Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு இந்தியாவின் கிடுக்கிப்பிடி!-கோபத்தில் ராஜபக்ஷே -

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை நிலவரம்.. நமது நிருபரிடமிருந்து...

என்.வி.

இந்தியா மீது செமக் கடுப்பில் இருக்கின்றார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே என்கின்றன கொழும்பில் அதிபர் மாளிகை வட்டாரங்கள்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை என்ற சுருக்குக் கயிறு ராஜபக்ஷே ஆட்சிப் பீடத்தின் மீது மெல்ல விழத் தொடங்கியிருக்கின்றது. இந்தச் சுருக்குக் கயிற்றின் பின்னால் செயற்படும் பிரதான சூத்திரதாரிகள் ஜப்பானும் இந்தியாவுமே எனத் தமக்கு நெருக்கமான தரப்புகளிடம் திட்டித் தீர்த்திருக்கின்றார் ராஜபக்ஷே.

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுத முனையில் அடக்கும் கொழும்பு அரசின் கொடூர ராணுவ நடவடிக்கைத் திட்டத்தின் உச்சக் கட்டம் கடந்த ஆண்டு முற்பகுதியில் உக்கிரமடைந்தபோது, பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் வேட்டையாடப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்டார்கள். மறைக்கப்பட்ட அந்தக் கொடூரங்களின் பின்னணியில் புதைந்து கிடக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தும் விதத்தில் அவை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மேற்குத்தரப்பு அப்போதே ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலின் முன் வைத்தபோது அந்த முயற்சியை வெளிப்படையாக எதிர்த்து அதற்குத் தடை போட்டது இந்தியாதான்.

அந்த இந்தியாவே அதே யுத்தக் கொடூர விஷயங்களுக்கான சர்வதேச விசாரணை அவசியம் என்று தற்போது மீண்டும் எழுந்திருக்கும் கோரிக்கைக்கு அதரவு தெரிவிக்கும் வகையில் செயற்படுகின்றது என இலங்கை அதிபர் ராஜபக்ஷே சீறிப் புழுங்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கின்றது.

ராஜபக்ஷே ஆட்சிப் பீடத்தின் நரித் தந்திரப்போக்குக் குறித்து காலம் பிந்தியாவது புதுடெல்லி புரியத் தொடங்கியிருப்பதுதான் இந்த நிலை மாற்றத்துக்குப் பிரதான காரணம் என்கின்றனர் அவதானிகள்.

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக, விடுதலைக்காகப்- போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தனது எதிரி அமைப்பாகக் கருதிச் செயற்பட்டது புதுடெல்லி. அதன் காரணமாக பொது எதிரியான புலிகளை அழிப்பதற்கு கொழும்புடன் முழு அளவில் கைகோர்த்தது அது. ஆனால் புலிகளை ராணுவ ரீதியில் அழிக்கும் வரை இந்தியாவுடன் சேர்ந்து செயற்படுவதாகக் காட்டிக் கொண்ட ராஜபக்ஷே நிர்வாகம், யுத்தத்தில் இறுதி வெற்றி கண்டாயிற்று என்ற உறுதி வந்ததும் இந்திய விஷயத்தில் ‘ஆறு கடக்கும் வரை அண்ணன்- தம்பி, ஆறு கடந்ததும் நீ யாரோ நான் யாரோ.....’ என்ற கணக்கில் செயற்படத் தொடங்கி விட்டது.

புலிகளுக்கு எதிராகத் தான் தொடுத்த கொடூரப் போர் மூலம் ஈழத்தமிழர் தாயகத்தையே துவம்சம் செய்து நாசம் பண்ணிய ராஜபக்ஷே நிர்வாகம் அந்த யுத்த வெற்றி மூலம் சிங்களவர் மத்தியில் தனக்குக் கிடைத்த செல்வாக்கை அடுத்தடுத்து நடத்திய ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவைகளை நல்ல அரசியல் முதலாக்கி தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டது.

