Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எட்டு படகுகளுடன் வல்வெட்டித்துறை மீனவர்களைக் காணவில்லை. தேடுதல் நடைபெறுகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Friday, February 18th, 2011 | Posted by thaynilam

எட்டு படகுகளுடன் வல்வெட்டித்துறை மீனவர்களைக் காணவில்லை. தேடுதல் நடைபெறுகின்றது

இந்திய மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டு, கடற்பரப்பில் அவர்களைக் கொண்டு சென்று பொலிசார் விட்டுவிட்டுத் திரும்பிய அதேவேளை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 8 படகுகள் காணாமல் போயுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கடற்படையினரும், ஊர்வாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் இருந்து 3 படகுகளில் 6 மீனவர்கள் தொழிலுக்காகச் சென்றிருந்தார்கள். இவர்கள் உரிய நேரத்தில் கரைக்குத் திரும்பாததையடுத்து, அவர்களைத் தேடுவதற்காக 7 படகுகள் சென்றன. இவற்றில் இரண்டு படகுகள் தமது தேடுதல் பலனளிக்காத நிலையில் கரை திரும்பின ஆயினும் தொழிலுக்குச் சென்ற படகுகளையும், அவற்றைத் தேடிச் சென்ற படகுகளையும் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலமாகக் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து உள்ளுர்வாசிகளும் கடற்படையினரும் காணாமல் போயுள்ளவர்களைத் தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=2901

சிங்கள இந்திய பயங்கரவாதிகளின் சதி முயற்சி.

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறையில் 6 கடற்றொழிலாளர்கள் மாயம் : இந்தியர்களின் கைவரிசையா? வலுக்கிறது பனிப்போர்?

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் கடற்றொழிலுக்கெனப் புறப்பட்டுச் சென்ற ஆறு பேர் கரை திரும்பாததனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து மூன்று படகுகளில் கடற்றொழிலுக்கெனப் புறப்பட்டவர்களில் குறிப்பிட்ட மூன்று படகுகளில் சென்ற ஆறு பேரும் கரை திரும்பாமையினாலேயே இந்தப் பரபரப்பு ஏற்றட்டுள்ளது.

இன்று பிற்பகல் முதல் இவர்களைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும் இது வரை அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்தியக் கடற்றொழிலாளர்கள் 136 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறை, மாதகல் பகுதிகளில் வைத்து, ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக இவர்கள் இந்திய கடற்படையினரால் கடத்தப்பட்டிருக்கலாம், அல்லது தாக்கப்பட்டிருக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

http://tamilthesiyam.blogspot.com/2011/02/6.html

முஸ்லீம்களையும் தமிழர்களையும் பிரிக்க என்ன தந்திரம் பாவித்தார்களோ அதே தந்திரம் மீள பாவிக்கிறார்கள்... !

சில மூதேவியள் உண்மையிலை என்ன நடக்குது எண்டு விளக்கம் குறைஞ்சதுகள்... அண்று சோனகர்களையும் தமிழரையும் மூட்டி விட்டு சிங்களத்தோடை சோனகரை சேர்ந்து வேலை செய்ய செய்த தந்திரத்தை புரியாத அதே நாய்கள் இண்டைக்கும் குலைக்குதுகள்... !

சிங்களவனோடை சேர்ந்து நிண்டு சோனகன் போராளிகளை காட்டிக்குடுக்கிறாங்கள் எண்டு நடவடிக்கை எடுத்தால் ஒட்டு மொத்தமாக புலிகள் செய்த பிழை எண்டு பழியை துக்கி போட்டு விட்டு ஒதுங்கின அதே கூட்டம் இண்டைக்கும் கொக்கரிக்குது தமிழக மீனவன் கெட்டவன் எண்டு...

தமிழகத்திலை ஈழத்தமிழர் மீது அனுதாபம் எப்பவும் இனிமேல் வரக்கூடாது எண்டு தான் இவ்வளவும் நடக்குது... ! இதை விளங்கி கொள்ள முடியாத கூட்டங்களை என்ன செய்யலாம்....??????????????

