Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாராவது உங்களுக்கு தெரியாதவர்கள் அல்லது புதியவர்கள்(strangers) உங்களுக்கு உதவினார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது உங்களுக்கு தெரியாதவர்கள் அல்லது புதியவர்கள்(strangers) உங்களுக்கு உதவினார்களா?

இச்சம்பவம் பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது.காலை 5 மணிக்கு வேலை.4.30 அளவில் புறப்பட்டு போகும் வழியில் நண்பர் ஒருவரையும் ஏற்றிக்கொண்டு தான் வேலைக்கு செல்வேன்.அன்று பொலிஸ் என்னை மறித்தார்.எங்கே இந்த நேரம் போகிறாய் எனக்கேட்டார்."வேலைக்கு என சொல்லி வேலை அடையாள அட்டையை (badge)காட்டினேன்.சரி வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை( Driving licence) எடு என்றார்.என்னிடம் இல்லை அனுமதி பத்திரம் மட்டுமே உண்டென்றும் கூறினேன்.அவர் சொன்னார் உன்னால் வாகனத்தை ஓட்ட முடியாதே இந்த பத்திரத்துடன்(permit) என்றார்.திடீரென காரின் உள்ளுக்குள் நோட்டமிட்டார்.பின்னுக்கு இருக்கும் பாக்கில்(school bag) என்ன என்றார்.புத்தகம் என்றேன். நீ வேலைக்கு போவதாக சொன்னாய் என்றார்.வேலை முடிய பாடசாலை போவதாக கூறினேன். பாக்கை பார்க்க போவதாக கூறினார்.புத்தகங்கள் மட்டுமே.ஒரு புன்முறுவல். திடீரென முகத்தை சீரியசாக்கி(serious) சாரதி அனுமதி பத்திரம் இல்லாத படியால் காரையும் பறிக்கப்போவதாகவும் சாரதிப்பத்திரத்தை எடுத்த பின் காரை வந்து எடுக்கும் படியும் கூறினார்.நான் போகும் வழியில் நண்பரை ஏற்றிப்போவதாகவும் அவர் தான் தொடர்ந்து வாகனத்தை செலுத்தப்போவதாகவும் சொன்னேன்.தனது வாகனத்தில் சென்று யாரிடமோ

தொலைபேசியில் கதைத்து விட்டு வந்து சொன்னார்.இன்று உன்னை போக( I let you go today ) அனுமதிக்கிறேன்.மீண்டும் வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமல் வீதியில் பார்க்கக்கூடாது என்றார். இது தான் எனது அனுபவம்.

உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்.நன்றி.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமை

வேலைக்கு வந்து கொண்டிருந்தேன்

எனது மனைவியும் கடைசி மகளும் என்னுடன் இருந்தனர்

ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது

நான் பெயரைப்பார்த்துவிட்டு பின்னர் தொடர்பு கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். எனது மனைவி யார் என்று கேட்க உமது அண்ணர் எனது மைத்துணர் என்று ....... பெயரைச்சொனனேன்.

அவர் என்ன அவசரமோ இந்த காலை வேளையில் என்று நச்சரிக்க ஆரம்பித்தார்

சாதாரணமாக கார் பொக்ஸ்சில் கதை வரும்படியாகத்தான் காருக்குள் தொலைபேசியில் கதைப்பேன்

இவர் எனது மைத்துணர் வணக்கம் சொல்வதே ஒரு பச்சை வரியாகத்தான் இருக்கும் இது மனைவிக்கும் மகளுக்கும் கேட்டுவிடுமே என்று கையில் வைத்து கதைக்க தொடங்கினேன். வணக்கம் நலம் முடியமட்டும் 5 நிமிடங்கள். கார் 2 சிக்னல் ஒரு ரவுண்டப்போட் தாண்டி வந்து விட்டது. கதவில் ஒருவர் தட்டிய பின்னர்தான் தட்டியவர் மோட்டார் வாகனத்தில் வந்து கொண்டிருந்த காவல் துறை என்பது புரிந்தது.

