Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்கள் இரசித்த பாடல் வரிகள்

Featured Replies

  • தொடங்கியவர்

படம்: பிதாமகன்

பாடியவர் : மது பாலகிருஷ்ணன்

பாடல் வரிகள் :

இசை : இளையராஜா

பிறையே பிறையே வளரும் பிறையே

இது நல் வரவே

மலரே மலரே மலர்ந்தாய் மலரே

உனக்கேன் தளர்வே

பயணம் எவர்க்கும் இங்கு முடியும்

இங்கு பிறந்தாயோ

உதயம் உனக்கு இங்கு தொடக்கம்

விழிகள் திறந்தாயோ

(பிறையே பிறையே ...)

தன்னந் தனியனாக மண்ணில் வர ஏங்கினாயோ

என்ன துணிச்சலோடு இந்த வரம் வாங்கினாயோ

சோலையில் நின்ற போதிலும் மாலையே என்ற போதிலும்

பூவெல்லாம் என்றும் பூக்களே

இங்கு மாறுமா அதன் பெயர்களே

குடிசை என்ன செய்யும் , கோட்டை என்ன செய்யும்

உன்னை மாற்றுமா ..........

(பிறையே பிறையே ...)

ஊர்வலங்கள் எல்லாம் வரும் உன்னை நோக்கி தானே

ஊரும் உறவும் ஏது எல்லாம் உனக்கு ஒன்று தானே

பணத்திலே தினம் புரண்டவர்

பதவியில் தலை கணத்தவர்

புகழிலே எல்லை போனவர்

நிலை உயர்ந்தவர் அதில் தாழ்ந்தவர்

இந்த பேதம் எல்லாம் வெந்து போக கண்டு

தெளிந்த மனிதன் நீ ........

(பிறையே பிறையே ...)

http://www.youtube.com/watch?v=4sgdHqRpzeI&feature=player_embedded

Edited by சூர்யா

  • Replies 63
  • Views 112k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதையில்லை

உன்னைத் தொட ஏணியில்லை

விண்ணிலே பாதையில்லை

உன்னைத் தொட ஏணியில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

...

பக்கத்தில் நீயும் இல்லை

பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை

ஸ்வாசிக்க ஆசையில்லை

பக்கத்தில் நீயும் இல்லை

பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை

ஸ்வாசிக்க ஆசையில்லை

கண்டு வந்து சொல்வதற்கு

காற்றுக்கு ஞானம் இல்லை

நீலத்தைப் பிரித்துவிட்டால்

வானத்தில் ஏதுமில்லை

தள்ளித் தள்ளி நீயிருந்தால்

சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

...

நங்கை உந்தன் கூந்தலுக்கு

நட்சத்திரப் பூப்பறித்தேன்

நங்கை வந்து சேரவில்லை

நட்சத்திரம் வாடுதடி

நங்கை உந்தன் கூந்தலுக்கு

நட்சத்திரப் பூப்பறித்தேன்

நங்கை வந்து சேரவில்லை

நட்சத்திரம் வாடுதடி

கன்னி உன்னைப் பார்த்திருப்பேன்

கால் கடுக்கக் காத்திருப்பேன்

ஜீவன் வந்து சேரும்வரை

தேகம் போல் நான் கிடப்பேன்

தேவி வந்து சேர்ந்துவிட்டால்

ஆவி கொண்டு நான் நடப்பேன்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதை இல்லை

உன்னைத் தொட ஏணி இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

படம்: சிகரம்

இசை: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எழுதியவர்: வைரமுத்து

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

http://www.youtube.com/watch?v=EIn_-3YdJz0&feature=related

http://kathaldesam.com/0/Mp3/LOVE-SAD-SONGS_02/Vannam Konda.mp3

  • தொடங்கியவர்

படம்: பலம்

இசை: யுகேந்திரன்

எழுதியவர்:

பாடியவர்: பலராம்,ஹரிணி

தேவதை தேவதை தேவதை

என் தேவதை காணவில்லை

காணவில்லை காணவில்லை...

தேவதையே தேவதையே

என் மனதை காணவில்லை

பறித்தவள் நீதானடி

கண்திறந்து பார்க்கையிலே

உன் முகம் தான் தெரிகிறதே

கனவென்று நினைதேனடி

கண் மூடினால் உன் ஜாபகம்

என்னென்னவோ செய்கின்றதே

அறியாமலே காதல் வந்து

என் நெஞ்சினை கொய்கின்றதே...

தேவதையே தேவதையே ......

பூவாலே பூவாலே

என்னை நீயும் தீண்டாதே

கண்ணென்னும் கணை கொண்டு

என்னை தூண்டாதே...

