Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகுனி கதையும் ...ஈழத்தோழர்கள் எடுக்கவேண்டிய நிலையும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சகுனி கதையும் ..ஈழத்தோழர்கள் எடுக்கவேண்டிய நிலையும்...

frank-red-fox-colorado-lowrescrop.jpg

துரியோதனனின் தாய் காந்தாரி. அவள் காந்தார நாட்டு மன்னன் மகள். அவள் சகோத ரன் சகுனி. சகு னியை அறியாத வர் யாரும் இலர். பாண்டவர் களை சூதால் வென்று காட்டுக்கு அனுப்பிய அவனை அறியாதவர் யார்?

துரியோதன னின் உடன்பிறந் தோர் மொத்தம் நூறு பேர். ஆதலால் அவர்கள் ஈரைம்பதியர் என்றும் நூற்றுவர் என்றும் பெயர் பெற்றனர்.

இதைப்போலவே சகுனியின் உடன்பிறந்த வரும் நூற்றுவரே.

துரியோதனனுக்குத் தாய்மாமன்களாகிய நூற்றுவரும் ஏதோ ஒரு காரணத்தினால் அஸ்தினாபுரத்திலேயே தங்கியிருந்தனர்.

அரண்மனையில் எந்நேரமும் சகுனி சகோதரர்கள் இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருப்பர்.

தாய்மாமன் முதலிய பெரியோர் யாராயிருப்பினும் மரியாதை செய்ய வேண்டிய வழக்கம் அந்நாளில் இருந்தது.

ஆதலால் இளவரசர்களாகிய துரியோதனன், துச்சாதனன் முதலியோர் உட்காரவே முடிவ தில்லை. அலுத்துப் போய் வந்து துரியோதனன் சற்று சோர்ந்து அமர்வான். அப்போது யாரோ ஒரு மாமன் அவ்வழியே வந்து விடுவான். மாமனாயிற்றே! மரியாதை தராமல் இருக்கலாமா? உடனே இருக்கைவிட்டு எழுந்து வணக்கம் செலுத்துவான். அந்த மாமன் சென்று விட் டானே என்று அமர்ந்தால் வேறு ஒரு மாமன் வந்து விடுவான். உடனே எழ வேண்டும்.

யாருக்கும் வணங்கி அறியாத துரியோதனனுக்கு மாமன்மாரால் பெரும் துன்பம் நேர்ந்தது.

ஒருநாள் மிகவும் சலித்துப்போன துரியோத னன் ஏதோ காரணம் சொல்லி சகுனி சகோதரர் நூற்றுவரையும் பிடித்து சிறையில் அடைத்து விட்டான். இப்போது அடிக்கடி எழுந்து மரியாதை செலுத்த வேண்டிய தொந்தரவு இல்லையல்லவா?

சிறைப்பட்ட மாமன்மார் நூற்று வரையும் ஒரேயடி யாக ஒழித்துக் கட்டிவிட வேண் டும் என்று தீர்மா னம் செய்தான் துரியோதனன்.

சிறையி லுள் ளோர்க்கு உணவும் நீரும் தர வேண்டுமே! ஆளுக்கு ஒரு பருக்கை சோறும், ஒரு சின்ன நத்தைக் கூட்டில் நீரும் வேளாவேளைக்குத் தரும்படி ஏற்பாடு செய்தான். யாரும் கேட்டால் சோறும் நீரும் தருகின்றேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அனைவரையும் கொன்றுவிடலாம் என்பது துரியோதனன் சாதுரியம்.

நூற்றுவரில் மூத்தவனாகிய சகுனி சாமர்த்திய சாலி. தம் தம்பியர் அனைவரையும் அழைத்து, ""துரியோதனன் நம் அனைவரையும் கொல்ல ஏற்பாடு செய்துவிட்டான். நாம் அவனை அடியோடு அழித்துப் பழிக்குப் பழி வாங்க வேண்டும். இதற்கு நாம் ஒரு தந்திரம் செய்ய வேண்டும்'' என்றான்.

""அண்ணா! நீயோ அறிவாளி! அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது உன் கடமை. நீ என்ன சொல்கின்றாயோ அதை நாங்கள் அப்படியே செய்கின்றோம்'' என்றனர் தம்பியர்.

""ஒரு பருக்கைச் சோறும் நத்தைக் கூட்டில் தரும் தண்ணீரும் உண்டு யாரும் சில நாள்கூட உயிர் வாழ இயலாது. அனைவரும் இவ்வாறு இறப்பதைவிட நம்மில் யாராவது ஒருவன் உயிர் பிழைத்தால் பழிக்குப் பழி வாங்கத் தோதாக இருக்குமே! ஆதலால் நான் ஓர் யோசனை சொல்கின்றேன். அதன்படி செய்தால் துரியோதனனை அடியோடு ஒழித்துவிடலாம்'' என்றான் சகுனி.

""நூறு பேருக்குத் தரும் சோற்றையும் தண்ணீரை யும் யாராவது ஒருவன் மட்டும் சாப்பிட வேண்டும். அப்போது ஒருவனாவது மேலும் சில நாட்கள் உயிரோடு இருப்பான். யார் சாப்பிடுவது என்று தீர்மானம் செய்யுங்கள்'' என்றான் சகுனி.

