Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா?

Featured Replies

விடுதலைப்புலிகளை எக்காலத்திலும் அழிக்க முடியாது என்று சென்னையில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் வாதிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய போதிய காரணங்கள் உள்ளனவா? தடையை விலக்கிக் கொள்ளலாமா? என்பதை விசாரிக்க சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பாயத்தின் விசாரணை நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இமேஜ் அரங்கில் நேற்று நடந்தது. விசாரணையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசு தரப்பின் சார்பில் சிவகங்கை மாவட்ட கியூ பிரிவு ஆய்வாளர் சந்திரசேகரன், கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் பாஸ்கரன், சென்னை காவல்துறை துணை கண்காணிப்பாளர் முகமது அஷ்ரப் மற்றும் திண்டுக்கல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா?

நீதிபதி விக்ரம்ஜித் சென், "விடுதலைப்புலிகள் அமைப்பு இருக்கிறதா அழிக்கப்பட்டு விட்டதா?'' என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த வைகோ, "விடுதலைப் புலிகளை எக்காலத்திலும் முற்றிலுமாக அழித்துவிட முடியாது. அவர்கள் லட்சியத்தை வெல்வார்கள்'' என்று கூறினார். இதே கருத்தை பழ. நெடுமாறனும், வழக்கறிஞர் சந்திரசேகரனும் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி கியூ பிரிவு ஆய்வாளர் பாஸ்கரன், நீதிமன்றத்தில் சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது வைகோ எழுந்து, "அக் கூட்டத்தில் சீமான் இலங்கையில் தமிழர்கள் சிங்கள அரசால் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். அதைக் கண்டிக்கிறேன் என்று பேசியது சாட்சிக்குத் தெரியுமா?'' என்று கேட்டார். சாட்சி, "தெரியும்!'' என்று சொன்னார். அதேபோன்ற கருத்தை மற்றொரு பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதனால் கைது செய்யப்பட்டு தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியுமா?" என்று கேட்டார். சாட்சியோ தனக்குத் தெரியாது என்று சொன்னார்.

முன்னதாக, தீர்ப்பாய கூட்டத்திற்கு வந்திருந்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அல்லது உறுப்பினர்கள் மட்டுமே முறையிடலாம். அவர்கள் சார்பில் வைகோவும், பழ.நெடுமாறனும் ஆஜராக அனுமதிக்க கூடாது என்று நீதிபதியிடம் வாதிட்டார்.

டெல்லியில் நவ 1-ல் விசாரணை:

அதற்கு நீதிபதி விக்ரம் ஜித், "அவர்களை ஆஜராக அனுமதிக்கவில்லை, கருத்து சொல்வதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வேண்டுமானாலும் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்'' என்றார். உடனே சுப்பிரமணிய சாமி, "மத்திய மந்திரி ஆ.ராசா தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லி செல்ல வேண்டியுள்ளது. எனது கருத்துகளை மனுவாக சமர்ப்பிக்கிறேன்," என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

தீர்ப்பாயத்தின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 1ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் நடக்கிறது.

நிச்சயம் தடை அகலும்! - வைகோ

விசாரணை முடிந்து வெளியில் வந்த வைகோ, "நிச்சயம் புலிகள் மீதான தடை அகலும் நம்புகிறேன். புலிகளுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் இப்போது யாராலும் கூற முடியாது. எனவே தடை நீங்கும். இந்தியா வரும் ஈழத் தமிழரின் இன்னலும் நீங்கும்," என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2010/10/29/vaiko-argues-ltte-tribunal.html

  • தொடங்கியவர்

புலிகள் தடை நீடிப்பு; நடுவர் நீதிமன்றில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜர்

சென்னை: விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்திய மத்திய அரசு நீடித்திருந்த தடை செல்லுபடியானதா என்பதை பரிசீலிக்கும் நடுவர் மன்றத்தின் முன்பாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று வியாழக்கிழமை ஆஜராகியிருந்தார்.

