Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களாக இருக்க இலங்கையினை விட்டுக்கொடுக்கோம் - டக்ளசின் புதியசிந்தனை

Featured Replies

தமிழர்களைப் பொறுத்த வரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதனையே எமது இலட் சியமாகக் கருதுகி றோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ, தமிழர்களாக இருப்பதற்கு இலங்கையையோ என்றுமே விட்டுவிட நாம் ஒப்புக்கொள்ளமாட்டோம்.

கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன் நேற்றுச் சாட்சியமளித்த டக்கு கூறியுள்ளார்.

இந்த நாட்டின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் சிங்கள, முஸ்லிம் சகோதரர்கள் உறுதியான கரங்களை நீட்டி அதன் ஊடாக அழகிய எங்கள் இலங்கைத் தீவில் அனைத்து மக்களும் பொதுவான சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து வாழ்வியல் உரிமைகள் செழிக்க வாழ்வோம் வாருங்கள் என்று சிங்கள சகோதர மக்களை நோக்கியும், இஸ்லாமிய சகோதர மக்களை நோக்கியும் நாம் அழைப்பு விடுகின்றோம்.

மௌன இடைவெளி நீக்கப்படவேண்டும்

கடந்த ஐம்பது வருடகால இலங்கை வரலாற்றை மீட்டுப்பார்க்கும்போது ஒரு முக்கியமான உண்மை பளிச்சிட்டுத் தெரி கின்றது. அதாவது சாதாரண தமிழ் மக்களின் நியாபூர்வமான கோரிக்கைகள் சாதாரண சிங்கள மக்களிடத்தில் சரிவர எடுத்துக் கூறப்படவில்லை. அதே போலவே சாதாரண சிங்கள மக்களின் நட்புணர்வும் இணைந்து செல்லும் பாங்கும் தமிழ் மக்களிடத்தே எடுத்துக் கூறப்பட வேயில்லை. இந்த மௌன இடைவெளியை இல்லாமல் செய்வதன் மூலமாகவே நாம் ஒன்றுபட்ட பிரிக்கப்பட முடியாத இலங் கைய ஏற்படுத்தலாம்.

கடந்த காலங்களில் புலிகளின் தலைமையால் அப்பாவி சிங்கள சகோதர மக்களும், இஸ்லாமிய சகோதர மக்களும் கொன்றொழிக்கப்பட்ட அனைத்துக் கொடிய வன்முறைகளுக்கும் நாம் மனத்துயரங்க ளோடு பகிரங்கமாகவே மன்னிப்பு கேட் கின்றோம். அப்பாவி மக்களான உங்களைக் கொன்றொழித்த புலிகளின் தலைமையை உங்கள் மனங்களில் வைத்து நீங்கள் தமிழ் மக்களைப் பார்க்காதீர்கள். தமிழ் மக்களைப் போல் உங்களையும் நேசிக்கும் எங்களைப் போன்றவர்களின் முகங்களுக்கு ஊடாக பாருங்கள்.

என்றும் கூறினார் டக்ளஸ்.

.

Eelanatham.net

  • கருத்துக்கள உறவுகள்

செய்து கிழிச்சார் .......

டக்கிளசின் சிந்தனையிலிருந்து...

உனது கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவைகள் அல்ல. அவைகள் ஒவ்வொன்றும் உனக்கு நீயே என்றோ ஒரு நாள் தூவி விட்டவைகள். இதைத்தான் இந்த இடத்தில் என்னால் கூற முடியும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று நடைமுறைப்படுத்த தவறியிருந்த புலிகளின் தலைமை அதன் பின்னரும் கனிந்து வந்திருந்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருந்தது.

பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை…

சந்திரிகா குமாரணதுங்க அரசுடனான பேச்சுவார்த்தை….

ரணில் விக்கிரமசிங்க அரசுடனான பேச்சுவார்த்தை….

இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசுடனான பேச்சுவார்த்தை….

இவ்வாறு தொடர்ச்சியாக சர்வதேச மத்தியஸ்தளங்களோடு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளின் போது அர்த்தமற்ற நிபந்தனைகளை விதிப்பதைத் தவிர்த்து, சாத்தியமான வழிமுறையில் புலிகளின் தலைமை அரசியல் தீர்வொன்றிற்கு உடன் பட்டிருந்தால் தமிழ் மக்கள் அழிவுகளைச் சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்திருக்காது.

பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம், என்பன உருவாக்கப்பட்ட போது அந்த ஒப்பந்தங்களை கிழித்தெறிந்து அதை தடுத்து நிறுத்தியிருந்தவர்கள் இலங்கையின் பெரும்பான்மையினம் சார்ந்த அன்றைய அரசியல் தலைமைகளே என்பதில் எந்தவித மறு பேச்சுக்கும் இங்கு இடமில்லை.

ஆனாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் முதல், அதற்கு பின்னரான அனைத்து முயற்சிகளும் தவறவிடப்பட்டமைக்கான தவறுகளை தமிழ்த்; தலைமைகளே ஏற்க வேண்டும்.

மூலம் : : கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் முன்பாக 03.09.2010 வழங்கிய சாட்சியம்.

