Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் தலைவன்?

Featured Replies

உலகமே புலி பிழை செய்ததென்று சொல்லுது நீங்கள் யாரையாவது நம்பவைக்க முடிந்ததா எனக் கேட்கின்றீர்கள்.

என்னையும் உம்மையும் நம்பவைப்பது முக்கியமில்லை.முழு உலகமும் பயங்கரவாதிகள் என சொன்னது எதற்காக.சும்மா காத்தான் பூத்தான் கதை இங்கு செல்லாது.எந்த ஒரு நாடு புலிகளை விடுதலை போராளிகள் என்று சொன்னது.நீங்கள் நாலு பேர் சுயபுராணம் பாடுவதற்காகவா எமது போராட்டம்.கடைசி இனியாவது உண்மைகளை ஒப்புக்கொண்டு தமிழனின் விடிவிற்கு பாடு படுங்கோ புலிகளின் இருப்பிற்கு அல்ல.

கியூமன் ரைட்ஸ் அறிக்கைகளையும் கொஞ்சம் அப்பப்போ புரட்டிப்பாருங்கோ

உலகிலை அதிக சனத்தொகை கொண்ட ஆசியாவில்( மத்திய கிழக்கு ஆசியா உட்பட) எத்தினை நாடு அண்ணை புலியை பயங்கரவாதி எண்டு சொன்னது... அடுத்த அதிக சனத்தொகை கொண்ட ஆபிரிக்காவில்...??? அதுக்கு அடுத்த அமெரிக்காவில்...??

சரி உலக நாடுகள் எவ்வளவு....?? அதிலை புலிகளை தடை செய்து பயங்கரவாதிகள் எண்டு அறிவிச்ச நாடுகள் எத்தினை வீதம் எண்ட து தெரியுமோ.....??

உமக்கு பொது அறிவு எண்ட புண்ணாக்கு இல்லை எண்டதுக்கு இது நல்லதொரு சாட்ச்சி... இந்தியா அமெரிக்கா ஐரோப்பா இவை தானே உங்கட உலகம்....??? இதை தாண்டி உலகமே இல்லை இதுதானே உங்கட வாதம்...

மனித உரிமை பேரவை ( AI)புலிகளால் கொல்லப்பட்ட தாக சொல்லப்பட்ட அந்த நல்லவர் பெயரை இப்பவாவது ஒருக்கா சொல்லுமன்... ???

Edited by தயா

  • Replies 99
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைக்கு வெளிக்கிடும்போது புதுக்குடியிருப்பில் கிலோ வண் முகாமில் தேசியத்தலைவர் எமது பேச்சுவார்த்தை குழுவினை சந்தித்தார். அதில் அவர் சொன்ன விடயம் இதுதான்.

`நாங்கள் அனைத்துலகத்துடன் சண்டைபிடிக்கப்போகின்றோம்`

மன்னிக்க வேண்டும் தலைவர் கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை. ஒஸ்லோ உடன்பாட்டினை நோர்வே பாலா அண்ணையூடாக திணித்தபோது தலைவர் சொன்னவை. இது எனக்கு சரிவராது வேணும் உவங்கள் எங்கேயோ கொண்டுபோய் எங்கள் விடுதலைப்போராட்டத்தை மாட்டப்போகின்றார்கள்.

தெரிந்திருந்தால் மாற்று வழியைச் சரியாகச் சிந்தித்து செயலாற்றி இருக்கலாமே. மாற்றுவழியில்லாத "point of NO RETURN" க்குப் அப்போதே போயிருந்தால், ஏன் சமாதான உடன்படிக்கை, பேச்சுவார்த்தை என்று மினக்கெடவேண்டி வந்தது? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுங்கோ நான் இப்ப என்ன செய்ய வேணும்....??

தமிழ்மக்கள் விடிவின் மீது சரியான அக்கறை இருப்பவர்கள், எமது போராட்ட வழிமுறை ஏன் தோற்றது என்பதை அறிந்துகொள்ளமுயலவேண்டும். அதற்காக மற்ற நாடுகள், கொள்கைகள், துரோகிகளால்தான் தோற்றது, எம்மில் ஒரு பிழையும் இல்லை, எங்கள் போராட்டத்தைப் பிழையாக விளங்கிவிட்டார்கள் என்று சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்ககூடாது.

தமிழ்மக்கள் விடிவின் மீது சரியான அக்கறை இருப்பவர்கள், எமது போராட்ட வழிமுறை ஏன் தோற்றது என்பதை அறிந்துகொள்ளமுயலவேண்டும். அதற்காக மற்ற நாடுகள், கொள்கைகள், துரோகிகளால்தான் தோற்றது, எம்மில் ஒரு பிழையும் இல்லை, எங்கள் போராட்டத்தைப் பிழையாக விளங்கிவிட்டார்கள் என்று சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்ககூடாது.

எனக்கு விளங்க இல்லை அண்ணை... ஏன் தோத்தனாங்கள் எண்டு.... ! நீங்கள் சொல்லுங்கோ ஏன் தோத்தனாங்கள் எண்டு... அதோடை எப்படி போராடி இருக்க வேணும் எண்டும் சொல்லுங்கோவ...

அதோடை நிக்காமல் துரோகிகளை எங்கட ஆதரவாளர்களாய் எப்படி மாத்தி இருக்க வேணும் எண்டதையும் சொல்லுங்கோ...!

நாங்கள் காடுமேடு எல்லாம் புலிகள் தந்த ஒரு நேர சாப்பாடுக்காக போராட போனனாங்கள் எண்டே சொல்ல வாறியள்...?? குடும்ப கடமைகளையே விட்டு போட்டு வீதிக்கு வந்து போராடவே நேரம் இல்லாத ஆக்கள், போராட பிள்ளையளை அனுப்ப தாயார் இல்லாத ஆக்கள் தான் நாங்கள் போராடின முறை சரி இல்லை எண்டு விமர்சனம் செய்யிறது தான் சரியான முரையோ....??

1 மைல் கூட நீந்த முடியாதவன் எங்களுக்கு எப்படி 15 மைல் நீந்தலாம் எண்டு சொல்லுறது தான் அரசியலோ....??

தெரிந்திருந்தால் மாற்று வழியைச் சரியாகச் சிந்தித்து செயலாற்றி இருக்கலாமே. மாற்றுவழியில்லாத "point of NO RETURN" க்குப் அப்போதே போயிருந்தால், ஏன் சமாதான உடன்படிக்கை, பேச்சுவார்த்தை என்று மினக்கெடவேண்டி வந்தது? :unsure:

பழய நிலைக்கு போய் இருக்கலாம் எண்டது இலங்கையிலை வெறும் ஆயுத போட்டியை தான் கொண்டு வந்து இருக்குமே தவிர வேற பலன் எதையும் தந்திருக்க போவதில்லை... அதாலை பயன் பெற்று இருக்க கூடியவர்கள் ஆயுத வியாபாரிகள் மட்டும் தான்.... தமிழ் மக்கள் இதுக்கும் மேலை போராட திறணி அற்று இருந்த உண்மைகளை நீங்கள் யாரும் புரிந்து கொள்ள வில்லை எண்டது தான் உச்ச கட்ட கேவலம்...

எங்களுக்கு எதிராக திரும்பின பல புறக்காரணிகள் இருக்கு அதிலை மிக முக்கியமாக இந்தியாவில் பாரதிய ஜனதா ஆட்ச்சி போய் காங்கிரஸ் ஆட்ச்சி வந்து சிங்களவருக்கு நெருக்கமான மலயாளிகள் அதிகாரத்துக்கு வந்தமை மிக முக்கியம்... அதோடை சுனாமி அனர்த்தம் எங்களை பாதிச்ச அளவு வேறை ஒண்டும் பாதிக்க இல்லை.... சுனாமியாலை இலங்கை அரசுக்கு கிடைச்ச அளவற்ற பணம்... இப்படி எங்கட சம நிலையை குழப்பிய பல காரணிகள் இருக்கு... இந்த சமநிலை குழப்பத்தோடை பிரித்தானியா வந்த கருணா காட்டி குடுக்கப்பட்டு திரும்பி இலங்கை போனது இன்னும் பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்தது...

வளமை போல சர்வதேசம் இலங்கைக்கு ஆதரவு குடுத்தது உண்மை தான்... ஆனால் இந்தியாவின் தலையீடு தான் அதிக பாதிப்பை குடுத்தது.... மேற்கத்திய நாடுகள் புலிகளை முழுமையாக அழிக்க விரும்பவில்லை.... ஆனால் பலவீனப்படுத்தி ஒரு தீர்வை திணீத்து தமது கையுக்குள் வைத்திருக்கவே விரும்பின...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விளங்க இல்லை அண்ணை... ஏன் தோத்தனாங்கள் எண்டு.... ! நீங்கள் சொல்லுங்கோ ஏன் தோத்தனாங்கள் எண்டு... அதோடை எப்படி போராடி இருக்க வேணும் எண்டும் சொல்லுங்கோவ...

உங்களுக்குத் தெரியும். ஆனால் விளங்காத மாதிரிக் கேட்கின்றீர்கள்.

மேலே தலைவர் 2002 இலேயே `நாங்கள் அனைத்துலகத்துடன் சண்டைபிடிக்கப்போகின்றோம்` என்று தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருந்ததாக உள்ளது. இது மிக முக்கியமாக அவதானிக்கப் படவேண்டியது.



