Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடத்தல், படுகொலைகளில் ஈ.பி.டி.பி மற்றும் கருணா, பிள்ளையான்குழுக்கள்- அமெரிக்காவின் அறிக்கையும் அதற்கு ஆதாரமான சில செய்திகளும்(Att;Photos)

Featured Replies

போர் முடிந்து விட்டதான ஒரு சூழலில் தமது இருப்பையும் வருமானத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஈபிடிபி மற்றும் கருணாகுழு போன்ற துணைப்படைகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கான தனது அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதனைத்தெரிவித்துள்ளது.

தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை உறுதிப்படுத்துவதற்கான சம்பவங்களையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் போர் நடந்தபோது இந்த துணைப்படைகள் இராணுவத்துக்கும் அப்பால்பட்ட பணிகளை ஆற்றின என்று குறிப்பிடும் அந்த அறிக்கை, படையினரின் உதவியுடனேயே இந்தத் துணைப்படைகளின் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

டக்ளஸ் தலைமையிலான ஈ.பி.டி.பி குழுவினர், மற்றும் கருணா பிள்ளையான் குழுவினர் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சாட்டியிருக்கும் அதேவேளை அக்குழுக்கள் செய்த படுகொலைகள் சிலவற்றை தினக்கதிர் இங்கே தருகிறது.

ஈ.பி.டி.பி செய்த படுகொலை

2010 டிசெம்பர் 31 ஆம் திகதி ஈ.பி.டி.பியினர் குடத்தனையில் கேதீஸ்வரன் தேவராஜாவின் வீட்டுக்குள் புகுந்து அவரை படுகொலை செய்தனர். ஈ.பி.டி.பியினர் மகேஸ்வரி நிதியம் என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வடமராட்சி கிழக்கு கிராமங்களான அம்பன், குடத்தனை, மணல்காடு ஆகிய கிராமங்களில் உள்ள மணலை கொள்ளையடித்து வருகின்றனர். இதனால் இக்கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக படங்களுடன் தனது பேஸ்புக்கில் தகவல்களை வெளியிட்ட கேதீஸ்வரன் தேவராஜனை ஈ.பி.டி.பியினர் படுகொலை செய்தனர்.

சட்டத்துக்கு புறம்பான இந்த மணல்கொள்ளைகளில் ஈ.பி.டி.பியினர் இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு எதிராக குரல் கொடுப்போரை கொன்று ஒழிக்கும் நடவடிக்கைளிலும் ஈ.பி.டி.பியினர் ஈடுபட்டுள்ளனர்.

2010ஆம் ஆண்டில் மட்டும் 77 பேர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள். சிலர் கொழும்பைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் பொருளாதார நோக்கங்களுக்காகத் தமது குடும்பங்களுக்குக் கூடச் சொல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள் என்று அரசு கூறும் விளக்கத்தைப் பெரும்பாலான மக்களும் மனித உரிமை அமைகப்புக்களும் நிராகரிக்கின்றன. இந்த ஆண்டு பணத்துக்காக கடத்தல் இடம்பெறுவது அதிகரித்துள்ளது. வடக்கு கிழக்கில் இது அதிகமாகக் காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இத்தகைய சம்பவங்களுக்கு அரசின் பங்காளியான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி அமைப்புத்தான் காரணம் என்று உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

ஆனால், யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு கிழக்கில் இத்தகைய கடத்தல்களை யார் செய்கிறார்கள் என்பதை உறுதியாக அடையாளப்படுத்த முடியவில்லை. இருப்பினும் துணைப் படைகள் இத்தகைய கடத்தல்களின் பின்னணியில் இருக்கக் கூடும் என்று தமது முன்னைய அனுபவங்களைக் கொண்டு இந்தப் பகுதி மக்கள் கருதுகிறார்கள்.

