Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் சீமான்

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 11, 2011, 14:22[iST]

சென்னை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை, முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களம் இறக்குகிறது அதிமுக.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனக்குச் சாதகமான முறையில் அனைத்தையும் மாற்றும் வேலையில் படு மும்முரமாக, கில்லாடித்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அத்தனை பேரும் கூட்டணி குறித்து கவலையில் உள்ள நிலையில் இவர், கூட்டணியைத் தாண்டி வேறு பல முக்கிய விஷயங்களையும் கவனத்தில் கொண்டு காய் நகர்த்தி வருகிறார்.

ஜாதி ரீதியாக, உணர்வு ரீதியாக திமுகவுக்கு எதிராக உள்ளவற்றை ஒருங்கிணைத்து தன் பக்கம் திருப்ப முயன்று வருகிறார் ஜெயலலிதா. அதில் ஒன்றுதான் சீமானை அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக திருப்பியது.

ஈழத்தில் நடந்த மகா அக்கிரமமான போர், ஈழப் போர் கோரமாக முடிந்த அவலம் உள்ளிட்டவற்றில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவி வருவதை உணர்ந்த ஜெயலலிதா இப்போது அத்தனையையும் ஒரே வடிகாலாக்கி, அதிமுக பக்கம் திருப்ப முனைந்துள்ளார் சீமான் மூலமாக.

இந்தப் பணியை ஜெயலலிதாவுக்காக வைகோ செய்து முடித்துள்ளார். வருகிற சட்டசபைத் தேர்தலில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக சீமானை பொது வேட்பாளராக்கப் போகிறது அதிமுக. நாம் தமிழர் கட்சி சார்பாகவே இத்தேர்தலில் போட்டியிடப் போகிறார் சீமான். அவருக்கு அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட அதிமுக கூட்டணி ஆதரவு அளிக்கும்.

இந்தத் திட்டத்திற்கு சீமானும் சம்மதித்து விட்டார். இதை நேற்று வைகோவை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் சீமானே தெரிவித்தார். தான் தேர்தலில் முதல்வரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அவரே அறிவித்தார்.

இதற்கிடையே முதல்வருக்கு எதிராக சீமானை நிறுத்த வேண்டும் என்ற கருத்து நேற்று பகிரங்கமாகவே ஒரு அரங்கில் வைக்கப்பட்டது. தமிழறிஞரும், ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கேவலமான செயல்பாடுகளை பகிரங்கமாக கண்டித்து அக்கட்சியை தூக்கி எறிந்து விட்டு வெளியேறியவருமான தமிழருவி மணியன் எழுதிய நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இந்த விழாவின்போது முதல்வருக்கு எதிராக சீமானை பொது வேட்பாளராக்க வேண்டும் என்ற கருத்து பலமாக வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பழ. நெடுமாறன், நடிகர்கள் நாசர், மணிவண்ணன் மற்றும் சீமான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மதிமுக சார்பில் மல்லை சத்யாகலந்து கொண்டார். திமுகவுடன் நெருங்கி வந்து கொண்டிருப்பதால் ஈழ விவகாரம் குறித்து இப்போதெல்லாம் ஒதுங்கிப் போய்க் கொண்டிருக்கும் பாமக சார்பிலும் ஒருவர் கலந்து கொண்டார். அவர் எம்.எல்.ஏ. வேலுச்சாமி.

நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் (பாமகவைத் தவிர) திமுக, காங்கிரஸ் கூட்டணிய வேரறுக்க வேண்டும், வீழ்த்த வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினர். ஒருவர் பாமகவைக் கண்டித்துப் பேசியதால் சலசலப்பும் ஏற்பட்டது.

இலங்கை இன அழிப்புப்போர் குறித்த 300 புகைப்படங்களுடன் கூடிய அரிய தொகுப்பாக என்ன செய்ய வேண்டும் இதற்காக என்ற இந்த நூல்

உருவாகியுள்ளது.

மொத்தத்தில் தமிழ் ஈழ ஆதரவாளர்களின் கோபத்தையும், குமுறலையும் சீமான் பக்கம் திருப்பி அவரை வெற்றி பெற வைத்து முதல்வர் கருணாநிதியை வீழ்த்த அதிமுக வகுத்துள்ள வியூகம் தெளிவாகியுள்ளது.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ சீமான் விசப்பரீட்சையில் இறங்குகிறார் போல உள்ளது. தமிழ் நாட்டு மக்களை நம்பி தேர்த்தலில் இறங்குவது சுத்த மடைத்தனம்.கருணாநிதி பணத்தாலேயே அடித்து விடுவார் பாருங்கள்.தமிழ் நாட்டு மக்களுக்கும் அது தானே தேவை.

என்றாலும் சீமானின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இதில் கருணாநிதியை அண்ணன் சீமான் தோற்கடிப்பதுடன், அம்மாவையும் ஓரம் தள்ளல் வேண்டும். அதுவே நீண்ட பெருவெற்றியை தரும்.

தமிழக மக்கள் "விடுதலை" பெற்றாலே உலகத்தமிழினம் விடுதலை பெறும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருனா நிதிக்கு இதுவே இறுதி தேர்தலாக இருக்க வேண்டும், அவரது அந்திமக்காலம் பெரும் தோல்வியுடன் முடிய வேண்டும், அப்போதுதான் அவருக்கு கடற்கரையில் சமாதிக்கு இடம் கிடைக்காது, தமிழ் இனம் நிம்மதியாக காத்து வாங்க கொஞ்சம் இடம் கிடைக்கும், அவர் செய்த துரோகத்துக்கு வரலாற்றில் நல்ல இடம் கிடைக்க கூடாது, அவரை தமிழினத்தின் துரோகியாகவே வரும் எதிர்கால சந்ததி, அறிந்து கொள்ள வேண்டும்.

