Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைக் காலூன்ற விடமாட்டோம் - கூட்டமைப்பு சரவணபவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைக் காலூன்ற விடமாட்டோம் - கூட்டமைப்பு சரவணபவன்

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்பியும், உதயன், சுடரொளி பத்திரிக்கைகளின் நிர்வாக அதிகாரியுமான திரு.சரவண்பவன் அவர்களை அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எஸ் வானொலித் தமிழ் ஒலிபரப்புச் சேவைக்காக மகேஸ்வரன் பிரபாகரன் அவர்கள் பேட்டி கண்டிருந்தார். அந்தப் பேட்டியின் விபரங்கள் இங்கே சுருக்கித் தரப்படுகின்றன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசுக்குமிடையிலான சந்திப்புபற்றிச் சொல்லும்போது, திருப்திகரம் என்று சொல்ல முடியாது, ஆனால் சில வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார்கள்.தடுப்புமுகாம்களில் இன்னுமிருக்கும் இளைஞர்கள் பற்றிய பெயர் விபரங்களை அவரது உறவினர்கள் பார்வைக்கு வவுனியாவில் வைப்பதுபற்றி அரசு கொள்கையளவில் சம்மதித்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் சம்பந்தமாக சாதகாமான வழியில் செயற்படப் போவதாக கூறியிருக்கிறது. சம்பூர் பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்களை மீண்டும் குடியமர்த்துவதுபற்றிச் சிந்திக்கப்படுமாம்.

அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வந்த படுகொலைகள் ஆட்கடத்தல்கள் பற்றி வினவியபோது, ராணுவத்தின் சில படைப்ப்ரிவுகளின் ஆசீரோடு ஆயுத அரசியலை நடத்தும் ஒரு அமைப்பே இவற்றில் ஈடுப்பட்டு வருவதாகவும், தாமும், இன்னும் சில மனிதவுரிமை அமைப்புகளும் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக சம்பந்தப்பட்ட சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போது நிலமை வழமைக்குத் திரும்பியிருப்பதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துத் தேர்தல் நிலமை பற்றித் தெரிவித்தபோது, இந்த முறை அரச ராணுவ மற்றும் ராணுவத் துணைக்குழுக்களின் அச்சுறுத்தல் இல்லாமல் இருக்குமாக இருந்தால் யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே வெற்றி பெரும் என்று தெரிவித்த அவர், மரைந்த முன்னால் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் மகேஸ்வரன் அவர்கலின் துணிவான நடவடிக்கைகள் காரனமாக அவரது மனைவி கலாவிற்கு சென்ர முரை அனுதாப வாக்குக் கிடைத்ததாகவும், அவ்வாக்குகள் தமது எம்.பி ஒருவரின் வாக்குகளை விடக் குறைவாக இருதபோதும், கட்சியின் அடிப்படையில் அவர் வெற்றி பெற்றதாகவும் கூறினார்.

மேலும், தமிழரின் சரித்திரத்தில் இதுவரை செய்யப்பட்ட கொடுமைகளில் ஐக்கிய தேசியக் கட்சியே அதிகம் செய்திருப்பதால் அவர்களை தமிழர் தாயகத்தில் தலை தூக்க விடமுடியாது எனவும் தெரிவித்த அவர், ஏனோ காரணத்துக்காக சுதந்திரக் கட்சியின் பெயரை உச்சரிப்பதையோ அல்லது முள்ளிவாய்க்காலில் நடந்த இனவழிப்புப் பற்றியோ ஒரு சொல் கூடச் சொல்லவில்லை. சிலவேளை சுதந்திரக் கட்சி பெரும்பான்மைக் கட்சியாக அவருக்குத் தெரியவில்லையோ என்னவோ.

அரங்கம் பற்றிய கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கையில், "கொள்கைகள் அற்ற, தீவிரவாத அமைப்புகள் என்று சிலரைக் குற்றம் சாட்டியதோடு நின்றுவிடாமல், இந்திய அடிவருடிகள்" என்ற பதத்தைக் கூடப் பாவித்தார். இவர் யாரை இந்திய அடிவருடிகள் என்று சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. மேலும் அரங்கத்தினுல் இருந்த டக்கிளஸ் அரசை ஆதரிக்கப்போவதாக அறிக்கை வீடு வெளியேறியதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் தான் பேசிக்கொண்டிருந்தபோது குறிக்கிட்ட குத்தியான், "எனது சனாதிபதி மகிந்த மேல் நான் 100 வீதம் நம்பிக்கை வைத்திருக்கிறேன், அவர் தமிழர்க்குத் தேவையான அனைத்தையும் செய்வார் " என்று உரக்கக் கூவியதாகவும் சொன்னார். ஆனால் அப்படி நடந்து ஒருவாரத்தில் 18 ஆம் சட்டமூலம் மாற்றியமைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய அவர் குத்தியானின் விசுவாசத்தையும் சுட்டிக்காட்டத் தவரவில்லை.

