Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலண்டன் தூதரகத்தில் நடந்த கூட்டம் தொடர்பிலான செய்திகள் கசிந்தது எவ்வாறு? - விசாரணை நடத்த கோத்தபாய உத்தரவு!

Featured Replies

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2ஆம் திகதி இலண்டனில் அமைந்துள்ள சிறிலங்காத் தூதரகத்தில் நடத்திய கூட்டத்தில் இடம்பெற்ற விவகாரங்கள் குறித்த செய்திகள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில், பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் நிஹால் ஜெயசிங்க கம்போடியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வேளையில், சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ் விவகாரம் தொடர்பிலான விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ் விசாரணைகளை பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்ற படை உயரதிகாரி ஒருவர் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவர் பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகளை விசாரணை செய்யவுள்ளதுடன், இக் கூட்டத்தில் கலந்து கொண்டபவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன், இக் கூட்டம் நடைபெற்ற தினமான கடந்த 2ஆம் திகதியும், அதற்குப் பின்னரும் பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் தூதரகத்துக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பிலும் இவர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார்.

அதேவேளை, இக் கூட்டம் தொடர்பான புகைப்படங்கள் வெளிவந்தமை மற்றும் இக் கூட்டத்தில் கலந்து கொண்ட தனிப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் வெளிவந்தமை தொடர்பில் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு முறையிடப்பட்டதை அடுத்தே, இவ் விசாரணைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் நடத்திய தீவிரமான போராட்டத்தால் ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆற்றவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டதை அடுத்து, இலண்டனில் அமைந்துள்ள சிறிலங்காத் தூதரத்தில் 300 பார்வையாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றி இருந்தார்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ், முஸ்லிம் நபர்கள் உட்பட அனைவரும் உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நடத்தப்பட்ட இந்த அவசரக் கூட்டத்தில் தன்னை முன்னணி எழுத்தாளர் எனுவம், பெண்ணிலைவாதி எனவும் கூறிக் கொள்ளும் இலண்டன் வாழ் தமிழ் பெண்மணியும் விசேட அழைப்பின் பேரில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={4062C0BA-6FD6-43CA-9A1F-A600A8BBDFA5}

  • கருத்துக்கள உறவுகள்

செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ் விவகாரம் தொடர்பிலான விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

http://www.youtube.com/watch?v=gt3I5Wj4IAg

ங்கோத்தபாயக்கு ஒரு அறிவுரை ரஜினி போல தலையை சுத்தவிட்டு கண்டுபிடிக்கவும்.. கு இஸ் த பிளாக் சிப்.. ம் மேஹே...ம் மேஹே...

21.gif21.gif

mahindalondin1.gif

mahindalondin2.gif

... உங்கை நடந்ததுகள் வெளியிலை வந்ததுகளை கண்டு பிடிக்க சிங்கள உயர் புலாய்வு இராணுவத்தினரும் தேவையில்லை! ரொக்கட் சயன்ஸும் தேவையில்லை! ..

1) பணம் பாதாளம் வரை பாயுமாம்! .. இங்கு ஐரோப்பாவில் பணம் பாயாத இடமெல்லாம் பாயத்தொடங்கீட்டுதாம்!!! ... ரூபாய்க்ளையே லாபாய் என்றமுக்கியவர்களுக்கு, பவுண்ஸும்,/யூரோவும் ... வாயை பிளக்கிறார்களாம்!! .. அந்த ரெஸ்ரோரன்ட் வா சந்திப்பம்! அந்த கடைக்கு வா! ... செய்து தாறம் என்ற ... இரைச்சலுகள் தான் ... மொமைல்கள் ஊடாகவாம்!! ... அதற்கு மேல் ஒட்டுக்குழு முகவர்களாம்!!!! ... மேற்கு லண்டனில் வாழும் ஓர் ஈபிடிபிக்காரர் ... உங்களுக்கு என்ன அங்கு செய்ய வேண்டுமோ, அதை நான் உங்கை எம்பசிகாரரை பிடித்து செய்து தாறன் ... என்ற ஈரமனதுடன் அழைக்கிறாராம்!! ... அங்காலை அங்காலையும் வேறு முகவர்கள் இருக்காமலா போய் விடுவார்கள்???!!!!

2) போய் வந்த மாற்றுக்குழு மாமணிகள்!! ... இங்கு புலம்பெயர் நாடுகளில், உரிந்து விட்டுட்டும் ஓடுவார்கள், அவன்/அவள்/அவர்களோடு படுக்கையை பகிர்ந்ததாக கூசாமல் கூறுவார்கள்!! ஏன்??? ... இப்படியாவது பப்ளிசிட்டி எடுப்போன் என்று!!! .. அதே நிலையில் தான் இங்கு போய் வந்த மா.க.மாக்களும்!!! ... போய் வந்தவுடன் ... நான் ஜனாதிபதியை சந்தித்தனான் ... என்னை அவர் கூப்பிட்டவர் கதைக்க ... என்று வலிய போன் அடித்து சொன்னபடியாம், சிலதுகள்!!

3) மா.க.மாக்களின் மனைவிகள் ... பாவங்கள் அதுகள், அரசியலில் ஞானசூனியங்கள், நாட்டு நடப்புகள் தெரியாது ... ஆனால் கணவன்மாரை ஏதோ கமரூனாகவோ இல்லை ஒபாமாவாகவோ கற்பனை செய்தபடி!!! ... அதனை ஊரெல்லாம் இலவசமாக ஒலிபரப்பியும் விடுவார்கள்!!! ... இப்பதான் என்ரை மனுஷன் மகிந்தவை பார்க்க போனவர் ... இவருக்கு போக நேரமும் இல்லை, ஆனால் மகிந்த ஒரே பிடியாக நின்ற படியால் போக வேண்டிப் போச்சு!!!

... இங்கு சொல்லப்பட்டவை உண்மைக்கு புறம்பான கற்பனைகளோ, ஜோடனைகளோ இல்லை!!! ... சில நாட்களுக்கு முன்னம் நடந்தவைகளும், பல வருடங்களாக நடப்பவைகளும்!!!

சில நாட்களுக்கு முன் .. போய் வந்தவுடன் ... போய் வந்தவருக்கு ஒருவர் வேறோர் காரணமாக தொலைபேசி எடுத்தாராம் ... உடனடியாகவே தான் போய் வந்ததையும் சொல்லி, யார் யார் வந்தவர்கள் என்பதையும் சொல்லி ... "தெரியும்தானே, நான் வித்தியாசமானவன்! எல்லோருடைய கருத்துக்கலையும் கேட்கிறனான்! அவன்ரையும் கேட்பம் என்று போனனான் ..." ....

மொத்தத்தில் ... இறால் பிடிக்கப்போனால் சுறா வந்து தூண்டிலில் விழுகுதாம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா தூதரகத்தில் மகிந்தாவைச் சந்தித்தவர்களைப் பார்வையிட

http://www.sesatha.co.uk/Event_News/20101203_President_Addressed_UK_Comminity/index.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.