வவுனியாவில் புளொட் இயக்கமும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கருணா, பிள்ளையான் குழுக்கள் கடத்தல்கள் கொலை கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிள்ளையான் குழு செய்த படுகொலை

பிள்ளையான்குழுவினர் திருகோணமலையில் 2009 மார்ச் 11ஆம் திகதி 6வயது மாணவியான வர்ஜா யூட்றெஜி என்ற சிறுமியை கடத்திச்சென்று படுகொலை செய்தனர். இச்சிறுமியின் சடலம் பின்னர் மூன்று தினங்களில் சாக்கு ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பிள்ளையான்குழுவைச்சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இக்கொலையை தாங்களே செய்ததாக ஒப்புக்கொண்டனர். இக்கொலைகளின் பின்னணியில் பிள்ளையான் போன்ற மகிந்த ராசபக்சவுக்கு நெருக்கமானவர்கள் இருந்த விடயம் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இக்கொலையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் காவல்துறையினரால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்துடன் அக்கொலை வழக்கு விசாரணை மூடப்பட்டு விட்டது.

கருணா பிள்ளையான் இராணுவ புலனாய்வுப்பிரிவின் கூட்டுப்படுகொலை

இதேபோன்று மட்டக்களப்பில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 31ஆம் திகதி மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவியான 8வயதுடைய தினுசிகா சதீஸ்குமார் என்ற மாணவி கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். கடத்தி சென்றவர்கள் இவரின் தாயிடம் 30இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியிருந்தனர்.

இம்மாணவின் தந்தையை(சதீஸ்குமார் சந்திரராசா) இதற்கு முன் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கருணாகுழுவினர் கடத்திச்சென்று படுகொலை செய்திருந்தனர்.

தினுசிகாவின் படுகொலையில் கருணாகுழு பிள்ளையான்குழு இரண்டும் இணைந்தே ஈடுபட்டதாக தெரியவந்தது. இந்த படுகொலையாளிகளுக்கு தலைமை தாங்கியவர் புளொட் மோகன்குழுவைச்சேர்ந்த ரதீஸ்குமார் என்பவர் என்றும் இவர் பின்னர் கருணாகுழுவுடன் சேர்ந்து இயங்கி வந்தார். இவர் மட்டக்களப்பு இராணுவ புனலாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த லெப்.கேணல் நிஜாம் முத்தலிப் என்ற இராணுவ அதிகாரிக்கு கீழ் இயங்கி வந்தனர்.

இந்த மாணவியின் கடத்தல் மற்றும் படுகொலைகளில் கருணா பிள்ளையான் குழுக்கள் மட்டுமன்றி சிறிலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சிறுமியின் கடத்தல் மற்றும் படுகொலை தொடர்பாக கந்தசாமி ரதீஸ்குமார் என்பவர் உட்பட 4பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலையின் பின்னணியில் இருந்தவர்களின் விபரங்கள் அம்பலத்திற்கு வராமல் இருப்பதற்காக இந்த நான்கு பேரும் பின்னர் ஊறணியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.thinakkathir.com/?p=4939

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்துரோகக் கும்பல்கள் என்பதை அவர்கள் எப்போதும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் மக்களில் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தான் ஒரு சிறு குழப்பம். இவையையும் வைச்சு அரசியல் செய்தா என்ன என்று. ஆனால் அவங்க தெளிவாக இருக்காங்க. :lol::(:o

http://onlineuthayan.com/News_More.php?id=1643

... விசர் பிடித்து அலையும் தெருநாய்களை அழித்தொழிக்காவிடில் ... அது தொடர்ந்து இரத்த வாடை பிடித்து அலைவதை தடுக்க முடியாது!! ... இந்த தெருநாய்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது ...... ... ஆனால் அழிப்பது ... யார்?????????

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லைய்யன், நியாயமான கேள்வி. ஆனால் அவர்களை யாரும் தொடக்கூட முடியாது. அரசாங்கம் தான் செய்யவேண்டியதை இந்த தமிழ் வேட்டை நாய்களை ஏவிவிட்டுத்தான் செய்கிறது. இந்த லட்சணத்தில் அவர்களை அழிக்கிறதாவது??!!!

சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்துடம் வாழ்வதற்கு தமிழ்ச் சனம் பழகிவிட்டது போல, இந்த வேட்டை நாய்களையும் சமூகத்தின் ஒரு அங்கமாக கருதி வாழப் பழகிக்கொள்ள வேண்டியதுதான். ஏனென்றால் சிங்கள ராணுவத்துடன் தமிழ் இளம் சமுதாயம் மிகவும் அந்நியோன்னியமாகப் பழகி வருவதாக சில இணையத்தளங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன.