தூண்டாதே தூண்டாதே

என்னை நீயும் தூண்டாதே

நினைவாலே நீ என்னை

தினம் வாட்டாதே...

கடல்தன்னை தேடும்

நதி நீரை போல

மனம் இங்கு ஓடுதே

கனவுக்குள் மூழ்கி

காதலை தேடி

சுகம் இங்கு காணுதே

கண் மூடினால் உன் ஜாபகம்

என்னென்னவோ செய்கின்றதே

அறியாமலே காதல் வந்து

என் நெஞ்சினை கொய்கின்றதே...

தேவதையே தேவதையே ......

கண்ணோரம் ஒரு தேடல்

நெஞ்சோரம் உன் காதல்

தினம் தினம் என் மனதில்

கொண்டாடுதே...

உன் முகம் நான் காண

ஊரெங்கும் ஜன்னல்கள்

ஒரு கோடி மின்னல்கள்

சிரிக்கின்றதே ...

பூவிதழ் மீது

பொன் பனி தூவ

ஒரு போதை ஏறுதே

தேனிதழ் மீது

தென்றலும் மோதி

காயமாய் ஆனதே

கண் மூடினால் உன் ஜாபகம்

என்னென்னவோ செய்கின்றதே

அறியாமலே காதல் வந்து

என் நெஞ்சினை கொய்கின்றதே...

தேவதையே தேவதையே ......

Edited by சூர்யா

...

பக்கத்தில் நீயும் இல்லை

பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை

ஸ்வாசிக்க ஆசையில்லை

பக்கத்தில் நீயும் இல்லை

பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை

ஸ்வாசிக்க ஆசையில்லை

கண்டு வந்து சொல்வதற்கு

காற்றுக்கு ஞானம் இல்லை

நீலத்தைப் பிரித்துவிட்டால்

வானத்தில் ஏதுமில்லை

தள்ளித் தள்ளி நீயிருந்தால்

சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை

...

எனக்கு இந்தப் பாடல் வந்த புதிதில் ரொம்ப பிடிக்கும், ஆனால் அம்மா, அப்பாவை சிகரம் திரைப் படத்திற்கு கூட்டிச் சென்றேன், படத்தில் ஏனோ அந்தப் பாடல் நான் எதிர் பார்த்தது போல இல்லை... இருந்தாலும் எனக்கு பாடல் வரிகள் ரொம்பப் பிடிக்கும்.

இந்தப் பாடலை நான் நேற்று இரவு தேடி எடுத்துப் போடும் போது நித்திரைத் தூக்கத்தில் வரிகளை பல எழுத்துப் பிழைகளோடு எழுதிக்க் கொண்டு இருந்தேன்... நாளைக்கு இணைக்கலாம் என்று விட்டு விட்டேன், வந்தது பார்த்தல் இங்கே நுணா அதே வரிகளை quote பண்ணி இணைத்து இருக்கிறீர்கள். நன்றி :lol:

  • தொடங்கியவர்

படம் : எங்க ஊரு பாட்டுக்காரன்

பாடகர் : ஆஷா போஸ்

பாடல் : செண்பகமே

இசை : இளையராஜா

செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தா சம்மதமே

செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை

நானும் போக வந்தேனே

உன் மேலே ஆசைப்பட்டு

காத்து காத்து நின்னேனே.......(2)

உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு

என் மனம் ஏனோ வாடிடலாச்சு

என்னோட பாட்டு சத்தம்

தேடும் உன்ன பின்னாலே

எப்போ நீ என்னை தொட்டு

பேசபோரே முன்னாலே

சென்பகமே சென்பகமே

தென்பொதிகை சந்தனமே

தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தா சம்மதமே

பூவச்சு போட்டும் வச்சு

மேளம் கொட்டி கல்யாணம்

பூமஞ்சம் பொட்டு கூட

எங்கே அந்த சந்தோஷம் ...(2)

உன் அடி தேடி நான் வருவேனே

உன் வழி பார்த்து நான் இருப்பேனே

ராசாவே உன்னை தொட்டு

நானும் வாரமட்டேனா

என் வீட்டுக்காரன் பாட்டு

காதில் கேட்க மட்டேனா

செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தா சம்மதமே

செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

http://www.youtube.com/watch?v=MsW-qU0paQQ&feature=related

Edited by சூர்யா

பாடல்: இது ஒரு பொன்மாலைப் பொழுது

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

வரிகள்: வைரமுத்து

இந்து ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்

(இது ஒரு)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்

வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

(இது ஒரு)

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்

ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்

கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

(இது ஒரு)

