்து பிறகு அவர் தமது வழிக்கு வரவில்லை என்றவுடன் இளையபாரதிக்கு எதிராக உலகத் தமிழர் இயக்கத்தினர் எதிர் வேலைகள் செய்தனர். (உலகத் தமிழர் இயக்கம் வேறு யாருமில்லை, அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகளின் கனடாக் கிளை)

இளையபாரதியைப் போன்று இவ்வளவு காலமும் அவுஸ்திரேலியாவில் இன்பத் தமிழ் ஒலி பிரபாகரனை தூக்கிப் பிடித்தனர். இப்போது அவர் தமக்கு எதிரான செயற்பாடுகளில் இறங்குகின்றார் என்று தெரிந்தவுடன் அந்த நாட்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (அதுதாங்க அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகளின் அவுஸ்திரேலியக் கிளை) இவருக்கு எதிரான வேலைகளில் இறங்கியிருக்கின்றனர்.

,

.

யாரை எங்கே வைப்பது என்று அண்டைங்காக்கைக்கும் தெரியவில்லை; அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் தெரியவில்லை.

அதாவது புலிகள்,ஒருங்கமைப்புகுழுவினர்,இன்பத்தமிழ் ஒலி இவர்களால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் ஆகவே திட்டி தீர்க்கிறீர்கள்.

உங்களுக்கு பணம் கொத்தபாயதந்தால் நீங்களும் அதைத்தான் செய்வீர்கள்

User is online nirmalan

* உறுப்பினர்

* PipPip

* Add as Friend

* PM this member

* Group: கருத்துக்கள உறவுகள்

* Posts: 136

* Joined: 22-September 04

* Location:Canada

* Interests:Web Browsing

லொக்கேசன் கனடா என்று போட்டிருக்கிறீங்கள். இன்பதமிழ் ஒலியையும், பாலசிங்கம் பிரபாகரனையும் போட்டு பின்னி வாங்குறீங்கள்.

லொக்கேசன் கனடா என்று போட்டிருக்கிறீங்கள். இன்பதமிழ் ஒலியையும், பாலசிங்கம் பிரபாகரனையும் போட்டு பின்னி வாங்குறீங்கள்.

காசு குடுத்தால் நீங்கள் யார் எண்டு கூட அவைக்கு பிரச்சினை இல்லை... உங்களை பற்றியும் உண்மைகளை ( எண்டு சொல்லி இட்டுக்கட்டி ) நிறைய எழுதுவினம்...

லொக்கேசன் கனடா என்று போட்டிருக்கிறீங்கள். இன்பதமிழ் ஒலியையும், பாலசிங்கம் பிரபாகரனையும் போட்டு பின்னி வாங்குறீங்கள்.

'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதற்கு இவர்களைப் போன்றோர் அல்லவோ சிறந்த எடுத்துக் காட்டு.

பெயருக்கு ஒரு லொகேஷன் போட்டு, போட்டுத் தாக்க வேண்டியது தானே.... :(

.

தமிழரிடையே குழப்பங்களையும் பிரிவினையையும் உண்டாக்கும் பணி நன்றாக நடக்கிறது.

யாழில் தனிநபர்களை அவமதிப்பவர்களை நிர்வாகம் எச்சரிக்க வேண்டும்.

சங்கதி, பதிவு, தமிழ்நெட் இணையத்தளங்களில் பக்கச்சார்பற்ற செய்திகளை 2009 ஆம் ஆண்டு மே 19-க்குப் பின்னரான காலப்பகுதியில் எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில், மேற்படி இணையத்தளங்கள் அனைத்துலக தொடர்பகத்தால் நடத்தப்படுபவை.

யார், யார் நடத்துகின்றனர்; எந்த எந்த நாடுகளில் மேற்படி தளங்கள் நடத்தப்படுகின்றன என்கின்ற விபரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். ஆனால், அந்த விபரங்களை எல்லாம் வெளியிட்டு, அவர்களைப் போன்று காட்டிக்கொடுப்பவர்களாக இருக்க நான் விரும்பவில்லை.

தனிநபர்களால் நடத்தப்படுகின்ற இணையத்தளங்களை அனைத்துலக தொடர்பகத்தின்

நிறுத்தியிருக்கின்றனர். அத்தோடு பணிய வைத்து தமக்குச் சார்ப்பாக நடத்தவும் வைத்திருக்கின்றனர்.

அவ்வாறு நிறுத்தப்பட்ட இரண்டு இணையத்தளங்களாவன ஒன்று தமிழ்நேசன் மற்றையது புதினம்.

அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடி இணையத்தளமான தமிழ்நெட்,

. (உலகத் தமிழர் இயக்கம் வேறு யாருமில்லை, அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகளின் கனடாக் கிளை)

இளையபாரதியைப் போன்று இவ்வளவு காலமும் அவுஸ்திரேலியாவில் இன்பத் தமிழ் ஒலி பிரபாகரனை தூக்கிப் பிடித்தனர். இப்போது அவர் தமக்கு எதிரான செயற்பாடுகளில் இறங்குகின்றார் என்று தெரிந்தவுடன் அந்த நாட்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (அதுதாங்க அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகளின் அவுஸ்திரேலியக் கிளை) .

. (நான் அறிந்த வரை இளையபாரதியைப் போன்று தெனாவெட்டாக புலிகள் அமைப்பை எதிர்க்கக்கூடிய திராணியற்றவர் பிரபாகரன்)

.

இவரின் முக்கிய நோக்கம் புலம்பெயர் ஊடகங்களை தமிழ்மக்களிடமிருந்து தனிமைபடுத்துவதே.

இவர்கள் ஒரு குழுமமாக வேலை செய்கிறார்கள்.இவரின் உண்மையான அவதாரம் எது என்று தெரியவில்லை ஆனால் ஊடகத்தை திட்டுவதற்கு பாவிக்கும் அவதாரம் இது,

கனடா,லன்டன்,அவுஸ்ரேலியா என்று அங்கு இருக்கும் ஊடகங்களை திட்டி தீர்க்துள்ளார்.

இனிமேல் இவர் நடத்தும் ஊடகத்துக்கு மக்கள் வால்பிடித்தால் எல்லாம் சரியாகிவிடும்

Edited by Jil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.