  • அனைத்துலகத்துடன் சண்டை பிடிக்க தமிழர்கள் என்ன வேற்றுக் கிரகவாசிகளாக இருந்தார்களா/இருக்கின்றார்களா?
  • எவ்வளவுதான் நியாயம் இருந்தாலும் அனைத்துலகத்தையும் பகைத்து எங்கள் உரிமைகளை அடையமுடியாது என்பது தெரிந்தும் ஏன் மாற்றுவழிகளை நாடவில்லை?
  • இறுதியில் உரிமைப் பிரச்சினைகளை விட மானப் பிரச்சினை என்றாக்கி தற்போது தாயகத்தில் தமிழர்கள் தலைகுனிந்துதான் வாழவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு அனைத்துலகத்தின் கொள்கையா காரணம்?

  • கருத்துக்கள உறவுகள்

பழய நிலைக்கு போய் இருக்கலாம் எண்டது இலங்கையிலை வெறும் ஆயுத போட்டியை தான் கொண்டு வந்து இருக்குமே தவிர வேற பலன் எதையும் தந்திருக்க போவதில்லை... அதாலை பயன் பெற்று இருக்க கூடியவர்கள் ஆயுத வியாபாரிகள் மட்டும் தான்.... தமிழ் மக்கள் இதுக்கும் மேலை போராட திறணி அற்று இருந்த உண்மைகளை நீங்கள் யாரும் புரிந்து கொள்ள வில்லை எண்டது தான் உச்ச கட்ட கேவலம்...

எங்களுக்கு எதிராக திரும்பின பல புறக்காரணிகள் இருக்கு அதிலை மிக முக்கியமாக இந்தியாவில் பாரதிய ஜனதா ஆட்ச்சி போய் காங்கிரஸ் ஆட்ச்சி வந்து சிங்களவருக்கு நெருக்கமான மலயாளிகள் அதிகாரத்துக்கு வந்தமை மிக முக்கியம்... அதோடை சுனாமி அனர்த்தம் எங்களை பாதிச்ச அளவு வேறை ஒண்டும் பாதிக்க இல்லை.... சுனாமியாலை இலங்கை அரசுக்கு கிடைச்ச அளவற்ற பணம்... இப்படி எங்கட சம நிலையை குழப்பிய பல காரணிகள் இருக்கு... இந்த சமநிலை குழப்பத்தோடை பிரித்தானியா வந்த கருணா காட்டி குடுக்கப்பட்டு திரும்பி இலங்கை போனது இன்னும் பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்தது...

வழமை போல சர்வதேசம் இலங்கைக்கு ஆதரவு குடுத்தது உண்மை தான்... ஆனால் இந்தியாவின் தலையீடு தான் அதிக பாதிப்பை குடுத்தது.... மேற்கத்திய நாடுகள் புலிகளை முழுமையாக அழிக்க விரும்பவில்லை.... ஆனால் பலவீனப்படுத்தி ஒரு தீர்வை திணீத்து தமது கையுக்குள் வைத்திருக்கவே விரும்பின...

சரியான விடயங்களைத் தொட்டிருக்கின்றீர்கள்.

2001 இல் ஆயுதப் போராட்டம் உச்சத்தை தொட்டது என்பது உண்மைதான், ஆனால் அல்கைடாவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் மாறிய உலக ஒழுங்கை புரிந்துகொள்ளாமல் விட்டது தவறானது என்பதை உங்கள் இரண்டாம், மூன்றாம் பந்திகளில் சொல்லியிருக்கின்றீர்கள்.

மேற்கு நாடுகள் புலிகளை முழுமையாக அழிக்க விரும்பவில்லை என்ற செய்தியைக் கொடுத்து, அதைப் புலிகளின் தலைமைப் பீடத்தை நம்பவைத்துக் கழுத்தறுத்ததைத்தான் வெள்ளைக்கொடி சரணடைதல், தளபதி ரமேஸ் போன்றோரின் வீடியோ என்பன காட்டுகின்றன. மேற்கு நாடுகள் இந்தியாவை மீறி ஒன்றும் செய்யமாட்டா என்பது புலிகளுக்குத் தெரிந்துதான் இருந்தது என்பதும் உண்மை.

உங்களுக்குத் தெரியும். ஆனால் விளங்காத மாதிரிக் கேட்கின்றீர்கள்.

மேலே தலைவர் 2002 இலேயே `நாங்கள் அனைத்துலகத்துடன் சண்டைபிடிக்கப்போகின்றோம்` என்று தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருந்ததாக உள்ளது. இது மிக முக்கியமாக அவதானிக்கப் படவேண்டியது.



  • அனைத்துலகத்துடன் சண்டை பிடிக்க தமிழர்கள் என்ன வேற்றுக் கிரகவாசிகளாக இருந்தார்களா/இருக்கின்றார்களா?
  • எவ்வளவுதான் நியாயம் இருந்தாலும் அனைத்துலகத்தையும் பகைத்து எங்கள் உரிமைகளை அடையமுடியாது என்பது தெரிந்தும் ஏன் மாற்றுவழிகளை நாடவில்லை?
  • இறுதியில் உரிமைப் பிரச்சினைகளை விட மானப் பிரச்சினை என்றாக்கி தற்போது தாயகத்தில் தமிழர்கள் தலைகுனிந்துதான் வாழவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு அனைத்துலகத்தின் கொள்கையா காரணம்?

மாற்றுவளிகள் எண்டு எல்லாம் கனக்க சொல்கிறீர்களே அவைதான் என்ன அப்படி எந்த வளிகளை புலிகள் நாடவில்லை எண்டுறீயள்....?? தனிநாடு பிரகடனம் முதல் வெளிநாடுகள் சிலதின் அங்கீகாரத்துக்கான ஏற்பாடுகள் வரைக்கும் செய்த புலிகளுக்கு தெரியாமல் போன அந்த முறை எது... அதை தான் நானும் கேக்கிறன்....

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுவளிகள் எண்டு எல்லாம் கனக்க சொல்கிறீர்களே அவைதான் என்ன அப்படி எந்த வளிகளை புலிகள் நாடவில்லை எண்டுறீயள்....?? தனிநாடு பிரகடனம் முதல் வெளிநாடுகள் சிலதின் அங்கீகாரத்துக்கான ஏற்பாடுகள் வரைக்கும் செய்த புலிகளுக்கு தெரியாமல் போன அந்த முறை எது... அதை தான் நானும் கேக்கிறன்....

சமாதான ஒப்பந்தம் தனிநாட்டை அடைய மேற்கொள்ளப்படவில்லை. தமிழர்கள் சுய நிர்ணய உரிமையுடன் வாழக் கூடிய ஒரு தீர்வை அடைவதற்கு அரசியல் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத்தான் நோர்வே அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது (அல்லது அவ்வாறு சொல்லப்பட்டது). சமஸ்டி ஆட்சிமுறை பற்றி பேசுவதற்கு ஒஸ்லோவில் சம்மதித்த பின்னர், அதிலிருந்து பின்வாங்கியதற்கு இந்தத் தனிநாட்டுப் பிரகடனத்திற்கான ஆயத்தங்கள், சில பல நாடுகளின் அங்கீகாரங்கள்தான் காரணமோ? இதனால்தான் மாற்று வழிமுறைகளைக் (ஒஸ்லோ உடன்படிக்கையுடன் ஆராயச் சம்மதித்த சமஸ்டி உட்பட) கைவிட வேண்டி வந்ததோ!

சமாதான ஒப்பந்தம் தனிநாட்டை அடைய மேற்கொள்ளப்படவில்லை. தமிழர்கள் சுய நிர்ணய உரிமையுடன் வாழக் கூடிய ஒரு தீர்வை அடைவதற்கு அரசியல் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத்தான் நோர்வே அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது (அல்லது அவ்வாறு சொல்லப்பட்டது). சமஸ்டி ஆட்சிமுறை பற்றி பேசுவதற்கு ஒஸ்லோவில் சம்மதித்த பின்னர், அதிலிருந்து பின்வாங்கியதற்கு இந்தத் தனிநாட்டுப் பிரகடனத்திற்கான ஆயத்தங்கள், சில பல நாடுகளின் அங்கீகாரங்கள்தான் காரணமோ? இதனால்தான் மாற்று வழிமுறைகளைக் (ஒஸ்லோ உடன்படிக்கையுடன் ஆராயச் சம்மதித்த சமஸ்டி உட்பட) கைவிட வேண்டி வந்ததோ!

அண்மைக்காலத்து செய்திகளை நீங்கள் படிக்கிறதே இல்லையோ....??? நீங்கள் சொல்லும் அரசிய நடவடிக்கை சாத்தியமா....?? அப்படி யான ஒரு சூழல் இலங்கையில் இருக்கிறதா....?? இல்லை எப்பவாவது இருந்ததா....??? சமாதான உடன்படிக்கைகள் எல்லாம் அதுக்கான முயற்ச்சியே இல்லாமல் வேறை எதுவும் இல்லை....

குறைஞ்சது சுனாமி நிவாரணத்தை தன்னும் அரச கட்டுப்பாட்டுபகுதிகளுக்குள்ளாவது சரியான முறையிலை கொண்டு வந்து தந்ததா....???

சிங்களவனுக்கு கூட விளங்கின உங்களுக்கு விளங்காத விடயம் கனக்க இருக்கு போல கிடக்கண்ணை... புலிகள் இல்லாத காலத்திலை ஏன் மும்முரமாக சிங்களவரை கொண்டுவந்து வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்காய் குடியேத்துகிறான் எண்டுறீயள்...??? எதுக்காக தமிழ் மக்கள் சனத்தொகையை வடக்கு கிழக்கில் குறைத்து காட்ட முயல்கிறான் எண்டுறீயள்.... ???

