Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் வட்டிக்கு பெருந்தொகைப் பணத்தை வழங்கிய இலங்கைத் தமிழருக்கு எதிராக வழக்கு!

Featured Replies

லண்டனில் சட்டவிரோதமான முறையில் 17 இலட்சம் பவுண்களை வட்டிக்கு கடனாக கொடுத்து பெருந்தொகை பணத்தை திரட்டினார்.

என்ற குற்றச்சாட்டின் பேரில் லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழர் இருவர் மீது லண்டன் காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இத்தகவலை பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் பிபிசி உட்பட பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் ஈஸ்ட்ஹாம் பகுதியைச் சேர்ந்த இலங்கையரான 68 வயதான கனகசபா நடராஜா என்பவரே இந்த சட்டவிரோத கடன்வழங்கும் தொழிலை செய்து வந்ததாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவர் தங்க நகைகளை பொறுப்பாக பெற்றுக்கொண்டு கடன்களை வழங்கினாரென்றும் இவருக்கு உதவியாக 62வயதான வேலுப்பிள்ளை ஜெகேந்திரபோஸ் என்பவரும் இந்த சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருந்து செயற்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டிலிருந்து 2010ஆண்டுவரையான 7 வருட காலத்தில் சுமார் 700 பேருக்கு சட்டவிரோதமான முறையில் 17 இலட்சம் பவுண்களை கடனாக வழங்கி பெருந்தொகை பணத்தை வட்டியாக பெற்றார் என வழக்கு தொடுநர் செல்வி விவியன் வோல்டர் தெரிவித்துள்ளார்.

லண்டனைச்சேர்ந்த ஜனகமோகன் என்பவர் வியாபார தொழிலை செய்வதற்காக ஜெகேந்திரபோஸ் ஊடாக நடராசாவிடம் 5ஆயிரம் பவுணைப்பெற்றதுடன் இதற்கு பதிலாக நகைகளை வழங்கினார்.

இதற்கு மாதாந்தம் 150 பவுண்களை வட்டியாக வழங்க வேண்டும் என நடராசா ஜனகமோகனுக்கு தெரிவித்திருந்தார். நடராஜாவிடம் கடன் வாங்கிய ஜனகமோகன் என்பவர் காவல்துறையிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சட்டவிரோத கடன் குழுவும் (illegal money lending team) காவல்துறையும் நடராஜாவின் வீட்டை சோதனையிட்டபோது ஏராளமான தங்க நகைகளும் சட்டவிரோத கடன்கள் வழங்கிய விவரங்களும் கைப்பற்றப்பட்டன.

சட்டவிரோதமாக கடன் வழங்கியது, குற்ற வழியில் பணம் சேர்த்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் நடராஜா மீது சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ஆதாரமாக அவரின் வீட்டிலிருந்து பெற்ற தங்கநகைகள், மற்றும் ஆவணங்கள், கடனை பெற்றவர்களின் சாட்சியங்கள் என்பன சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை நடராசா, ஜெகேந்திரபோஸ் ஆகியோர் மறுத்துள்ளனர்

15 Mar 2011

இவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் யாரோ வருமான வரி அலுவலகத்திற்கு அறிவித்தார்கலாம். இது சென்ற வருடம் நடந்தது. தகவல்களை சேகரித்து இப்பொழுதுதான் வழக்கு தொடர்ந்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

உந்த வயதில்லை உப்பிடி ஒரு பிழைப்புத் தேவைதான் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வயதில்லை உப்பிடி ஒரு பிழைப்புத் தேவைதான் :rolleyes:

(இதற்கு மாதாந்தம் 150 பவுண்களை வட்டியாக வழங்க வேண்டும் என நடராசா ஜனகமோகனுக்கு தெரிவித்திருந்தார். நடராஜாவிடம் கடன் வாங்கிய ஜனகமோகன் என்பவர் காவல்துறையிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. )

அப்போ தனது தேவைக்கு காசை வாங்கிவிட்டு

கடனைத்திருப்பிக்கொடுக்காமல் பொலிசிடம் போட்டுக்கொடுத்தவர் நியாயவாதி என்கிறீர்கள்....? :(

17 லச்சம் பவுண்ஸ்..

1.7 மில்லியன் பவுண்ஸ்..

£ 17,000,000.00.....

கிழடுகள்.... மரத்திலையோ காசு புடுங்கினதுகள்? :rolleyes:

இல்லாட்டி பிணாமிமாரோ? :huh:

உந்த வயதில்லை உப்பிடி ஒரு பிழைப்புத் தேவைதான் :rolleyes:

ஏஜிஸம்...

உள்ளுக்க போகக்கூடிய குற்றம்... கேள்விப்பட்டிருக்கிரீங்களோ?..

பம்ப்...

