Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபுதேவா வீட்டை முற்றுகையிட்டு போராடுவோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலாச்சார, குடும்ப அமைப்புக்கே கேடு விளைவிக்கும் பிரபுதேவா வீட்டை முற்றுயிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு. அதை பிரபுதேவா மீறுகிறார். பழைய காலத்தில் உடன் கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. கணவன் இறந்ததும் மனைவியும் அதே நெருப்பில் உயிரை விடுவாள். நாகரீகம் வளர அதை முட்டாள் தனம் என ஒதுக்கி விட்டோம்.

இந்தியாவின் பெருமைகளே நமது கலாச்சாரமும் கோவில், வேட்டி, சட்டை, புடவைகளும்தான். உலகமயமாக்கலில் நமது கலாச்சாரத்தை தாராளமயமாக்க முடியாது. பிரபுதேவாவும் நயன்தாராவும் கலாச்சாரத்தை சீரழிக்க பார்க்கிறார்கள். சுதந்திர போராட்டத்தை தூண்டி விட சினிமா பயன்பட்டது. அது இப்போது கலாச்சார சீரழிவுக்கு பயன்படுகிறது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களும் பொது மக்கள் பார்வையில் இருப்பவர்களும் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதற்கு எதிராக நடந்தால் அவர்களை மக்கள் மத்தியில் இருந்து துரத்தி அடிப்போம்.

கலாச்சாரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ள பிரபுதேவா – நயன்தாராவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். பிரபு தேவா வீட்டில் ஓரிரு நாளில் முற்றுகை போராட்டம் நடத்துவோம். நயன்தாரா- பிரபுதேவா உருவப்படங்களை எரிப்போம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.http://ulavan.net/?p=4905

பழைய காலத்தில் உடன் கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. கணவன் இறந்ததும் மனைவியும் அதே நெருப்பில் உயிரை விடுவாள். நாகரீகம் வளர அதை முட்டாள் தனம் என ஒதுக்கி விட்டோம்.

இவருக்கு முன்னர் இவரது மனைவி இறந்துபோனால் இவர் உடன்கட்டை ஏறுகிறதுக்கு தயாராக உள்ளாராமோ? அந்தக்காலத்தில் கணவனுக்காக மனைவியர் உடன்கட்டை ஏறினார்கள். எத்தனை கணவன்மார் மனைவிக்காக உடன்கட்டை ஏறினார்கள்? மறுமணம் செய்து தமது இச்சையை போக்கிக்கொண்டார்கள். இதில் எத்தனை கணவன்மார் மனைவியை கொலை செய்துவிட்டு மறுமணம் செய்தார்களோ தெரியாது. இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தன பழக்கத்தைவிட.. ஒருவளுடன் வாழ்வது தனக்கு விருப்பமில்லை என்று ஓர் தனிநபர் தீர்மானித்தால் சட்டரீதியாக விவாகரத்து செய்தபின் அவனுக்கு பிடித்தமானவளுடன் அவன் வாழ்ந்துவிட்டு போவது எவ்வளவோ மேல். எத்தனைகோடிப்பேர் தமிழ்நாட்டில் சின்னவீடு வைத்து உள்ளார்கள் என்பது ஆண்டவனுக்கே தெரிந்த இரகசியம். இந்தக்கேவலத்தில்.. நல்லதொரு பேமாளி பிரபுதேவா இவர்களுக்கு மாட்டி உள்ளார் முற்றுகையிட்டு போராட்டம் செய்வதற்கு. <_<

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சார, குடும்ப அமைப்புக்கே கேடு விளைவிக்கும் பிரபுதேவா வீட்டை முற்றுயிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த இரண்டு, மூன்று மாதமாக பிரபுதேவா, நயந்தாரா, ரம்லத் பிரச்சினை தான் தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

பிரபுதேவா நயந்தாராவை கலியாணம் கட்டப் போகிறார் என்றால் விட்டுத் தொலைக்க வேண்டியது தானே....

அவர் மீண்டும் ரம்லத்துடன் ஒற்றுமையாக குடும்பம் நடத்துவார் என்று எப்படி எதிர்பார்க்கலாம்.