காரை ஒரு பக்கத்தில் நிறுத்தச்சொன்னார். நிறுத்திவிட்டு சகல ஆவணங்களையும்கேடடார். கொடுக்கும்போது நான் அவரிடம் சொன்னது.

(அன்று பெரும் வேலை மறிப்புப்போராட்டம் நடக்கிறது என்பதை மனதில் வைத்து )

எனது கடைக்கு வேலைக்கு வருபவர் வேலைக்கு வரமுடியவில்லை

அவர் ஒரு இடத்திலிருந்து தொலைபேசி அடித்ததனால்தான் நான் அதற்கு மறு மொழி செய்தேன் இல்லையென்றால் 21 வருடமாக கார் ஓடுகின்றேன் ஒருநாளும் கார் ஓட்டும்போது தொலைபேசி பேசியதில்லை என்று. அவர் அதற்கு 2 சிக்னல் ஒரு ரவுண்டப்போட் பள்ளிக்குடப்பிள்ளைகள் பாடசாலை போகும் நேரம் என்று சொல்லியபடியே எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டார்.

நான் முதல் முறை அதிலும் இன்று வேலை நிறுத்தநாள் எனக்கொரு மன்னிப்புத்தா என்று சொல்லிவிட்டு காத்திருந்தேன்.

வைத்து ஏதோ எல்லாம் எழுதினார்

நான் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். மன்னிப்புக்கேட்டிருக்கின்றேன். எழுதுகிறார். எழுதிப்போட்டு ஏதாவது அட்வைஸ் சொல்லட்டும் இன்று இவர் வாங்கப்போகும் கிழியலைப்பார் என்று.

வந்தார் ஆவணங்களை திருப்பித்தந்தார். நீ கார் ஓட்டும்போது தொலைபேசி பாவித்ததாக எழுதினால் உனக்கு நாலு புள்ளிகள் வெட்டப்படும் அதைவிட அபராதமும் அதிகம்

அதனால் அதை தவிர்த்து...

அப்படி எழுதாமல் ஓட்டுவதில் தவறு செய்ததாக எழுதியுள்ளேன்.

22 ஈரோக்கள் அபராதம் விதித்துள்ளேன்

அதை உடன் கட்டிவிடு என்றார்

நன்றி சொல்ல வார்த்தை வரவில்லை. நன்றி சொல்லி புறப்பட்டேன்.

இதில் மனைவிக்கு அப்போது தான் உயிர் வந்தது

ஏனெனில் நச்சரித்தது அவர்தானே............

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவுசில் கார் இருந்தும் மிகவும் பிடிக்கும் என்ற காரணத்தால மோட்டார் சைக்கிள் ஒண்டும் வச்சிருக்கிறேன். அதிலே ஏறக்குறைய நான்கு தரம் இவ்வாறு காவல்துறை மாம்ஸ்களால் வேகக் கட்டுபாட்டை மீறியதற்காக மறிக்கப் பட்டு ஏதாவது பொய் சொல்லி கெஞ்சி மண்டாடி தப்பியிருக்கிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு உதவின அந்நியர்களே, அதுவும் தவறு என்னுடையதாக இருக்கையில். சில மாதங்களுக்கு முன்னர் இப்பிடித்தான் ஒட்டி $338, 4 புள்ளிகளுக்கும் இழந்த பினர் தான் ஓரளவு மெதுவாக ஓடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். காரிலே ஒருபோதும் காவல் துறையுடன் பிரச்சனைப் பட்டது கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸீல் கார் ஓட்டும் போது பின் சீட்டில் இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டுமாமே!...அப்படி அணியா விட்டால் யார் சீட் பெல்ட் அணியவில்லையோ அவர்கள் தண்டப் பணம் கட்ட வேண்டும்...நான் ஒரு தடவை போயிருந்த போது சீட் பெல்ட் அணியவில்லை காவத்துறை பிடித்து விட்டது...ஒரு மாதிரிக் கெஞ்சிக் கூத்தாடி தப்பித்து விட்டேன் இத்தனைக்கும் எனக்கு பிரென்ஞ் தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.