  • தொடங்கியவர்

படம்: பானா காத்தாடி

பாடியவர் : சாதனா சர்கம்

பாடல் வரிகள் :நா .முத்துகுமார்

இசை : யுவன் ஷங்கர் ராஜா

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

அதன் பேர் என்னவென கேட்டேன்

என் கண்ணில் ஒரு தீ வந்தது

அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

என்ன அது இமைகள் கேட்டது

என்ன அது இதயம் கேட்டது

காதல் என உயிரும் சொன்னதன்பே

காதல் என உயிரும் சொன்னதன்பே

என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த

பேர் என்னவென கேட்டேன்

என் தீவில் ஒரு கால வந்தது அந்த

ஆள் எங்கு என கேட்டேன்

கண்டுபிடி உள்ளம் சொன்னது

உன்னிடத்தில் உருகி நின்றது

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

சில நேரத்தில் நம் பார்வைகள்

தவறாகவே எடை போடுமே

மழை நேரத்தில் விழி ஓரத்தில்

இருளாகவே ஒளி தோன்றுமே

எதையும் எடை போடவே

இதயம் தடையாய் இல்லை

புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்

என்னை நீ மாற்றினாய்

எங்கும் நிறம் பூட்டினாய்

என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

அதன் பேர் என்னவென கேட்டேன்

என் கண்ணில் ஒரு தீ வந்தது

அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

உன்னை பார்த்ததும் அந்நாளிலே

காதல் நெஞ்சில் வரவே இல்லை

எதிர்காற்றிலே குடை போலவே

சாய்ந்தேன் இன்று எழவே இல்லை

இரவில் உறக்கம் இல்லை

பகலில் வெளிச்சம் இல்லை

காதலில் கரைவதும் ஒரு சுகம்

எதற்கு பார்த்தேன் என்று

இன்று புரிந்தேனடா

என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

அதன் பேர் என்னவென கேட்டேன்

என்கண்ணில் ஒரு தீ வந்தது

அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

என்ன அது இமைகள் கேட்டது

என்ன அது இதயம் கேட்டது

காதல் என உயிரும் சொன்னது அன்பே

காதல் என உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

காதல் இது உயிரும் சொன்னது அன்பே

http://www.arthika.net/1234TB/new/BaanaKaathadi/TamilBeat.Com%20-%20Yen%20Nenjil.mp3

Edited by சூர்யா

  • தொடங்கியவர்

படம்:7 G ரெயின்போ கொலனி

பாடியவர் : கே கே

பாடல் வரிகள் :

இசை : யுவன் ஷங்கர் ராஜா

நினைத்து நினைத்து பார்த்தேன்

நெருங்கி விலகி நடந்தேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ்

உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

எடுத்து படித்து முடிக்கும் முன்னே

எறியும் கடிதம் எதற்கு பெண்ணே ?

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ்

உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்

உதிர்ந்து போன மலரின் மௌனமா ?

தூது பேசும் கொலுசின் ஒளியை

அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் ?

உடைந்து போன வளையல் பேசுமா ?

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்

விரல்கள் இன்று எங்கே ?

தோளில் சாய்ந்து கதைகள் பேச

முகமும் இல்லை இங்கே

முதல் கனவு முடியும் முன்னமே

தூக்கம் கலைந்ததே

(நினைத்து நினைத்து...)

பேசி போன வார்த்தைகள் எல்லாம்

காலம் தோரும் காதினில் கேட்கும்

சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ?

பார்த்து போன பார்வைகள் எல்லாம்

பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்

உயிரும் போகும் உருவம் போகுமா ?

தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே

தீயில் சேர்ந்து போகும்

திருட்டு போன தடயம் பார்த்தும்

நம்பவில்லை நானும்

ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்

என்றே வாழ்கிறேன் நானும் ...

http://www.youtube.com/watch?v=c7QHxeu6L_M&feature=related

Edited by சூர்யா

  • தொடங்கியவர்

படம்: பசங்க

பாடியவர் : நரேஷ் ஐயர் ,ஸ்ரேயா கோஷல்

பாடல் வரிகள் : தாமரை

இசை : ஜேம்ஸ் வசந்த்

ஓ ...