உலகில் நடக்கும் மாற்றங்களும், தன்னை சுற்றி நிகழும் மாற்றங்களையும் பகுத்து உணர முடியாத உயிரினங்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

எப்பொழுதும், அறிஞர்கள் தாம் கற்கவேண்டியது நிறைய இருப்பதாகவே எண்ணுவார்கள். ஆனால் முட்டாள்கள் தாம் கற்பதற்கு இனி எதுவும் இல்லை என திமிர் கொண்டு திரிவர். இந்த முட்டாள்கள் விலகி இருந்தாலே தமிழினம் பிழைத்துக்கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் நடக்கும் மாற்றங்களும், தன்னை சுற்றி நிகழும் மாற்றங்களையும் பகுத்து உணர முடியாத உயிரினங்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

எப்பொழுதும், அறிஞர்கள் தாம் கற்கவேண்டியது நிறைய இருப்பதாகவே எண்ணுவார்கள். ஆனால் முட்டாள்கள் தாம் கற்பதற்கு இனி எதுவும் இல்லை என திமிர் கொண்டு திரிவர். இந்த முட்டாள்கள் விலகி இருந்தாலே தமிழினம் பிழைத்துக்கொள்ளும்.

முதற்கண் நீண்ட நாட்களின் பின் தங்களை யாழ் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி. :)

இப்படி பட்டும் படாமலும்.. இச்சம்பவங்கள் தொடர்பான உங்களின் அறிவுபூர்வமான.. அரசியல் ரீதியான.. இராஜதந்திர ரீதியான விளக்கங்களை முன் வைக்காமல்.. மற்றவர்கள் தங்களின் நிலைப்பாடுகளை தங்களின் அறிவுக்கு எட்டிய வகையில் வைக்கும் போது அவற்றை முட்டாள் தனம்.. என்று சொல்வதும் கூட ஒரு வகை முட்டாள் தனம் தான்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பிலான உண்மையின் தரிசனத்தை தங்களின் உயரிய எண்ண ஓட்டத்துக்கு அமைவாக ஆராய்ந்து சொன்னால் முட்டாள் தனமாக சிந்திக்கும் சாதாரண மக்கள் தெளிவு பெறுவார்கள் தானே. அதன் பின்னரும் அவர்கள் அதை செவிமடுக்கவில்லை என்றால்.. அவர்களை திட்டுவதில் நியாயம் காணலாம். இது.. எனக்கும் புரியல்ல.. புரிய வைக்கவும் முடியல்ல... ஆனால் அடுத்தவனை திட்டுறதால மட்டும் நான் வித்தியாசப்படுறன் என்று காட்டிக் கொள்வது போன்றுள்ளது. இந்த வகையான போலி கருத்தோட்டங்களும் எமது இனத்துக்கு உபயோகமாகப் போவதில்லை.

Edited by nedukkalapoovan

முதற்கண் நீண்ட நாட்களின் பின் தங்களை யாழ் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி. :)

இப்படி பட்டும் படாமலும்.. இச்சம்பவங்கள் தொடர்பான உங்களின் அறிவுபூர்வமான.. அரசியல் ரீதியான.. இராஜதந்திர ரீதியான விளக்கங்களை முன் வைக்காமல்.. மற்றவர்கள் தங்களின் நிலைப்பாடுகளை தங்களின் அறிவுக்கு எட்டிய வகையில் வைக்கும் போது அவற்றை முட்டாள் தனம்.. என்று சொல்வதும் கூட ஒரு வகை முட்டாள் தனம் தான்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பிலான உண்மையின் தரிசனத்தை தங்களின் உயரிய எண்ண ஓட்டத்துக்கு அமைவாக ஆராய்ந்து சொன்னால் முட்டாள் தனமாக சிந்திக்கும் சாதாரண மக்கள் தெளிவு பெறுவார்கள் தானே. அதன் பின்னரும் அவர்கள் அதை செவிமடுக்கவில்லை என்றால்.. அவர்களை திட்டுவதில் நியாயம் காணலாம். இது.. எனக்கும் புரியல்ல.. புரிய வைக்கவும் முடியல்ல... ஆனால் அடுத்தவனை திட்டுறதால மட்டும் நான் வித்தியாசப்படுறன் என்று காட்டிக் கொள்வது போன்றுள்ளது. இந்த வகையான போலி கருத்தோட்டங்களும் எமது இனத்துக்கு உபயோகமாகப் போவதில்லை.

