Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகலா எம்.பியின் மகன் தீர்த்தத் திருவிழாவில் சேட்டை!

Featured Replies

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் மகன் இன்றைய நல்லூர்த் தீர்த்தத் திருவிழாவின்போது பெண் ஒருவர் மீது தண்ணீரை வாரி இறைத்துள்ளார்.

இதனால் அங்கு சிறிய ஒரு கலவரமே மூண்டது. ஆலய சுற்றாடலில் அமளிதுமளி ஏற்பட்டது.

கேணிக்கு அருகில் கடமையிலிருந்த பெண் பொலிஸார் மீதும் இளைஞர்கள் தீர்த்த நீரை அள்ளி ஊற்றியிருக்கின்றார்கள். சுவாமி தீர்த்தமாடுகின்றமைக்கு முன்பாகவே தீர்த்தக் கேணிக்குள் குதித்து விட்ட இளைஞர்கள் ஆலயத்தை விட்டு பொலிஸார் வெளியேறிச் செல்ல வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

பெண் பொலிஸார் மீதும், இளம் பெண்கள் மீதும் தீர்த்த நீரை இறைத்தனர்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9996:2010-09-08-15-00-07&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் ரவுடிகளின் ஆடம்பரம் அட்டகாசம் எல்லாமே ஆரம்பமாகிவிட்டது.

இனியென்ன.....

அடுத்த குட்டித்தமிழ்நாடு யாழ்ப்பாணந்தான்?

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் மகன் இன்றைய நல்லூர்த் தீர்த்தத் திருவிழாவின்போது பெண் ஒருவர் மீது தண்ணீரை வாரி இறைத்துள்ளார்.

இதனால் அங்கு சிறிய ஒரு கலவரமே மூண்டது. ஆலய சுற்றாடலில் அமளிதுமளி ஏற்பட்டது.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9996:2010-09-08-15-00-07&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

குழந்தைப்பிள்ளைத்தனமாக இருக்கின்றது :wub:

வாத்தியார்

**********

குழந்தைப்பிள்ளைத்தனமாக இருக்கின்றது :wub:

வாத்தியார்

**********

உண்மையிலேயே அந்தப்பிள்ளை குழந்தைப்பிள்ளை தான் .

(8>10) வயது பிள்ளையின் விளாயாட்டு தனத்தை கூட செய்தி தலையங்கம் ஆக்கிறாங்களாப்பா..:unsure:.

விஜயகலா மகேஸ்வரன் புத்திகெட்டு யாழ் நூலகத்தை எரித்த, தமிழின ஒடுக்குமுறைகளை முன்னெடுத்த சிங்கள பயங்கரவாதிகளின் ஐ. தே. க. யில் இணைந்துள்ளார்.

ஆனால் அதற்காக, வயதை பிழையாகப் போட்டு, நாலாம் வகுப்பு சிறுவன் செய்ததை செய்தியாக்கிய சிறுபிள்ளைத்தனமான ஊடகவியலார்கள் கடும் கண்டனத்துக்கு உரியவர்கள்.

தந்தையின் படுகொலையாலோ என்னவோ, ஒழுக்கமான அந்தப் பிள்ளை சற்று துடுக்குத்தனம் கூடியவன் என அவனது ஆசிரியர் ஒருவர் முன்னர் கூறியதாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் மகன் இன்றைய நல்லூர்த் தீர்த்தத் திருவிழாவின்போது பெண் ஒருவர் மீது தண்ணீரை வாரி இறைத்துள்ளார்.

இதனால் அங்கு சிறிய ஒரு கலவரமே மூண்டது. ஆலய சுற்றாடலில் அமளிதுமளி ஏற்பட்டது.

கேணிக்கு அருகில் கடமையிலிருந்த பெண் பொலிஸார் மீதும் இளைஞர்கள் தீர்த்த நீரை அள்ளி ஊற்றியிருக்கின்றார்கள். சுவாமி தீர்த்தமாடுகின்றமைக்கு முன்பாகவே தீர்த்தக் கேணிக்குள் குதித்து விட்ட இளைஞர்கள் ஆலயத்தை விட்டு பொலிஸார் வெளியேறிச் செல்ல வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

பெண் பொலிஸார் மீதும், இளம் பெண்கள் மீதும் தீர்த்த நீரை இறைத்தனர்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9996:2010-09-08-15-00-07&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

மகேஸ்வரன் அவர்களுக்கு சிறிய பிள்ளைகள் உள்ளதாக தான் நினைக்கின்றேன்.

சிறுவர்களின் சாதாரண விளையாட்டை, யாரின் மீதோ உள்ள காழ்ப்புணர்ச்சியால் ஊதிப் பெரிய செய்தியாக்கி உள்ளார்கள். :wub:

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

3112616x412.jpg

மகேஸ்வரனின் மகன் பிரணவன் மகேஸ்வரன் 2010ல் .

சில விடயங்களை அரசியலுக்கு அப்பால் யோசிக்க வேண்டும்.

நன்றி www.karaiNews.com

வாத்தியார்

***********

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் சொன்ன மாதிரி தமிழ் சி என்[tamil cnn] செய்திகளை தடை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்ன பிள்ளைகளின் குறும்பை கூட செய்திகளாக்க வேண்டிய பஞ்சத்தில் தமிழ்த்தேசியத்துக்கான ஊடகங்கள் என்று தம்மைத்தாமே சொல்லிக் கொண்டு சில இணையதளங்கள் கிளம்பியுள்ளன. அதிர்வு ,தமிழ்வின் போன்ற தளங்களில் வரும் செய்திகள் யாழில் இணைக்க தடைசெய்யப்பட்டுள்ளது ஆனால் அதிர்வில் உள்ள அதே தலைப்புடன் கூடிய செய்தி தமிழ் சி என் என் என்ற பெயரில் இன்னொரு தளத்தின் பெயரில் இணைக்கப்ப்டுகிறது.

யாழ் பொறுப்பாளருக்கும்,மட்டுறுத்துனருக்கும் ஒரு வேண்டுகோள் இங்கு செய்திகளை முழுமையாக இணைத்து விட்டு மூலத்திற்குரிய இணைப்பை கொடுக்குமாறு தானே இருக்கு இல்லை என்றால் தமிழ் சி என் என் போன்ற தளங்கள் தமது தளத்திற்கு இலவசமாக வாசகரை கவர அரைகுறை செய்தியுடன் படங்கள் இணைப்பு,வீடியோ இணைப்பு என தலைப்பை போட்டுவிட்டு தமது தளத்துக்கான இலவச விளம்பரமாக யாழ் இருக்குதோ என எண்ணதோன்றுது.

இது குறித்து யாழ்நிர்வாகம் தெளிவுபடுத்துமா???????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.