Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் கடந்தகாலத்தை நாம் திருத்தவேண்டுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கடந்தகாலத்தை நாம் திருத்தவேண்டுமா?

"தமிழீழ விடுதலைப்புலிகள் தமது போராட்டத்தின் பாதையில் யாருடைய சொல்லையும் கேட்கவில்லை. அதனால்தான், இவ்வாறான வரலாற்று அழிவு இன்று தமிழ்மக்களுக்கு ஏற்பட்டது. அதன்விளைவாக இன்று தமிழர் தாயகத்தையும் தமிழ்மக்களையும் சிங்களவர்களிடம் புலிகளே தாரைவார்த்து கொடுத்துவிட்டார்கள்" - என்றதொரு கருத்துருவாக்கம் போருக்கு பின்னைய இன்றைய காலகட்டத்தில் தாராளமய எதிர்வினையாக பல்வேறு தளத்தில் பகிரப்பட்டுவருகிறது.

ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலம், தமிழர்களின் இருப்பின் மேல் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு ஆகிய தளங்களின் மீது நின்று தற்கால நிகழ்வுகளை அசைபோடும் சிலரும், "அன்றைக்கே சொன்னோம் நாம் இதெல்லாம் நடக்கும் என்று" - என்று விசிலடிச்சான் குஞ்சுகளாக விடுதலைப்புலிகளை விமர்சிக்கிறோம் என்றுகொண்டு அவலை என்று நினைத்து உரலை இடிக்கும் பலரும் - சிதைந்துபோன தமிழர்கள் படையையும் அவர்களின் போராட்ட அணுகுமுறைகளையும் மேற்கண்ட விமர்சனத்திற்குள் அடக்கிவருகிறார்கள்.

இவ்வாறான விமர்சனத்தை முன்வைப்பவர்களில், இரண்டாம் வகையினரின் பிரசார இயந்திரம் முன்னரை விட 2009 மே மாதத்துக்கு பின்னர் முழுநேரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதாவது, தென்னாபிரிக்க ஒக்டோபஸ் போல தாம் கூறியது போலவே - எவரையும் செவிமடுக்காத புலிகள் தோற்றுவிட்டார்கள் என்று கூறுவதில் இந்த வகையினர் சதா ஆத்ம திருப்தி அடைந்துகொள்கிறார்கள்.

அந்த வகையாறாக்களுக்கு ஒரு சிறு விளக்கம்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்து முடிந்த போர் எனப்படுவது சர்வதேசமும் ஒருங்குசேர கங்கணம் கட்டி நின்று நடத்திமுடித்த ஒன்றாகும். இதில் விடுதலைப்புலிகள் எவரது ஆலோசனையை கேட்டாலும், அந்த படை அழிக்கப்படவேண்டும் என்பதில் வல்லரசுகள் முழு முடிவோடு நின்றன. அதற்கு காரணம், அவர்களது கொள்கை பிடிப்பும் தென்னாசிய அரசியல் சக்கரத்தின் அச்சாணியாக மாறியிருந்த நிலையும் ஆகும். இன்னொருபுறம், அவர்களது போராட்டம் நியாயமானதொன்று என்ற உண்மைநிலை உலகளாவிய ரீதியிலும் உணரப்பட்டது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், வன்முறைக்கு பதில் வன்முறை என்ற சமன்பாட்டின்கீழ புலிகள் நடத்திய போரை சர்வதேசத்தினால் ஜீரணிக்கமுடியவில்லை. இந்த ஒட்டுமொத்த நிலைமையின் விளைவு எதுவென்று கேட்டால், அது உலகநாடுகள் புலிகளின் மீது அச்சம் கொண்டதாகும். அந்த அச்சத்தின் வெளிப்பாடே புலிகளின் மீது இவ்வாறு வரிசையில் நின்று சர்வதேசமும் போரிட்டு அழித்தமைக்கு முதலும் முழுமையானதுமான காரணமும் ஆகும். எதற்குமே வலுவற்ற - பெயரளவு - அமைப்பு என்று புலிகளை பார்த்து உலகம் நினைத்திருந்தால், அதனை சிங்களமே பார்த்துக்கொள்ளட்டும் என்றுவிட்டு உலகம் தன்பாட்டுக்கு இருந்திருக்கும். ஆனால், சூழ்ச்சியிலே இயங்கும் உலகின் கதவுகளை நீதிக்கைகளினால் தட்டியதன் விளைவுதான் புலிகளுக்கு ஏற்பட்ட இந்த அழிவுக்கு காரணம்.

இவ்வாறான ஒரு அழிவு ஏற்படாத வண்ணமிருக்க எவரால் ஆலோசனை கூறியிருக்கமுடியும்? புலிகள் தமது ஆலோசனையை கேட்டிருக்கலாம், கேட்டிருக்கலாம் என்று இப்போது ஆளுக்காள் சொல்வதெல்லாம், சிங்களதேசமும் சர்வதேசமும் போட்ட எலும்புத்துண்டை புலிகள் கவ்வியிருக்கலாம் என்று கூறும் ஆலோசனைகளே தவிர, தமிழர்களின் அபிலாஷைகளை புலிகள் போராடியதை விட மாற்றுவழியில் சென்று பெற்றுக்கொள்ள முன்மொழியப்பட்ட ஆலோசனைகள் அல்ல.