ஒரு வெக்கம் வருதே வருதே

சிறு அச்சம் தருதே தருதே

மனம் இன்று அலை பாயுதே

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனத

புது இன்பம் தாலாட்டுதே

போக சொல்லி கால்கள் தள்ளும்

நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும்

இது முதல் அனுபவமே

இனி இது தொடர்திடுமே

இது தரும் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா

குளிர் கொஞ்சம் தருமா தருமா

கனவென்னை களவாடுதே

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனத

புது இன்பம் தாலாட்டுதே

கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்

கூறு போட்டு கொள்ளும் இன்பம்

பர பர பரவேனவே

துடி துடித்திடும் மனமே

வர வர வர கரை தாண்டிடுமே

மேலும் சில முறை

உன் குறும்பிலே

நானே கோர்க்கிறேன்

உன் மடியிலே

என் தலை அணை

இருந்தால் உறங்குவேன்

ஆணின் மன திற்குள்ளும்

பெண்மை இருக்கிறது

தூங்க வைத்திடவே

நெஞ்சம் துடிக்கிறது

ஒரு வரி நீ சொல்ல

ஒரு வரி நான் சொல்ல

எழுதிடும் காதல் காவியம்

அனைவரும் கேட்கும் நாள் வரும்

மழை இன்று வருமா வருமா

குளிர் கொஞ்சம் தருமா தருமா

கனவென்னை களவாடுதே

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனத

புது இன்பம் தாலாட்டுதே

ஓ கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்

கூறு போட்டு கொள்ளும் இன்பம்

இது முதல் அனுபவமே

இனி இது தொடர்ந்திடுமே

வர வர வர கரை தாண்டிடுமே

காற்றில் கலந்து நீ

என் முகத்திலே

ஏனோ மோதினாய்

பூ மரங்களில்

நீ இருப்பதால்

என் மேல் உதிர்கிறாய்

ஆ தூது அனுப்பிடவே

நேரம் எனக்கில்லையே

நினைத்த பொழுதினிலே

வரணும் எதிரினிலே

வெயிலினில் ஊர்கோலம்

இதுர்வரை நாம் போனோம்

நிகழ்கிறதே கார்காலமே

நனைந்திடுவோம் நாள் தோறுமே

ஒரு வெக்கம் வருதே வருதே

சிறு அச்சம் தருதே தருதே

மனம் இன்று அலை பாயுதே

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனத

புது இன்பம் தாலாட்டுதே

போக சொல்லி கால்கள் தள்ளும்

நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும்

இது முதல் அனுபவமே

இனி இது தொடர்திடுமே

இது தரும் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா

குளிர் கொஞ்சம் தருமா தருமா

கனவென்னை களவாடுதே

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனத

புது இன்பம் தாலாட்டுதே

கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்

கூறு போட்டு கொள்ளும் இன்பம்

பர பர பரவேனவே

துடி துடித்திடும் மனமே

வர வர வர கரை தாண்டிடுமே

http://www.youtube.com/watch?v=ASBHvfZqWHo&feature=related

Edited by சூர்யா

  • தொடங்கியவர்

படம்: பசங்க

பாடியவர் : பால முரளிகிருஷ்ணா ,சிவாங்கி

பாடல் வரிகள் : யுகபாரதி

இசை : ஜேம்ஸ் வசந்த்

அன்பாலே அழகாகும் வீடு

ஆனந்தம் அதற்குள்ளே தேடு

சொந்தங்கள் கை சேரும் போது

வேறொன்றும் அதற்கில்லை ஈடு

அன்பாலே அழகாகும் வீடு .....

வாடகை வீடே என்று

வாடினால் ஏது இன்பம்

பூமியே நமக்கானது ...ஒ ஒ .

சோகமே வாழ்க்கை என்று

சோர்வதால் ஏது இலாபம்

யாவுமே இயல்பானது

மாறாமல் வாழ்வும் இல்லை

தேடாமல் ஏதுமில்லை

நம்பிக்கை விதையாகுமே

கலைகின்ற மேகம் போலே

காயங்கள் ஆறிப்போக

மலரட்டும் எதிர்காலமே..

அன்பாலே அழகாகும் வீடு

ஆனந்தம் அதற்குள்ளே தேடு

சொந்தங்கள் கை சேரும் போது

வேறொன்றும் அதற்கில்லை ஈடு

பாசமே கோவில் என்று

வீட்டிலே தீபம் வைத்தால்

கார்த்திகை தினம்தோறுமே...ஆ....

நேசமே மாலை என்று

நெஞ்சிலே சூடிக்கொண்டால்

வாசனை துணையாகுமே ..ஆ ....

