Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இஸ்லாத்தின் பெயரால் கொடூரம்

Featured Replies

  • தொடங்கியவர்

சொந்த மகளை இஸ்லாமிய முறைப்படி வாழவில்லை என்று கூறி தந்தையே கொலை செய்துள்ளார்.

அதுவும் இத்தாலியில்..... இதற்கும் தலிபான்களா பொறுப்பு.

மத வெறியை ஊட்டும் இஸ்லாமிய மதப் போதகர்களும் அடிப்படைவாதிகளுமே இவ்வாறான தீவிரவாதம் மக்களுக்குள் உருவாகக் காரணம்.

இதற்கு தாலிபான்கள் பொறுப்பா எனக் கேட்கின்றீர்கள். இதற்கு அவர்கள் அல்ல, ஆனால் இந்த மகளை கொன்ற தந்தையின் அடிப்படைவாத, காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளை நிறுவனப் படுத்தி அதற்கு அரச அதிகாரத்தினையும் பெற்றுக் கொடுக்க முனையும் அமைப்புகளில் முன்னணியில் இருப்பது தாலிபான்கள். எல்லா முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் இதனையே செய்ய முனைகின்றன

இதே போன்ற ஒரு கேள்வியினை இந்த திரியின் ஆரம்பத்தில் பின் வருமாறு கேட்டு இருந்தீர்கள்

ஏன் எங்கள் தேசத்திலும் தகாத உறவு வைத்திருந்த ஆண்கள் பெண்களை நாங்கள் போஸ்ரில் கட்டி மண்டையில் போடவில்லையா..??!

அது தவறு. ஆனால் அப்படியான தண்டனைகளை புலிகள் கொடுப்பதை என்றோ நிறுத்தி இருந்தார்கள். இராணுவத்துடன் சேர்ந்தியங்கி உளவு சொல்லிக் கொடுத்து கொண்டு பாலியல் தொழிலும் செய்த ஒரு சிலருக்கு மட்டுமே பிற்காலத்தில் மரண தண்டனை கொடுத்து இருந்தார்கள், அதன் காரணம் அவர்களின் தொழிலல்ல,அவர்கள் செய்த காட்டி கொடுக்கும் செயல்தான். புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் ஈழ சட்டமைப்பிலும் அவர்களுக்கான தண்டனையாக மரண தண்டனையோ அல்லது காட்டு மிராண்டித்தனமான தண்டனைகளோ கொடுக்க சொல்லி இருக்கவில்லை. ஆனால் தாலிபான்கள் இவற்றை "குர்ஆனில் இதே சட்டம் தான் இருக்கு" என்று கூறி அதை தம் சட்டத்திலும் வைத்து இருக்கின்றார்கள்.

ஒரு தனி நபர் இவ்வாறான தண்டனைகளில் ஈடுபடும் போது, அதை தண்டிக்க சட்டமும் நீதியும் இருக்கும். ஆனால் அதே சட்டமும் நீதியும் கூட அத்தகைய தண்டனையை வழங்கும் போது, அந்த சட்டமே தவறாகவும் அதை அமுல் படுத்துவர்களும் தவறானவர்கள் ஆவர்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு தாலிபான்கள் பொறுப்பா எனக் கேட்கின்றீர்கள். இதற்கு அவர்கள் அல்ல, ஆனால் இந்த மகளை கொன்ற தந்தையின் அடிப்படைவாத, காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளை நிறுவனப் படுத்தி அதற்கு அரச அதிகாரத்தினையும் பெற்றுக் கொடுக்க முனையும் அமைப்புகளில் முன்னணியில் இருப்பது தாலிபான்கள். எல்லா முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் இதனையே செய்ய முனைகின்றன

இதே போன்ற ஒரு கேள்வியினை இந்த திரியின் ஆரம்பத்தில் பின் வருமாறு கேட்டு இருந்தீர்கள்.