அத்துடன், தடை நீடிப்பை ஆதரித்து விவாதிப்பதற்கு அனுமதியையும் அவர் நாடியிருந்தார். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடை) நடுவர் மன்றத்தின் முன்னால் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களும் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் மட்டுமே ஆஜராக முடியுமென சுவாமி கூறியுள்ளார்.ம.தி.மு.க. தலைவர் வைகோ போன்ற ஏனையவர்கள் தடைக்கு எதிராக ஆஜராகி வாதிட்டமை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பாகவே சுவாமி இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார்.

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளைத் தவிர, ஏனையவர்கள் எவராவது விவாதிக்க அனுமதி வழங்க முடியுமென்றால் தடையை நீடித்து வாதிட எனக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று கோரியிருந்தேன் என்று சுவாமி பி.ரி.ஐ.க்கு கூறியுள்ளார்.நடுவர் மன்றத்தின் நீதிபதி விக்ரம்ஜித்சென், எந்தவொரு நபரையும் விவாதிப்பதற்கு அனுமதிக்கவில்லையெனத் தனக்குக் கூறியிருந்ததாகவும் சாட்சியங்களை விசாரணை செய்த பின்னர் தன்னுடைய விடயம் பரிசீலனைக்கெடுக்கப்படுமென அவர் கூறியதாகவும் சுவாமி தெரிவித்தார்.

ஆயினும் எழுத்து மூலம் விடயங்களைத் தெரிவிக்க தமக்கு அனுமதி கொடுக்குமாறு சுவாமி கோரியிருந்தார். டில்லிக்கு வழக்குடன் தொடர்புபட்ட விடயத்துக்குச் செல்லவிருப்பதால் எழுத்து மூலமான தனது மனுவை காலந்தாழ்த்தி வழங்கப்போவதாக சுவாமி கூறியிருக்கிறார்.விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்கும் மே 2010 அறிக்கை தொடர்பாக நடுவர் மன்றம் ஆராய்கிறது. கடந்த அக்டோபர் 05 இலிருந்து மாநிலத்தில் அமர்வுகளை இந்த நடுவர் மன்றம் நடத்திவருகிறது. இந்த அமர்வுகளின்போது சம்பந்தப்பட்ட தரப்பினராக இரு குழுக்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களை நடுவர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=326:2010-10-29-07-22-57&catid=51:local&Itemid=85

  • கருத்துக்கள உறவுகள்

முன்னதாக, தீர்ப்பாய கூட்டத்திற்கு வந்திருந்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அல்லது உறுப்பினர்கள் மட்டுமே முறையிடலாம். அவர்கள் சார்பில் வைகோவும், பழ.நெடுமாறனும் ஆஜராக அனுமதிக்க கூடாது என்று நீதிபதியிடம் வாதிட்டார்.

எதிர்ப்பின் ஊடாக வளரும் கைத்தடிகள் இவர்கள்... இப்படியும் சில கோஸ்டிகள் தங்கள் வாத திற்மையை வைத்து கொண்டு பப்ளிசிட்டி பெற்றுவிடுகின்றன...

டிஸ்கி:

cartoon_barking_dog_card-p137425706179774245q0yk_400.jpg

நாய் நாம ஓடினாதான் கடிக்க ஓடி வரும்... எனவே இந்த மாதிரி கேசுகலை அப்படியே டீலில் விடவேண்டும் அது பாட்டுக்கு குரைத்து விட்டு போய்விடும்...இவர்களை எதிர்க்கிறோம் பேர்வழி என்று வளர்த்துவிட கூடாது... <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ அவர்கள் புலிகள் இருக்கிறார்கள்; லட்சியம் வெல்வார்கள் என்று வாதிடுவதை விடுத்து, இல்லாதுபோன புலிகளுக்கு ஏன் தடை என்கிற கோணத்தில் விவாதத்தைக் கொண்டு போகலாம் என்று தோன்றுகிறது. :D