கூடினால் கோடி நன்மை

சேருமே கையில் வந்து

வாழ்ந்திடு விரையாமலே

ஏணியே தேவையில்லை

ஏறலாம் மேலே மேலே

தோல்விகள் வெறும் கானலே

அன்பாலே அழகாகும் வீடு

ஆனந்தம் அதற்குள்ளே தேடு

சொந்தங்கள் கை சேரும் போது

வேறொன்றும் அதற்கில்லை ஈடு

அன்பாலே அழகாகும் வீடு .....

http://www.arthika.net/1234TB/new/Pasanga/TamilBeat.Com%20-%20Anbaale%20Azhagagum.mp3

Edited by சூர்யா

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=fpmj4GejQ0w&feature=player_embedded

சாதிமல்லி பூச்சரமே

சங்கத்தமிழ் பாச்சரமே

ஆசையின்னா ஆசையடி

அவ்வளவு ஆசையடி

என்னன்னு முன்னேவந்து

கன்னே நீ கொஞ்சம் கேட்டுக்கோ

காதலில் உண்டாகும் சுகம்

இப்போது மறப்போம்

கன்னித்தமிழ் தொண்டாற்று

அதை முன்னேற்று

பின் கட்டிலில் தாலாட்டு

சாதிமல்லி பூச்சரமே …

எனது வீடு எனது வாழ்வு

என்று வாழ்வது வாழ்க்கையா

இருக்கும் நாலு சுவருக்குள்ளே

வாழ நீ ஒரு கைதியா

தேசம் வேறல்ல தாயும் வேறல்ல

ஒன்றுதான்

தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும்

ஒன்றுதான்

கடுகுபோல் உன்மனம் இருக்கக்கூடாது

கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்

உன்னைப் போல் எல்லோரும் என எண்ணோணும்

அதில் இன்பத்தைத் தேடோணும்

சாதிமல்லி பூச்சரமே……

உலகமெல்லாம் உண்ணும்போது

நாமும் சாப்பிட எண்ணுவோம்

உலகமெல்லாம் சிரிக்கும்போது

நாமும் புன்னகை சிந்துவோம்

யாதும் ஊரென யாரு

சொன்னது சொல்லடி

பாடும் நம் தமிழ்ப் பாட்டன்

சொன்னது கண்மணி

படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா

படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்

கேட்டுக்கோ ராசாத்தி தமிழ்நாடாச்சு

இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதிமல்லி பூச்சரமே…

  • கருத்துக்கள உறவுகள்

படம்: முதல் மரியாதை

பாடியவர்: மலேசியா வாசுதேவன் எஸ் ஜானகி

இசை: இளையராஜா

கவிஞர் :வைரமுத்து

பூங்காற்று திரும்புமா? என் பாட்டை விரும்புமா?

............................................................................................

............................................................................

உள்ள அழுகின்றேன் வெளியே சிரிக்கின்றேன்

நல்ல வேசம்தான் வெளுத்து வாங்கின்றேன்

உங்க வேசம்தான் கொஞ்சம் மாறனும்

எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்........

http://www.youtube.com/watch?v=1ujkKvIpyfY

  • தொடங்கியவர்

படம்: அங்காடித் தெரு

பாடியவர்: ரஞ்சித்

இசை: விஜய்அன்டனி

கவிஞர் :

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை

அனால் அது ஒரு குறை இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை

அனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்க வில்லை

அவளை படித்தேன் முடிக்க வில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்க வில்லை

இருந்தும் கவனிக்க மறக்க வில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை …

அவள் நாய்க்குட்டி எதுவும்

வளர்க்கவில்லை

நான் காவல் இருந்தால்

தடுக்கவில்லை

அவள் பொம்மைகள் அணைத்து

உறங்கவில்லை

நான் பொம்மை போல பிறக்க வில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை

அந்த காட்டில் தொலைத்தேன் மீளவில்லை

அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை

கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை......

அவள் பட்டு புடவை என்றும்

அணிந்ததில்லை

அவள் சுடிதார் போல எதுவும்

சிறந்ததில்லை

அவள் திட்டும் போதும்

வலிக்க வில்லை

அந்த அக்கறை போல

வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசம் இல்லை

அவளில்லாமல் சுவாசம் இல்லை

அவள் சொந்தம் பந்தம் எதுவும் இல்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒற்றும் கலர் இல்லை

அனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்க வில்லை

அவளை படித்தேன் முடிக்க வில்லை

அவள் உதுதும் உடைகள் பிடிக்க வில்லை

இருந்தும் கவனிக்க மறக்க வில்லை

http://www.youtube.com/watch?v=xcXmg1rpsEQ&feature=related

Edited by சூர்யா

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுவதும் அவனது வீடு

கண்கள் மூடியே வாழ்த்து பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு

கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு

என்றும் வாழணும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்

எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில்

வாழ்ந்து விடை பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுவதும் அவனது வீடு

கண்கள் மூடியே வாழ்த்து பாடு

பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது

வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ....... ம்..ம்ம்..