தன்னை அரசியல் ரீதியாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உறுதிப்படுத்திக் கொண்ட ராஜபக்ஷே அரசு, அதைத் தொடர்ந்து அதுவரை புலிகளை அடக்குவதற்குத் தன்னைப் பகிரங்கப்படுத்தாமல் ஒத்துழைத்து வந்த புதுடெல்லிக்கு எதிராகவும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியமைதான் புதுடெல்லி அதிகார வர்க்கத்துக்குப் பெரும் எதிர்பாராத அதிர்ச்சியாக வந்து அமைந்தது.

இந்தியாவின் தென்கோடி முனையில் இந்தனூண்டு சைஸில் இருந்து கொண்டு இலங்கை பண்ணத் தொடங்கியிருக்கும் அதிகப் பிரசங்கித்தனமான நடவடிக்கைகள் புதுடெல்லியின் புவியியல் கேந்திர ஸ்திர உறுதிப்பாட்டுக்குப் பேராபத்தாக மாறத் தொடங்கியிருக்கும் நெருக்கடியை புதுடெல்லி காலம் பிந்தித்தான் இப்போதுதான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றது.

‘பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டும் விலாங்கு மீன்’ போல ஒரு புறம் புதுடெல்லியையும் தடவிக் கொள்வதாகக் காட்டிக் கொண்டு மறுபுறும் இந்தியாவிற்கு சவால் சக்தியாக விளங்கும் சீனாவை இலங்கையில் வலுவாகக் காலூன்றி, ஆதிக்கம் செலுத்தி, நிலைபெறுவதற்கும் இடமளிக்கும் ராஜபக்ஷே தந்திரத்தை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது என்ற கட்டத்தை புதுடெல்லி இப்போது அடைந்துவிட்டது.

இந்த நெருக்கடி நிலையைத் தணித்து கொழும்பைத் தன் வழிக்குக் கொண்டு வரும் முயற்சியாக பல எத்தனங்களை புதுடெல்லி எடுத்துப் பார்த்தது. கடைசியாக அண்மையில் ராஜபக்ஷே புதுடெல்லி வந்தபோது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கே நாசூக்காகவும் ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவும் -இந்த விஷயத்தை அதிபர் ராஜபக்ஷேவிடம் நேரடியாக எடுத்துரைத்தார் எனக் கூறப்படுகின்றது. அப்போதும் கூட, வழமைபோல சிரித்துப் பேசி, உறுதி கூறி, வார்த்தை ஜாலம் காட்டிய அதிபர் மஹிந்த ராஜபக்ஷே, பின்னர் செயலில் தொடர்ந்தும் சீன உறவை வலுப்படுத்தி நிற்கும் சமிக்ஞைகளையே வெளிப்படுத்தி வருகிறார் என்று பொருமுகிறது புதுடெல்லி.

புதுடெல்லியைக் கிள்ளுக் கீரையாக்கி எகிறிக் குதிக்கும் ராஜபக்ஷேவை எப்படியும் அடக்கி வழிக்குக் கொண்டு வருவதற்காக சாம, பேத, தான, தண்டம் என்ற நான்கு முறைகளில் தேவையானது எதையும் கையாளப் புதுடெல்லி தீர்மானித்துவிட்டதாகத் தெரிகின்றது. அதன் ஒரு கட்டமாகவே இலங்கையில் யுத்தக் குற்றம் தொடர்பாக ஆராய்ந்து ஆலோசனையை சமர்ப்பிப்பதற்காக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீன் மூன் நிபுணர் குழு ஒன்றை நியமிக்கும் நடவடிக்கை இந்திய ஆதரவுடன் கட்டவிழ்கிறது என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள்.

இந்த நிபுணர் குழுவை அமைக்கும் ஐ.நா. செயலரின் உத்தேசம், கடந்த பல மாதங்களாக செயல்படுத்தப்படாமல் பேச்சோடு கிடப்பில் போடப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இந்த எத்தனத்துக்கு இந்தியாவின் முழு ஆசீர்வாதமும் உண்டு என்ற சமிக்ஞை கிடைத்ததும் - ஏற்கெனவே அதற்கு மேற்குலகின் முழு ஆதரவும் உண்டு என்பதைப் புரிந்து கொண்டிருந்த - ஐ.நா. செயலாளர் நாயகம், அந்தத் திட்டத்தைச் செயற்படுத்த பச்சைக்கொடிகாட்டிவிட்டார்.