அப்போது எதிர்த்தரப்பு, இல்லாதுபோன புலிகளின் மீதான தடையை நீக்கவேண்டும் என நீங்கள் ஏன் பாடுபடுகிறீர்கள் என ஒரு வில்லங்கமான கேள்வியை அநேகமாகக் கேட்பார்கள். அதற்கு புலிகளைச் சாட்டி தமிழகத்தில் அநாவசியமான கைதுகள் இடம்பெறுகின்றன என்று சீமான் போன்றவர்களின் நிலையை உதாரணமாகக் காட்டி வாதாடலாம். <_<:D

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா? என கேட்டது கனம் நீதவான் அவர்கள்.

அவர் என்ன தேவைக்கு அல்லது நோக்கத்தில் கேட்டாரோ தெரியவில்லை. ஆனால் தமிழருக்கு நீதி தேவதை எப்பொழுதுமே கைக்கு எட்டாதவளாக இருக்கின்றாள்

விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா?

தமிழரே புலிகள், புலிகளே தமிழர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் சின்னங்கள் புலி, சேவல், மீன் போன்றவை.

மற்றும், புலி இருக்கிறார்களா என்று பலர் லிபரேசன் ஒபெறேசன் பின் கேட்டார்கள். புலிகள் இருக்கிறார்களா என்று இந்தியன் ஆர்மி வந்து பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கேக் குடுத்த பின் கேட்டார்கள். புலிகள் இருகிறார்களா என்று யாழை இழந்த பின் கேட்டார்கள். புலிகள் இருக்கிறார்களா என்று ரிவி ரேசாவின் பின் கேட்டார்கள்.

இப்போது திரும்பவும் கேட்கிறார்கள். இவர்கள் இதை தெரிந்து என்ன செய்து கிழிக்க போகிறார்கள்?

காலம் வரும், அப்போது மதில் பூனைகள் தமிழ் ஈழ பக்கம் தாவுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தடைசெய்யபட்ட இயக்கத்தின் மீதான தடையை நீக்குமாறு அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி மனுத்தாக்கல் செய்ய முடியும்.அப்படியே மனுத்தாக்கல் செய்து அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டாலும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை அங்கீகரிப்பதாகத் தானே பொருள் கொள்ள முடியும்.தடை செய்த பொழுது உங்கள் இயக்கததைத் தடை செய்யப் போகிறோம் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம் என்று கேட்டார்களா? இது பெரிய முரண்நகை அல்லவா?இல்லாத இயக்கத்திற்கு தடையை நீக்குவதா வேண்டாமா என்ற விவாதம் தேவையில்லை.இயக்கம் இருந்தால்தான் அப்படி ஒரு கேள்வி எழும்.ஆக கடைசித் தமிழன் இருக்கும் வரை இந்தியாவின் நலன் சார்ந்தே தடை நீடிப்பதும் நீங்குவதும் இருக்கும்.நீங்கள்(இந்திய மத்திய அரசு)தானே பயிற்சியும் ஆயுதமும் கொடுத்து வளர்த்தீர்கள்.வளர்த்த உஙங்களுக்குத் தெரியாதா இயக்கம் இருக்கிறதா இல்லையா என்பது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடைசெய்யபட்ட இயக்கத்தின் மீதான தடையை நீக்குமாறு அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி மனுத்தாக்கல் செய்ய முடியும்.அப்படியே மனுத்தாக்கல் செய்து அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டாலும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை அங்கீகரிப்பதாகத் தானே பொருள் கொள்ள முடியும்.தடை செய்த பொழுது உங்கள் இயக்கததைத் தடை செய்யப் போகிறோம் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம் என்று கேட்டார்களா? இது பெரிய முரண்நகை அல்லவா?இல்லாத இயக்கத்திற்கு தடையை நீக்குவதா வேண்டாமா என்ற விவாதம் தேவையில்லை.இயக்கம் இருந்தால்தான் அப்படி ஒரு கேள்வி எழும்.ஆக கடைசித் தமிழன் இருக்கும் வரை இந்தியாவின் நலன் சார்ந்தே தடை நீடிப்பதும் நீங்குவதும் இருக்கும்.நீங்கள்(இந்திய மத்திய அரசு)தானே பயிற்சியும் ஆயுதமும் கொடுத்து வளர்த்தீர்கள்.வளர்த்த உஙங்களுக்குத் தெரியாதா இயக்கம் இருக்கிறதா இல்லையா என்பது.