இல்லை, தமிழர்களின் முழுமையான அபிலாஷைகளை புலிகளை போல் அல்லாது வேறுவழியில் சென்று இலகுவாக பெற்றுக்கொண்டிருக்கமுடியும் என்று கூறும் அந்த ஆஸ்தான ஆலோசகர்கள், சிந்தனை சிற்பிகள் இப்போது தாராளமாக தமது கொள்கைகளை முன்வைக்கலாமே? புலிகளின் ஆளுமை இல்லாத இன்றை நிலையில் - அவர்கள்கூறும் அந்த புலி அச்சம் இல்லாமல் - தாரளமாக தமிழர்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கலாமே?

துரோகிகள் என்று புலிகள் தம்மை நிந்தித்தார்கள் என்று கூறுபவர்கள் யார்? சுப்பிரமணிசுவாமியா? சோவா? அல்லது சோபா சக்தியா? சிறீரங்கன், ரியாகரன் போன்றவர்களா?

தமிழர்களின் அடிப்படைகளையே ஏற்றுக்கொள்ளாது சிங்களத்திடம் அடிபணியுமாறு ஆலோசனை கூறியவர்களும் சாதீயத்துக்கு புலிகளிடம் என்ன தீர்வு இருக்கிறது என்று வெற்று வார்த்தைகளில் விமர்சனம் பேசியவர்களும்தான் இவர்கள். இவர்கள் தமிழர்களை சிங்களவர்களிடம் கூட்டி கொடுக்க முயன்றது மட்டுமல்லாமல், சாதீயம் பேசி தமிழர்களின் மத்தியில் பிளவுகளை மேலும் அதிகரிக்க முயற்சித்தவர்களும் ஆவர். பிரதேசவாதம் பேசி தான் புலிகள் அமைப்பினால் துரத்தப்பட்டமைக்கு சப்பைக்கட்டு கட்டிய கருணாவுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதில் எவருக்காவது வேறு கருத்து இருந்தால் கூறுங்கள்.

மக்கள் உரிமைக்கான இராணுவ போராட்டம் ஒன்றை பகிரங்க விவாதத்துக்கு உட்படுத்த முடியாது என்பதுகூட தெரியாது, விமர்சனம் - விளக்கம் - விவாதம் என்ற தொனிகளில் புலிகளுக்கு பதிலறிக்கை விடுத்தவர்களின் தற்போதைய குறைந்த பட்ச சாதனை என்ன? இனிமேல், அவர்களின் அதிக பட்ச சாதனை எதுவாக இருக்கும்?

தாங்கள் தோல்வி அடைந்தமைக்கான காரணத்தை புலிகள் ஆராய்ந்து அறிந்து, இனிவரும் காலங்களில் அவற்றை தவிர்க்க வேண்டும் என்று விண்ணப்பமிடும் விற்பனர்களுக்கு உறுதியான வரிகளாக இதனை கூறிக்கொள்கிறேன்.

அதாவது, விடுதலைப்புலிகளின் போராட்டத்தை பொறுத்தளவில் அவர்கள் இறுதிக்கணம்வரை நடந்துவந்த பாதை மிகச்சரியானதொன்றே. வன்முறைக்கு வன்முறை என்ற பதில்முறையில் போராடினார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களையும் பாதுகாக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தார்கள். தமது ஆற்றலுக்கு அப்பால் நடந்த போரிலிருந்து மக்களை காப்பாற்றுமாறு சர்வதேசத்தை இறைஞ்சினார்கள். எந்த கணத்திலும் தமது கொள்கையை விட்டுக்கொடுக்காது இறுதி மூச்சுவரை போராடினார்கள். தமது மக்களின் உரிமையை வேண்டி எந்த மண்ணிலிருந்து போராடினார்களோ, அந்த மண்ணிலேயே தமது இறுதி மூச்சையும் விட்டார்கள்.

இதைவிட, வரைவிலக்கணமான ஒரு உரிமை போராட்டத்தை இந்த உலகுக்கு தமிழினம் இனி தரமுடியாது. இதில் எங்கும் பிழையும் இல்லை.

ஆகவே, புலிகள் கடந்த காலத்தில் விட்ட பிழைகளை திருத்துகிறோம் என்று கூறிக்கொண்டு, நீதியும் வீரமும் நிறைந்த தமிழர்களது மூன்று தசாப்தகால வரலாற்றில் கறை பதித்துவிடாதீர்கள்.

http://alaiyosai.blogspot.com/2010/07/blog-post_22.html

Edited by கந்தப்பு

விடுதலை புலிகள் விட்ட ஒரே பிழை "அணு குண்டு" ஒன்றை வேண்டாமல் விட்டதுதான்.

அதற்கு உலகில் உள்ள மரியாதையை வேறு ஒன்றுக்கும் "இந்த நாகாரீக உலகம்" தர மறுக்கின்றது.