வரலாறுகளும், நிகழ்காலம் கூட உங்களுக்கு ஒரு தெளிவான செய்தியை சொல்ல இல்லை எண்டால் யாராலும் சொல்ல ஏலாது கண்டியளோ... இதை தாண்டி சிங்களவன் உங்களுக்கு ஏதும் தருவான் எண்டு இப்பவும் நம்புவீங்கள் எண்டால் நான் என்ன செய்ய முடியும்...?

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே புலி பிழை செய்ததென்று சொல்லுது நீங்கள் யாரையாவது நம்பவைக்க முடிந்ததா எனக் கேட்கின்றீர்கள்.

என்னையும் உம்மையும் நம்பவைப்பது முக்கியமில்லை.முழு உலகமும் பயங்கரவாதிகள் என சொன்னது எதற்காக.சும்மா காத்தான் பூத்தான் கதை இங்கு செல்லாது.எந்த ஒரு நாடு புலிகளை விடுதலை போராளிகள் என்று சொன்னது.நீங்கள் நாலு பேர் சுயபுராணம் பாடுவதற்காகவா எமது போராட்டம்.கடைசி இனியாவது உண்மைகளை ஒப்புக்கொண்டு தமிழனின் விடிவிற்கு பாடு படுங்கோ புலிகளின் இருப்பிற்கு அல்ல.

கியூமன் ரைட்ஸ் அறிக்கைகளையும் கொஞ்சம் அப்பப்போ புரட்டிப்பாருங்கோ

நெல்சன் மண்டேலாவையும் கடைசி வரை பயங்கரவாதி என தான் உலகம் சொன்னது.கடைசியில் அவரை (பல வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு ) விடுதலை போராளி என்று சொன்னது. ஆக புலிகள் ஏதாவது ஒரு உலக ஜனநாயகவாதிகள் என சொல்லும் உலக பயங்கரவாதிகளுக்கு ஜால்ரா போட்டிருந்தால் அதாவது புளட் போன்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு ஜால்ரா போட்ட மாதிரி போட்டிருந்தால் அவர்களுக்கு பயங்கரவாதிகள் முத்திரை குத்தியிருக்க மாட்டார்கள்.இதனை உங்கள் பாணியில் இராசதந்திரம் என்று சொல்லுவீங்களாக்கும்.

மற்றதண்ணை ஆறாயிரம் பேரை வைத்து எப்படியண்னை முழு இலங்கையையும் பிடிக்கிறது என்று ஒருக்கால் விளங்கப்படுத்துங்கோ??.பல முறை கேட்டு விட்டேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு கூட விளங்கின உங்களுக்கு விளங்காத விடயம் கனக்க இருக்கு போல கிடக்கண்ணை... புலிகள் இல்லாத காலத்திலை ஏன் மும்முரமாக சிங்களவரை கொண்டுவந்து வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்காய் குடியேத்துகிறான் எண்டுறீயள்...??? எதுக்காக தமிழ் மக்கள் சனத்தொகையை வடக்கு கிழக்கில் குறைத்து காட்ட முயல்கிறான் எண்டுறீயள்.... ???

வரலாறுகளும், நிகழ்காலம் கூட உங்களுக்கு ஒரு தெளிவான செய்தியை சொல்ல இல்லை எண்டால் யாராலும் சொல்ல ஏலாது கண்டியளோ... இதை தாண்டி சிங்களவன் உங்களுக்கு ஏதும் தருவான் எண்டு இப்பவும் நம்புவீங்கள் எண்டால் நான் என்ன செய்ய முடியும்...?

ஒரு மாதிரி யதார்த்தத்திற்கு வாறியள். சிங்களவர் வடக்கு கிழக்கில் குடியேற்றப்படுவது போன்ற இலங்கையரசின் நீண்டகாலத் திட்டத்திற்கு அவர்களின் தம்மதீபக் கொள்கை தற்போது மகிந்த சிந்தனையூடாக எடுத்து வரப்படுவதுதான் காரணம் என்று நன்றாகத் தெரியும். ஆனால் அதைத் துரித கதியாக நடைமுறைப்படுத்த நான்காவது ஈழப்போரின் மூலம் நாம்தான் உதவினோம் என்பதை மறந்துவிடுகின்றீர்கள். இல்லையில்லை, போர் நம்மீது திணிக்கப்பட்டது, அதனால்தான் வேறு வழியின்றிச் சண்டைக்குப் போகவேண்டி வந்தது என்று சொன்னால், அது அரசியல் பலவீனம் என்றுதான் கொள்ளப்படும். அரசியலில் சாணக்கியமில்லாமல் நடந்துகொண்டதால்தான் அனைத்துலத்தின் ஆசியுடன் இலங்கையரசு மேற்கொண்ட போரில் சிக்குப்பட்டு சிதறப்படவேண்டி வந்தது.

சாணக்கியத்துடன் நடந்திருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு ஓரளவு உரிமையைப் பெற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் இலங்கையரசு வைத்த மரணப் பொறிக்குள் மாட்டுப்பட்டு தற்போது சாதாராண உரிமைகளுக்குக் கூட குரல் கொடுக்க முடியாத நிலையில் வந்திருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி யதார்த்தத்திற்கு வாறியள். சிங்களவர் வடக்கு கிழக்கில் குடியேற்றப்படுவது போன்ற இலங்கையரசின் நீண்டகாலத் திட்டத்திற்கு அவர்களின் தம்மதீபக் கொள்கை தற்போது மகிந்த சிந்தனையூடாக எடுத்து வரப்படுவதுதான் காரணம் என்று நன்றாகத் தெரியும். ஆனால் அதைத் துரித கதியாக நடைமுறைப்படுத்த நான்காவது ஈழப்போரின் மூலம் நாம்தான் உதவினோம் என்பதை மறந்துவிடுகின்றீர்கள். இல்லையில்லை, போர் நம்மீது திணிக்கப்பட்டது, அதனால்தான் வேறு வழியின்றிச் சண்டைக்குப் போகவேண்டி வந்தது என்று சொன்னால், அது அரசியல் பலவீனம் என்றுதான் கொள்ளப்படும். அரசியலில் சாணக்கியமில்லாமல் நடந்துகொண்டதால்தான் அனைத்துலத்தின் ஆசியுடன் இலங்கையரசு மேற்கொண்ட போரில் சிக்குப்பட்டு சிதறப்படவேண்டி வந்தது.

சாணக்கியத்துடன் நடந்திருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு ஓரளவு உரிமையைப் பெற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் இலங்கையரசு வைத்த மரணப் பொறிக்குள் மாட்டுப்பட்டு தற்போது சாதாராண உரிமைகளுக்குக் கூட குரல் கொடுக்க முடியாத நிலையில் வந்திருக்கின்றோம்.

சிங்களவன் எங்களுக்கு உரிமைகள் எல்லாம் பேச்சுவார்த்தை மேசையில் தருவதாக தான் இருந்தான். புலிகள் தான் தட்டிக்களித்து விட்டார்கள் என்கிறீர்கள்.அப்போ ஏன் புலிகளை அமெரிக்காவில் (பணம் சம்பந்தமாக என நினைக்கிறேன்) பேச்சுவார்த்தைக்கு வரவிடாமல் செய்தார்கள்.நோர்வே போன்ற நடுநிலைமை நாடுகளே புலிகளை ஓரம் கட்டியதை கண்கூடாக பார்த்தோம்.இவர்கள் எமக்கு எப்படி உரிமை வாங்கி தந்திருப்பார்கள்?. இவர்கள் சேர்ந்து நாடகமாடியதற்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்.

இப்போ புலிகள் என்ன சாணக்கியத்தை பாவித்திருக்கலாம் என சொல்லுங்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி யதார்த்தத்திற்கு வாறியள். சிங்களவர் வடக்கு கிழக்கில் குடியேற்றப்படுவது போன்ற இலங்கையரசின் நீண்டகாலத் திட்டத்திற்கு அவர்களின் தம்மதீபக் கொள்கை தற்போது மகிந்த சிந்தனையூடாக எடுத்து வரப்படுவதுதான் காரணம் என்று நன்றாகத் தெரியும். ஆனால் அதைத் துரித கதியாக நடைமுறைப்படுத்த நான்காவது ஈழப்போரின் மூலம் நாம்தான் உதவினோம் என்பதை மறந்துவிடுகின்றீர்கள். இல்லையில்லை, போர் நம்மீது திணிக்கப்பட்டது, அதனால்தான் வேறு வழியின்றிச் சண்டைக்குப் போகவேண்டி வந்தது என்று சொன்னால், அது அரசியல் பலவீனம் என்றுதான் கொள்ளப்படும். அரசியலில் சாணக்கியமில்லாமல் நடந்துகொண்டதால்தான் அனைத்துலத்தின் ஆசியுடன் இலங்கையரசு மேற்கொண்ட போரில் சிக்குப்பட்டு சிதறப்படவேண்டி வந்தது.

சாணக்கியத்துடன் நடந்திருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு ஓரளவு உரிமையைப் பெற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் இலங்கையரசு வைத்த மரணப் பொறிக்குள் மாட்டுப்பட்டு தற்போது சாதாராண உரிமைகளுக்குக் கூட குரல் கொடுக்க முடியாத நிலையில் வந்திருக்கின்றோம்.