எதுவரை வாழ்க்கை அழைகிறதோ

அதுவரை நாமும் சென்றிடுவோம்

விடை பெறும் நேரம் வரும்போதும்

சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்

பரவசம் இந்த பரவசம்

என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

(கடவுள் தந்த அழகிய...)

நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது

மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது

கோடையில் இன்று இலை உதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்

வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்

குயில்களின் பாட்டு காற்றில் வரும்

முடிவதும் பின்பு தொடர்வதும்

இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தான் நீ கேளடீ...

(கடவுள் தந்த அழகிய ...)

படம்: மாயாவி

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள்: SPB சரண், கல்பனா

பாடலாரியர்: பழனி பாரதி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மான் கண்ட சொர்க்கங்கள்…

காலம் போகப்போக யாவும் வெட்கங்களே…

ஏன் ரெண்டு பக்கங்கள்

பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே…

சென்னையில் கட்டுப்பெட்டித்தனமான middle class பெண்ணான நாயகி, கணவனை நம்பி பிரான்ஸுக்குப் போகிறாள். போன இடத்தில்தான் அவனது மன்மத லீலைகள் ஒவ்வொன்றாக முடிச்சவிழ்கின்றன.

அந்த சூழலை கவிஞர் வார்த்தெடுக்கும் விதம் பாருங்கள்….

தாமரைப் பூவென்றான்

காகிதப் பூவானான்

ராமனைப் போல் வந்தான்

ராவணன் போலானான்

பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது

ஊருக்கு ஒரு உள்ளம்

ஊருக்கு ஒரு எண்ணம்

யாருக்கு அவன் சொந்தம்

யாருக்கு அவன் மஞ்சம்

கண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாலே பொன்மங்கை….

நம்ப வைத்து கழுத்தறுக்கும் கயமை குணம் கொண்ட கணவன் பற்றிய வர்ணனைகளை கவியரசர் சொற்களுக்குள் இப்படி சிறைப்பிடித்திருப்பார்…

வேதங்கள் அறிகின்றான்

வேதனை தருகின்றான்

நல்லவன் செல்லாத பாதையில் செல்கின்றான்

அப்பாவி பெண்ணுள்ளம்

இப்பாவி செயல் கண்டு தள்ளாடுது

காலையில் ஓர் வண்ணம்

மாலையில் ஓர் வண்ணம்

மாறுது அவள் பாதை

வாடுகிறாள் பாவை

பூச்சூடி வந்தாளே புரியாமல் நின்றாளே இப்போது!

சோகம், விரக்தியின் உச்சம் என்னவென்பதை கீழ் வரும் வரிகள் படித்தால்… கேட்டால் புரிந்து கொள்ளலாம்.

“ஏன் இந்த சேய் என்று தாளாத நோய் கொண்டாள் இப்போது…” – எத்தனை கொடுமையை தன் கணவனிடம் அனுபவித்திருந்தால் ஒரு பெண் இப்படியெல்லாம் எண்ணுவாள்…

இந்தக் கேள்வியை, பாடலைக் கேட்பவர் ஒவ்வொருவர் மனதிலும் எழ வைத்திருப்பது கவிஞரின் வரிகளுக்கு மட்டுமே உள்ள வலிமை.

…ஆசையில் ஓர் நாளில்

பாடிய ஓர் பாட்டில்

தாயென ஆனோமே சேயினைத் தந்தோமே…

ஏன் இந்த சேய் என்று தாளாத நோய் கொண்டாள் இப்போது…

பாசத்தில் நீராடி

பந்தத்தில் போராடி

வேஷத்தைத் தொடர்வாளா

வேதனைப் பெறுவாளா

ஊரில்லை உறவில்லை

தனியாக நின்றாலே பூமாது!

எப்படியாவது அந்த கொடியவனிடமிருந்து தாய்நாட்டுக்கு தப்பித்துப் போய்விட வேண்டும்… ஆனால் போக வழி தெரியாது… இத்தனைநாள் வழிபட்ட கடவுளாவது காப்பாற்ற வரமாட்டாரா? – இதுதான் இயலாமையின் உச்ச கட்டம். அந்தக் கடைசி வரிகளைக் கேட்பவர் கண்ணோரங்கள் நிச்சயம் கசிந்துவிடும்… பாடலை அத்தனை பாவத்துடன் பாடியிருப்பார் எஸ்பிபி.

தன் வழி செல்கின்றாள்

சஞ்சலம் கொள்கின்றாள்

எவ்விடம் செல்வாளோ

எவ்விதம் செல்வாளோ

எங்கெங்கும் மேகங்கள் எங்கெங்கும் பனிமூட்டம் இப்போது

இந்தியத் தாய்நாட்டை எண்ணுகிறாள் மங்கை

சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று

தாய்வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதோ இப்போது!