அது தவறு. ஆனால் அப்படியான தண்டனைகளை புலிகள் கொடுப்பதை என்றோ நிறுத்தி இருந்தார்கள். இராணுவத்துடன் சேர்ந்தியங்கி உளவு சொல்லிக் கொடுத்து கொண்டு பாலியல் தொழிலும் செய்த ஒரு சிலருக்கு மட்டுமே பிற்காலத்தில் மரண தண்டனை கொடுத்து இருந்தார்கள், அதன் காரணம் அவர்களின் தொழிலல்ல,அவர்கள் செய்த காட்டி கொடுக்கும் செயல்தான். புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் ஈழ சட்டமைப்பிலும் அவர்களுக்கான தண்டனையாக மரண தண்டனையோ அல்லது காட்டு மிராண்டித்தனமான தண்டனைகளோ கொடுக்க சொல்லி இருக்கவில்லை. ஆனால் தாலிபான்கள் இவற்றை "குர்ஆனில் இதே சட்டம் தான் இருக்கு" என்று கூறி அதை தம் சட்டத்திலும் வைத்து இருக்கின்றார்கள்.

ஒரு தனி நபர் இவ்வாறான தண்டனைகளில் ஈடுபடும் போது, அதை தண்டிக்க சட்டமும் நீதியும் இருக்கும். ஆனால் அதே சட்டமும் நீதியும் கூட அத்தகைய தண்டனையை வழங்கும் போது, அந்த சட்டமே தவறாகவும் அதை அமுல் படுத்துவர்களும் தவறானவர்கள் ஆவர்

தலிபான்கள் இத்தாலிக்கு வந்து வகுப்பெடுத்து இஸ்லாத்தை கடைப்பிடிக்க கட்டாயப்படுத்தி இருக்க முடியாது. ஆக இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது அந்த மதத்துக்குள் திணிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்துதான் சவுதி ஆளும் வர்க்கமும் சட்டங்களை ஆக்கி இருக்குது. ஈரானும் ஆக்கி இருக்குது. தலிபான்களும் ஆக்கி இருக்கிறார்கள்.

அண்மையில் ஐரோப்பிய மாநாடு ஒன்றில் பேசிய பிரித்தானிய பிரதமர் கம்ரூன் கூட வெளிப்படையாக இஸ்லாமியர்கள் பல்லினத்துவ சமூகத்தின் தோல்விக்கு காரணம் என்பது போல பேசி இருந்தார். தலிபான்கள் இந்த விடயத்தில் தனித்து நோக்கப்படுவதிலும்.. இஸ்லாமிய மதம் நவீன உலகிற்கு ஏற்ப சீர்திருந்தங்களுக்கு உட்பட வேண்டும் அடிப்படைவாதத்தை அது கைவிட வேண்டும் என்ற முழக்கமே இங்கு சரியானதாக இருக்க முடியும். அப்படிச் செய்தால் அன்றி இஸ்லாமியர்கள் மத்தியில் உலகெங்கும் பரவிக் கிடக்கும் அடிப்படைவாததிற்கு முடிவு கட்டுவது சிரமமானதாகவே இருக்கும். அது தலிபான்களைப் போல பல குழுக்களையும் உலகம் பூராவும் தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Edited by nedukkalapoovan

இந்த செய்திகள் ஊடாக நீங்கள் சொல்ல வருவது என்ன???

மற்றைய மதங்களில் தவறுகள் இருக்கின்றன............ ஆக இந்து மத்திலும் இருக்கலாம்?

இஸ்லாமை சேர்ந்தவன் காட்டுமிராண்டியாக இருக்கிறான் ஆக நாங்களும் அப்படியே இருக்கலாம்???

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன் அடுத்தவனை கொல்கிறான் ஆக நாங்களும் கொல்லலாம்???

ஆக மனிதனாக மட்டும் மாறவே மாட்டோம் என்பதை பகிரங்கமாகவே எழுதி உங்களை நீங்களே இந்தளவிற்கு கேவலபடுத்துகிறீர்கள்?????

எந்தளவிற்கு மதம் பிடித்துள்ளது என்பதை இனியாவது புரிய முடிந்தால் புரிய முயற்சி செய்யுங்கள்.

சொல்லுகின்ற விடயத்தில் மாத்திரம் அல்ல, அதை விளங்கிக் கொள்வதிலும் விஷயம் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டேன். :D

இங்கு ஒவ்வொரு மதத்திலும் (இந்து சமயம் உட்பட)தென்பட்ட எதிர்மறையான சம்பவங்களை மேலே நான் இணைத்ததிற்குக் காரணம் டலிபான் கல் எறிந்து கொல்கின்றார்களே என்று கூச்சலிட மற்றைய மதங்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டவே.

இந்து மதத்தில் தாழ்ந்த ஜாதி என்று சொல்லி மக்களை சந்ததி சந்ததியாகச் சித்திரவதை செய்வதைவிட டலிபானின் கல் எறிந்து கொல்லும் முறை அப்படி ஒன்றும் கேவலமானது அல்ல என்பதே என்னுடைய கருத்து.