சிங்களவன் எங்களுக்கு உரிமைகள் எல்லாம் பேச்சுவார்த்தை மேசையில் தருவதாக தான் இருந்தான். புலிகள் தான் தட்டிக்களித்து விட்டார்கள் என்கிறீர்கள்.அப்போ ஏன் புலிகளை அமெரிக்காவில் (பணம் சம்பந்தமாக என நினைக்கிறேன்) பேச்சுவார்த்தைக்கு வரவிடாமல் செய்தார்கள்.நோர்வே போன்ற நடுநிலைமை நாடுகளே புலிகளை ஓரம் கட்டியதை கண்கூடாக பார்த்தோம்.இவர்கள் எமக்கு எப்படி உரிமை வாங்கி தந்திருப்பார்கள்?. இவர்கள் சேர்ந்து நாடகமாடியதற்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்.

இப்போ புலிகள் என்ன சாணக்கியத்தை பாவித்திருக்கலாம் என சொல்லுங்கள்??

சிங்களவன் எங்களுக்கு உரிமைகள் எல்லாம் பேச்சுவார்த்தை மேசையில் தருவதாக தான் இருந்தான். புலிகள் தான் தட்டிக்களித்து விட்டார்கள் என்கிறீர்கள்.அப்போ ஏன் புலிகளை அமெரிக்காவில் (பணம் சம்பந்தமாக என நினைக்கிறேன்) பேச்சுவார்த்தைக்கு வரவிடாமல் செய்தார்கள்.நோர்வே போன்ற நடுநிலைமை நாடுகளே புலிகளை ஓரம் கட்டியதை கண்கூடாக பார்த்தோம்.இவர்கள் எமக்கு எப்படி உரிமை வாங்கி தந்திருப்பார்கள்?. இவர்கள் சேர்ந்து நாடகமாடியதற்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்.

இப்போ புலிகள் என்ன சாணக்கியத்தை பாவித்திருக்கலாம் என சொல்லுங்கள்??

aNNee னுணாவில் அண்ணே அரசியல் இராச தந்திரம் தெரியாமல் கதைக்கிறியள். புலியள் கருணா, டக்கு, .... போல இராச தந்திரத்தை பாவிச்சிருந்தால் சர்வதேசத்தின் பொறிக்குள் இருந்து தப்பி இருக்கலாம் எல்லோ.. அதைத்தான் அவையள் சொல்ல வருகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

aNNee னுணாவில் அண்ணே அரசியல் இராச தந்திரம் தெரியாமல் கதைக்கிறியள்.

புலியள் கருணா, டக்கு, .... போல இராச தந்திரத்தை பாவிச்சிருந்தால் சர்வதேசத்தின் பொறிக்குள் இருந்து தப்பி இருக்கலாம் எல்லோ.. அதைத்தான் அவையள் சொல்ல வருகினம்.

என்ன உமை

நீங்கள் குறிப்பிடுபவர்கள் புலியைத்தேடுவதாகத்தான் தகவல்கள் சொல்கின்றன. அப்போ தோற்றது யாரண்ணே....?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எங்களுக்கு உரிமைகள் எல்லாம் பேச்சுவார்த்தை மேசையில் தருவதாக தான் இருந்தான். புலிகள் தான் தட்டிக்களித்து விட்டார்கள் என்கிறீர்கள்.அப்போ ஏன் புலிகளை அமெரிக்காவில் (பணம் சம்பந்தமாக என நினைக்கிறேன்) பேச்சுவார்த்தைக்கு வரவிடாமல் செய்தார்கள்.நோர்வே போன்ற நடுநிலைமை நாடுகளே புலிகளை ஓரம் கட்டியதை கண்கூடாக பார்த்தோம்.இவர்கள் எமக்கு எப்படி உரிமை வாங்கி தந்திருப்பார்கள்?. இவர்கள் சேர்ந்து நாடகமாடியதற்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்.

இப்போ புலிகள் என்ன சாணக்கியத்தை பாவித்திருக்கலாம் என சொல்லுங்கள்??

பேச்சுவார்த்தை மேசைக்குப் போனால் கேட்பதெல்லாம் கிடைத்திருக்கும் என்று நான் சொல்லவரவில்லை. பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகளை எட்டிய (உ+ம்: வடஅயர்லாந்து), தீர்வுகளை எட்டாத (பலஸ்தீனம்) உதாரணங்கள் எல்லாம் உள்ளன. எனினும் சர்வதேச மத்தியஸ்திற்குள் உட்பட்டுப் போன தரப்பை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் மறுதரப்பு அழித்தது நமது வரலாற்றில்தான் மிகமோசமாக நடந்தது. இதற்கு என்ன காரணம் என்று நாம் தேடமாட்டோம்!

ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் சமஸ்டியை ஆராய ஒத்துக்கொண்டு, பின்னர் அதில் இருந்து பின்வாங்கி வெளிகிட்டதால்தான் ரோக்கியோ மாநாட்டிற்குப் புலிகள் போகவில்லை. அங்கு போனால் ரோக்கியோ பிரகடனத்தில் கையொப்பமிட வேண்டி வந்திருக்கும் என்பதால் ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சமாதான நடவடிக்கைகளை இடைநிறுத்தப் போவதாக புலிகளே அறிவித்திருந்தனர். அதற்குக் கொடுக்கப்பட்ட காரணம் வாஷிங்டனில் நடந்த உதவி வழங்கும் கூட்டத்திற்கு தங்களை ஒரு தரப்பாக அழைக்கவில்லை என்பதாகும். எனினும் இலங்கையரசும், உதவி வழங்கும் நாடுகளும் ரோக்கியோப் பிரகடனத்தைப் புலிகள் இன்றி மேற்கொண்டனர். இந்தப் பிரகடனத்தை புலிகள் நிராகரித்து வேறு இருந்தனர். இப்படியான போக்குகளால்தான் நெருக்குவாரங்கள் வர ஆரம்பித்தது. நெருக்குவாரங்களில் இருந்து தப்பிக்க ரணிலைக் குள்ளநரியாக்கி மகிந்தவை ஜனாதிபதியாக்கியதும் வரலாறுதான்.

சாணக்கியம் எல்லாம் தமிழர் தரப்பில் இருந்ததாகச் சரித்திரத்தில் இல்லை!

aNNee னுணாவில் அண்ணே அரசியல் இராச தந்திரம் தெரியாமல் கதைக்கிறியள். புலியள் கருணா, டக்கு, .... போல இராச தந்திரத்தை பாவிச்சிருந்தால் சர்வதேசத்தின் பொறிக்குள் இருந்து தப்பி இருக்கலாம் எல்லோ.. அதைத்தான் அவையள் சொல்ல வருகினம்.

இராஜ தந்திரம் தெரிந்தவரையும், தந்திரங்களைப் பாவிக்காமல் தடுத்த கதையும் உங்களுக்கு நன்றாகத் தெரியும் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியம் எல்லாம் தமிழர் தரப்பில் இருந்ததாகச் சரித்திரத்தில் இல்லை!

இராஜ தந்திரம் தெரிந்தவரையும், தந்திரங்களைப் பாவிக்காமல் தடுத்த கதையும் உங்களுக்கு நன்றாகத் தெரியும் ^_^

:o:(:(
  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசுகளின் நலன்களுக்காக அழிக்கப்பட்ட ஈழத்தமிழின விடுதலைப்போராட்டம்

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதுபற்றிய ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர்களில் அனேகர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்வரும் காரணங்களைத் தவறாது குறிப்பிடுகின்றனர்.சக இயக்கங்களை அழித்தமை, மாற்றுக் கருத்துக்களில்லாத இறுகிய ஒற்றைத் தன்மை, முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை, ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தமை, உலகின் புதிய ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளாமை என்பவைகளாகும்.

இவை, கண்ணி வெடிகளிற்குப் பயந்து அங்கும் இங்கும் விலகாத ஒரு நேர்கோட்டுத்தன்மை கொண்டவையாகவே இருக்கிறது. உலகின் புதிய ஒழுங்கு தவிர்ந்த ஏனையவை, ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் அவர்கள் மேற்கொண்டிருக்கக்கூடாத செயற்பாடுகள்தான். விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள்மீது அக்கறை கொண்டிருந்தாலும், அவ்வக்கறை இராணுவ அமைப்பிற்கு மேலான நிலையில் வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், இவைகள் நீதியை விரும்புபவர்களின் கவனத்திற்குரியனவாக இருப்பவைகளே தவிர, சர்வதேச ஆதிக்க அரசுகளின் உண்மையாக கவனத்துக்குரியவை அல்ல.

இவற்றில் ராஜீவ் காந்தியின் கொலை ஒரு விதிவிலக்கு. உண்மையில் இக் கொலைக்கு இந்தியா தனது வல்லாதிக்கக் கனவுகளின் பின்னணியிலேயே அதிக அழுத்தம் கொடுத்தது. அது விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு தானாக அவர்கள் மடியில் விழுந்த கனி.

அக் கொலை நடைபெற்றிருக்காவிடினும், இந்தியா அவர்களை அழித்தே இருக்கும். வேறு காரணங்களைத் தேடியிருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.

