Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹபரணைத் தாக்குதல் செய்தியும்! தமிழ் மக்கள் மத்தியில் எழும் கேள்விகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹபரணைத் தாக்குதல் செய்தியும்! தமிழ் மக்கள் மத்தியில் எழும் கேள்விகளும்

வெள்ளி, 25 மார்ச் 2011 19:05

ஹபரணைக் காட்டுப்பகுதியில் நேற்றிரவு விடுதலைப்புலிகளால் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் ஜந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.

இதுவரை உறுதிப்படுத்தப்படாத இச் செய்தி பலரிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

முள்ளி வாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் இராணுவத்துக்கெதிராக நடத்தப்பட்டதாக வெளியான இச் செய்தியில் சாத்தியமற்ற பல விடயங்கள் உள்ளதுடன் இச் செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இத் தாக்குதலில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் வெள்ளைக்கொடியுடன் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன். சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன். கட்டளைத்தளபதி கேணல் ரமேஸ் ஆகியவர்கள் மீதான கோழைத்தனமான படுகொலை தாக்குதலுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதுவும் நடக்காத நிலையில் இராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தியை வெளியிட்டதன் நோக்கம் என்ன? இப்படி இச் செய்தியை வெளியிட்டதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அதுவும் போர்க்குற்ற விசாரணையுடன் சம்மந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் அவர்களின் பெயர்களையும் வெளியிடப்பட்டதன் உள் நோக்கம் என்ன? என்ற பல கேள்விகள் எழுகின்றதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இப்படியான செய்திகளை வெளியிடுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஆதரவாக சர்வதேசத்தில் ஏற்பட்டிருக்கும் ஒரு வெற்றிகரமான அரசியல் சூழலை அவர்கள் பக்கம் திரும்பியிருக்கும் ஒரு சாதகமான நிலையை முறியடிப்பதற்காக இருக்கலாம் என்றும் தமிழ் மக்களில் ஒரு சாரார் கருதுகின்றனர்.

இப்படியான கேள்விகளுடன் வெளியான இச் செய்தியின் பின்னணியில் ஏதோ சதி திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டதாகவே எண்ணத் தோன்றுவதாக பலர் கருதுகின்றனர்.

போர்க்குற்ற விசாரணை தற்போது நடைபெற்று அதன் இறுதி அறிக்கை என்னவாக வரும் என்று இலங்கை அரசு தலையை பிசைந்து கொண்டிருக்கும் போது இவ்வாறான செய்திகள் வெளிவந்திருப்பதானது இன்னும் ஆழமாகவே சிந்திக்க தோன்றுகிறது என தெரிவிக்கின்றனர்.

tamilenn

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன், அதிர்வு போன்ற தளங்களில் இச்செய்தி வந்திருந்தது. இவர்களுக்கு இச்செய்தியைக் கொடுத்தவர் யார்? :rolleyes::unsure:

சிங்களம் தன்னால் தொடர்ந்தும் உலகை ஏமாற்ற முடியும் என உறுதியாக நம்புகின்றது. ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை கூற வேண்டிய நிலையில் இன்று சிங்களம் உள்ளது.

நவநீதம் பிள்ளை அவர்களின் வருகைக்கு முன்னதாக இப்படி பல "சுத்தங்களை" சிங்களம் செய்து தலைமுழுகலாம் என எண்ணியுள்ளது.

நிலைமைகள் மாறும் பொழுது கூட இருந்த பலரும் மகிந்த கூட்டத்திற்கு குழி பறிப்பார்கள்.

இச்செய்தி தமிழ் இணையதளங்களில் மட்டுமே உள்ளது என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி தமிழ் இணையதளங்களில் மட்டுமே உள்ளது என நினைக்கின்றேன்.

சரி.... கிடக்கட்டும் கிளியவன்,

அற்ப, சந்தோசத்தை கொஞ்சமாவது அனுபவிப்போமே.... :)

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரிகள் சுடப்பட்டதும் அது அந்த இடத்தில் நடந்ததும் உண்மையாக இருக்கலாம்

இது ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் திட்டம்

ஒன்று சர்வதேசத்தை ஏமாத்துவது

இரண்டு போர்க்குற்ற சாட்சிகளை அழிப்பது

மூன்று புலம் பெயர் மக்களை ஆர்ப்பரிக்கச்செய்வது

நாலு..

ஜந்து.................???

சரி.... கிடக்கட்டும் கிளியவன்,

அற்ப, சந்தோசத்தை கொஞ்சமாவது அனுபவிப்போமே.... :)

எமது சந்தோசம் சிங்களவனின் தந்துரோபாயத்திற்காக அமைந்து விடக்கூடாது சிறி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

எமது சந்தோசம் சிங்களவனின் தந்துரோபாயத்திற்காக அமைந்து விடக்கூடாது சிறி அண்ணா.

ஓம். கிளியவன், உங்களது கருத்து சரியானது.

அதிகாரிகள் சுடப்பட்டதும் அது அந்த இடத்தில் நடந்ததும் உண்மையாக இருக்கலாம்

இது ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் திட்டம்

ஒன்று சர்வதேசத்தை ஏமாத்துவது

இரண்டு போர்க்குற்ற சாட்சிகளை அழிப்பது

மூன்று புலம் பெயர் மக்களை ஆர்ப்பரிக்கச்செய்வது

நாலு..

ஜந்து.................???

நாலு.. கருத்துக் களத்தை சூடேத்துவது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரிகள் சுடப்பட்டதும் அது அந்த இடத்தில் நடந்ததும் உண்மையாக இருக்கலாம்

இது ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் திட்டம்

ஒன்று சர்வதேசத்தை ஏமாத்துவது

இரண்டு போர்க்குற்ற சாட்சிகளை அழிப்பது

மூன்று புலம் பெயர் மக்களை ஆர்ப்பரிக்கச்செய்வது

நாலு..

ஜந்து.................???

ஆமென்

புலம் பெயர்ந்த தமிழரைபற்றி சிங்களத்திற்கு நன்கு தெரியும்.இணையத்துடன் படுத்துவிடுவார்களென்று..

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த தமிழரை பற்றி சிங்களத்திற்கு நன்கு தெரியும். இணையத்துடன் படுத்துவிடுவார்களென்று..

நன்றி முதன்முதலாக தங்களைப்பற்றிய ஒரு உண்மையை ஒத்துக்கொண்டதற்கு.

ஆனால் தமிழரை உங்களுடன்ஏன் சேர்க்கின்றீர்கள் என்று தான் புரியவில்லை

இது தெளிவானால் ஒரு பச்சை போடலாம்.

ஹிந்திய பயங்கரவாதிகளுடன் இணைந்து சிங்கள பயங்கரவாதிகள் செய்யும் சதித்திட்டங்களுக்கு சர்வதேசம் ஏமாறாமல் இருக்க நா. க. த. அரசு செய்ய வேண்டியது நிறையவே உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.