எதையும் திருத்த நினைப்பவர்கள், எதையுமே செய்யாதவர்களாகத்தானிருப்பார்கள். இப்போது நாம் எங்கே நிற்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு செயற்பட்டாலே போதும்.

கடந்தகால தவறுகளை திருத்துகிறோம் என்று எழுதி கண்கெட்ட பின் விழுந்தடித்து சூரிய நமஸ்காரம் செய்ய முயலும் சிலர், சிங்கள பயங்கரவாதிகளை எப்படி எதிர் கொள்ளலாம், அடக்கலாம் என்று துளிகூட எழுதுவதில்லை. இதிலிருந்து அவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போராட்டம் எம்மோடு தொடங்கியது

எம்மோடு வளர்ந்தது

அதை புரியவில்லை அல்லது தெரியவில்லை அல்லது அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று எவராவது சொல்வார்களாயின்

அவர்கள் போராட்டத்தோடு இருக்கவில்லை

அதனூடு பயணிக்கவில்லை

அல்லது அவர்கள் வெளியில் நின்றார்கள்

என்று தான் அர்த்தமே தவிர....

போராட்டம் அவர்களை விலக்கியதாகவோ

போராட்டம் அவர்களை அன்னியப்படுத்தியதாகவோ அர்த்தமல்ல....

அதனூடு இருந்தவர்களுக்கு

அதனூடு பயணித்தவர்களுக்கு

அதற்கு வேண்டியதை செய்தவர்களுக்கு

எல்லாமே தெரிந்திருந்தது

தெரியும்

அதேநேரம் தேவையற்ற அல்லது அவர்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றால்..

அதுவும் உணர்ந்தே, புரிந்து கொண்டே, தெரிந்தே... செய்யப்பட்டது

இவ்வாறான விமர்சனத்தை முன்வைப்பவர்களில்இ இரண்டாம் வகையினரின் பிரசார இயந்திரம் முன்னரை விட 2009 மே மாதத்துக்கு பின்னர் முழுநேரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதாவதுஇ தென்னாபிரிக்க ஒக்டோபஸ் போல தாம் கூறியது போலவே - எவரையும் செவிமடுக்காத புலிகள் தோற்றுவிட்டார்கள் என்று கூறுவதில் இந்த வகையினர் சதா ஆத்ம திருப்தி அடைந்துகொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் உண்மை தான் புலிகளை திருத்த கிளம்பியிருக்கும் கூட்டத்துக்கு அடிப்படையின் எமது இனத்தோடு இணைந்து செயலாற்றி பழக்கம் இல்லை போல இருக்கு....!

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தவறுகளை கண்டு பிடிக்கும் நேரம் இதுவல்ல... கடந்தகாலத்தில் யாரை அவரை கொடி உறவு என நம்பினார்களோ... அவர்களின் சுய ரூபம் வெளியாகிவிட்டது ... இனியாவது பாட்டி தேசம் பாட்டன் தேசம் எனகூறாமல் ஆக்கபூர்வமாக செயல்படுதல் வேண்டும்... இங்கே தவறு கண்டுபிடிப்பவர்கள்... கதிர்காமர் ஒவ்வோரு நாட்டுக்கும் சென்று புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்த போது என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அறிய அவா... ஏன் அவர்களையே முழுமையாக நம்ப வேண்டியதாயிற்று.? முதலில் காசு கொடுத்துவிட்டு தமிழீழம் கேட்க அவர்கள்(புலிகள்) அடியாட்கள் அல்ல... கடைசி நேரத்தில் சங்கரா சங்கரா என்றால் இப்படித்தான் ஆகும்...

புலிகள் முக்காலமும் கடந்தவர்கள். அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்களுக்கு எதுவும் கூறத்தேவையில்லை. ஒன்றும் கொடுக்கவும் தேவையில்லை. கடவுளின் கடந்த காலத்தை நாங்கள் திருத்த முடியுமா? கடவுளுக்கு கோயில் உண்டியலில ஒரு ரூவாய் பிச்சை போட்டு மனதில எங்களுக்கு ஒரு கோடி ரூவா கிடைக்கவேணும் என்று பிரார்த்தனை செய்வதுபோல அவ்வப்போது சிலர் புலிகளுக்கு சிலவற்றை இனாமாக வழங்கி - றால் போட்டு சுறா பிடிச்சுக்கொண்டு உள்ளார்கள்.

ஒரு குட்டி இடியப்பட கடை போட்டாலே பின்னூட்டல்கள் - வாடிக்கையாளர்கள் முக்கியமானவர்கள். இல்லாவிட்டால் இடியப்பம் கூட விக்க முடியாது.

ஆனால்..

சில விசுவாசிகள் இப்பிடி கட்டுரைகள் எழுதி தங்கள் புலி விசுவாசத்தை காட்டி நல்லபெயர் எடுக்க முயற்சிக்கிறீனம். வாழ்த்துகள்!

கெடுகுடி சொற்கேளாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.