ஏனைய சக இயக்கங்கள், மாற்றுக் கருத்துக்கள், முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் போன்றவைகள் வல்லாதிக்க சத்திகளின் உண்மையான, நேர்மையான கவனத்துக்குரியவைகளாக இருந்தால், இன்றைய உலக நாடுகளில் அனேகமானவை அழிவுக்குள்ளாக்கப்பட்டிருக்கவேண்டும் அல்லது ஒவ்வொரு நாடும் தனக்குத்தானே குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

நீதியின் நிமித்தம் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டிருந்தால், அதே நீதியின் நிமித்தம் ஒவ்வொரு நாடுகளும் தற்கொலை செய்துகொள்ளும் அரசுகளாக மாறியிருக்கவேண்டும். அதுவே அவர்களிற்குரிய தகுதியும் நீதியுமாகும்.

வல்லரசு நாடுகள் அதுவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவை உலக வளங்களின்மீது தீராக் காதல் கொண்ட நாடுகள் என்பதை புதிதாகச் சொல்லிவைக்க வேண்டியதில்லை. வல்லாதிக்க நாடுகள் விடுதலைப் புலிகளின் அழிவுக்கான வரையறைகளை ஏன் வகுத்துக்கொண்டது?

இதற்கான வேரினை 08-04-1990ல் அனிதா பிரதாப்பிற்கு பிரபாகரன் அளித்த செவ்வியில் கண்டுகொள்ளலாம்.

‘எமது மக்களின் சுதந்திரத்திலும், விடுதலையிலும் எந்த ஒரு சக்தி தலையிடுவதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம்’.

‘எந்த ஒரு அன்னிய சக்தியும் எங்கள் பிரச்சனையில் தலையிட்டு எங்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும், நாங்கள் தொடர்பான முடிவு எடுப்பதையும் நாங்கள் விரும்பவில்லை’.

அன்னிய சக்திகள் என்பது, ஈழத்தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து சாதுரியமாக உள் நுழைந்துகொண்ட பின்னர், தமது பொருளாதார நலன்களுக்குரிய தளமாக, தமிழீழ மண்ணைப் பாவிப்பதை நோக்காகக் கொண்ட எல்லா நாடுகளும்தான். திருமலையின் புல்மோட்டையில், முன்பு இலங்கை அரசின் அனுமதியுடன் ‘இல்மனைட்’ கனிமப் பொருளுக்குரிய மண்ணை சேகரித்துக்கொண்டிருந்த யப்பானியரை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தியமையை இங்கு நினைவுகூரலாம்.

விடுதலைப் புலிகளது தலைவரது மேற்கூறிய தன்மையை மாற்றுவதற்காக ‘பெரியண்ணன்’ இந்தியா உட்பட அனேக நாடுகள் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளிலும் மறைமுகமான ஆசை வார்த்தைகளிலும், பயமுறுத்தல்களிலும் முயற்சித்தது. இதற்கு 1987ல் புது டில்லியின் ‘அசோகா விடுதியில்’ இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்கும்படி, பிரபாகரனுடன் இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிற் மேற்கொண்ட உரையாடல்களே சாட்சி. தமிழர் உரிமை சார்ந்து பிரபாகரன் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கவில்லையென்பதை பின்னர் டிக்சிற் முதலமைச்சர் எம்.ஜி. ஆருக்கு இவ்வாறு கூறினார்.

”தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றனர். ஆனால் இவர்கள் மட்டும் இதை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர வேறு எதையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள்போல் தெரிகிறது….”

2002ல் சந்திரிகா பண்டாரநாயக்காவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்காவை பிரதமராகவும் கொண்ட சிறிலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்பின், அமெரிக்காவில் நடைபெற்ற நிதியுதவும் நாடுகள் மகாநாட்டில் விடுதலைப் புலிகள் அழைக்கப்படாமையினால், ரோக்கியோவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகள் மகாநாட்டில் பங்கு கொள்ள விடுதலைப் புலிகள் மறுத்துவிட்டனர்.

இந்த முடிவை மாற்றி, அவர்களை அந்த மகாநாட்டில் பங்குபற்ற வைக்க அனைத்து நாடுகளும் வற்புறுத்தியபோதும் அவர்கள் உறுதியாக மறுத்தமையையும் பின்னர் 2003 ஜுலையில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஊடகவியலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம்”எந்த வல்லாதிக்க சக்திக்கும் அடிபணியாமல் எமது குறிக்கோளில் உறுதியாகவுள்ளோம்;. இதற்காக நாம் எவ்வாறான சக்திக்கும் முகம்கொடுத்து வருகிறோம். இனிமேலும் முகம் கொடுக்கவும் தயாராகவுள்ளோம்.”

என்று கூறியதையும் நினைவு கூரலாம். இது அனைத்துலக நாடுகளிற்கும் தெளிவாக ஒன்றை உணர்த்தியது. பிரபாகரன் எந்த சக்திகளிற்கும் வளைந்து கொடுக்கக்கூடியவர் அல்ல என்பதைத்தான்.

இந்த அழுத்தமான விட்டுக்கொடாமை என்பது மேற்கத்தைய, ஏன் இன்றைய கீழத்தேசங்களிலும் ‘இராஜதந்திரம்’ என்ற அரசியல் சொல்லின் அர்த்தத்துடன் முற்றும் முரண்படுகிறது. குறிக்கப்பட்ட நோக்கை அடைவதற்கு எப்படியும், எல்லா விதங்களிலும் எல்லா அறநெறிகளிற்கும் மாறான வழிமுறைகளிற்கூட செயற்படலாம் என்பது இந்த இராஜதந்திர விதிகள்.

இந்த தந்திர வழிகள் மூலம் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள முடியாது போய்விடின், நேரடியாக ஆயுத பலத்தின்மூலம் தம் நோக்கினை அடைந்து கொள்ளலாம். இதுவே நியாயம் அல்லது உலகின் ஒழுங்கு. இந்தக் கருத்தை தமது கட்டுப்பாட்டிலுள்ள தகவல் வெளிப்பாட்டுச் சாதனங்கள் ஊடாக உருவாக்கிக்கொள்வார்கள்.

இந்த வழிமுறைக்கு, மாறிவரும் புதிய ஒழுங்கின் வல்லாதிக்கப் போட்டியின் நெளிவு சுழிவுகளிற்கு ஏற்ப, பிரபாகரனின் அழுத்தமான விட்டுக்கொடாமை உவப்பானதாக இல்லாமல் போனது மாத்திரமல்ல, அது ஆபத்தான அடையாளமாகவும் காணப்பட்டது. ஏனெனில் வல்லாதிக்க நாடுகளின் நலன்களிற்கான சுரண்டலின் பகுதியாக பிரபாகரனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களைக் கொண்டுவரமுடியாது என்பதை உணர்த்தின.

இந்த விட்டுக்கொடாமை, தமிழர் வாழ்வு சார்ந்த அகம், புறம் என்ற அடிப்படையில் மானம், வீரம் என்ற தொன்மைக் கருத்தமைவுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கலாம். கொண்ட கொள்கை வழுவாமை வீரத்தின் குறியீடாகவும், சந்தர்ப்பவாதம் துரோகத்தனமாகவும் கருதப்பட்டது.

உயிர்வாழ்தல் மானத்துடன் தெடர்புடையதாக தமிழ் இலக்கியங்களில் பதியப்பட்டு இருந்தது. ‘மயிர் நீர்ப்பின் உயிர் வாழாக் கவரிமான்’ ஒரு முக்கிய குறியீடாகத் தமிழர் வாழ்வில் நிலை பெற்றது. புறமுதுகு காட்டாது மார்பில் காயத்துடன் போர்க்களத்தில் மடிவதொன்றே மகத்துவமுடையது. இவைகள் தமிழர் வாழ்வில் நீக்கமற நிறைந்திருந்தது. அத்துடன் மார்பில் காயத்துடன், வீரமுடன் மடிபவர்கள் நடுகைக் கற்கள் மூலம் வணக்கத்திற்குரியவர்களாகவும் ஆக்கப்பட்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் இந்த தமிழர் மாண்பு சார்ந்த கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டவர் என்பதற்கு சோழர் புலிக்கொடியும், அவர் தனக்குத் தேர்ந்துகொண்ட கரிகாலன் என்ற புனைபெயரும் போர்க்களத்தில் மடிபவர்கள் வணக்கத்திற்குரியவர்கள் என்பதை சுட்டும் மாவீரர் துயிலும் இல்லங்களும் மிக எளிமையான சாட்சியங்களாகும்.