சிலுவைப் போர்களில் கிறீஸ்தவர்கள், பெண்கள் குழந்தைகள் என்றுபாராமல் ஆயிரக்கணக்கில் கிறீஸ்தவர் அல்லாதவர்களைக் கொன்று குவித்தார்கள். முழங்கால் அளவிற்கு கிறீஸ்தவர் அல்லாதவர்களின் இரத்தம் ஓடியதாம்.

கொசவோவில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொலைசெய்யப்பட்டனர். கொலைகாரர்கள் சொன்ன காரணம் தாங்கள் கிறீஸ்தவர்கள்; அவர்கள் முஸ்லீம்கள் என்பதே.

துருக்கியப் படைகள் ஆர்மீனியாவில் ஆயிரக்கணக்கில் கிறீஸ்தவர்களைப் படுகொலைசெய்தது.

இன்றைய பாப்பரசர் நாஸி படையில் விமான எதிர்ப்பு துப்பாக்கி இயக்குனர். இவர்க்கு முன் இருந்த பாப்பரசர் போலந்து இராணுவ வீரர். இன்று இவர்கள் புனித தந்தைகள். தலை சுற்றுகின்றது.

இவற்றைப் பார்க்கும் போது நீங்கள் சொல்வது போல் இந்து, கிறீஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மிகவும் கொடூரமானவை.

உங்களை ஞானஸ்தானம் செய்யும் நோக்கம் எனக்கில்லை. நீங்கள் ஞானஸ்தானம் செய்யவே கூடாது. ஏனென்றால் உங்களின் நோக்கம் மனிதனை மனிதனாக வாழவைக்க வேண்டும் என்பதே. இந்த உயரிய நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்றால் நீங்கள் எந்த மதத்தையும் சார்ந்திருக்கக் கூடாது. தப்பித் தவறி ஞானஸ்தானம் பெற்றிருந்தால் உங்கள் சேவைக்காகக் காத்திருக்கம் மக்கள் நன்மை கருதி குளியல் அறைக்குச் சென்று குளித்து உங்கள் ஞானஸ்தானத்திற்கே ஞானஸ்தானம் கொடுத்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுகின்ற விடயத்தில் மாத்திரம் அல்ல, அதை விளங்கிக் கொள்வதிலும் விஷயம் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டேன். :D

இங்கு ஒவ்வொரு மதத்திலும் (இந்து சமயம் உட்பட)தென்பட்ட எதிர்மறையான சம்பவங்களை மேலே நான் இணைத்ததிற்குக் காரணம் டலிபான் கல் எறிந்து கொல்கின்றார்களே என்று கூச்சலிட மற்றைய மதங்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டவே.

இந்து மதத்தில் தாழ்ந்த ஜாதி என்று சொல்லி மக்களை சந்ததி சந்ததியாகச் சித்திரவதை செய்வதைவிட டலிபானின் கல் எறிந்து கொல்லும் முறை அப்படி ஒன்றும் கேவலமானது அல்ல என்பதே என்னுடைய கருத்து.

சிலுவைப் போர்களில் கிறீஸ்தவர்கள், பெண்கள் குழந்தைகள் என்றுபாராமல் ஆயிரக்கணக்கில் கிறீஸ்தவர் அல்லாதவர்களைக் கொன்று குவித்தார்கள். முழங்கால் அளவிற்கு கிறீஸ்தவர் அல்லாதவர்களின் இரத்தம் ஓடியதாம்.

கொசவோவில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொலைசெய்யப்பட்டனர். கொலைகாரர்கள் சொன்ன காரணம் தாங்கள் கிறீஸ்தவர்கள்; அவர்கள் முஸ்லீம்கள் என்பதே.

துருக்கியப் படைகள் ஆர்மீனியாவில் ஆயிரக்கணக்கில் கிறீஸ்தவர்களைப் படுகொலைசெய்தது.

இன்றைய பாப்பரசர் நாஸி படையில் விமான எதிர்ப்பு துப்பாக்கி இயக்குனர். இவர்க்கு முன் இருந்த பாப்பரசர் போலந்து இராணுவ வீரர். இன்று இவர்கள் புனித தந்தைகள். தலை சுற்றுகின்றது.