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கும் வெட்கமில்லை

இந்த உலகுக்கும் வெட்கமில்லை

யாருக்கும் வெட்கமில்லை

இதிலே அவளுக்கு வெட்கமென்ன..!

ஏ சமுதாயமே....

மேலும் கீழும் கோடுகள் போடு

அதுதான் ஓவியம்

நீ சொன்னால் காவியம்

ஓவியம் என்றால் என்னவென்று

தெரிந்தவர் இல்லையடா..!

குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்

அதுதான் தொல்லையடா..!

அத்தனை பழமும் சொத்தைகள்தானே

ஆண்டவன் படைப்பினிலே..!

அத்திப்பழத்தை குற்றம் கூற

யாருக்கும் வெட்க்கமில்லை..!

மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து

முதுகைப் பாருங்கள்..!

முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு

அதனைக் கழுவுங்கள்..!

சுட்டும் விரலால் எதிரியை காட்டி

குற்றம் கூறுகையில்..!

மற்றும் மூன்று விரல்கள்

உங்கள் மார்பினை காட்டுதடா..!

எங்கேயாவது மனிதன் ஒருவன்

இருந்தால் சொல்லுங்கள்..!

இருக்கும் அவனும் புனிதன் என்றால்

என்னிடம் காட்டுங்கள்..!

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்

அவனுக்கு வெட்கமில்லை..!

அத்தனை பேரையும் படைத்தானே

அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..!

இப்போதிந்த உலகம் முழுவதும்

எவனுக்கும் வெட்கமில்லை..!

எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்

எமனுக்கும் வெட்கமில்லை..!

http://songs.ellamey.com/KANNADASAN/music/OORUKKUM VETKAMILLAI.mp3

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

film : eeramAna rOjAvae

singers : KJY, SJ

music : IR

lyric : vaali

வா வா அன்பே பூஜை உண்டு, பூஜைகேற்ற பூக்கள் ரெண்டு

பறவை அழைத்து , அதற்கொரு துணையும் கிடைத்தது

சிறகை விரித்தது , வலம் வரத்தான் ..

(வா வா)

மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்கிறான்

வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான்

அந்தி வெயில் வேளைதான் ஆசை பூக்கும் நேரம்

புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும்

போதும் போதும் தீர்ந்தது வேதனை

வண்ண மானும் தான் சேர்ந்தது நாதனை

விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை

(வா வா)

நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது

நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது

மலரை வண்டு மொய்திட மாதம் தேதி ஏது

மீன மேஷம் பர்பதோ காதல் தோன்றும் போது

காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன்

கையில் நான் உன்னை வாங்கினேன் வாங்கினேன்

நீயும் நீயல்ல நானும் நானல்ல கண்ணா ...

(வா வா)

http://www.youtube.com/watch?v=tzmAFSn1oQ8&feature=player_embedded#!

Edited by சூர்யா

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஓர் இனிய மனது இசையை அணைத்து

படம்:ஜொனி

பாடியவர்: சுஜாதா

இசை:ஏ.இசைஞானி

லாலா.. லலலா.. லலலா.. லலலா.. லலலா.. லாலா.. லாலா லால லாலா..

லாலா லாலா லல லாலா.. லாலா லாலா லல லாலா..

லாலா.. லலலா.. லலலா.. லலலா.. லலலா.. லாலா..

...

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

அந்த சுகம்.. இன்ப சுகம்.. அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

...

ஜீவனானது இசை நாதமென்பது.. முடிவில்லாதது

வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசையென்றானது

ஆஹா.. ஆஹாஹா.. எண்ணத்தில் ராகத்தின் மென் ஸ்வரங்கள்

என் உள்ள மோனத்தின் சங்கமங்கள்

இழைந்தோடுது.. இசை பாடுது

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

...

மீட்டும் எண்ணமே.. சுவையூட்டும் வண்ணமே.. மலர்ந்த கோலமே

ராக பாவமே.. அதில் சேர்ந்த தாளமே.. மனதின் தாபமே

ஆஹா.. ஆஹாஹா.. பருவ வயதின் கனவிலே

பறந்து திரியும் மனங்களே

கவி பாடுங்கள்.. உறவாடுங்கள்

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

அந்த சுகம்.. இன்ப சுகம்.. அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/I-J/Jhony 1980 - Oruiniyamanadhu - TamilWire.com.mp3

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கு மை அழகு

கவிதைக்கு பொய் அழகு

கண்ணத்தில் குழி அழகு

கார் கூந்தல் பெண் அழகு

கண்ணுக்கு..)