ஒரு சினிமா நடிகனை ரம்லத் கலியாணம் கட்ட முடிவெடுத்தவுடனேயே.... விவாகரத்தையும் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

நீதி மன்றத்தை அணுகி , மூன்று நான்கு கோடி ரூபாக்களை நட்ட ஈடாக பெற்றுக் கொண்டு.... ரம்லத் தனி வாழ்க்கை நடத்துவதே சிறந்த வழி. இங்கு பிள்ளைகளுடன் இருக்கும் ஒருவர் விவாகரத்து என்றாலே.... தலை தெறிக்க ஓடுவான். ஏனென்றால்... விவாகரத்தின் பின் அவர் தனது வாழ் நாள் முழுவதும் தனது மூத்த மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சம்பளத்தில் பெரும் பகுதியை கொடுக்க வேண்டும். அதிலும் மனைவி வேலை இல்லாதவராக இருந்தால்.... இதன் விகிதம் அதிகரிக்கும். விவாகரத்தின் பின் அவரின் உழைப்பு முழுக்க மூத்த மனைவிக்கே கொடுக்க வேண்டி வரும் என்பதால் எந்த ஆணும் விவாரத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை. எனக்கு தெரிந்த சில ஜேர்மன்காரர் விவாகரத்தின் பின் விசரர் மாதிரி திரிகின்றார்கள்.

இந்து மக்கள் கட்சிக்கு இப்போ பொழுது போகவில்லைப் போல் உள்ளது. அது தான் உப்புச் சப்பு இல்லாத விடயத்துக்கு போராட்டம் நடத்துகின்றார்கள்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு.

தானைத்தலைவர் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வாரா கண்ணன்? <_<

  • கருத்துக்கள உறவுகள்

தானைத்தலைவர் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வாரா கண்ணன்? <_<

அப்போ தாங்கள் அம்மாவின் ஆளோ.........??

அப்போ

அம்மா மட்டும் தன்னை செல்வி என்று அழைக்கின்றார்

செல்வி என்றால் என்ன அர்த்தம்.........???

அதற்கு எங்கு போய் ஆர்ப்பாட்டம் செய்வது...??? :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ தாங்கள் அம்மாவின் ஆளோ.........??

அப்போ

அம்மா மட்டும் தன்னை செல்வி என்று அழைக்கின்றார்

செல்வி என்றால் என்ன அர்த்தம்.........???

அதற்கு எங்கு போய் ஆர்ப்பாட்டம் செய்வது...??? :)

அம்மா வெளிநாட்டு முறைப்படி லிவிங் டுகெதர் செய்தவ..! :D அதுமட்டுமில்லாமல் ஒருவனுக்கு ஒருத்தி எண்டுதானே சொல்லியிருக்கு.. ஒருத்திக்கு ஒருவன் எண்டு சொல்லவில்லையே.. இதுதான் அம்மாவின் பொலிசி..! <_<:):lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தப்பு தப்பாகவே எழுத்துக்கள் தெரியுது

ஒருத்திக்கு ஒருத்தி என்று தான் தெரியுது :):lol:<_<

இசை

தாங்கள் இதற்கு பதில் தர சரியான ஆள்

சொல்லுங்கள்

ஒருத்திக்கு ஒருத்தி தத்துவப்படி இருந்தால்........?

அவர் கன்னியாகவே கருதப்படுவாரா....???

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தப்பு தப்பாகவே எழுத்துக்கள் தெரியுது

ஒருத்திக்கு ஒருத்தி என்று தான் தெரியுது :D:lol::lol:

இசை

தாங்கள் இதற்கு பதில் தர சரியான ஆள்

சொல்லுங்கள்

ஒருத்திக்கு ஒருத்தி தத்துவப்படி இருந்தால்........?

அவர் கன்னியாகவே கருதப்படுவாரா....???

அது அவையள் என்ன செய்யினம் எண்டதைப் பொறுத்தது..! <_<:):)

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தன் ஒரு விடயத்தை அனுபவ சாலியிடம் கேட்டால்...

இப்படியா ........ பார் என்று சொல்றது...? <_<

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: நடிகர் பிரபுதேவாவும் நயன் தாராவும் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபுதேவா மனைவி ரமலத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி இருவருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற 19ந் தேதிக்கு தள்ளி வைத்தார். இதையடுத்து இருவருக்கும் கோர்ட் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணை வருகிற 19-ந்தேதி மீண்டும் நடக்கிறது. அப்போது இருவரும் கோர்ட்டில் ஆஜராவார்கள் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இரு வரும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=7584

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.