""அண்ணா! நீதான் புத்திசாலி. நீ உயிரோடிருந் தால்தான் துரியோதனனைப் பழிவாங்க முடியும். ஆகையால் நீயே சோறும் நீரும் உண்ணுதல் வேண்டும்'' என்று அனைவரும் ஒருமித்து உடன்பட்டனர்.

பட்டினியால் ஒவ்வொருவராகப் பட்டொ ழிந்தனர். சகுனி மட்டும் சோறும் நீரும் சிறிதள வாவது உண்டமையால் உயிர் தப்பினான்.

அனைவரும் மாண்டிருப்பர் எனக் கருதிய துரியோதனன் சிறைச்சாலையில் புகுந்து பார்த்தான்.

துரியோதனன்மேல் ஆத்திரம் பொங்கி னாலும் சகுனி அதனை அடக்கிக் கொண்டான். ""அன்பு மருமகனே! நீ எனக்கு எவ்வளவு உபகாரம் செய்தாய்? இந்தக் கயவர்கள் அனைவரும் சேர்ந்து பட்டத்துக்கு உரியவனாகிய என்னை ஒழிக்கத் திட்டம் போட்டிருந்தனர். நீ அதை உணர்ந்து சிறையிலிட்டு, இந்தக் கொடிய வர்களை ஒழித்து எனக்கு காந்தார நாடு முழுவதையும் உரிமையாக்கி விட்டாய்! இதற்கு உனக்கு எப்படி கைம்மாறு செய்வது?'' என்று தேன் ஒழுகப் பேசினான். அவன் பேச்சை அப்படியே நம்பிவிட்டான் துரியோதனன்.

அன்று முதல் சகுனிக்குத் தடபுடலான உபசாரம் நடந்தது. அரண்மனையே சகுனி சொன்னபடி இயங்கியது. துரியோதனனும் சகுனி போட்ட கோட்டை தாண்டுவதில்லை.

எவ்வளவு உபசாரம் கிடைத்தாலும் சகுனி தன் குரோதத்தை மறக்கவில்லை.

துரியோதனனுக்கு நல்லவன்போல் நடித்து அவனைப் படுகுழியில் தள்ள சமயம் எதிர் பார்த்திருந்தான்.

சகுனியின் யோசனைப்படியே அஸ்தினா புரத்தில் புதிய அரண்மனை உருவானது. அரண்மனை புகுவிழாவுக்கு பாண்டவர் வரவழைக்கப்பட்டனர். விருந்து முடிந்த பின்பு சகுனி தருமனைச் சூதாட அழைத்தான்; வென்றான். திரௌபதியை மானபங்கப்படுத்தச் செய்தான். அதனால் பாண்டவரின் பகையைக் கிளறி விட்டான்.

சகுனி மூட்டிய பகைத்தீ பாரதப் போராக மூண்டது. துரியோதனன் அடியோடு அழிந்தான். துரியோதனன் அழிவு கண்ட சகுனி, பழிக்குப் பழி வாங்கிய நிம்மதியோடு உயிர் துறந்தான்...

படித்ததில் பிடித்தது..

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3926

-----------------------------------------------------------------------

எனக்கு இந்த கதைகளில் ஈடுபாடு இல்லையெனினும்... வலிந்தவனை இங்கு நாடு ரீதியாக யாராக இருந்தாலும்... உறவாடி கெடுக்க முடியும்... எப்படி எங்களுடைய வம்சாவழியினர் என கூறி அழிக்க துணைபோனார்களோ... அதே அஸ்திரத்தை கையில் எடுக்க வேண்டும்...

துரியோதனன் .. தன் தாய் மாமாக்கள அனைவரையும் சிறை வைத்து ஒரு பிடி சோறு ஒரு வேளை மட்டும் போட்டான்.இப்படி கிடைத்த சாப்பாட்டை எல்லோரும் சாப்பிட்டால், யாரும் வாழ முடியாது என்று கடைசி தம்பி அதி புத்திசாலி அவனுக்கு கொடுத்து மற்ற சகோதரர்கள் மாண்டார்கள்.அவந்தான் சகுனி. எடுத்தான் முடிவு. தன் சகோதரர்களை கொன்ற துரியோதனனை கூண்டோடு அழிப்பேன் என்று...அதனால் தான் அவன் உறவாடி கெடுத்தான்..அடுத்த பிறவியிலும் ஓநாயாக பிறந்து துரியோதனுடைய எலும்பை சுடுகாட்டில் தேடி எடுத்து சுவைத்து ஓநாயாக மாண்டான்... சுருக்கமாக சொன்னால்... முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்... :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றின் படிப்பினையை பகிர்ந்தமைக்கு நன்றி .........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றின் படிப்பினையை பகிர்ந்தமைக்கு நன்றி .........

நன்றி சகோதரி தங்களின் ஊக்கத்திற்கு..

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

.

கருணாநரியின் கதை போலிருக்கே....smiley-sunglasses.gif

.

  • கருத்துக்கள உறவுகள்

பேஷ் பேஷ் கத ரொம்ப நன்னாயிருக்கே!

  • 3 weeks later...

பகைவனை அழிக்கக் கூடிய ஒரு பகையை உருவாக்கவேண்டும் என்கிறீர்கள்.

அதுவும் ஒரு வழி தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.