இவற்றைப் பார்க்கும் போது நீங்கள் சொல்வது போல் இந்து, கிறீஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மிகவும் கொடூரமானவை.

உங்களை ஞானஸ்தானம் செய்யும் நோக்கம் எனக்கில்லை. நீங்கள் ஞானஸ்தானம் செய்யவே கூடாது. ஏனென்றால் உங்களின் நோக்கம் மனிதனை மனிதனாக வாழவைக்க வேண்டும் என்பதே. இந்த உயரிய நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்றால் நீங்கள் எந்த மதத்தையும் சார்ந்திருக்கக் கூடாது. தப்பித் தவறி ஞானஸ்தானம் பெற்றிருந்தால் உங்கள் சேவைக்காகக் காத்திருக்கம் மக்கள் நன்மை கருதி குளியல் அறைக்குச் சென்று குளித்து உங்கள் ஞானஸ்தானத்திற்கே ஞானஸ்தானம் கொடுத்து விடுங்கள்.

அவசரமான வாசிப்பு உங்களின் கருத்தை தவறாக புரியவும் ஒரு தவறான கருத்தை பதியவும் சாத்தியமாயிற்று!

மன்னித்துகொள்ளவும்!

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு தாலிபான்கள் பொறுப்பா எனக் கேட்கின்றீர்கள். இதற்கு அவர்கள் அல்ல, ஆனால் இந்த மகளை கொன்ற தந்தையின் அடிப்படைவாத, காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளை நிறுவனப் படுத்தி அதற்கு அரச அதிகாரத்தினையும் பெற்றுக் கொடுக்க முனையும் அமைப்புகளில் முன்னணியில் இருப்பது தாலிபான்கள். எல்லா முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் இதனையே செய்ய முனைகின்றன

இதே போன்ற ஒரு கேள்வியினை இந்த திரியின் ஆரம்பத்தில் பின் வருமாறு கேட்டு இருந்தீர்கள்

அது தவறு. ஆனால் அப்படியான தண்டனைகளை புலிகள் கொடுப்பதை என்றோ நிறுத்தி இருந்தார்கள். இராணுவத்துடன் சேர்ந்தியங்கி உளவு சொல்லிக் கொடுத்து கொண்டு பாலியல் தொழிலும் செய்த ஒரு சிலருக்கு மட்டுமே பிற்காலத்தில் மரண தண்டனை கொடுத்து இருந்தார்கள், அதன் காரணம் அவர்களின் தொழிலல்ல,அவர்கள் செய்த காட்டி கொடுக்கும் செயல்தான். புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் ஈழ சட்டமைப்பிலும் அவர்களுக்கான தண்டனையாக மரண தண்டனையோ அல்லது காட்டு மிராண்டித்தனமான தண்டனைகளோ கொடுக்க சொல்லி இருக்கவில்லை. ஆனால் தாலிபான்கள் இவற்றை "குர்ஆனில் இதே சட்டம் தான் இருக்கு" என்று கூறி அதை தம் சட்டத்திலும் வைத்து இருக்கின்றார்கள்.

ஒரு தனி நபர் இவ்வாறான தண்டனைகளில் ஈடுபடும் போது, அதை தண்டிக்க சட்டமும் நீதியும் இருக்கும். ஆனால் அதே சட்டமும் நீதியும் கூட அத்தகைய தண்டனையை வழங்கும் போது, அந்த சட்டமே தவறாகவும் அதை அமுல் படுத்துவர்களும் தவறானவர்கள் ஆவர்

தலிபான்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக போர்நடந்துகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானை தளமாக கொண்டவர்கள். அவர்கள் முற்று முழுதாக இஸ்லாம் அடிப்படைவாதத்தையே தமது அறிவாக கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு உரிய வெளியுலக அறிவு என்பது மிகவும் குறைவானது. அது அவர்களுக்கு சாத்தியம் அற்றதாகவுமே இருக்கின்றது. அதிலும் தலிபானின் மேல்மட்டம் ஒரு கடும்போக்கை கையாண்டாலும் காட்டுமிராண்டி தனத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் என்று நான் நம்பவில்லை. போர் நடைபெறுவதால் தலைமைக்கும் வெளியிட போராளிகளுக்குமான தொடர்பு ஒரு வரையறைக்குள்ளானதாகவே இருக்கும். இதில் மதபெரியவர்கள் என்ற மதிப்பை ஒரு அயோக்கியனுக்கு கொடுக்கபோக அவனுடைய அயோக்கியதனங்களுடன் ஒரு பிரதேச பொறுப்பாளருடைய மட்டுபட்ட அறிவு என்பன ஒன்று சேரவே இவ்வாறான கொடுமைகள் அரங்கேறுகின்றன என்றே நான் நினைகிறேன.;