புலவர் ஐயா, வன்னி காட்டுக்குள் சென்று பார்த்தால் தான் தெரியும் புலி இருக்கிறதா இல்லையா என்று. ஆனால் ஸ்ரீ லங்கா இராணுவத்துக்கும் துணிவில்லை, இந்திய இராணுவத்துக்கும் துணிவில்லை, எங்கள் ஆள்கடத்தும் ஆயுத கட்சிகளுக்கும் துணிவில்லை.

ஸ்ரீ லங்கா ஜெனோசைட் இராணுவம் முக்கிய வீதிகளால் சென்று வன்னி காட்டை சுற்றி வளைத்தது. ஆனால், அவர்கள் மூவாயிரம் சதுர கிலோ மீட்டர் வன்னி அடர் காட்டுக்குள் செல்லவில்லை. ஸ்ரீ லங்கா இராணுவம் முள்ளிவாய்காலை அடைய மூன்று வருடம் எடுத்தது. அதில் அறுபத்தைந்து ஆயிரம் சிங்கள கூலிகள் இறந்தார்கள், ஐம்பது ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஊனமாகினர், மற்றும் ஐம்பது ஆயிரம் பேர் ஓட்டம் எடுத்தார்கள். பத்து பில்லியன் கடன் வாங்கி வேறு மூன்று வருடத்தை ஓட்டிவிட்டு பின் காட்டுக்குள் சென்று வேண்டி கட்ட அவர்கள் விரும்பவில்லை.

பலருக்கு, புலிகள் ஒரு போதும் சிங்கள மரபு முன்னேற்றங்களை வென்றதில்லை என்று தெரியவில்லை. அவன் ஐந்து இலட்சம் ஆயுதாரிகளை வைத்திருக்கும்போது நாம் முப்பது ஆயிரம் பேரை வைத்து மரபு போரில் வெல்ல முடியாது.

புலி சிங்கிளா தான் அலையும். அதை கண்டு பிடிப்பதும் இலகுவல்ல. அதன் விளையாட்டு கரந்தடி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசு தரப்பின் சார்பில் சிவகங்கை மாவட்ட கியூ பிரிவு ஆய்வாளர் சந்திரசேகரன், கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் பாஸ்கரன், சென்னை காவல்துறை துணை கண்காணிப்பாளர் முகமது அஷ்ரப் மற்றும் திண்டுக்கல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

புலிகள் இயக்க உறுப்பினர்களை தவிர வேறு யாரும் வாதிட முடியாது என்றார்கள்? எப்படி வை.கோவை விட்டார்கள்?

சகுனி சுப்ரமணிய சாமியை எப்படி உள்ளே விட்டார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பிரமணிய சுவாமிக்கு எங்கள விட்டால் அரசியல் செய்யிறதுக்கு என்ன விஷயம் இருக்கு? இந்தியாவில் உள்ள நானூற்றி ஐம்பது மில்லியன் பிச்சைகாரரை காப்பத்திவிடுவானா? எதோ, பாவம் சிங்கள்ளநிட்டையும், பாரசீக கான்கிரசிட்டையும் காசை வாங்கி போட்டு வாலாட்டுது. இதை எல்லாம் சீரியஸா எடுத்து நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.