இவை அவரது அரசியல் கருத்தமைவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்ற கருத்து இலகுவில் புறக்கணிக்கக்கூடியவையல்ல. இந்தத் தமிழர் மாண்பின் சாரம், மேற்கின் இராஜதந்திர அர்த்தங்களுக்குள் வளைந்து காரியத்தைச் சாதிக்கும் தன்மையைத் தொடர்ந்தும் தாமதப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் தமது வளர்ச்சிப் போக்கில் ஒரு கெரில்லாப் போராட்ட அமைப்பு என்பதையும் தாண்டி, உலகம் அதுவரையிலும் எந்த விடுதலைப் போராட்ட அமைப்பிலும் காணமுடியாத வகையில் கடற்படை, விமானப்படை என்ற பூரண அர்த்தத்தில் கொள்ளாவிடினும் விமானத்திலிருந்து தாக்கும் திறன் ஆகியவற்றைத் தம்முள் கொண்டிருந்ததோடு ஓர் அரசிற்குரிய அனைத்துக் கட்டமைப்பையும் கொண்டிருந்தனர். இந்த அசுர வளர்ச்சி விடுதலைப் போராட்டங்களை எதிர்கொண்ட அனைத்து நாடுகளிற்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளின் அரசிற்குரிய பரிமாணம் ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளிற்கும் முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதுதான் அந்த அச்சம். பல விதங்களிலும் மேற்கின் அரசியல் அமைவிற்கு முரணாக இருந்த விடுதலைப் புலிகளை எப்படி அழிக்கலாம் என்ற அவர்களின் கவலைக்கு மருந்தாக அமைந்ததுதான் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலிற்குப் பின்னர் அனைத்து அரசியல் நிலைமைகளும் தலைகீழாக மாறியது. விடுதலைப் போராளிகளாகக் கருதப்பட்ட அனைவரும் சடுதியாக பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டார்கள். தேசிய இனம் என்ற வரையறைக்குள் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்தவர்கள், தேசிய இனம் என்ற சொல்லிற்குப் பதிலாக சிறுபான்மையினம் என்ற சொல்லைப் பாவிக்கத் தொடங்கினர். இதன்மூலம் தேசிய இனத்திற்கு அளிக்கப்பட்டுவந்த வரையறைகள், உரிமைகள் இல்லாதொழிக்கும் நிலை உருவாகியது. தத்தம் நாடுகளில் தேசியப் பிரச்சனையின் போராட்டங்களை எதிர்கொண்ட அனைத்து நாடுகளும் இந்த ஒற்றை ஒழுங்கிற்குள் மிக மகிழ்ச்சியாக இணைந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ‘எந்தப் பேயோடும் இணைந்து கொள்ளும்’ இலங்கையின் பொது அரசியற்போக்கிற்கு ‘வாராது போல்வந்த மாமணி’ச் சூழ்நிலை இது.

”அமெரிக்கா தனது பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளைச் சேர்த்துக் கொண்டது, சர்வதேச அளவில் புலிகளைப் பலவீனப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் முதன்மையான பங்காற்றியிருக்கிறது’ என ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் உப நிரந்தரப் பிரதிநிதியும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவருமான பீற்றர் போர்லிக் கூறியதை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் சர்வதேசச் சூழலை, தமிழ் ஆய்வாளர்கள் கருதியதற்கு மாறாக, உலக மாற்றங்களை விடுதலைப் புலிகள் நன்றாகவே உணர்ந்திருந்தனர் என்றே கொள்ளவேண்டும். அதனால்தான் அவர்கள் தாமாகவே முன்வந்து பேச்சுவார்த்தைக்குரிய கதவினைத் திறந்தார்கள். இரட்டைக் கோபுர தாக்குதல் நடைபெற்ற ஆண்டையும் (11-09-2001) விடுதலைப் புலிகளின் சமாதான முன்னெடுப்பிற்கான யுத்தநிறுத்த அறிவிப்பு ஆண்டையும் (24-12-2001) கவனித்தால் இது நன்கு புரியும்.

இரு தரப்பையும் சம தரப்பாக ஏற்றுக்கொண்டு பேச்சு வார்த்தைக்கு ஆதரவளித்த மேற்குலகம், அரசிற்குச் சார்பான நிலைப்பாட்டை உடனே எடுக்கத் தொடங்கியது. அதன் முதற்படிதான் முன்னர் குறிப்பிட்ட அமெரிக்க மகாநாட்டிற்கு விடுதலைப் புலிகள் அழைக்கப்படாமை.

சம தரப்பென்ற வகையில் விடுதலைப் புலிகளும் அழைக்கப்படவேண்டும் என்ற கருத்தை இலங்கை அரசு முன்வைத்திருந்தால் அரசின் நம்பகத் தன்மையையாவது அது உறுதிப்படுத்தியிருக்கும். ஆனால் அவர்கள் அதற்கு மாறாக உள்ளுர மகிழ்ச்சி அடைந்தமை, அவர்களது வழமையான நம்பகத் தன்மையின்மையையே உணர்த்தியது.

சமாதான காலத்தில் 14-06-2002 ல் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற் புலிகள் 12 பேர் கடற்படையினரால் கொல்லப்பட்டனர். இது ஒரு பாரதூரமான விளைவாகவும், இதனால் ஏற்படும் விடுதலைப் புலிகளின் சீற்றம், யுத்த நிறுத்தத்தையே முடிவுக்குக் கொண்டுவரும் எனவும் பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 1987ல் விடுதலைப் புலிகள், இந்திய இராணுவத்தினருடன் பொருதிக்கொண்டதற்கும் இதை ஒத்த சம்பவமே காரணமாயிருந்தது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளலாம். இதேபோன்ற முறிவு ஏற்படாமைக்கு, இந்த பொறியை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள் என்பதுதான் காரணம்.

சுமாதானப் பேச்சு வார்த்தைகளின்போது இரு தரப்பும் நியாயமான தீர்வின் அடிப்படையில் ஈடுபடவில்லை என்பது, அக்காலத்திலேயே பலராலும் உணரப்பட்டது. பேச்சுவார்த்தையை புலிகள் முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த அரசும், அரசு முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களை புலிகளும் ஏற்படுத்த முனைந்த வேளைகளில், இந்தியா உட்பட வல்லரசு நாடுகள், புலிகளை முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களிற்காகக் காத்திருந்தது.

உதவி வழங்கும் ரோக்கியோ மகாநாட்டில் விடுதலைப் புலிகள் பங்குபற்ற மறுத்தமை அவர்களிற்கான அபாயத்தை முன்னறிவித்தது. அக்கால அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா ரொக்கா ”இன நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான சமாதான முயற்சிகளின் சிறந்த நலன்களாகவும், தமிழ் மக்களின் நலன்களிற்காகவும், ஏன் தங்களின் நலன்களிற்காகவும் விடுதலைப் புலிகள் ரோக்கியோ மகாநாட்டில் பங்குபற்ற வேண்டும்” என்றார்.

இதில் ‘தங்களின் நலன்’ என்ற வார்த்தை, விடுதலைப் புலிகளின் முதுகைத் தடவுவதற்கல்ல என்பதை அனைவரும் அறிவார். அதேவேளை அமெரிக்காவின் பிரதி ராஜாங்க அமைச்சர் றிச்சட் ஆமிரேஜ் ”பேச்சுவார்த்தைக்கு வராத ஒரு குழு சர்வதேசத்தை மிரட்டும் தொனியில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். இதனோடு பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களை, குறிப்பாக பாதுகாப்பு வலயம் போன்றவைகளின் இழுத்தடிப்புக்கள், அரசால் மறுக்கப்பட்ட இடைக்காலத் தீர்வு போன்றவைகள் தமிழீழத்தில் வீசப்போகும் பெரும் புயலுக்கான கருமேகங்களின் திரட்சியானது.

இக் கருமேகங்களின் பின்புலத் திரட்சியில் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் Project Beacon உருவாகியது. இத்திட்டம் இலங்கையுடன், இந்தியா உட்பட பல வல்லரசு நாடுகளின் உதவியுடனும் நல்லாசியுடனும் 2005ல் ஒஸ்லோவில், உருவாக்கப்பட்டது.

2006ல் இருந்து 2009 வரையுமான காலப்பகுதிக்குள் மூன்று கட்டங்களாக விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டுவது, யுத்தத்தில் பொதுமக்கள் படுகொலைகள் கட்டற்றுப் போகும்போது புலம்பெயர் நாட்டு மக்கள் கிளர்ந்தெழாதவாறு முக்கியமானவர்களைக் கைதுசெய்தல், மக்கள் பீதியடைந்து விடுதலைப் புலிகளிற்கு எதிராக திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும், தொடர் குண்டுவீச்சில் தமிழர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தல், போன்ற உப திட்டங்களும் அதனுடன் இணைந்திருந்தது.

இதன் பின்னர் இந்தியா சீனா இரசியா பாகிஸ்தான் போன்ற முக்கிய ஆசிய நாடுகளினதும், வல்லரசுகளின் உதவியுடனும் 25-05-2006ல் தொடங்கிய போர் 18-5-2009ல் விடுதலைப் புலிகள் சிதறடிக்கப்பட்டபின் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றிக்கு சில நாடுகள் அளித்த அதீத வாழ்த்துக்கள், விடுதலைப் புலிகளின் அழிவை அவர்கள் எந்தப் பின்னணியில் விரும்பியிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்தும்.

இந்த இனப்படுகொலையின் வெறியாட்டத்தின் பின், கிட்டத்தட்ட மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை, இலங்கை அரசு வதைமுகாமில் மிருகங்களாக அடைத்து வைத்துவிட்டு, தமிழர்களை வெற்றிகொண்டதைக் கொண்டாடிய விதம், பல நாடுகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியபோதிலும், வெற்றி மமதையில் இருந்த பேரினவாத அரசிற்கு அதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

வெற்றியின் பின்னர் சர்வதேச நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தியாகூட வெளியிட்ட அறிக்கைகளில், இவர்களின் உதவிக்கும் நெறிப்படுத்தலுக்கும் வெற்றிக்கும் பிரதிபலிப்பாக சில வாக்குறுதிகளை இலங்கை அளித்திருந்ததாக அறியமுடிகிறது. அது விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர் அரசு ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன் வைக்கும் என்பதுதான்.

