Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழருக்கு விருது வழங்கப்பட்டமை குறித்து நியூஸிலாந்திடம் இலங்கை கவலை

Featured Replies

ஈழத் தமிழருக்கு விருது வழங்கப்பட்டமை குறித்து நியூஸிலாந்திடம் இலங்கை கவலை

நியூஸிலாந்தில் வசிக்கும் ஆறுமுகன் தேவராஜாவுக்கு பிரித்தானிய அரசியின் பதக்கம் வழங்கப்படுவதற்கு சிபாரிசு செய்தமை தொடர்பாக நியூஸிலாந்து அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் தனது கவலையை தெரிவித்துள்ளளது.

பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா இன்று நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.

சுதந்திர இறைமையுள்ள 16 நாடுகளுக்கு பிரிட்டனின் இரண்டாம் எலிஸபெத் அரசியார் நாட்டின் தலைவராக விளங்குகிறார். பிரிட்டனில் நடைபெற்ற புதுவருட விருது வழங்கல் நிகழ்வில் 3 தமிழர்களுக்கும் அவர் விருது வழங்கினார். இவர்களில் ஈழத்தமிழர்கள் இருவரும் இந்திய தமிழர் ஒருவரும் அடங்குவர்.

நியூஸிலாந்தைச் சேர்ந்த ஈழத்தமிழரான 77 வயதான ஆறுமுகன் தேவராஜாவும் அவர்களில் ஒருவர். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவரான அவர், நியூஸிலாந்திலுள்ள தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய சேவைக்காக கௌரவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கத்தவரான ஆறுமுகன் தேவராஜாவுக்கு இவ்வாறு விருது வழங்கப்பட்டமை குறித்து அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இன்று நாடாளுமன்றில் கவலை தெரிவித்து உரையாற்றினார்.

அவரின் கருத்து பதிலளித்து உரையாற்றிய பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா, இவ்விடயம் குறித்து நியூஸிலாந்து அரசாங்கத்திடம் இலங்கை கவலை தெரிவித்துள்ளதாக கூறினார்.

சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்காகவே இவ்விருது வழங்கப்பட்டதாகவும் பிரிவிணைவாத திட்டத்தில் சம்பந்தப்பட்டமைக்காக அல்ல எனவும் நியூஸிலாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இந்த உத்தரவாதத்தில் நாம் திருப்தியடையவில்லை. நிலைமையை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/19353-2011-04-06-14-46-47.html

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவிலை தான்... ஒரு தமிழனுக்கு விருது கொடுத்து, கௌரவிக்க மாட்டார்கள்,

மற்ற நாட்டுக்காரன், தமிழனுக்கு விருது கொடுத்தாலும் வயித்தெரிச்சல் படுகிறான் சிங்களவன்.

  • தொடங்கியவர்

இதில் இந்த தமிழர் ஒரு நாடுகடந்த அரசின் உறுப்பினர் என்பதாலேயே சிங்களம் கூடுதலாக கடுப்படைந்துள்ளது.

வாழ்த்துக்கள் இந்த தமிழருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய அரசின் பரிசினை பெறும் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்.இப்படி சிங்களவர்களுக்கு அடிக்கடி கடுப்பேற்ற வேண்டுகிறேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய அரசின் பரிசினை பெறும் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்.இப்படி சிங்களவர்களுக்கு அடிக்கடி கடுப்பேற்ற வேண்டுகிறேன். :D

:D:D

... எம்மை இலங்கைக்கு வெளியில் கூட .. வாழ இவர்கள் விடப்போவதில்லை????????

  • கருத்துக்கள உறவுகள்

... எம்மை இலங்கைக்கு வெளியில் கூட .. வாழ இவர்கள் விடப்போவதில்லை????????

இந்த பட்டறிவுதான் முதலில் தமிழனுக்கு வேண்டும்

இன்னும் சிங்களவனுடன் சேர்ந்து வாழலாம் என்பவர்களுக்கு இது சமர்ப்பணம்

ஆறுமுகம் தேவராஜ் அவர்களின் புகைப்படம்

thevaci.jpg

நன்றி: www.globaltamilnews.net

இப்படியானவர்கள் தான் நாடுகடந்த அரசில் இருக்க வேண்டும். அதை விடுத்து...................

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழருக்கு விருது வழங்கப்பட்டமை குறித்து நியூஸிலாந்திடம் இலங்கை கவலை

இலங்கையில் தான் எமக்கு ஒரு குடிமகனாக வாழ வழியில்லை.எம்மை ஏன் ஓட ஓடக் கலைக்கின்றார்கள்?

தமிழன் இந்தப் பூமிப் பந்தில் இருக்கக் கூடத் தகுதியற்றவனா?

வேதங்களிலும் ஆகமங்களிலும், தமிழன் சூத்திர வர்க்கத்திலும் கீழானவன் என்றே வர்ணிக்கப் படுகின்றான்.

இதன் விளைவு தான், எம்மை எல்லோரும் இப்படி வைத்திருப்பதுக்குக் காரணம்.இந்த வேதங்களைத் தூக்கிப் பிடிப்பவனும் தமிழன் தான்.

ஏன் எல்லோரும் தங்கள் தேவைகளுக்கு எங்களைப் பந்தாகப் பாவிக்கின்றார்கள்? கனேடிய அரசு உட்பட.

  • தொடங்கியவர்

இணக்க அரசியலில் (அதாவது சிங்களத்துடன் நாம் சேர்ந்து செயற்படுவது, அதாவது பெறவேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு எதிராக செயல்படாமல் விடுவது,..) புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்டால் அது தாயக மக்களை மேலும் பலவீனமாகும் என்றும் இந்த செயற்பாட்டின் மூலம் உணரக்கூடியதாக உள்ளது.

புலம்பெயர் மக்கள், அவர்களின் அமைப்புக்கள் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் தொடர்ந்து மேற்குலகம், இந்தியா, சீனா ஊடாக அழுத்தம் கொடுத்தல் அவசியம். அதன் மூலம் மட்டுமே தாயக மக்கள் பாதுகாக்கப்படுவதுடன் உரிமைகளை பெறக்கூடிய சந்தர்ப்பமும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.