Edited by Bond007

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாத எஜமானுக்கு விசுவாசமாக போட்ட பெட்டிக் கடையில் கொலைகள் முதல் எல்லாமே கொடிகட்டி பறக்குது. இப்படி 'ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்தி சென்ற டக்ளஸ் தேவானந்தா" மக்களை மந்தைக் கூட்டமாக மாற்றி அதில் ஏறி சவாரி விடுவதும், பிச்சை போட்டு ஆள் திரட்டுவதும், தன்னிடம் வந்து கையேந்தி நிற்கவைத்து, அதை மக்கள் புரட்சியாக காட்டும் வித்தையும் தான், டக்கிளஸ் வழங்கும் ஜனநாயகத்தின் எல்லை.

மகிந்த சிந்தனை தான், பிரித்தானிய ஆட்சிக்குப் பின்னர் உருவான அனைத்து அரசாங்கங்களின் சிந்தனையும். பேரினவாதம், பௌத்த மேலாதிக்கம், சிங்கள நாடு .. இப்படித்தான் பண்டாரநாயக்க விலிருந்து ஆரம்பித்த பாசிசக் கூறுகள் அதன் மொத்த வடிவமாக, இந்தியாவின் ஆசீர்வாதத்தோடு மகிந்த சிந்தனையாக இலங்கை மக்களின் மீது வாந்தியெடுக்கப்பட்டிருக்கிறது. இன அடக்கு முறை தான் புலியை உருவாக்கியது. “தோழர்” டக்ளஸ் தேவந்தாவையும் கூட உருவாக்கியது. வரிக்கு வரி இனவாதத்தைக் கக்கும் மகிந்த சிந்தனையின் வரிவடிவங்களை டக்களஸ் தேவானந்தா படித்திருக்காமல் இருக்க முடியாது. இந்த கீழ்த்தரமான சிந்தனையால் விதைக்கப்பட்ட இனவாதம், பிரிந்து வாழ்வதற்கான உணர்வை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இன்னுமின்னும் ஆழ விதைக்கும் என்பதை அமைச்சர் தோழர் “டக்ளஸ்” சிந்திக்காமல் “மாண்புமிகு” அமைச்சராகியிருக்க முடியாது. இந்த மகிந்த சிந்தனையை மாவோ சிந்தனைக்குப் பதிலாக ஏற்றுக்கொண்டு அதற்காகப் பிரச்சாரம் வேறு மேற்கொள்ளும் மாண்புமிகு, “முன்நாள் இடதுசாரி” அமைச்சர் தேவானந்தா, இந்தச் சிந்தனையில் மக்கள் மயங்கி, அரச குடியேற்றத்திட்டத்திற்கு மகிந்த புரம் என்று திரு நாமம் சூட்ட “தோழரை” கேட்டுக் கொண்டார்களாம்.??!!

இப்படித்தான் 14.02.09 அன்று டான் வானொலியில் உறவுப் பாலம் நிகழ்ச்சியூடாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த “தோழரின்” பதில்கள் மகிந்த பாசிசத்தின் இன அழிப்பின் நியாயப்படுத்தலாக நகர்ந்து சென்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு சிறையில் களி தின்ன வேண்டியவர்களுக்கெல்லாம் திடீர் திடீர் என்று அறிவு உதயம் பிறக்குது... சிறையில் தள்ளி முட்டி முட்டி தட்டி லாடம் கட்டினால் எல்லாம் சரியாக வரும் :o

கற்று அறிந்தது எதுவுமில்லை என்று நிரூபித்துள்ளார்.

கடத்தல், கப்பம், கொலைகள் பற்றி தனது அனுபவங்களைக் கூறியிருக்கலாம். சிங்கள அரச பயங்கரவாதிகளின் ஆணைக்குழுவும் இதுகள் பற்றி ஒன்றும் கேட்கவில்லை.

சிங்கள பௌத்த பயங்கரவாதிகளினதும், இந்திய அரச - இராணுவ பயங்கரவாதிகளினதும், முஸ்லிம் மதவெறியர்களினதும் தமிழின படுகொலைகளை அழகாக மறைத்து, புலிகள் மீது மட்டும் இல்லாத பொல்லாத பழிகளை எல்லாம் போட்டு, தான் ஈழத் தமிழரின் குருதிகளில் நீந்தி அரசியல் செய்பவன் என்பதை டக்லஸ் மீண்டும் நிரூபித்துள்ளான்.

ஜனநாயக வேடம் போட்டு, இனப்படுகொலைகளை நிகழ்த்தி 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்த, வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் பற்றி மூச்சு விடாத டக்லஸ் மீண்டும் போலியாக ஒற்றுமை பேசிக்கொண்டு தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதை தடுத்துள்ளான்.

இந்திய, சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இயங்கும் டக்லஸ் குழுவின் கடத்தல், கப்பம், கொள்ளை நாடகம் ஏற்கனவே எல்லாரும் அறிந்ததுதான். மகேஸ்வரன், ரவிராஜ் உட்பட பல தமிழ் அரசியல்வாதிகளின் கொலைகளில், அற்புதன், நிமலராஜன் போன்ற பத்திரிகையாளர்களின் கொலைகளில், மாவை, சிவாஜிலிங்கம் போன்ற தமிழ் அரசியல்வாதிகளின் கொலை முயற்சிகளில் டக்ளசின் பங்களிப்பு ஏற்கனவே எல்லாரும் அறிந்ததுதான். டக்லஸ் இந்திய நீதிமன்றில் கொலைக் குற்றவாளி என்பதும் எல்லாரும் அறிந்ததுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.