சிவாஜிலிங்கம் ஒரு கொள்கையற்றவர். சம சமாஜக் கட்சியோடு தேர்தலில் நிற்பதாகச் சொல்லிவிட்டு, இறுதியில் தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலாளருடன் உடன்படிக்கை செய்துகொண்டு பின்வழியால் வந்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டினார். அவர் சேர்க்கப்பட்ட விடயம் தனிப்பட்ட ஒருவரின் தான் தோன்றித்தனமான முடிவென்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எந்த எம்.பி இற்கும் அதில் சம்மதமில்லை என்றும் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அறிக்கை விட்ட கூட்டமைப்பு சரவணபவன் என்பவர், அறியாத மாயையில் சொல்லியிருக்கலாம்....

யாழ்ப்பாணத்தில்... ஐ.தே.க. மகேஸ்வரனுக்கு ஆதரவு இன்றும் உள்ளது.

(விஜயகலா மகேஸ்வரனின் வாக்கு வங்கியின் விபரம் இன்னும்... அறிய முடியவில்லை)

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் இந்து சமயத்துறை அமைச்சர் மகேஸ்வரன், தைப் புத்தாண்டு தினத்தன்று, கொழும்பு பொன்னம்பல வாணேஸ்வரர் கோவிலில் சுடப்பட்டு இறந்த போது...... அவரின் மனைவியும், பிள்ளையும் கதறியதியதை கண்டு மனம் துடித்தவர்கள் ஏராளம்.

இதில் காலூண்ட.... விட மாட்ட்டம், கையூண்ட விடமாட்டம் எண்டு.... ரவுடித்தனமாய் கதைக்கப் படாது,

என்ன செய்யிறது பண்டியோடை.... சேர்ந்த பசுவும்... பீ... தின்னுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் காலூன்ற விட்டு விட்டார்களே.முன்பாவது ஒரு எம்பி (மகேஸ்வரன்)பேரினவாதக் கட்சியில் இருந்து தெரிவானார்.ஆனால் கடந்த பொதுத் தேர்தலில் தமழரர் ஒற்றுமையைக் குலைத்த காரணத்தினால் பல் எம்பிக்கள் பேரினவாதக் கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப் பட்டார்கள்.அது மட்டுமல்லாமல் அம்பாறையில் ஒரு சிங்களவனை வேட்பாளராக்கி அந்த தொகுதியையும் கோட்டை விட்டார்கள்.இதுதான் சம்பந்தனதும் அவர் சார்ந்த கட்சியினரதும் அரசியல் சாணக்கியம்.அது சரி இவர்கள் இந்திய அடிவருகள் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

சப்ரா யுனிகோ நிதிநிறுவனத்தில் தமிழ்மக்கள் முதலீடுசெய்த பெரும்தொகைப் பணத்தை ஆட்டையைப்போட்ட திருட்டுப்பயல், தமிழர்விரோததேசம் இந்தியாவின் நேரடிஏஜன்ட் சரவணனே! டக்ளஸ மகிந்த போன்றோரைப் பார்த்து இப்படிச்சொல்ல முடியுமா உன்னால்.

, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் இந்து சமயத்துறை அமைச்சர் மகேஸ்வரன், தைப் புத்தாண்டு தினத்தன்று, கொழும்பு பொன்னம்பல வாணேஸ்வரர் கோவிலில் சுடப்பட்டு இறந்த போது...... அவரின் மனைவியும், பிள்ளையும் கதறியதியதை கண்டு மனம் துடித்தவர்கள் ஏராளம்.

mahi05.jpg

... அக்கொலையை கண்டு, துடியாவர்கள் எமரும் இல்லைத்தான், இங்கே மகேஸ்வரனின் மனைவியின் துடிப்பை பாருங்கள்!!!!

என்ன செய்யிறது பண்டியோடை.... சேர்ந்த பசுவும்... பீ... தின்னுமாம்.

Edited by Nellaiyan

... நீண்ட காலங்களுக்கு பின் யாழில் சிங்கல்ள் கட்சியான யு.என்.பியை காலூன்ற அனுமதித்தவர்கல் புலிகளே!!!!! ... இது மறுக்க முடியாத உண்மை!! ..