இளமைக்கு நடை அழகு

முதுமைக்கு நரை அழகு

கள்வர்க்கு இரவு அழகு

காதலர்க்கு நிலவு அழகு

நிலவுக்கு கரை அழகு

பறவைக்கு சிறகு அழகு

அவ்வைக்கு கூன் அழகு

அன்னைக்கு சேய் அழகு

(கண்ணுக்கு..)

விடிகாலை விண் அழகு

விடியும் வரை பெண் அழகு

நெல்லுக்கு நாற்று அழகு

தென்னைக்கு கீற்று அழகு

ஊருக்கு ஆறு அழகு

ஊர்வலத்தில் தேர் அழகு

தமிழுக்கு ழா அழகு

தலைவிக்கு நான் அழகு

(கண்ணுக்கு..)

படம்: புதியமுகம்

இசை: AR ரஹ்மான்

பாடியவர்: உன்னி மேனன்

http://www.youtube.com/watch?v=LO9AemTUNb0&feature=player_embedded

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்

குரல்: P சுசீலா

வரிகள்: கண்ணதாசன்

படம் :பாவ மன்னிப்பு

அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்...

எப்படி சொல்வேனடி

அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணைத்தான்

எப்படி சொல்வேனடி

(அத்தான்)

ஏனத்தான் என்னைப் பாரத்தான் கேளத்தான் என்று சொல்லித்தான் (2)

சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான் அழைத்தான் சிரித்தான் அணைத்தான்

எப்படி சொல்வேனடி

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் முத்துத்தான் உடல் பட்டுத்தான் (2)

என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்

எப்படி சொல்வேனடி

(அத்தான்)

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Attathan Yenna Than - Kannadhasan - Karpagam.mp3

படம்: ஆட்டோகிராவ்

பாடல் வரிகள்: பா. விஜய்

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகலொன்று வந்திடுமே!

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,

இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!

மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்

உடைந்து போகக்கூடாது,

என்ன இந்த வாழ்க்கை என்ற

எண்ணம் தோன்றக்கூடாது!

எந்த மனிதன் நெஞ்சுக்குள்

காயமில்லை சொல்லுங்கள்!

காலப் போக்கில் காயமெல்லாம்

மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே

மண் மீது சிலையாகும்,

வலி தாங்கும் உள்ளம் தானே

நிலையான சுகம் காணும்!

யாருக்கில்லைப் போராட்டம்!

கண்ணில் என்ன நீரோட்டம்!

ஒரு கனவு கண்டால்

அதை தினம் முயன்றால்

ஒரு நாளில் நிஜமாகும்!

பாடல்: ஓர் இனிய மனது இசையை அணைத்து

படம்:ஜொனி

பாடியவர்:ஜென்சி

இசை:ஏ.இசைஞானி

நுணா, மீண்டும் எனது வாதம் இந்த பாடல் சார்பாக ஆரம்பம். - மன்னிக்கவும்.

இந்த பாடலை பாடியது சுஜாதா. ஜென்சி அல்ல.

அண்மையில் மனதோடு மனோ நிகழ்ச்சியில் சைலஜா வந்திருந்தார். அவர் கூட ஜானி படத்தில் வரும் நான்கு பெண்குரல் பாடல்களும் நான்கு பாடகியரால் பாடப்பட்டன என்று கூறியுள்ளார். ஜென்சி பாடியது 'என் வானிலே' பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

நுணா, மீண்டும் எனது வாதம் இந்த பாடல் சார்பாக ஆரம்பம். - மன்னிக்கவும்.

இந்த பாடலை பாடியது சுஜாதா. ஜென்சி அல்ல.

அண்மையில் மனதோடு மனோ நிகழ்ச்சியில் சைலஜா வந்திருந்தார். அவர் கூட ஜானி படத்தில் வரும் நான்கு பெண்குரல் பாடல்களும் நான்கு பாடகியரால் பாடப்பட்டன என்று கூறியுள்ளார். ஜென்சி பாடியது 'என் வானிலே' பாடல்.

agreez.gif :)

Thanks, good to know! :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா காய்களும் வரும் இந்தப் பாடல் எனக்கு மிகவும்பிடிக்கும்

அத்திக்காய் ........அந்த திசையாய்

இத்திக்காய் ....இத்தி மரக் காய் ..........இந்த திசை யாய்

ஆலங்காய் ......ஆல மரக் காய்

விளங்காய் .........விளாங்காய் ........விளங்கி கொள்வாய்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.