சீமான் அண்ணாவின் வெற்றிக்கு இணையத்தளங்களினுடாக பிரச்சாரம் செய்வோம், இதற்காக யாழ் அனிமேசன் கிங்குகள் பல விதமான அட்டகாசமான banners உருவாக்குங்கள், எல்லா வலைப்பூக்களிலும் மின்னட்டும்

Edited by hari

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுகவின் துணையுடன் ஈழ தமிழர் ஆதரவுக்கட்சிகளின் துணையுடன் சீமான் பொது வேட்பாளராக நின்றால் நிச்சயம் வெல்வார்.

அதேநேரம் மற்றய தொகுதிகளில் இந்த ஆதரவை அதிமுக அறுவடை செய்ய முயலும். அதையும் கவனத்தில் எடுத்து சில தொகுதிகளில் வென்றால் ஜெ. இடம் ஈழத்தமிழர் விபகாரத்தை பலத்துடன் பேசமுடியும்

வாழ்த்துக்கள்

தமிழீழம் கண்டாச்சு இனி அடுத்தது தமிழ்நாட்டு முதலமைச்சராக சீமானை ஆக்குவது.

பலருக்கு கனவிலேயே காலம் போகுது.

ஈழ ஆதரவுக்கட்சிகள் செம கொமடி?

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன் அண்ணாவின் கருத்து உண்மை தான்...எல்லா இந்திய அரசியல்வாதிகளும் பதவி கிடைக்கு முன் எமக்காக கதைப்பார்கள்,போராடுவார்கள் ஆனால் பதவி கிடைத்த பின் திரும்பியும் பார்க்க மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி இறந்தநேரத்தில் வந்த தேர்தலிலேயே ஸ்பெக்ட்ரம் தலைவர் சில நூறு வாக்குகளில் வெற்றி பெற்றார்..! :unsure: அப்படிப்பட்ட பெருந்தலைவரை சீமானால் ஈழ விவகாரத்தை வைத்து அசைக்க முடியுமா? :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்சா, சரத்பொன்சக்கா தேர்தலிலும் முடிந்த வரை முயற்சி செய்தோம், வாழும் தமிழீழத்தை மக்கள் ராஜபக்சாவுக்கு எதிராக வாக்களித்து தெளிவு படுத்தினர், இருந்தும் தோற்று விட்டோம், முடிவு வேறாக இருந்திருந்தால், இன்று நிலமை வேறாக இருந்திருக்கலாம், மூண்று நிலைமைகள் அன்று இருந்தன, ராஜபக்சாவுக்கு வாகாளித்தல், வாக்களியாது இருத்தல்,பொன்சக்காவுக்கு வாக்களித்தல், முதலாவதற்கும்,இரண்டாவதற்கும் பலன் இன்று இருப்பதுதான், மூன்றாவது நடை பெற்று இருந்தால் நிலமை மாறி இருக்கலாம், மூன்றாவதற்கு எதிராக செயற்பட்டவர்கள், இந்த நிலமையைத்தான் விரும்பினார்களோ என்னவோ. அது போல் முடிந்த வரை முயற்சி செய்வோம் முடியா விட்டால் வருவதை அனுபவித்துதானே ஆகவேணும், அதற்காக முயற்சியை கைவிடலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சியைக் கைவிட வேண்டாம்..! சும்மா இரு டவுட்டில கேட்டன்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சா, சரத்பொன்சக்கா தேர்தலிலும் முடிந்த வரை முயற்சி செய்தோம், வாழும் தமிழீழத்தை மக்கள் ராஜபக்சாவுக்கு எதிராக வாக்களித்து தெளிவு படுத்தினர், இருந்தும் தோற்று விட்டோம், முடிவு வேறாக இருந்திருந்தால், இன்று நிலமை வேறாக இருந்திருக்கலாம், மூண்று நிலைமைகள் அன்று இருந்தன, ராஜபக்சாவுக்கு வாகாளித்தல், வாக்களியாது இருத்தல்,பொன்சக்காவுக்கு வாக்களித்தல், முதலாவதற்கும்,இரண்டாவதற்கும் பலன் இன்று இருப்பதுதான், மூன்றாவது நடை பெற்று இருந்தால் நிலமை மாறி இருக்கலாம், மூன்றாவதற்கு எதிராக செயற்பட்டவர்கள், இந்த நிலமையைத்தான் விரும்பினார்களோ என்னவோ. அது போல் முடிந்த வரை முயற்சி செய்வோம் முடியா விட்டால் வருவதை அனுபவித்துதானே ஆகவேணும், அதற்காக முயற்சியை கைவிடலாமா?

மூன்றாவது தெரிவு நிறைவேறியிருந்தால்..... இன்று, சரத் பொன்சேகா இருக்கும் இடத்தில் மஹிந்த இருந்திருப்பார்.

கொலைஞர் கருணாநிதி, ஜோக்கர் ஜெயலலிதா, வட இந்திய தமிழின விரோதிகளின் அடிவருடிகள் காங்கிரஸ்காரர், தெலுங்குப் புரட்சி போன்ற தமிழுனர்வற்ற பேர்வழிகளை முழுமையாக ஒதுக்கும் போது மட்டும் தான் தமிழக மீனவர்களின் படுகொலைகள் நிறுத்தப்படும். தமிழர் தலை நிமிர்ந்து வாழமுடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்றாவது தெரிவு நிறைவேறியிருந்தால்..... இன்று, சரத் பொன்சேகா இருக்கும் இடத்தில் மஹிந்த இருந்திருப்பார்.

மகிந்தரின்ர குடும்பமும்???

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.