... யாழ் சிங்களப்படைகளால் முற்றுமுழுதாக ஆக்கிரமிக்கப்பட்ட காலப்பகுதிகளுக்கு பின், ஈபிடிபி ஒட்டுக்குழுவின் ராஜாங்கம் யாழில்!!! ஈபிடிபி எக்கட்சிகளையுமே யாழில் அனுமதிக்காத நிலை ஏற்பட்டது! முதலில் புலிகள் எக்கட்சிகளையும் தேர்ததலில் போட்டியிடுவதை அனுமதிக்கவில்லை. ஆனால் நிலமை அவர்களின் கணிப்பை மீறிச் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் கூட்டணியை முதலில் அனுமதித்தனர், ஆனால் அக்காலத்தில் மண்ணெண்ணை வியாபாரத்தில் தொடங்கிய மகேஸ்வரன், தன் பின் ஓர் வலுவான கண்டித்தன கோஸ்டிகளையும், தனது பாதுகாப்பிற்காக உருவாக்கியிருந்தார், அதற்கு மேல் தன் மண்ணெண்ணை வியாபாரத்துக்காக சிங்கள கட்சியான யு.என்.பியிலும் இணைந்திருந்தார். . அக்காலத்தில் மண்ணெண்ணையானது குத்தியன் கும்பலிற்கு சில சவால்களை ஏற்படுத்தியது, இதனை புலிகள் ஈபிடிபிக்கு எதிராக பாவிக்க மறைமுகமாக மண்ணெண்ணைக்கு ஆதரவளித்தார்கள்!!!

... மணெண்ணையின் யாழிற்கான கடல் போகுவரத்து வியாபாரங்களை பாவித்து, புலிகள் பல பொருட்களை(தமக்கு தேவையான) இறக்கினார்கள். அதனை தொடர்ந்து செய்யவும் யாழில் மண்ணெண்ணைக்கு எவ்வித எதிர்ப்பும், மண்ணெண்ணையின் யு.என்.பி சார்ந்த அரசியலுக்கு புலிகளால் விடப்படவில்லை!!!

யாரை நோவது??????????

... நீண்ட காலங்களுக்கு பின் யாழில் சிங்கல்ள் கட்சியான யு.என்.பியை காலூன்ற அனுமதித்தவர்கல் புலிகளே!!!!! ... இது மறுக்க முடியாத உண்மை!! ..

... யாழ் சிங்களப்படைகளால் முற்றுமுழுதாக ஆக்கிரமிக்கப்பட்ட காலப்பகுதிகளுக்கு பின், ஈபிடிபி ஒட்டுக்குழுவின் ராஜாங்கம் யாழில்!!! ஈபிடிபி எக்கட்சிகளையுமே யாழில் அனுமதிக்காத நிலை ஏற்பட்டது! முதலில் புலிகள் எக்கட்சிகளையும் தேர்ததலில் போட்டியிடுவதை அனுமதிக்கவில்லை. ஆனால் நிலமை அவர்களின் கணிப்பை மீறிச் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் கூட்டணியை முதலில் அனுமதித்தனர், ஆனால் அக்காலத்தில் மண்ணெண்ணை வியாபாரத்தில் தொடங்கிய மகேஸ்வரன், தன் பின் ஓர் வலுவான கண்டித்தன கோஸ்டிகளையும், தனது பாதுகாப்பிற்காக உருவாக்கியிருந்தார், அதற்கு மேல் தன் மண்ணெண்ணை வியாபாரத்துக்காக சிங்கள கட்சியான யு.என்.பியிலும் இணைந்திருந்தார். . அக்காலத்தில் மண்ணெண்ணையானது குத்தியன் கும்பலிற்கு சில சவால்களை ஏற்படுத்தியது, இதனை புலிகள் ஈபிடிபிக்கு எதிராக பாவிக்க மறைமுகமாக மண்ணெண்ணைக்கு ஆதரவளித்தார்கள்!!!

... மணெண்ணையின் யாழிற்கான கடல் போகுவரத்து வியாபாரங்களை பாவித்து, புலிகள் பல பொருட்களை(தமக்கு தேவையான) இறக்கினார்கள். அதனை தொடர்ந்து செய்யவும் யாழில் மண்ணெண்ணைக்கு எவ்வித எதிர்ப்பும், மண்ணெண்ணையின் யு.என்.பி சார்ந்த அரசியலுக்கு புலிகளால் விடப்படவில்லை!!!

யாரை நோவது??????????

வேறு ஒண்டும் இல்லை நெல்லையன் ம்கேஸ்வரனின் வியாபார ஆதிக்கத்தை நிலை நிறுத்த விஜயகலா முயல்கிறார், அவ்வளவு தான் மற்றப்படி தூள் படத்தில் வரும் சொர்ணா அக்கா ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுப்பதெல்லம் சேறு வாரி இறைப்பதாகும், எனவே அவரை அப்படியே விடு விடுவது நல்லது, அண்மையில் அவரது மகன் ஒரு பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக ஒரு செய்தி வாசித்தேன், இதில் நகைச்சுவை என்ன வென்றால் அவரது வயது 10 ம்ட்டில் தான் இருக்கும், இதில் இருந்தே உங்களுக்கு விளங்க வேணும் எப்படிப்பட்ட புனை கதையெல்லம் வருகுது என்று

Edited by Dash

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.