அதற்காக தலிபான்களுடைய கொள்கைகளுக்கு நான் வக்காளத்து வங்குவதாக இல்லை.......... சூழ்நிலைகள் பல தவறுகளுக்கு வழிசமைப்பதை எமக்கு இன்னொருவன் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

பெண்கள் குர்தாவுக்குள் மூடிகிடக்க வேண்டும் என்பதை குர்றான் எங்கேனும் சொல்லவில்லை............ ஆணாதிக்கம்தான் பெண்கள் மேல் அப்படியொரு சுமையை சுமத்துகின்றது.

இத்தாலியில் நடந்த சம்பவம் கூட ஒரு வகையில் ஆணாதிக்கத்தின் வெளிபாடுதான் தன்னை தனது மகள் எவ்வாறு மீற முடியும் என்றொரு ஆணாதிக்க சிந்தனை ஒரு தந்தையை கொலைகாரனாக ஆக்கியுள்ளது.

ஆனால் இத்தனை கொடுமைகளையும் பாதுகாப்பாக பாதுகாத்து உலகம் எவ்வளவு முன்னேறினாலும் அப்படியே அரங்கேற்ற............ மதங்கள்தான் முன்னிற்கின்றன. கடவுள் பயத்தை மக்களுக்குள் புகுத்திவிட்டு பின்பு தமது கொடுராமான அக்கிரமங்களை அந்த மக்கள் மேல் திணிப்பது இதுவே எல்லா மதங்களின் அடிப்படை தத்துவங்களும்.

குர்தாவை கிழித்து எறிந்து இந்த பூமியில் வாழ பிறந்த பெண்களை அதற்குள் இருந்து விடுதலை செய்ய தலிபான்கள் மட்டுமல்ல அனைத்து முஸ்லீம் சமூகமும் முன்வரவேண்டும். அதற்கு பெண்களும் அறியாமையில் இருந்து சற்று முன்னேற வேண்டும்.

அறியாமையில் இருந்துகொண்டு குர்தாவை கைவிடுவதென்பது அதெனிலும் விட பெண்களுக்கு கேடு விளைவிக்கும். கிட்டதட்ட இப்போது மேற்குல பெண்களை ஆணாதிக்கம் தனது ஆசையை றிறைவேற்ற ஒரு முக்கோண துண்டு துணியையும் ஒரு நூலையும் கோத்து அதை ஒரு ஆடை என்று போட்டு கடற்கரைகளில் நடமாடவிட்டுள்ளது. இங்கே பெண்களின் மதிப்பு என்பது தராதரம் கெட்டு நுறா? நுற்றிஐம்பதா? என்ற நிலையில்தான் இருக்கின்றது. குடும்ப வாழ்க்கை சீரழிந்து பிள்ளைகள் வீடுகளின்றி திரிகின்றன......... பதினொரு பன்னிரெண்டு வயதுகளில் கருதரிப்பும் கருகலைப்பும் சாதாரணமாக நடைபெறுகின்றன. இந்த பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை என்பது எத்தனை மன உளைச்சல்களுக்கு உள்ளேயானது என்பதை எல்லோராலும் புரிய முடியும்.

அவசரமான வாசிப்பு உங்களின் கருத்தை தவறாக புரியவும் ஒரு தவறான கருத்தை பதியவும் சாத்தியமாயிற்று!

மன்னித்துகொள்ளவும்!

நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமேயில்லை மருது.

வலிக்கும் படி எழுதிய நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

குறிப்பாக கிறீஸ்தவத்தை குறை கூறி எழுதியிருக்கிறேன். இன்று வாசிக்கும் போது மனம் வருந்தியது.

எழுதிய எதுவும் கற்பனையல்ல. வரலாற்றில் நடந்தேறிய சம்பவங்களே.

இருப்பினும் என் எழுத்துக்கள் இயேசுவை களங்கப் படுத்துவதாக அமைவது வருத்தத்தைத் தருகிறது.

அவர் மீண்டும் ஒரு முறை இவ்வுல‌கிற்கு வருவாராயின் அவரைக் காணத் தவமிருப்பவர்களில் நானும் ஒருவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.