மனித குலத்துக்கு எதிரான யுத்தக் குற்றச்செயல்களுக்காக சூடானிய அதிபருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகள் கட்டவிழ்ந்தனவோ அதே பாணியிலான செயற்போக்கே இலங்கை அதிபர் ராஜபக்ஷே விஷயத்திலும் சர்வதேச சமூகத்தினால் அச்சொட்டாக முன்னெடுக்கப்படுகின்றன என்பது இங்கு அவதானிக்கத்தக்கது.

சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளுக்காகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என சர்வதேச விசாரணை மன்றினால் அடையாளம் காணப்பட்டுள்ள சூடானிய அதிபர், அதன் காரணமாக தமது நாட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றமை போன்ற நிலைமை இலங்கை அதிபருக்கும் ஏற்படுமா? அந்த விஷயத்தில் ஆரம்பத்தில் சூடானிய அதிபருக்கு ஆதரவான தரப்பினர் போல காட்டி அவரைக் காப்பாற்ற முயன்ற சீனா, ரஷ்யா போன்ற தரப்புகள் சர்வதேச கருத்து நிலைப்பாடு சூடானிய அதிபரின் நிர்வாகத்துக்கு எதிராக வலுவாக முற்றித் திரண்டபோது, ஐ.நா. மன்ற நடவடிக்கைகளில் சூடானிய அதிபரைக் கைவிட்டு பின்வாங்கியமை போன்று இப்போதும் இலங்கை அதிபரை ஐ.நா. மன்ற நடவடிக்கைகளில் காப்பாற்றக் கூடியவை என்று கருதப்படும் சீனா, ரஷ்யா போன்ற தரப்புகள் கடைசி நேரத்தில் கைவிட்டுப் பின்வாங்குமா? இதற்கெல்லாம் உரிய பதில்களை அடுத்துவரும் மாதங்களில் நாம் காணமுடியும்.

ஆனாலும் இந்தியாவைத் துச்சமாக மதித்து, எள்ளி நகையாடும் விதத்தில் நடந்து கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷேவை தனது வழிக்குக் கொண்டு வருவதற்கு புதுடெல்லி தற்போது வகுத்திருக்கும் வியூகம் -அல்லது காய் நகர்த்தல் -மிக்க காலதாமதமானது என்பது மட்டும் நிச்சயம்.

இந்தியாவின் இப்போதைய போக்குக்காக சீறி எரிச்சல்படும் ராஜபக்ஷே, தப்பித் தவறி சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை ஒன்று அவருக்கு எதிராக நடத்தப்படுமானால் அந்தக் கொடூர யுத்த நடவடிக்கைகளை எல்லாம் இந்தியாவின் வழிகாட்டுதலிலேயே - புதுடெல்லியின் சொல்படியே முன்னெடுத்தேன் என இந்தியாவுக்கு எதிராக ‘ஸேம் சைட்’ கோல் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதுதான் தற்போதைய நிலையாகும்.

http://www.suriyakathir.com/issues/innerpage.php?key1=T3

முத்தமிழ் வேந்தன்

சென்னை

இலங்கை நிலவரம்.. நமது நிருபரிடமிருந்து...

என்.வி.

இந்தியா மீது செமக் கடுப்பில் இருக்கின்றார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே என்கின்றன கொழும்பில் அதிபர் மாளிகை வட்டாரங்கள்.

http://www.suriyakathir.com/issues/innerpage.php?key1=T3

முத்தமிழ் வேந்தன்

சென்னை

ப.சிதம்பரம் :--

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று இருந்தால் விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வடகிழக்கு பிரதேசங்களின் "முடிசூடா மன்னன்" ஆக இருந்திருப்பார் .

"விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் எங்களுடைய ( இந்தியா யுடைய ) எதிரி இல்லை . அவருடைய பாதை எங்களுக்கு உடன்பாடு இல்லை " என்று கூறினார் !

http://timesofindia.indiatimes.com/india/Prabhakaran-was-not-our-enemy-Chidambaram/articleshow/6184317.cms

========

  • கருத்துக்கள உறவுகள்

பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டும் விலாங்கு மீன்’ போல ஒரு புறம் புதுடெல்லியையும் தடவிக் கொள்வதாகக் காட்டிக் கொண்டு மறுபுறும் இந்தியாவிற்கு சவால் சக்தியாக விளங்கும் சீனாவை இலங்கையில் வலுவாகக் காலூன்றி, ஆதிக்கம் செலுத்தி, நிலைபெறுவதற்கும் இடமளிக்கும் ராஜபக்ஷே தந்திரத்தை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது என்ற கட்டத்தை புதுடெல்லி இப்போது அடைந்துவிட்டது.

பாம்பின் கால் பாம்பறியும்!! spurs2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பின் கால் கையறியும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள்... ஆரிய இந்தியத்தின் முதல் எதிரி... வரலாறு ரீதியான வன்மம் இங்குள்ளது... அதி உச்ச ராஜ தந்திரத்திலும் சரி குறைந்த ராஜ தந்திரத்திலும் சரி தேவைக்கேற்பவே தமிழர்களை உபயோகம் செய்வார்கள்... தவிர இதை அக்கறை என எடுத்து கொள்ளுதல் கூடாது... ஆரிய இந்தியத்தினையும் தமிழரகள் ஒரே ஒரு முறை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி தூக்கி தூரகடாசினால்... அது அர்த்த சாஸ்த்திரம் படைத்த அர்த்த ராத்திரிகளுக்கு .... செருப்பால் அடித்த மாதிரி இருக்கும்... வெளிநாடுகளில் வாழும் ஈழத்தோழர்கள் ஒரு முறையாவது இவர்களுக்கு ஒரு விசயத்திலாவது பிம்பிளிக்கு பிளிப்பி காட்ட வேண்டும்... அப்போதுதான் கொஞ்சம் எட்ட நிற்பார்கள்....

பின்குறிப்பு: இவர்கள் ராணுவ ரீதியிலும்... ராஜதந்திர ரீதியிலும்... வலிமையான வர்க்ளுடன் மோதுவது இல்லை ... இவர்கள் வீரம் எல்லாம் சொந்தநாட்டு மக்கள் மற்றும் தனக்கும் வலிமை குறைந்த நாடுகளுடன் மட்டுமே... :D :D :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

சிறிலங்காவை வழிக்குக் கொண்டு வந்துவிட்டால் இந்தியாவின் பிடி தளர்ந்துவிடும். என்று நினைக்கிறீர்களா? இல்லவேயில்லை. சிறிலங்காவை விடுவிப்பதற்கு எந்த வழியிலும் சீனா உதவும். போரில் இந்தியாவின் நேடி ஈடுபாடு இருந்ததை சிறிலங்கா வெளிப்படுத்தும். அது இந்தியாவிற்கே ஆபத்தாக முடியும். ஜப்பான் இந்தியாவுடன் இணைந்து செயற்படாது. சீனாவுடன் சேர்ந்து செயற்படுவதற்கே ஜப்பானுக்கு வாய்ப்புகள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாதான் உண்மையான போர்க் குற்றவாளி!!!!!!!!!!!!!என்று ராஜபக்சே சொல்லப் போறான்

Edited by புலவர்

ஜப்பான் இந்தியாவுடன் இணைந்து செயற்படாது. சீனாவுடன் சேர்ந்து செயற்படுவதற்கே ஜப்பானுக்கு வாய்ப்புகள் அதிகம்.

ஜேர்மன் எப்படி பிரிட்டனை மீறி எதுவும் செய்யமுடியாதோ அதேமாதிரி ஜப்பான் அமெரிக்காவை மீறமுடியாது..

அமெரிக்கா.... இந்தியாவை, சீனாவுக்கெதிரா ' தற்கொலை' தாக்குதலாளியா பயன்படுத்த பாக்கிரார்கள்...

என்ன நடக்குது என்டு பொருத்திருந்து பாப்பம்..

எது எப்படியோ.. முதலில் அழியப்போவது தமிழ்நாடு எண்டு தெரிந்தாலும்.. இந்தியா அழிஞ்சு வீணாப்போன நல்ல சந்தோசமாய் இருக்கும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.