Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர் ஒருவர் கனடாவில் கைது:திவயின பத்திரிகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர் ஒருவர் கனடாவில் கைது:திவயின பத்திரிகை

[ பிரசுரித்த திகதி : 2011-01-19 06:55:20 AM GMT ]

புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுராபுர விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான திரைப்படத்தில் குறித்த நபர் நடித்துள்தாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வினோதன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மீனவர் என்ற போர்வையில் குறித்த நபர் கனடாவில் அடைக்கலம் கோரியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வினோதன், தாக்குதலுக்கு தலைமை தாங்கிய நபரின் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திரைப்படத்தில் நடிப்பதற்காக தமக்கு புலிகள் பணம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை விளக்க மறியலில் வைத்து விசாரிக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

tamilulakam.com

நான் நினக்கிறேன் கனடாவில இருகிற முழு ஈழத்தமிழனையும் பிடித்து உள்ளே போட்டால் தான் கனடாவின் சட்டம் சரி என சொல்லும்.

நான் நினக்கிறேன் கனடாவில இருகிற முழு ஈழத்தமிழனையும் பிடித்து உள்ளே போட்டால் தான் கனடாவின் சட்டம் சரி என சொல்லும்.

புலிகளின் திரைப்படத்தை பாத்து அதில் நடிச்ச ஆக்களை அடையாளம் காணுகிற அளவுக்கு கனடிய அதிகாரிகளுக்கு முடியுது எண்டது ஆச்சரியம் தான்... !

எங்கட காட்டிக்குடுக்கிற தமிழ் பண்ணிக் கூட்டம் வாறவனை நிம்மதியாக இருக்க விடுகிறதில்லை எண்டு இருக்கும் போது கனடிய அதிகாரிகள் என்ன செய்ய முடியும்....?? :unsure:

Edited by தயா

சுவிசிலையும் ஏதோ கனக்க நடக்குதாம் யாரோ அப்துல்லாவாம் உலகம் முழுக்க பிசினஸ் வைத்திருக்கின்றாராம் அதைபற்றியும் கொஞ்சம் எழுதுங்கோ?

போறபோக்கில் யாழ்களத்தில் சொத்துப்பத்துக்காக தேசியம் பேசியவர்களுக்கு விரைவில் வேட்டோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் திரைப்படத்தை பாத்து அதில் நடிச்ச ஆக்களை அடையாளம் காணுகிற அளவுக்கு கனடிய அதிகாரிகளுக்கு முடியுது எண்டது ஆச்சரியம் தான்... !

கனேடிய அரசு இலங்கை தமிழ் மக்களின் வரலாறு, பிரச்சினைகள் பற்றி நல்ல அறிவுள்ள இலங்கை தமிழர்களை நல்ல சம்பளம் கொடுத்து பல்வேறு துறைகளில் வேலைக்கு அமர்த்தியுள்ளது. அவர்கள் கொடுக்கும் சம்பளத்துக்கு பெறுமதியான வேலை செய்தால்தான் வேலை நிலைக்கும், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.

எங்கட காட்டிக்குடுக்கிற தமிழ் பண்ணிக் கூட்டம் வாறவனை நிம்மதியாக இருக்க விடுகிறதில்லை எண்டு இருக்கும் போது கனடிய அதிகாரிகள் என்ன செய்ய முடியும்....?? :unsure:

நாடுகளும் பணமும் எப்படி வேலை செய்கின்றன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வது எதிர்கால வெற்றிக்கு பயனுள்ளதாக அமையும்.

கனேடிய அரசு இலங்கை தமிழ் மக்களின் வரலாறு, பிரச்சினைகள் பற்றி நல்ல அறிவுள்ள இலங்கை தமிழர்களை நல்ல சம்பளம் கொடுத்து பல்வேறு துறைகளில் வேலைக்கு அமர்த்தியுள்ளது. அவர்கள் கொடுக்கும் சம்பளத்துக்கு பெறுமதியான வேலை செய்தால்தான் வேலை நிலைக்கும், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.

இதை இங்கை அரசிட்டை காசை வாங்கி கொண்டு காட்டி குடுத்தால் மட்டும் தான் துரோகி எண்டுறமா....??? அவைக்கு மற்றவையின் வாழ்வை பற்றி அக்கறை பட வேண்டியது கட்டாயமாக இல்லைத்தான்...

நாடுகளும் பணமும் எப்படி வேலை செய்கின்றன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வது எதிர்கால வெற்றிக்கு பயனுள்ளதாக அமையும்.

ஆக எங்கட நலனுக்காக நாங்கள் உங்களை சுத்தினால் பிழை இல்லை எண்டுறீயள்....?? ஆனால் புலியை சாட்டி சாப்பிட்டவை செய்தது மட்டும் பிழை.... இல்லையா....?? :D

என்ன ஒரு அமையான கருத்து...

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிசிலையும் ஏதோ கனக்க நடக்குதாம் யாரோ அப்துல்லாவாம் உலகம் முழுக்க பிசினஸ் வைத்திருக்கின்றாராம் அதைபற்றியும் கொஞ்சம் எழுதுங்கோ?

போறபோக்கில் யாழ்களத்தில் சொத்துப்பத்துக்காக தேசியம் பேசியவர்களுக்கு விரைவில் வேட்டோ தெரியவில்லை.

இதோ உங்களக்காக அப்துல்லா பற்றிய ஒர் செய்தி.

சுவிஸில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுடன் இராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு?

20 ஜனவரி 2011

சுவிஸில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுடன் இராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு?

சுவிஸர்லாந்தில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் செயற்பாட்டாளர்களின் கணனிகளில் உள்ள ரகசிய தகவல்களின்படி, அவர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்த இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது இராணுவத்தில் பணியாற்றி வரும் இந்த இரண்டு இராணுவ உயர் அதிகாரிகள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளனர். இந்த தகவலை உறுதிப்படுத்திய சுவிஸ் அதிகாரிகள் அவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துள்ளனர்.

உத்தியோபூர்வமாக இவர்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்த பின்னர், அவர்கள் யார் என்பது குறித்து ஊடகங்களுக்கு வெளியிடப்படும் எனவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். புலிகளின் 10 செயற்பாட்டாளர்களை முதலில் கைதுசெய்த சுவிஸ் காவற்துறையினர், பின்னர், அப்துல்லா என அழைக்கப்படும் புலிகளின் தலைவர் ஒருவரையும் கைதுசெய்தனர்.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.