ஏனெனில் இந்தியா, அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் அனைத்தும் ஒரே விடயத்தை இலங்கை அரசிற்கு திரும்பத்திரும்ப வலியுறுத்திக்கொண்டு வருகிறார்கள். அது அரசு வாக்குறுதி அளித்தபடி இனப் பிரச்சனைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வுத்திட்டத்தை விரைவாக முன்வைக்க வேண்டும் என்பதுதான். இத்திட்டம் இந்தியாவால் முன்வரையப்பட்ட 13வது அரசியல் சீர்திருத்தச் சட்டமும் அதற்கு அப்பாலும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இக்காலங்களில் இலங்கை ஜனாதிபதியும் அவரது கட்சி அங்கத்தவர்களும் வெளியிட்ட முக்கியமான சில கருத்துக்கள் இவை

”இலங்கையில் சிறுபான்மையினர் என்ற ஒன்று இல்லை. அனைவரும் இலங்கையரே”

”அவர்கள் (தமிழர்கள்) எது வேண்டுமென்று நினைக்கிறார்களோ அது அவர்களிற்கு கிடைக்காது”

”விடுதலைப் புலிகள் அழிந்தபிறகு தமிழர் பிரச்சனையென ஒன்றும் இல்லை”

”முதலில் மீள்குடியேற்றம் அதன்பிறகே அரசியல் தீர்வு”

மீள்குடியேற்றத்திற்கு மூன்றுமாத காலஅவகாசம் பின்னர் கண்ணிவெடி அகற்றுதல் என்ற பேரில் உத்தேசமாக ஐந்து வருடங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றது.

நிவாரணப் பணியாக பணம் வரும் வாசலாக அகதிகள் இருப்பதனால், அகதிகள் குடியேற்றத்தை அரசு முதன்மைப்படுத்தாது. அடுத்த ஆண்டும் மக்களைப் பராமரிக்க மேலும் 225 மில்லியன் டொலர்கள் தேவையாக இருப்பதாக இலங்கை அரசு கோரியுள்ளது இதனை உறுதிப்படுத்தும்.

இந்த உண்மையை ஐ.நா.சபை உணரும் காலம் இன்னும் கனியவில்லைபோலும். இறுதி யுத்தத்தின்போது 400 போராளிகள்தான் இருக்கின்றார்கள் என்று அறிவித்த அரசு பின் அதன் எண்ணிக்கையை மேலும் 10000 மாக உயர்த்திக் கொண்டது. இந்த எண்ணிக்கை அரசின் தேவைகளிற்காக காலத்திற்குக் காலம் தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டே போகும்.

அரசின் மேற்கூறிய அறிக்கைகளும் காலம் கடத்தல்களும், கடந்த அறுபது ஆண்டுகாலமாக ஈழமக்கள் கடந்துசென்ற வழியில் சர்வதேசம் வருவதற்கான கதவு திறக்கப்படுகின்றது என்பதை குறிக்கின்றது. மீள்குடியேற்றத்தின் பின்னர் அரசியல் தீர்வு என்பதனால் இப்போது ஐ.நா.சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன மீள் குடியேற்றம் பற்றி உரத்துக் குரல் கொடுக்கின்றனர். இதுவும் அரசின் காதுகளில் விழுவதாக இல்லை. இதன் அதிருப்தி வெளிப்பாடுகள் பல்வேறு விதங்களில் வெளிவரத் தொடங்கிவிட்டது.

பல்வேறு தடவைகள் கோரிக்கை விட்டுக் களைத்துப்போன ஐ.நா.பொதுச் செயலாளர் நாயகம் பான்.கி.மூன் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனாய் நியுயோர்க்கில் நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்காவிடம் ”மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்தத் தவறினால் கசப்புணர்வதான் தீவிரமடையும்” என்று கூறியுள்ளார்.

இதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு ஆணையாளர் பெனிற்றா பெரேரோ வால்ட்டனர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்சவைச் சந்தித்து ”இடம் பெயர்ந்த மக்கள் மிகத் துரிதமாக மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல் இந்திய அரசியல் ஆய்வாளர் கேணல் ஹரிகரன் ”சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போதெல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள், செய்வார்கள். முன்னர் இனப் பிரச்சனைகளிற்கு தீர்வாக சமஷ்டி பற்றி பேசினார்கள். இப்போது அதைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்று எதிர்காலத்தில் இதுவும் அரசியலிலிருந்து காணாமல் போய்விடும். சிறிலங்கா தமிழர் விடயத்தில் பாராமுகமாய் இருந்தால் கடந்த முப்பது வருடங்களில் அது சுற்றிவந்த சுழற்சியை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டியிருக்கும்” என்கிறார்.

இப்போது மீண்டும், தீர்வுத் திட்டத்திற்கான அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ”பொதுத் தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுத் திட்டம் வெளியிடப்படும்” என்கிறார்.

இதன் தொடர்ச்சியாக சர்வதேசம் சில தெளிவான நிலைப்பாடுகளை உணர்த்த முன்வரும்போது, தமிழர்களின் அர்த்தமுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமா?

அல்லது சீனாவின் பின்னணியின் பலத்தில் ‘உனக்கும் பெப்பே உனது அப்பனுக்கும் பெப்பெ’ என்பதான இலங்கையின் இயல்பான மனநிலை வெளிவருமா?

அல்லது மேற்குலகின் பொருளாதாரத் தேவைகள்தான் முதன்மைப்படுத்தப்படுமா? இக் கேள்விகளே முக்கியமானது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் GSP + வரிச் சலுகை தற்காலிகத் தடையுடன் நீள்கிறது. இப்போதைய அதன் தற்காலிக நிறுத்தமும் அதைப்பெற அரசு எடுக்கும் அதிதீவிர முயற்சியும், அமெரிக்காவினால் வெளியிடவிருந்த சிறிலங்காவின் மனித உரிமை மீறல் அறிக்கையும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சரின் அமெரிக்க பயணத்துடன் மெல்ல பின்தள்ளப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டுவிட்டது. மீண்டும் அமெரிக்கா தன் சுயநல அடிப்படையில் இலங்கையைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்து இருக்கிறது.

இந்தியாவும் பெரிய அழுத்தம் எதனையும் இலங்கை அரசிற்கு கொடுக்கப் போவதில்லை. இந்த ஆதரவான போக்கு அல்லது இதற்கு எதிரான கடுமையான போக்கு ஆகியவற்றின்மூலம், அர்த்தமுள்ள தீர்விற்குப் பதிலாக ஏதாவது ஒன்று, தீர்வு என்ற பெயரில் தமிழர்முன் வைக்கப்பட, இந்தியா, மேற்குலகின் அரசியல் நலன்கள் முதன்மைப்படுத்தப்படலாம்

http://nesantamilan.blogspot.com/2010_03_31_archive.html

ஒரு மாதிரி யதார்த்தத்திற்கு வாறியள். சிங்களவர் வடக்கு கிழக்கில் குடியேற்றப்படுவது போன்ற இலங்கையரசின் நீண்டகாலத் திட்டத்திற்கு அவர்களின் தம்மதீபக் கொள்கை தற்போது மகிந்த சிந்தனையூடாக எடுத்து வரப்படுவதுதான் காரணம் என்று நன்றாகத் தெரியும். ஆனால் அதைத் துரித கதியாக நடைமுறைப்படுத்த நான்காவது ஈழப்போரின் மூலம் நாம்தான் உதவினோம் என்பதை மறந்துவிடுகின்றீர்கள். இல்லையில்லை, போர் நம்மீது திணிக்கப்பட்டது, அதனால்தான் வேறு வழியின்றிச் சண்டைக்குப் போகவேண்டி வந்தது என்று சொன்னால், அது அரசியல் பலவீனம் என்றுதான் கொள்ளப்படும். அரசியலில் சாணக்கியமில்லாமல் நடந்துகொண்டதால்தான் அனைத்துலத்தின் ஆசியுடன் இலங்கையரசு மேற்கொண்ட போரில் சிக்குப்பட்டு சிதறப்படவேண்டி வந்தது.

சாணக்கியத்துடன் நடந்திருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு ஓரளவு உரிமையைப் பெற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் இலங்கையரசு வைத்த மரணப் பொறிக்குள் மாட்டுப்பட்டு தற்போது சாதாராண உரிமைகளுக்குக் கூட குரல் கொடுக்க முடியாத நிலையில் வந்திருக்கின்றோம்.

எங்களுக்கு ஜதார்த்தம் எப்பவோ தெரியும்... ஆனால் உங்களுக்கு தெரியுமோ எண்டது தான் சந்தேகமாக இருக்கு.... நாங்கள் கண்ணை வித்துதான் கண்ணாடி போட்டு கொண்டு இருந்தனாங்கள் எண்ட உண்மை வெளியிலை நிண்டு பாத்தவையை விட செய்தவைக்கு நல்லாவே தெரியும்... !

நாங்கள் செய்த அனைத்தும் இலங்கையில் ஆயுத போட்டியை மட்டும் தான் ஊக்குவிச்சதும் கூட உங்களை விட அதிகமாக எங்களுக்கு தெரியும்... நாங்கள் ஒரு ஆயுதத்தை கொண்டு போனால் அவன் அதைவிட பெரிசா வாங்கிறதும்... பிறகு அதுக்கு தீர்வை நாங்கள் தேடுவதுமாக தான் போராட்டம் நகர்ந்தது...

இப்ப பிரச்சினை அது இல்லை..