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ தனது தேவைக்கு காசை வாங்கிவிட்டு

கடனைத்திருப்பிக்கொடுக்காமல் பொலிசிடம் போட்டுக்கொடுத்தவர் நியாயவாதி என்கிறீர்கள்....? :(

சட்டம் தன் கடமையைச் செய்யுது..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தேவை வரும்போது குனிந்து கும்புடு

முடிந்ததும் சட்டம்.... :lol::D:D

(இதற்கு மாதாந்தம் 150 பவுண்களை வட்டியாக வழங்க வேண்டும் என நடராசா ஜனகமோகனுக்கு தெரிவித்திருந்தார். நடராஜாவிடம் கடன் வாங்கிய ஜனகமோகன் என்பவர் காவல்துறையிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. )

அப்போ தனது தேவைக்கு காசை வாங்கிவிட்டு

கடனைத்திருப்பிக்கொடுக்காமல் பொலிசிடம் போட்டுக்கொடுத்தவர் நியாயவாதி என்கிறீர்கள்....? :(

திருட்டுத்தனமா வட்டிக்குக் கொடுத்ததும் பிழை, வாங்கினதும் பிழை!

வட்டிக்குக் காசு கொடுக்கிறது, வாங்கிறது, சீட்டுப் பிடிக்கிறது உதுகள் எல்லாம் நமக்கு வெகுதூரம், அவசரமாக காசு தேவைப்படின் சட்ட பூர்வமாக வங்கியில் கடனை எடுத்து அதற்கு வட்டி கட்டி இருக்கிறேனே தவிர உப்பிடி ஆட்களிடம் வாங்கினதும் இல்லை, கொடுத்ததும் இல்லை.

17 லச்சம் பவுண்ஸ்..

1.7 மில்லியன் பவுண்ஸ்..

£ 17,000,000.00.....

கிழடுகள்.... மரத்திலையோ காசு புடுங்கினதுகள்? :rolleyes:

இல்லாட்டி பிணாமிமாரோ? :huh:

ஏஜிஸம்...

உள்ளுக்க போகக்கூடிய குற்றம்... கேள்விப்பட்டிருக்கிரீங்களோ?..

உத விட குறைஞ்ச வயதுக்காரர் உந்த வேலையைச் செய்தாலே பிழை என்று தானே சொல்லுகிறோம், அப்படி இருக்கும் போது உந்த வயதில்லை அடுத்தவனின்ர வயிற்றில அடிச்சு பிழைக்கிறதெல்லாம் ஒரு பிழைப்பே? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருட்டுத்தனமா வட்டிக்குக் கொடுத்ததும் பிழை, வாங்கினதும் பிழை!

வட்டிக்குக் காசு கொடுக்கிறது, வாங்கிறது, சீட்டுப் பிடிக்கிறது உதுகள் எல்லாம் நமக்கு வெகுதூரம், அவசரமாக காசு தேவைப்படின் சட்ட பூர்வமாக வங்கியில் கடனை எடுத்து அதற்கு வட்டி கட்டி இருக்கிறேனே தவிர உப்பிடி ஆட்களிடம் வாங்கினதும் இல்லை, கொடுத்ததும் இல்லை.

உத விட குறைஞ்ச வயதுக்காரர் உந்த வேலையைச் செய்தாலே பிழை என்று தானே சொல்லுகிறோம், அப்படி இருக்கும் போது உந்த வயதில்லை அடுத்தவனின்ர வயிற்றில அடிச்சு பிழைக்கிறதெல்லாம் ஒரு பிழைப்பே? :rolleyes:

எனக்கு அவசரமாய் ஆயிரம் ஈரோ வேணும்.தரேலுமே?......மூண்டு மாதத்துக்குள்ளை திருப்பித்தல்லாம் :blink:

சட்டத்திற்கு அமைவாக தமிழர்கள் ஒரு வங்கியையை ஆரம்பிக்கவேண்டும்.

சரி அது கடினம் என்றால் ஒரு கிரடிட் யூனியனை ஆரம்பிக்கவேண்டும்.

கனடாவில் அப்படி தமிழர்கள் செய்துள்ளார்கள் : http://www.margosacreditunion.ca/

எனக்கு அவசரமாய் ஆயிரம் ஈரோ வேணும்.தரேலுமே?......மூண்டு மாதத்துக்குள்ளை திருப்பித்தல்லாம் :blink:

கு.சா. அண்ண, கடன் கொடுக்கிற அளவுக்கு நான் பெரிய மனுசன் கிடையாது, நான் சாதாரண குட்டி மனுசனாக்கும்... ^_^:D இருப்பினும் சிறுகச் சிறுக சேமித்த சிறிய தொகை இருக்கு, உங்களுக்கு உண்மையில் அவசரமாகத் தேவைப்படின் தந்தது உதவ மனமும் இருக்கு அண்ண :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.