புலிகள் உருவாகும் முன்னர் கொலைகளும் கடத்தல்களும், பாலியல் வல்லுறவுக்களும் இருக்கவில்லையா என்ன?? ஊர்ச்சண்டியர்கள், தெருச்சண்டியர்கள் இல்லாத யாழ்ப்பாணமா??

அந்தக்காலம் திரும்பி வந்துவிட்டது. ஒரு சின்ன வித்தியாசம், அவர்களுடன் சேர்ந்து ஒரு 60,000 சிங்கள நாய்களும் வந்திருக்கிறது, அவ்வளவுதான் !

விசர் பிடித்து அலையும் தெருநாய்களை அழித்தொழிக்காவிடில் ... அது தொடர்ந்து இரத்த வாடை பிடித்து அலைவதை தடுக்க முடியாது!! ... இந்த தெருநாய்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது ...... ... ஆனால் அழிப்பது ... யார்?????????

எமக்கு ஒரு தீர்வுவந்தால் அழிக்கதேவையில்லை இவை இல்லாமல் போய்விடும்.

கேள்வி- அதுசரி எப்படி எமது சமூகத்தில் இப்படி விசர்பிடித்து திரியும் தெருநாய்கள் உருவானார்கள்?

பதில் - கடந்த 20 வருடமாக அவர்களை உருவாக்கியதே நாங்கள்தான் இப்ப கடிக்கும் போது வலிக்குதென்றால் என்ன செய்வது.நாய்களை நடுரொட்டில வைத்து சுட்டுப்போட்டு அப்படிப்போடு அப்படி போடு பாட்டு போட்டு ஆடும்போது யோசித்திருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த "அமைச்சர்" கூட்டம் முன்பு போல் சுகமா சிங்களவனிடம் காசு வாங்கி குடித்து கும்மாளமடிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

ஆதலால், கடத்தல், கப்பம் பெறல், காசுக்கு கொலை செய்தல், நாய் கடத்துதல் என்று "உழைத்து" முன்னேறுகிறார்கள்.

இவர்கள் ஸ்ரீ லங்காவை விட்டு வெளிக்கிடும் போது இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

... விசர் பிடித்து அலையும் தெருநாய்களை அழித்தொழிக்காவிடில் ... அது தொடர்ந்து இரத்த வாடை பிடித்து அலைவதை தடுக்க முடியாது!! ... இந்த தெருநாய்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது ...... ... ஆனால் அழிப்பது ... யார்?????????

பதில் - கடந்த 20 வருடமாக அவர்களை உருவாக்கியதே நாங்கள்தான் இப்ப கடிக்கும் போது வலிக்குதென்றால் என்ன செய்வது.நாய்களை நடுரொட்டில வைத்து சுட்டுப்போட்டு அப்படிப்போடு அப்படி போடு பாட்டு போட்டு ஆடும்போது யோசித்திருக்கவேண்டும்.

ஏன் நாமே முன் மாதிரியாக இருக்கலாமே

யாழிலேயே அழிப்பை தொடங்லாமே....

இங்கயும் கடித்தொல்லை தாங்கமுடியல............. :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாமே முன் மாதிரியாக இருக்கலாமே

யாழிலேயே அழிப்பை தொடங்லாமே....

இங்கயும் கடித்தொல்லை தாங்கமுடியல............. :(:(:(

யாழில் என்ன செய்யப் போறீங்கள் அண்ணா? அவர்களை தடை செய்யப் போறீங்களா?...அதன் பிறகு நீங்கள் மட்டும் தான் கதைத்து கொண்டு இருப்பீங்கள்...அவர்களை எம் கருத்தின் மூலம் மாற்ற‌ முயற்சிக்க வேண்டும் இது தான் கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் என்ன செய்யப் போறீங்கள் அண்ணா? அவர்களை தடை செய்யப் போறீங்களா?...அதன் பிறகு நீங்கள் மட்டும் தான் கதைத்து கொண்டு இருப்பீங்கள்...அவர்களை எம் கருத்தின் மூலம் மாற்ற‌ முயற்சிக்க வேண்டும் இது தான் கருத்து

சரி

பேசிக்கொண்.......................................................................டே இருப்.........................................போம்....................................................................................... :(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.