நாங்கள் உங்களை இது வரைக்கும் கேக்கிறது நாங்கள் செய்ததை விட வேறை என்ன தெரிவு உங்களிட்டை இருந்தது... நீங்கள் சொல்லுற இணக்க அரசியல் சிங்களத்திட்டை பலிக்கும் எண்டால் டக்கிளசும், கருணாவும் ஏன் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய முடியவில்லை....?? இவையை விட கனபேர் சேந்து நிண்டவை அவர்களாலை ஏன் முடியவில்லை எண்ட உண்மை ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை....??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தகமைகள் பல இருந்தும், இலக்கினையடைய வழியிருந்தும் ஒற்றுமையின்மையால்,ஒரு சேர ஆதரிக்காமல், பூனைகளிடம் அப்பத்தைக் கொடுத்து ஏமாந்த மந்தைகளாக, வெற்றிடத்தில் செல்லும் திசையறியாமல் தமிழினம் இருப்பது வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்

தகமைகள் பல இருந்தும், இலக்கினையடைய வழியிருந்தும் ஒற்றுமையின்மையால்,ஒரு சேர ஆதரிக்காமல், பூனைகளிடம் அப்பத்தைக் கொடுத்து ஏமாந்த மந்தைகளாக, வெற்றிடத்தில் செல்லும் திசையறியாமல் தமிழினம் இருப்பது வேதனை.

இது பல‌ நூற்றாண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருப்பது தமிழனின் சாபக்கேடு.

Edited by தமிழ் சிறி

தகமைகள் பல இருந்தும், இலக்கினையடைய வழியிருந்தும் ஒற்றுமையின்மையால்,ஒரு சேர ஆதரிக்காமல், பூனைகளிடம் அப்பத்தைக் கொடுத்து ஏமாந்த மந்தைகளாக, வெற்றிடத்தில் செல்லும் திசையறியாமல் தமிழினம் இருப்பது வேதனை.

நீங்கள் சொல்வது தான் நிதர்சனமாக நடந்து கொண்டு இருக்கிறது... காலம் காலமாக சிங்களவன் எப்படியான தீர்வை எங்களுக்கு விட்டு வைச்சு இருக்கிறது என்பதை தமிழர் புரிந்து கொள்ளாததின் விளைவுதான் இவ்வளவும்...

ஒரு வண்டியில் பூட்டிய மாடுகள் இரண்டும் ஓவொண்றும் ஒரு திசையில் வண்டியை இழுத்தால் எப்படி வண்டி நகரும்....?? கொஞ்சம் பலமான மாடு இழுக்கும் திசையில் கொஞ்சத்தூரம் போய் மாடுகளைத்துப்போனதும் நிண்று விடும்...

இதுதான் புலிகள் விடயத்திலும் நடந்தது..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஜதார்த்தம் எப்பவோ தெரியும்... ஆனால் உங்களுக்கு தெரியுமோ எண்டது தான் சந்தேகமாக இருக்கு.... நாங்கள் கண்ணை வித்துதான் கண்ணாடி போட்டு கொண்டு இருந்தனாங்கள் எண்ட உண்மை வெளியிலை நிண்டு பாத்தவையை விட செய்தவைக்கு நல்லாவே தெரியும்... !

நாங்கள் செய்த அனைத்தும் இலங்கையில் ஆயுத போட்டியை மட்டும் தான் ஊக்குவிச்சதும் கூட உங்களை விட அதிகமாக எங்களுக்கு தெரியும்... நாங்கள் ஒரு ஆயுதத்தை கொண்டு போனால் அவன் அதைவிட பெரிசா வாங்கிறதும்... பிறகு அதுக்கு தீர்வை நாங்கள் தேடுவதுமாக தான் போராட்டம் நகர்ந்தது...

இப்ப பிரச்சினை அது இல்லை..

நாங்கள் உங்களை இது வரைக்கும் கேக்கிறது நாங்கள் செய்ததை விட வேறை என்ன தெரிவு உங்களிட்டை இருந்தது... நீங்கள் சொல்லுற இணக்க அரசியல் சிங்களத்திட்டை பலிக்கும் எண்டால் டக்கிளசும், கருணாவும் ஏன் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய முடியவில்லை....?? இவையை விட கனபேர் சேந்து நிண்டவை அவர்களாலை ஏன் முடியவில்லை எண்ட உண்மை ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை....??

சந்தேகங்கள் எல்லாவற்றையும் தீர்த்துக்கொள்ள நிறையக் காலம் எடுக்கும். சந்தேகங்கள் இல்லாத பூரண மனிதர்கள் மிகமிக அரிது!

ஆயுதப்போட்டியும், சிறிலங்காப் படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான பெருத்த படைவலு வித்தியாசமும் எப்போதும் தொடர்ந்து இருந்துதான் உள்ளது (உ+ம்: சில நூறு புலிகள் இருந்த 80 களின் ஆரம்பத்தில் சில ஆயிரங்களாகத்தான் சிறிலங்காப் படைகள் இருந்தன). எனினும் ஆள்வலு இன்றி சாதுரியமான திட்டமிடல்களால் புலிகள் 2001 இல் படைவலுச் சமநிலையை அடைந்திருந்தனர். அதன்பின்னர் ஆயுதப் போட்டியை ஊக்குவிக்காமல் அரசியல் பேச்சுவார்த்தைகலின் மூலம் தீர்வு ஒன்றை எட்ட முனைந்திருதாலும், அரசியலில் சாதுரியமாகச் செயற்படமுடியாததால், சர்வதேசத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட போரில் மிகுந்த அழிவைக் கண்டோம்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் இணக்க அரசியல்தான் இருக்கும் ஒரே தெரிவு என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை, ஆனால் அதைத்தான் நான் சொல்லுகின்றேன் என்று நீங்கள் கருதுவது எனது கருத்துக்களைச் சரியாகக் கிரகிக்காமல் இருப்பதால் இருக்கலாம்.

டக்ளஸும், கருணாவும் சிறிலங்கா அரசின் சொற்படி நடப்பவர்கள் என்பதால், அவர்களால் மகிந்த அரசினால் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பால் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யமுடியாது. இதுவே சிறிலங்காச் சிறையில் இருக்கும் கேபியினதும் நிலை. இத்தகைய அரசியல் நிலைகளில் தமிழர்கள் சுயாதீனமாக தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேறு ஒரு வழியும் இல்லை என்று நினைப்பதும் தவறு.

100% தமிழ் பேசும் மக்கள் மட்டுமே வாழ்ந்த யாழ்ப்பாணத்தில்கூட சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியமர்த்தி, யாழ்ப்பாணம் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று உறைக்கவைக்கும் மகிந்தவின் இனவாத அரசியலை எதிர்க்க தமிழர் அரசியல் தலைமைகளால் முடியாதுள்ளது என்பதும் யதார்த்தமே.

இந்த நிலைக்குக் காரணம் சமாதான காலத்தில் பாவிக்கப்பட்ட சாணக்கியமற்ற அரசியலே என்பதை நாங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். பலஸ்தீன நாட்டை சுதந்திரமாகச் செயற்படாமல், இஸ்ரேல் எவ்வளவுதான் தடுத்தாலும், பி.எல்.ஓ தற்போது மேற்கு நாடுகளின் கைப்பொம்மைபோன்று செயற்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்தாலும், பலஸ்தீனத்தை பலஸ்தீனியர்களே தற்போது (குறைபாடுகளுடன்) நிர்வகிக்கின்றார்கள். அதைப்போல தமிழர்களும் குறைபாடுகளுடன் கூடிய தீர்வு ஒன்றை சமாதானக் காலத்தில் எட்டியிருக்கு முடியும். அப்படி ஒரு தீர்வு வந்திருந்தால், அது தற்போதைய சிங்கள ஆதிக்கத்தையும், குடியேற்றங்களையும் கட்டுப்படுத்தியிருக்கும். எனினும் கிடைத்த அரசியல் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தாமல் நழுவ விட்டுவிட்டோம் என்றுதான் சொல்ல வருகின்றேன். அதாவது எங்கள் முன்னர் இருந்த தெரிவுகளை நாங்கள் தூக்கியெறிந்துவிட்டோம்.

தமிழர்கள் தேசிய இனமாக ஒன்றிணைந்து சிங்கள மேலாதிக்க அரசை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய தேவை முன்னர் எப்போதுமில்லாததைத் போல தற்போது மிகவும் அதிகமாக உள்ளது. அதை உணர்ந்துகொண்டாலும், தங்களது குறுகிய நலன்களுக்காக தமிழர் அரசியல் தலைமை தங்களுக்கும் முரண்பட்டுக்கொண்டுள்ளதுதான் தற்போதைய யதார்த்த் நிலை. ஆனாலும் இந்தத் தேக்க நிலை தொடர்ந்து இருக்கும் என்றில்லை. சரியான அரசியல் தெளிவோடு தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் அரசியல் தலைமை வரும்போது மக்கள் அவர் பின்பே திரள்வார்கள் ஏனெனில் மக்கள் எப்போதும் தேசியத்தை வலுவாக நம்புகின்றவர்களாகத்தான் உள்ளனர். அதனால்தான், கட்சி பிரிந்து வட்டுக்கோட்டைத் தீர்மானம், மக்களவை, நாடு கடந்த அரசு என்றெல்லாம் தேர்தல் நடாத்தும்போதும் மக்கள் வாக்களிக்க வந்தார்கள். அதுபோலவே தாயகத்திலும் இணக்க அரசியல் நடாத்துபவர்களை ஏற்றுக்கொள்ளாமல் தமிழரசுக் கட்சிக்குத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நுணாவிலான் இணைத்த கட்டுரை தமிழர்களின் "விட்டுக்கொடா"ப் பண்பையும், "வைரம் நொருங்குமே தவிர வளையாது" என்ற போக்கையும் தெளிவாகச் சொல்கின்றது. இது புலிகளின் பண்பாக இருக்கலாம், எனினும் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாத ஒரு பண்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.