நல்லது நெடுக்ஸ். நீண்ட நாட்களின் பின் யாழில் கருத்து எழுதுவதில் எனக்கும் மகிழ்ச்சியே.

நான் பட்டும் படாமலும் எழுதுவதில் ஒரு காரணம் உண்டு. இன்று எமது இனத்தின் சுயமான சிந்திக்கும் தன்மையும் உய்த்துணரும் நுண்ணறிவும் மழுங்கிவிட்டதாகவே நான் உணர்கிறேன். நாம் வாசிக்கும், கேட்டறியும் விடயங்கள் எல்லாம் யாராவது "இப்படி செய்" என்பதாகவே இருக்கிறது. அதாவது நாம் "எப்படி செய்வது" என்ற கேள்வியுடன் அலைகின்றோம். எமது இனத்தின் அசைவியக்கம் எப்படி இருக்க வேண்டும் என நாம் அல்லாதோர் தீர்மானிக்கின்றனர். முதலில் எமது மக்களின் மனங்களில் தேடல் பிறக்க வேண்டும். ஆனால் துரதிட்டவசமாக தெரிவுகளே எம்முன் குவிகின்றன. தெரிவுகள் தரப்படும் போது தேடல் நின்றுவிடுகிறது. தேடுதல் இல்லாதபோது புதியன நிகழா.

எனவே என் எழுத்துக்கள் "எப்படி செய்வது" என்ற கேள்விக்கு பதிலாக அமையாது. என் எழுத்துக்கள் வாசிப்போர் மனங்களில் கேள்விகளையும், தேடல்களையும் உருவாக்குவதையே நான் விரும்புகின்றேன்.

இதை பற்றி ஒரு கருத்துக்கு வர நீண்ட விவாதம் தேவை. அது இந்த திரியின் போக்கை மாற்றிவிடும். அதை இன்னொரு திரியில் பேசலாம்.

-அன்புடன் -

ஈழத்திருமகன்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எமது மக்களின் மனங்களில் தேடல் பிறக்க வேண்டும். ஆனால் துரதிட்டவசமாக தெரிவுகளே எம்முன் குவிகின்றன. தெரிவுகள் தரப்படும் போது தேடல் நின்றுவிடுகிறது. தேடுதல் இல்லாதபோது புதியன நிகழா.

எனவே என் எழுத்துக்கள் "எப்படி செய்வது" என்ற கேள்விக்கு பதிலாக அமையாது. என் எழுத்துக்கள் வாசிப்போர் மனங்களில் கேள்விகளையும், தேடல்களையும் உருவாக்குவதையே நான் விரும்புகின்றேன்.

ஈழத்திருமகனுக்கு ஒரு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைத் தமிழரோடு மோத விட்டு எமக்கு இந்த உலகத்தில் இருக்கக் கூடிய ஒரேயொரு ஆதரவுத்த் தளமான தமிழக உறவுகளையும் எம்மையும் பிரிப்பதற்கு இந்திய சிறிலங்கா அரசுகள் செய்யும் கூட்டுச் சதி நடவடிக்கையை நாங்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.அண்ணன் தம்பிக்குள் இருக்கும் பிரச்சனையைப் பேசி முடிக்கலாம்.எங்களுக்குள் உள் முரண்பாடுகள் ஏற்படாமல் எதிரியின் சதிவலைக்குள் விழுந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டிய காலமிது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.